கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

11 December, 2010

கெ முதல் கோ வரிசை பழமொழிகள்

* கெடுக்கினும் கல்வி கேடுபடாது
 * கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
 * கெடுவான் கேடு நினைப்பான்
 * கெட்டாலும் செட்டி செட்டியே,
  * கிழிந்தாலும் பட்டு பட்டே.
  * கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  * கெட்டும் பட்டணம் சேர்
 * கெண்டையைப் போட்டு வராலை இழு.
 * கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
 * கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
 * கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
 * கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
 * கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
 * கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
 * கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
  * கேள்விப் பேச்சு மூளா நெருப்பு
 * கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
 * கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
  * கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
  * கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  * கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
 * கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
 * கையிலே காசு வாயிலே தோசை
 * கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
 * கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
 * கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்
 * கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
 * கொடிக்கு காய் கனமா?
 * கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
 * கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
 * கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
 * கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
 * கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
 * கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
 * கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
 * கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
 * கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
 * கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
 * கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
 * கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
 * கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  * கோடி வித்தையும் கூழுக்குத்தான்
 * கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
 * கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
 * கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
 * கோபம் சண்டாளம்.
 * கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
 * கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
 * கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
 * கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
 * கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
 * கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
  * கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...