கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 November, 2010

ஐ. ஒ. ஓ வரிசை பழமொழிகள்

* ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
* ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
* ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
* ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
* ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
* ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
* ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
* ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
* ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
* ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
* ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
* ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
* ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
* ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
* ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
* ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
* ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
* ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
* ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
* ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
* ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
* ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
* ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
* ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!
* ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
* ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
* ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!
* ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
* ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
* ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
* ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
* ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

1 comment:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...