கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 March, 2011

வாழும் போதே அனுபவிக்கும் நரகம்..



காதல் காயமும் செய்யும்
கருணையும் செய்யும்
எனனை காயம் செய்திருக்கிறது..


காதல் சூரியனாய் சுடும்
நிலவாய் இனிக்கும்
என்னை சூரியனாய் சுட்டிருக்கிறது...

காதல் புயலாய் புரட்டிப்போடும்
பூக்களாய் வாசம் வீசும்
என்னை புரட்டிப் போட்டிருக்கிறது..

காதல் இடியாய் இதயத்தில் இறங்கும்
ராகங்களாய் ரீங்காரமிடும்
என்னை இடியாய் தாக்கியிருக்கிறது...

காதல் புரியாத சிதம்பர ரகசியம்
அறியமுடிந்த உள்ளங்கை ரேகை
என்னை சிதம்பர ரகசியமாய் குழப்பியிருக்கிறது..

காதல்
வாழும் போதே அனுபவிக்கும் நரகம்
சுற்றி தொடர்ந்து வரும் சொர்க்கம்

காதல்
எனக்கு வாழும் போதே 
அனுபவிக்கும் நரகம்..


தயவு செய்து வந்தமா படிச்சமா ஓட்டுப் போட்டோமா 
ஒரு பின்னுட்டம் தந்தம்மான்னு இருக்கனும்..

அதை விட்டுட்டு என்ன அனுபவமா.. 
அப்படின்னு யாராவது கேட்டிங்க..
அவ்வளவுதான்.. நான் அழுதுடுவேன்...

57 comments:

  1. ”இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து!”
    அதுதான் காதல்!

    ReplyDelete
  2. காதல் புரியாத சிதம்பர ரகசியம்
    அறியமுடிந்த உள்ளங்கை ரேகை
    என்னை சிதம்பர ரகசியமாய் குழப்பியிருக்கிறது..

    ...நரகத்தை பற்றி நெறைய தெரிஞ்சு வச்சுருப்பேங்க போல... நண்பா கவிதை அருமை... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்க அனுபவங்களா? ஹி ஹி ( அனுபவமா?ன்னு தானே கேட்கக்கூடாது..?)

    ReplyDelete
  4. >>காதல்
    வாழும் போதே அனுபவிக்கும் நரகம்
    சுற்றி தொடர்ந்து வரும் சொர்க்கம்

    நல்லாருக்கு

    ReplyDelete
  5. நண்பா...
    கவிதை அருமை..!
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    ”இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து!”
    அதுதான் காதல்!
    //////

    நன்றி தலைவா

    ReplyDelete
  7. /////////
    ரேவா said... [Reply to comment]

    காதல் புரியாத சிதம்பர ரகசியம்
    அறியமுடிந்த உள்ளங்கை ரேகை
    என்னை சிதம்பர ரகசியமாய் குழப்பியிருக்கிறது..

    ...நரகத்தை பற்றி நெறைய தெரிஞ்சு வச்சுருப்பேங்க போல... நண்பா கவிதை அருமை... வாழ்த்துக்கள்
    .....
    /////

    நன்றி..

    ReplyDelete
  8. /////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    உங்க அனுபவங்களா? ஹி ஹி ( அனுபவமா?ன்னு தானே கேட்கக்கூடாது..?)
    //


    எப்படியாது கேட்டுடனும்..

    ReplyDelete
  9. சார் சார், நீங்க உண்மையிலேயே ரொம்ப நல்லவர் சார், இத்தனை இடத்துல அடிவாங்கியும் பொறுமையா கவிதை எழுதிக்கிட்டு இருக்கீங்களே.....?

    ReplyDelete
  10. நாங்களும் கேட்டுட்டோம்ல எப்பூடி?

    ReplyDelete
  11. ////////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    சார் சார், நீங்க உண்மையிலேயே ரொம்ப நல்லவர் சார், இத்தனை இடத்துல அடிவாங்கியும் பொறுமையா கவிதை எழுதிக்கிட்டு இருக்கீங்களே.....?
    ///////

    என்னது..
    வெளியிலே தெரிஞ்சி போச்சா..

    எப்படிப்பா கண்டுபிடிக்கிறிங்க..

    ReplyDelete
  12. யோவ் லவ் மேட்டர்ல எப்பவும் கேட்கக் கூடாதுன்னா கேட்கனும்னு அர்த்தம், விளங்குதா?

    ReplyDelete
  13. /////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    யோவ் லவ் மேட்டர்ல எப்பவும் கேட்கக் கூடாதுன்னா கேட்கனும்னு அர்த்தம், விளங்குதா?
    ///////

    அப்ப அவ என்ன பன்னி-ன்னு திட்றா அப்ப அதற்கு அர்த்தம் என்ன ..

    ReplyDelete
  14. //காதல்
    எனக்கு வாழும் போதே
    அனுபவிக்கும் நரகம்..//


    அட்ரா சக்கை சூப்பர்...மக்கா...

    ReplyDelete
  15. ///////# கவிதை வீதி # சௌந்தர் said... [Reply to comment]
    /////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    யோவ் லவ் மேட்டர்ல எப்பவும் கேட்கக் கூடாதுன்னா கேட்கனும்னு அர்த்தம், விளங்குதா?
    ///////

    அப்ப அவ என்ன பன்னி-ன்னு திட்றா அப்ப அதற்கு அர்த்தம் என்ன .. ////////

    அப்படின்னா கார்த்தி மாதிரி அழக்கா ஸ்மார்ட்டா இருக்கீங்கன்னு கொஞ்சறாங்கன்னு அர்த்தம்... புரிஞ்சதா?

    ReplyDelete
  16. //அதை விட்டுட்டு என்ன அனுபவமா..
    அப்படின்னு யாராவது கேட்டிங்க..
    அவ்வளவுதான்.. நான் அழுதுடுவேன்...//

    கேப்பியா கேப்பியா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  17. கவிதை டெரரா இருக்கு மக்கா கலக்கல்...

    ReplyDelete
  18. /////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    ///////# கவிதை வீதி # சௌந்தர் said... [Reply to comment]
    /////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]

    யோவ் லவ் மேட்டர்ல எப்பவும் கேட்கக் கூடாதுன்னா கேட்கனும்னு அர்த்தம், விளங்குதா?
    ///////

    அப்ப அவ என்ன பன்னி-ன்னு திட்றா அப்ப அதற்கு அர்த்தம் என்ன .. ////////

    அப்படின்னா கார்த்தி மாதிரி அழக்கா ஸ்மார்ட்டா இருக்கீங்கன்னு கொஞ்சறாங்கன்னு அர்த்தம்... புரிஞ்சதா?
    ////

    யோய் அப்படியே உன் பிட்டை இங்க போட்டுட்டு போரியா..

    கார்த்தி மாதிரி.. நாங்க நம்மனும்...

    ஏன் இந்த பொழப்பு..

    ReplyDelete
  19. //காதல்
    எனக்கு வாழும் போதே
    அனுபவிக்கும் நரகம்..//
    வார்த்தைகளால் விளையாடி இருக்கீங்க, நண்பரே! அட்டகாசம்.

    ReplyDelete
  20. கெளப்புங்க சார் ...
    அனைத்தும் அருமை ...
    படிச்சதுமே தெரிஞ்சே போச்சு ..
    இதெல்லாம் உங்களின்
    கற்பனை இல்லை என்று ...
    அப்போ அ......ம்...

    ReplyDelete
  21. எனக்கு காதல் வந்ததும் அனுபவித்து பார்த்து விட்டு இந்த கவிதைக்கு விமர்சனம் எழுதுகிறேன்.

    ReplyDelete
  22. அறிவிப்பு :

    காதலிக்க பெண்கள் தேவை!

    ReplyDelete
  23. ///////
    சே.குமார் said... [Reply to comment]

    நண்பா...
    கவிதை அருமை..!
    வாழ்த்துக்கள்.
    /////

    நன்றி குமார்

    ReplyDelete
  24. //////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    //காதல்
    எனக்கு வாழும் போதே
    அனுபவிக்கும் நரகம்..//


    அட்ரா சக்கை சூப்பர்...மக்கா...
    /////////

    நன்றி..

    ReplyDelete
  25. /////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    கவிதை டெரரா இருக்கு மக்கா கலக்கல்...
    ////

    நன்றி மனோ சார்..

    ReplyDelete
  26. சரியா சொன்னீங்க சௌந்தர் நரகம்தான்..

    ReplyDelete
  27. அருமையான கவிதை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. சூப்பரா இருக்கு

    ReplyDelete
  29. அதுதான் சொர்க்கமாய் ஒரு கவிதை தந்திருக்கிறதே. அப்புறம் என்ன நரகம்?

    ReplyDelete
  30. காதலை பற்றிய பார்வை ரசிக்கவைத்தது!

    ReplyDelete
  31. ////
    //காதல்
    எனக்கு வாழும் போதே
    அனுபவிக்கும் நரகம்..//
    ///

    உண்மைதாள்...

    ReplyDelete
  32. காதலின் வண்ணம் சிதறியிருக்கிறது உங்கள் கவிதையின் வரிகளில் மட்டுமல்ல, வலைப்பூ முழுமைக்கும்..

    ReplyDelete
  33. தலைப்பு ஈர்க்கிறது..

    ReplyDelete
  34. //////
    FOOD said... [Reply to comment]

    //காதல்
    எனக்கு வாழும் போதே
    அனுபவிக்கும் நரகம்..//
    வார்த்தைகளால் விளையாடி இருக்கீங்க, நண்பரே! அட்டகாசம்.
    ////////

    நன்றி சார்..

    ReplyDelete
  35. /////////
    அரசன் said... [Reply to comment]

    கெளப்புங்க சார் ...
    அனைத்தும் அருமை ...
    படிச்சதுமே தெரிஞ்சே போச்சு ..
    இதெல்லாம் உங்களின்
    கற்பனை இல்லை என்று ...
    அப்போ அ......ம்...
    /////////

    என்னங்க சொல்ல வர்றீங்க..

    ReplyDelete
  36. ////
    தமிழ் 007 said... [Reply to comment]

    எனக்கு காதல் வந்ததும் அனுபவித்து பார்த்து விட்டு இந்த கவிதைக்கு விமர்சனம் எழுதுகிறேன்.
    /////

    அப்படியா சங்கதி..

    ReplyDelete
  37. /////
    தமிழ் 007 said... [Reply to comment]

    அறிவிப்பு :

    காதலிக்க பெண்கள் தேவை!
    ///////

    ஒரு டைப்பாதம்பா இருக்க..

    ReplyDelete
  38. //////
    தேனம்மை லெக்ஷ்மணன் said... [Reply to comment]

    சரியா சொன்னீங்க சௌந்தர் நரகம்தான்..
    //////


    நன்றி...

    ReplyDelete
  39. //////
    ஆயிஷா said... [Reply to comment]

    அருமையான கவிதை.வாழ்த்துக்கள்
    //

    நன்றி ஆயிஷா..

    ReplyDelete
  40. ////
    ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    சூப்பரா இருக்கு
    ////


    நன்றி தல..

    ReplyDelete
  41. //
    சாகம்பரி said... [Reply to comment]

    அதுதான் சொர்க்கமாய் ஒரு கவிதை தந்திருக்கிறதே. அப்புறம் என்ன நரகம்?
    ////////////

    நன்றி..

    ReplyDelete
  42. ////////
    She-nisi said... [Reply to comment]

    காதலை பற்றிய பார்வை ரசிக்கவைத்தது!
    ///////

    நன்றி..

    ReplyDelete
  43. //////
    பாட்டு ரசிகன் said... [Reply to comment]

    கவிதை அருமை..
    /////

    தங்கள் வருகைக்கு நன்றி பாட்டு ரசிகன்...

    ReplyDelete
  44. ////////
    பாரத்... பாரதி... said... [Reply to comment]

    காதலின் வண்ணம் சிதறியிருக்கிறது உங்கள் கவிதையின் வரிகளில் மட்டுமல்ல, வலைப்பூ முழுமைக்கும்..
    //////

    நன்றி பாரத் பாரதி..

    ReplyDelete
  45. அனுபவம் மனிதருக்கு மனிதர் மாறுபடுமே.

    ReplyDelete
  46. வந்தேன் படித்தேன் வோரட்டு போட்டேன்.. வேற எந்த கேள்வியும் கேட்கல செந்தர்... அருமை

    ReplyDelete
  47. மூச்....எதுவும் கேக்கலப்பா.கவிதை வாசிச்சேன்.ஓட்டும் போட்டேன் சௌந்தர்!

    ReplyDelete
  48. எனக்கு ரெம்ப வருத்தமா இருக்கு.. உங்கள மாதிரி வாத்தியார்கிட்ட படிக்கலையேன்னு.. :))
    ஃபிகர தேத்த உங்ககிட்டே கவிதை வாங்கிக்கலாம் பாருங்க.. :))

    ReplyDelete
  49. பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
    யோவ் லவ் மேட்டர்ல எப்பவும் கேட்கக் கூடாதுன்னா கேட்கனும்னு அர்த்தம், விளங்குதா? //

    உண்மைலே அப்பிடியா? அதான் நேத்து ஏன் ஆளு எங்கிட்ட முத்தமெல்லாம் கேக்கபூடாதுன்னு சொன்னுச்சா? பாருங்க இது கூட தெரியாத சின்ன பையனா இருக்கேன்.. :))

    ReplyDelete
  50. மிக அருமை அனுபவமா எனச் சொல்லவில்லை
    ஆனால் அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்
    அதனால்தான் சிறந்த படைப்பாக மிளிர்கிறது
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. //////
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    அனுபவம் மனிதருக்கு மனிதர் மாறுபடுமே.
    //////
    நன்றி தமிழ் உதயம்

    ReplyDelete
  52. ///////
    தோழி பிரஷா said... [Reply to comment]

    வந்தேன் படித்தேன் வோரட்டு போட்டேன்.. வேற எந்த கேள்வியும் கேட்கல செந்தர்... அருமை
    ////////

    நன்றி தோழி..

    ReplyDelete
  53. //////
    ஹேமா said... [Reply to comment]

    மூச்....எதுவும் கேக்கலப்பா.கவிதை வாசிச்சேன்.ஓட்டும் போட்டேன் சௌந்தர்!
    //////


    நன்றி தோழி..

    ReplyDelete
  54. //////
    வைகை said... [Reply to comment]

    எனக்கு ரெம்ப வருத்தமா இருக்கு.. உங்கள மாதிரி வாத்தியார்கிட்ட படிக்கலையேன்னு.. :))
    ஃபிகர தேத்த உங்ககிட்டே கவிதை வாங்கிக்கலாம் பாருங்க.. :))
    ////////


    வாங்க நிறைய கொடுப்போம்..

    ReplyDelete
  55. //////
    வைகை said... [Reply to comment]

    பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply to comment]
    யோவ் லவ் மேட்டர்ல எப்பவும் கேட்கக் கூடாதுன்னா கேட்கனும்னு அர்த்தம், விளங்குதா? //

    உண்மைலே அப்பிடியா? அதான் நேத்து ஏன் ஆளு எங்கிட்ட முத்தமெல்லாம் கேக்கபூடாதுன்னு சொன்னுச்சா? பாருங்க இது கூட தெரியாத சின்ன பையனா இருக்கேன்.. :))
    //////

    பாத்து பாஸ் வேர எதையாவது கொடுக்க போராங்க..

    ReplyDelete
  56. /////
    Ramani said... [Reply to comment]

    மிக அருமை அனுபவமா எனச் சொல்லவில்லை
    ஆனால் அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்
    அதனால்தான் சிறந்த படைப்பாக மிளிர்கிறது
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    //////
    நன்றி ரமணி..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...