கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

16 February, 2011

வேண்டாம் அந்த வாழ்க்கை...!


முள்ளில் பட்டு இத‌ழ் கிழிந்தாலும் 
முகம் சுளிப்பதில்லை 
ரோஜாக்கள்..

ல் வீசி காயப்படுத்தினாலும்  
கண்ணீர் சிந்துவதில்லை 
கனிமரங்கள்..

கோடி முத்தங்களை 
உளியோடு பகிராமல்  
எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..

சுமந்தவளின் மரணத்தில் தான் 
மகத்துவம் ஆகிறது 
முத்து..

 பிறையோடு வளர்ந்து தேய்ந்துதான்
உலகை பரவசப்படுத்துகிறது
வெண்ணிலா..

லைகள் அடிக்காத நிமிடங்களை
‌எப்போதும் ‌வேண்டுவதில்லை
கரைகள்..


 லி‌களை வாங்கிய மனமே
வாழ்க்கையை ரசிக்கும்..
ரணங்களை உடுத்திய இதயமே
உன்னதத்தை உணரும்..
ஆகையால்


 ஓ.. உலகத்தீரே..
ஒரு போதும் விரும்பாதீர்
வலிகள் இல்லாத வாழ்க்கையை...


அன்பாக வாசகர்களே..
வந்துப் போனதற்கான  தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்..


79 comments:

  1. ரணங்களை உடுத்திய இதயமே
    உண்ணதத்தை உணரும்..

    .....உன்னதத்தை என்று நினைக்கிறேன். உண்மைங்க... படங்களே கவிதையாக இருக்கும் போது, உங்கள் கவிதையின் கருவும், மனதை தொடுகிறது.

    ReplyDelete
  2. ஓ.. உலகத்தீரே..
    ஒரு போதும் விரும்பாதீர்
    வலிகள் இல்லாத வாழ்க்கையை...


    நல்லாத்தான் இருக்கு பாஸ்! ம் வலியில்லாமல் எது வாழ்க்கை!!

    ReplyDelete
  3. //கோடி முத்தங்களை
    உளியோடு பகிராமல்
    எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..
    //

    எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்குங்க .. அதே மாதிரி முத்து உருவாகும் வரிகள் .. கண்டிப்பா வலிகள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யம் கம்மியாதான் இருக்கும் ..

    ReplyDelete
  4. \\சுமந்தவளின் மரணத்தில் தான்
    மகத்துவம் ஆகிறது
    முத்து..\\

    Great..

    ReplyDelete
  5. கவித ரொம்ப ஆழமா இருக்குங்க

    என்னோட ப்ளோக்ல என்னால் உங்களுக்கு பதில் போடா முடியல்ல என்னன்னு பாருங்க ப்ளீஸ்!

    ReplyDelete
  6. ///////Chitra said... [Reply to comment]

    ரணங்களை உடுத்திய இதயமே
    உண்ணதத்தை உணரும்..

    .....உன்னதத்தை என்று நினைக்கிறேன். உண்மைங்க... படங்களே கவிதையாக இருக்கும் போது, உங்கள் கவிதையின் கருவும், மனதை தொடுகிறது.
    //////

    தாங்கள் சுட்டிக்காட்டிய எழுத்துப்பிழையை சரி செய்து விட்டேன் தோழி..

    சுட்டிக் காட்டியதற்கு நன்றி..

    ReplyDelete
  7. //////கோடி முத்தங்களை
    உளியோடு பகிராமல்
    எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..

    /////

    என்ன அற்புதமான வரிகள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. வலிகள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குகிறது.....
    ஆயிரத்தில் ஒரு வார்த்தை.....

    ReplyDelete
  9. வலி‌களை வாங்கிய மனமே
    வாழ்க்கையை ரசிக்கும்..///

    உண்மைதான்...

    ReplyDelete
  10. sakthistudycentre-கருன் said... [Reply to comment]

    அடிககாத/// Correct it.
    Nice.,
    4 vote ok..ok..

    நன்றி தோழரே..

    ReplyDelete
  11. ///மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said... [Reply to comment]

    ஓ.. உலகத்தீரே..
    ஒரு போதும் விரும்பாதீர்
    வலிகள் இல்லாத வாழ்க்கையை...


    நல்லாத்தான் இருக்கு பாஸ்! ம் வலியில்லாமல் எது வாழ்க்கை!!
    //////

    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  12. கோமாளி செல்வா said... [Reply to comment]

    //கோடி முத்தங்களை
    உளியோடு பகிராமல்
    எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..
    //

    எனக்கு இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்குங்க .. அதே மாதிரி முத்து உருவாகும் வரிகள் .. கண்டிப்பா வலிகள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யம் கம்மியாதான் இருக்கும் ..
    //////

    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  13. முயட்சித்ததட்க்கு நன்றிங்க

    மற்றும் உங்களுக்கு மட்டுமே என்னால் பதில் போட முடியவில்லை மன்னிக்கவும்

    ReplyDelete
  14. கே.ஆர்.பி.செந்தில் said... [Reply to comment]

    \\சுமந்தவளின் மரணத்தில் தான்
    மகத்துவம் ஆகிறது
    முத்து..\\

    Great..



    நன்றி நண்பரே..

    ReplyDelete
  15. விக்கி உலகம் said... [Reply to comment]

    கவித ரொம்ப ஆழமா இருக்குங்க

    என்னோட ப்ளோக்ல என்னால் உங்களுக்கு பதில் போடா முடியல்ல என்னன்னு பாருங்க ப்ளீஸ்!

    நன்றி நண்பரே..

    ReplyDelete
  16. >>>>ஒரு போதும் விரும்பாதீர்
    வலிகள் இல்லாத வாழ்க்கையை...

    சொன்னது சரி தான். ஆனா அந்த அளவுக்கு நம்ம ஆளுங்களுக்கு இன்னும் பக்குவம் பத்தாதே..

    ReplyDelete
  17. என்னோட அடுத்த கமெண்ட்கு ரிப்ளை பண்ணுங்க ..

    ReplyDelete
  18. ////கோமாளி செல்வா said... [Reply to comment]

    SAME TO YOU
    ///////
    எனக்கு ஒன்னும் புரியல..
    அதைப்பத்தில ஒரு கூட்டம் போட்டு ஒரு தீர்மானம் தீட்டி அடுத்த கட்ட நடவடிக்கையை பின்னர் தெரிவிக்கிறோம்..

    இல்லை எனறால் உங்களுக்கும் அதே பதில்தான்

    SAME TO YOU

    ReplyDelete
  19. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    //////கோடி முத்தங்களை
    உளியோடு பகிராமல்
    எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..

    /////

    என்ன அற்புதமான வரிகள்.. வாழ்த்துக்கள்..


    நன்றி பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  20. MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    வலிகள்தான் வாழ்க்கையை சுவாரஸ்யம் ஆக்குகிறது.....
    ஆயிரத்தில் ஒரு வார்த்தை.....


    உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மனோ சார்..

    ReplyDelete
  21. ஜெ.ஜெ said... [Reply to comment]

    வலிகளை வாங்கிய மனமே
    வாழ்க்கையை ரசிக்கும்..///

    உண்மைதான்...


    நன்றி த‌லைவா..

    ReplyDelete
  22. விக்கி உலகம் said... [Reply to comment]

    முயட்சித்ததட்க்கு நன்றிங்க

    மற்றும் உங்களுக்கு மட்டுமே என்னால் பதில் போட முடியவில்லை மன்னிக்கவும்


    பரவாயழல்லை நண்பா.. தொடர்ந்து இருப்போம் தொடர்பில்..

    ReplyDelete
  23. சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    >>>>ஒரு போதும் விரும்பாதீர்
    வலிகள் இல்லாத வாழ்க்கையை...

    சொன்னது சரி தான். ஆனா அந்த அளவுக்கு நம்ம ஆளுங்களுக்கு இன்னும் பக்குவம் பத்தாதே..


    நன்றிகள் பல...

    ReplyDelete
  24. பதில் சொன்னதுக்கு நன்றிங்க .. இன்னிக்கோ இல்ல நாளைக்கு என்னோட அடுத்த போஸ்ட் பாருங்க .. அதுல SAME TO YOU பத்தி வரும் ..

    ReplyDelete
  25. கோமாளி செல்வா said... [Reply to comment]

    என்னோட அடுத்த கமெண்ட்கு ரிப்ளை பண்ணுங்க ..
    கோமாளி செல்வா said... [Reply to comment]

    SAME TO YOU

    எங்களை வச்சி காமடி ஏதாவது டிரை பண்ரிங்களா..

    ReplyDelete
  26. கோமாளி செல்வா said... [Reply to comment]

    பதில் சொன்னதுக்கு நன்றிங்க .. இன்னிக்கோ இல்ல நாளைக்கு என்னோட அடுத்த போஸ்ட் பாருங்க .. அதுல SAME TO YOU பத்தி வரும் ..


    இவ்வளவு சஸ்பென்ஸ் வச்சா எப்படி தல..
    ஏற்கனவே.. என்ன பதிலவு போடறதுன்னு தலையை பிச்சிக்கிட்டு இருக்கிறோம் இதுலநீங்க வேற..

    அந்த பதிவை இன்னிக்கே போட முடியுமா..


    SAME TO YOர?

    ReplyDelete
  27. கோமாளி செல்வா said... [Reply to comment]

    muyarchikkiren...

    அதிகப் பட்சமாக..
    எனக்கு ஏதாவது விருது கொடுத்து கௌரவிக்கலாம்

    அல்லது

    அல்லது ஏதாவது பட்டப் பெயர் கொடுத்து பொற்கிழி ஏதாவது தரலாம்..

    அல்லது

    என்னுடைய பதிவை பாராட்டி பாராட்டு விழா நடத்தலாம்..

    அல்லது

    அடுத்த முறை கவிதை கிவிதை போட்ட மகனேன்னு.. மிரட்டலாம்..

    எது எப்படியோ நடத்துங்க..

    ReplyDelete
  28. /////
    வலிகளை வாங்கிய மனமே
    வாழ்க்கையை ரசிக்கும்..
    ரணங்களை உடுத்திய இதயமே
    உன்னதத்தை உணரும்..
    /////

    என்‌னை கவர்ந்த வரிகள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  29. கிறுக்கல்கள் said... [Reply to comment]

    /////
    வலிகளை வாங்கிய மனமே
    வாழ்க்கையை ரசிக்கும்..
    ரணங்களை உடுத்திய இதயமே
    உன்னதத்தை உணரும்..
    /////

    என்னை கவர்ந்த வரிகள்..
    வாழ்த்துக்கள்..


    நன்றி நண்ப‌ரே..

    ReplyDelete
  30. வலிகள் இல்லாத வாழ்க்கை வாழத்தானே இவ்வளவு போராட்டமும், கவிதை அருமை நண்பா

    ReplyDelete
  31. ஒரு கவிதை, புண்பட்ட மனங்களுக்கு ஊக்க மருந்தாகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. இதனால் கவிதை வீதி சவுந்தர் அவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்..... நானும் வந்துட்டேன் வோட்டும் போட்டுட்டேன்

    ReplyDelete
  33. வலிகளே வாழ்க்கை என்றிருந்தால்தான்,
    வந்த ஒன்றிரண்டு சந்தோஷங்களும் மனதைக் குளிர்விக்குமோ?
    சோதனைகளே நிரந்தரமெ என்றிருந்தால்தான்
    சின்னச் சின்ன சாதனைகள் சிந்தையில் சிலிர்ப்பூட்டுமோ?

    ReplyDelete
  34. //வலி‌களை வாங்கிய மனமே
    வாழ்க்கையை ரசிக்கும்..
    ரணங்களை உடுத்திய இதயமே
    உன்னதத்தை உணரும்..//

    உண்மை உண்மை!

    வலியற்ற வாழ்க்கை, வாழ்வதற்கும் ரசிக்காது! வலிக்கு பின்னர் வரும் வசந்தம்தான் வாழ்க்கையை ரசிக்க செய்யும்.
    உணர்ந்து எழுதிய கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. ஒரு போதும் விரும்பாதீர்
    வலிகள் இல்லாத வாழ்க்கையை...//////

    உண்மை வலிகள் இல்லாத வாழ்கையில் சுகமும் இல்லை

    ReplyDelete
  36. கவிதை மிக வீரியமா இருக்குங்க.... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  37. வலி தான் வெற்றியின் ரகசியம்!
    அனைவரும் கண்டிப்பாக தெரிந்து! புரிந்து! நடந்து கொள்ள வேண்டிய கருத்தை கவிதை வடிவில் பதிவு செய்தது நன்றாக உள்ளது நண்பரே!

    ReplyDelete
  38. கவிதையை ரசித்தேன்..

    //அன்பாக வாசகர்களே..
    வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்//

    இதையும் ரசித்தேன் உங்களை பின் தொடர்ந்துவிட்டேன்

    ReplyDelete
  39. அருமை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. இரவு வானம் said... [Reply to comment]

    வலிகள் இல்லாத வாழ்க்கை வாழத்தானே இவ்வளவு போராட்டமும், கவிதை அருமை நண்பா


    கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..

    ReplyDelete
  41. அமுதா கிருஷ்ணா said... [Reply to comment]

    nice..


    கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..

    ReplyDelete
  42. சாகம்பரி said... [Reply to comment]

    ஒரு கவிதை, புண்பட்ட மனங்களுக்கு ஊக்க மருந்தாகிறது. வாழ்த்துக்கள்.

    கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..

    ReplyDelete
  43. ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    இதனால் கவிதை வீதி சவுந்தர் அவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்..... நானும் வந்துட்டேன் வோட்டும் போட்டுட்டேன்


    ok...ok...ok...

    ReplyDelete
  44. T.V.ராதாகிருஷ்ணன் said... [Reply to comment]

    அருமை

    கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..

    ReplyDelete
  45. goma said... [Reply to comment]

    வலிகளே வாழ்க்கை என்றிருந்தால்தான்,
    வந்த ஒன்றிரண்டு சந்தோஷங்களும் மனதைக் குளிர்விக்குமோ?
    சோதனைகளே நிரந்தரமெ என்றிருந்தால்தான்
    சின்னச் சின்ன சாதனைகள் சிந்தையில் சிலிர்ப்பூட்டுமோ?

    கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..

    ReplyDelete
  46. FOOD said... [Reply to comment]

    //வலி‌களை வாங்கிய மனமே
    வாழ்க்கையை ரசிக்கும்..
    ரணங்களை உடுத்திய இதயமே
    உன்னதத்தை உணரும்..//

    உண்மை உண்மை!

    வலியற்ற வாழ்க்கை, வாழ்வதற்கும் ரசிக்காது! வலிக்கு பின்னர் வரும் வசந்தம்தான் வாழ்க்கையை ரசிக்க செய்யும்.
    உணர்ந்து எழுதிய கவிதை. வாழ்த்துக்கள்.

    கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..

    ReplyDelete
  47. அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

    ஒரு போதும் விரும்பாதீர்
    வலிகள் இல்லாத வாழ்க்கையை...//////

    உண்மை வலிகள் இல்லாத வாழ்கையில் சுகமும் இல்லை

    கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..

    ReplyDelete
  48. சி.கருணாகரசு said... [Reply to comment]

    கவிதை மிக வீரியமா இருக்குங்க.... பாராட்டுக்கள்.


    கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..

    ReplyDelete
  49. TAMIL 007 said... [Reply to comment]

    வலி தான் வெற்றியின் ரகசியம்!
    அனைவரும் கண்டிப்பாக தெரிந்து! புரிந்து! நடந்து கொள்ள வேண்டிய கருத்தை கவிதை வடிவில் பதிவு செய்தது நன்றாக உள்ளது நண்பரே!

    கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..

    ReplyDelete
  50. Riyas said... [Reply to comment]

    கவிதையை ரசித்தேன்..

    //அன்பாக வாசகர்களே..
    வந்துப் போனதற்கான தடயங்களை இங்கே விட்டுச் செல்லுங்கள்//

    இதையும் ரசித்தேன் உங்களை பின் தொடர்ந்துவிட்டேன்



    கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..

    ReplyDelete
  51. ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.
    http://blogintamil.blogspot.com/2011/02/2-thursday-in-valaichcharam-rahim.html

    மிகவும் நன்றி.. நண்பரே..
    இதோ போகிறேன்.. வலைச்சரத்திற்கு..

    ReplyDelete
  52. ஆயிஷா said... [Reply to comment]

    அருமை.வாழ்த்துக்கள்.


    கவிதையை படித்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி.. நண்பரே..

    ReplyDelete
  53. கவிதை வலிகள் நிறைந்த உணர்வுகள்.. நல்லாருக்கு நண்பரே

    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  54. ‌கோடி முத்தங்களை
    உளியோடு பகிராமல்
    எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..

    ரசித்த வரிகள். அருமை.

    ReplyDelete
  55. என்னங்க சார் இன்னிக்கு ஏதும் கவிதை இல்லையா?

    ReplyDelete
  56. ஓ.. உலகத்தீரே..
    ஒரு போதும் விரும்பாதீர்
    வலிகள் இல்லாத வாழ்க்கையை...


    நல்லா இருக்கு வலியில்லாமல் எது வாழ்க்கை!!

    ReplyDelete
  57. மாணவன் said... [Reply to comment]

    கவிதை வலிகள் நிறைந்த உணர்வுகள்.. நல்லாருக்கு நண்பரே

    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)


    மாணவரின் வாழ்த்துக்கு நன்றி..

    ReplyDelete
  58. இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    கோடி முத்தங்களை
    உளியோடு பகிராமல்
    எந்தப்பாறையும் தெய்வமாவதில்லை..

    ரசித்த வரிகள். அருமை.


    நன்றி ‌தோழி..

    ReplyDelete
  59. பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    என்னங்க சார் இன்னிக்கு ஏதும் கவிதை இல்லையா?


    இன்னிக்கு லீவு பாட்டு ரசிகன்..

    ReplyDelete
  60. போளூர் தயாநிதி said... [Reply to comment]

    ஓ.. உலகத்தீரே..
    ஒரு போதும் விரும்பாதீர்
    வலிகள் இல்லாத வாழ்க்கையை...


    நல்லா இருக்கு வலியில்லாமல் எது வாழ்க்கை!!


    தங்கள் வருகைக்கு நன்றி..

    ReplyDelete
  61. கவிதை வீதி கலக்குதையா
    வாழ்த்துகளும் வாக்குகளும்..
    யாருக்கு பூ செண்டு ?

    ReplyDelete
  62. யாழ். நிதர்சனன் said... [Reply to comment]

    கவிதை வீதி கலக்குதையா
    வாழ்த்துகளும் வாக்குகளும்..
    யாருக்கு பூ செண்டு ?

    அது உங்களுக்கு தான்..
    நன்றி நன்பரே..

    ReplyDelete
  63. Kavithai Arumai.. romba nalla irukku... indruthaan muthal varukai...

    ReplyDelete
  64. சௌந்தர் அண்ணே
    அடியேன் கவிதையில் கொஞ்சம் வீக்., அதுனாலதான் அடிக்கடி வரமுடியல ., இனி வர முயற்சி பண்ணுறேன்

    ReplyDelete
  65. சே.குமார் said... [Reply to comment]

    Kavithai Arumai.. romba nalla irukku... indruthaan muthal varukai...


    thanks

    ReplyDelete
  66. ஷர்புதீன் said... [Reply to comment]

    சௌந்தர் அண்ணே
    அடியேன் கவிதையில் கொஞ்சம் வீக்., அதுனாலதான் அடிக்கடி வரமுடியல ., இனி வர முயற்சி பண்ணுறேன்

    வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  67. வலிகள் உள்ள வாழ்க்கையை விரும்ப வேண்டுமா! எவ்வளவு நாளைக்கு? வாழ்நாள் முழுவதும்?.....வலிகள் மட்டுமே வாழ்க்கை யானால்......முடிவு?

    ReplyDelete
  68. அன்பின் சௌந்தர் - இன்பமும் துன்பமும் வாழ்வின் இரு பக்கங்கள் - இரண்டும் சேர்ந்தே நம்மிடம் வரும். வலிகள் இல்லாத வாழ்க்கை சுவைக்காது. கவிதை அருமை - உவமைகள் தேர்ந்தெடுத்துப் போடப்பட்டிருக்கின்றன. ரோஜா, கனிதரும்மரம், முட்முத்து, நிலா அருமை. பாறையும் கரையும் மிக மிக இரசித்தேன். நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் சௌந்தர் - நட்புடன் சீனா

    ReplyDelete
  69. அருமை ... அருமை !

    ReplyDelete
  70. sumaigal endrumea sugamana valigal. manathai kollai kollum varigal nanbare... arumai arumai...

    ReplyDelete
  71. அருமை ... அருமை !






    அருமை ... அருமை !

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...