கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 March, 2011

கண்ணாடியில் உங்கள் பிம்பம் என்ன செய்கிறது..?


புகழ் பெற்ற ஜென் குருவை தேடி, ஒரு நாள் ஒரு இளைஞன் வந்தான். ஜென் தத்துவப்படியே அவன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தான். மேலும் தன் வாழ்க்கை சுகமாக அமைய புதுப்புது ஜென் கருத்துக்கள் அவனுக்கு தேவைப்பட்டன. ஆதனால் ஜென் குருவான அ‌வரைத்‌ தேடி வந்தான்.

அவரை வணங்கிய அவன், “குருவே! நானும் ஒரு தத்துவ மாணக்கன்தான். எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அதை தங்களிடம் கேட்கலாமா?” என்றான்.

“கேள்!” என்றார் ஜென் குரு.

“முதலில் உன்னை நீ நேசி அப்போதுதான் உன்னால் மற்றவர்களை நேசிக்கமுடியும். தயவு செய்து இந்த விளக்கத்தை தாங்கள் எனக்குக் கூறவேண்டும்! என்றான் இளைஞன்.

ஜென் குரு மெல்லப் புன்னகைத்தார்.

"நீ பிறர் மீது வெறுப்பாகவோ, கோவமாகவோ, எதிர்ப்பாகவோ, இருக்கிறாய் என வைத்துக்கொள். அதனால் முதலில் பாதிக்கப்படுவர் யார்?” என்று கேட்டார் ஜென் குரு.

அந்த இளைஞன் சிறிது யோசித்துவிட்டு, ”முதலில் பாதிக்கப்படுவது என்றால்.. அது நானாகத்தான் இருக்க முடியும்!” என்றான்.

குரு மேலும் புன்னகைத்தார்.

”சரியாக சிந்தித்திருக்கிறாய். உன் எதிர்மறைச் செயலால் முதல் முதலில் பாதிக்கப்படுவது உன் எதிரியல்ல, நீதான். அதுபோல உன்னிடம் நீ நல்ல எண்ணங்களையும், செயல்களையும் வளர்த்துக் கொண்டால்... உன்னை நீ நேசித்தால்... உன் மீதே நீ அன்பு செலுத்தினால் அவற்றையேதான் நீ பிறர் மீதும் செலுத்துவாய். ஒத்துக் கொள்கிறாயா?” என்றான் இளைஞன்.

“ஒத்துக் கொள்கிறேன் குருவே!” என்றான் இளைஞன்.

“அதுதான் உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் நீ பிறருக்குத் கொடுக்க முடியும்” என்றார் குரு.

தெளிவான சிந்தனையுடன் அந்த இளைஞன், ஜென் குருவிடமிருந்து விடைபெற்றான்.
(நன்றி ஜென் கதைகள்)


உன்னைதான் சதோதரர்களே.. எதை விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடைச் செய்யமுடிமும். நாம் பிறருக்கு கொடுக்காததை நாம் அதை ‌அவரிடமிருந்து எதிர்ப்பார்ப்பது எவ்வளவு முட்டாள் தனம். இந்த உலகில் நாம் வாழும் காலத்தில் நாம் எதையெல்லாம் பெற நினைக்கிறோமோ அதையெல்லாம் நாம் பிறருக்கு கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதை அக்காலத்தில் “முற்பகல் செய்வின் பிற்பகல் விளையும்”  “வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்” ‌போன் பழமொழிகளை கொண்டு சொன்னார்கள்.

நீங்கள் ஒரு நிலைக்கண்ணாடி முன்பு நில்லுங்கள்.. இப்போது பாருங்கள் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை ‌அப்படியே அந்த பிம்பம் செய்யும்.. நீங்கள் புன்னகைத்தால் உங்கள் பிம்பம் புன்னகைக்கும்.. நீங்கள் கோவப்பட்டால் அதுவும்  கோவப்படும். ஆம்  இந்த உலகம் ஒரு எதிரொளிபோலதான் தாங்கள் என்ன செய்துள்ளீர்களோ அதையே உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

நாம் வாழும் காலம் வெறும் 50, 60  ஆண்டுகள் தான் பி்ன்பு ஏன் 1000 ஆண்டுகள் வாழப்போவது‌போல் பாவணைகள்.. இருக்கும் கொஞ்சம் காலமும் நாம் அனைவரிடமும் அன்பு காட்டி அரவணைப்போம். நம் வாழ்க்கையோடு இந்த உலகமும் வசந்த‌மடையும்.

/// அன்பை விதைப்போம் அறுவடைகள் ஆனந்தமாய்....////

என்ன பாஸ்... எனக்கு தெரிந்த விஷயத்தை தங்களுக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன்.. இந்த உலகில் எதிர்காலம் ஆனந்தமடைய நாமும் ஒரு விதை செய்வோமே..

இந்த தளம் தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.. மறக்காமல் உங்களுடைய கருத்தையும் பதிவுச்செய்யுங்கள்..
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!


48 comments:

  1. நாம் வாழும் காலம் வெறும் 50, 60 ஆண்டுகள் தான் பி்ன்பு ஏன் 1000 ஆண்டுகள் வாழப்போவது‌போல் பாவணைகள்..////////////////
    நல்ல வரிகள்...........

    ReplyDelete
  2. ..
    /// அன்பை விதைப்போம் அறுவடைகள் ஆனந்தமாய்....////..

    உண்மைதான்...

    ReplyDelete
  3. //சரியாக சிந்தித்திருக்கிறாய். உன் எதிர்மறைச் செயலால் முதல் முதலில் பாதிக்கப்படுவது உன் எதிரியல்ல, நீதான். //
    நன்றே சிந்திக்கப்பட வேண்டிய செய்தி. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  4. அருமையாக சொல்லி இருக்கிறிர்கள்.

    ReplyDelete
  5. //அன்பை விதைப்போம் அறுவடைகள் ஆனந்தமாய்...//

    நல்ல வரிகள்.

    அருமையாக சொல்லி இருக்கிறிர்கள்.

    ReplyDelete
  6. கதையை விட உன்னுடைய விளக்கம் அருமை நண்பா...

    ReplyDelete
  7. உளவாளி said... [Reply to comment]

    நாம் வாழும் காலம் வெறும் 50, 60 ஆண்டுகள் தான் பி்ன்பு ஏன் 1000 ஆண்டுகள் வாழப்போவதுபோல் பாவணைகள்..////////////////
    நல்ல வரிகள்...........
    --- முதல் முறையாக நண்பரின் தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  8. சங்கவி said... [Reply to comment]

    ..
    /// அன்பை விதைப்போம் அறுவடைகள் ஆனந்தமாய்....////..

    உண்மைதான்...
    --- நன்றி..

    ReplyDelete
  9. FOOD said... [Reply to comment]

    //சரியாக சிந்தித்திருக்கிறாய். உன் எதிர்மறைச் செயலால் முதல் முதலில் பாதிக்கப்படுவது உன் எதிரியல்ல, நீதான். //
    நன்றே சிந்திக்கப்பட வேண்டிய செய்தி. பகிர்விற்கு நன்றி.
    --- உங்க பதிவு வந்து ரொம்ப நாளாச்சே...

    ReplyDelete
  10. தமிழ் உதயம் said... [Reply to comment]

    அருமையாக சொல்லி இருக்கிறிர்கள்.
    --- நன்றி...

    ReplyDelete
  11. சே.குமார் said... [Reply to comment]

    //அன்பை விதைப்போம் அறுவடைகள் ஆனந்தமாய்...//

    நல்ல வரிகள்.

    அருமையாக சொல்லி இருக்கிறிர்கள்.
    ///// Thanks for your comments..

    ReplyDelete
  12. அன்பை விதைப்போம் அறுவடைகள் ஆனந்தமாய் இது பிரமாதமான தத்துவம்.. உங்கள் பதிவுகள் அனைத்தும் தரமான படைப்புகளை உள்ளடக்கியுள்ளமைக்கு எனது பராட்டுக்கள் சவுந்தர்..

    ReplyDelete
  13. எதை விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடைச் செய்யமுடிமும்.........../////////////

    பைபிள் வரிகள் ..........

    அருமை ............

    ReplyDelete
  14. சூப்பர்

    ReplyDelete
  15. வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்” ‌//
    எப்பொழுதும் பயன்படும் பழமொழி

    ReplyDelete
  16. அருமையான டைட்டில்

    ReplyDelete
  17. பகிர்வு தத்துவங்கள் அருமை

    கவிஞ்சா உனக்கு என்னாச்சி இன்னிக்கு சொல்லு!

    ReplyDelete
  18. /////
    உளவாளி said... [Reply to comment]

    நாம் வாழும் காலம் வெறும் 50, 60 ஆண்டுகள் தான் பி்ன்பு ஏன் 1000 ஆண்டுகள் வாழப்போவது‌போல் பாவணைகள்..////////////////
    நல்ல வரிகள்...........
    ///////

    நன்றி உளவாளி..

    ReplyDelete
  19. ////
    சங்கவி said... [Reply to comment]

    ..
    /// அன்பை விதைப்போம் அறுவடைகள் ஆனந்தமாய்....////..

    உண்மைதான்...
    ///////

    நன்றி சங்கவி..

    ReplyDelete
  20. எனக்கு அந்தக் கதை பிடிச்சிருக்கு ..செல்வகதைகள் மாதிரி சின்னகதையா இருக்கு .. ஹி ஹி . ஆனா தத்துவம் ரொம்ப ரொம்ப சரியானது. ஏன்னா இங்க எதுவுமே நிலை இல்லை .. அப்புறம் எதுக்கு கோபம் , பொறமை எல்லாம் .. நல்ல கனி நல்ல கனி .. அடச்சே நல்ல பதிவு ..

    ReplyDelete
  21. நல்ல கருத்துள்ள பதிவு

    ReplyDelete
  22. ///////
    FOOD said... [Reply to comment]

    //சரியாக சிந்தித்திருக்கிறாய். உன் எதிர்மறைச் செயலால் முதல் முதலில் பாதிக்கப்படுவது உன் எதிரியல்ல, நீதான். //
    நன்றே சிந்திக்கப்பட வேண்டிய செய்தி. பகிர்விற்கு நன்றி.
    /////

    நன்றி..

    ReplyDelete
  23. /////
    தமிழ் உதயம் said... [Reply to comment]

    அருமையாக சொல்லி இருக்கிறிர்கள்.
    ////

    நன்றி தமிழ் உதயம்..

    ReplyDelete
  24. //////
    சே.குமார் said... [Reply to comment]

    //அன்பை விதைப்போம் அறுவடைகள் ஆனந்தமாய்...//

    நல்ல வரிகள்.

    அருமையாக சொல்லி இருக்கிறிர்கள்.
    ////

    நன்றி..

    ReplyDelete
  25. ////
    வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    கதையை விட உன்னுடைய விளக்கம் அருமை நண்பா...
    //////

    தளத்தை பார்த்துக் கொண்டதற்கு நன்றி நண்பா..

    ReplyDelete
  26. /////
    கே.ஆர்.பி.செந்தில் said... [Reply to comment]

    அன்பை விதைப்போம் அறுவடைகள் ஆனந்தமாய் இது பிரமாதமான தத்துவம்.. உங்கள் பதிவுகள் அனைத்தும் தரமான படைப்புகளை உள்ளடக்கியுள்ளமைக்கு எனது பராட்டுக்கள் சவுந்தர்..
    //////

    தங்கள் ஆதரவுக்கு நன்றி செந்தில்

    ReplyDelete
  27. ////
    அஞ்சா சிங்கம் said... [Reply to comment]

    எதை விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடைச் செய்யமுடிமும்.........../////////////

    பைபிள் வரிகள் ..........

    அருமை ............
    ////

    நன்றி...

    “சிறுக விதைக்கிறவனே பெருக அறுக்கிறான்”

    இதுதான் பைபிள் வசனம்..

    ReplyDelete
  28. கவிதை தேடி உங்கள் வீதியில் வந்தேன், கதை கண்டு இன்புற்றேன்.
    கவிதையோ,கதையோ மக்களின் மனங்களை பண் பட செய்யும் என்பதை சொல்லாமல் சொல்லியது உங்கள் கதை.

    ReplyDelete
  29. நானும் வந்துட்டேன்....

    ReplyDelete
  30. நாமும் அன்பெனும் விதை விதைப்போம்....

    ReplyDelete
  31. /////ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply to comment]

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்” ‌//
    எப்பொழுதும் பயன்படும் பழமொழி
    //

    நன்றி..

    ReplyDelete
  32. /////
    விக்கி உலகம் said... [Reply to comment]

    பகிர்வு தத்துவங்கள் அருமை

    கவிஞ்சா உனக்கு என்னாச்சி இன்னிக்கு சொல்லு!
    ///

    வாங்க விக்கி..

    ReplyDelete
  33. இன்று ஓட்டு மட்டுமே ....மன்னிக்கவும்

    ReplyDelete
  34. //////
    கோமாளி செல்வா said... [Reply to comment]

    எனக்கு அந்தக் கதை பிடிச்சிருக்கு ..செல்வகதைகள் மாதிரி சின்னகதையா இருக்கு .. ஹி ஹி . ஆனா தத்துவம் ரொம்ப ரொம்ப சரியானது. ஏன்னா இங்க எதுவுமே நிலை இல்லை .. அப்புறம் எதுக்கு கோபம் , பொறமை எல்லாம் .. நல்ல கனி நல்ல கனி .. அடச்சே நல்ல பதிவு ..
    ///////

    நன்றி..

    ReplyDelete
  35. ////////
    VELU.G said... [Reply to comment]

    நல்ல கருத்துள்ள பதிவு
    ////

    நன்றி வேலு..

    ReplyDelete
  36. /////
    மொக்கராசா said... [Reply to comment]

    கவிதை தேடி உங்கள் வீதியில் வந்தேன், கதை கண்டு இன்புற்றேன்.
    கவிதையோ,கதையோ மக்களின் மனங்களை பண் பட செய்யும் என்பதை சொல்லாமல் சொல்லியது உங்கள் கதை.
    ///////

    வாங்க ராசா...

    ReplyDelete
  37. ////////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    நானும் வந்துட்டேன்....
    ///////

    வந்ததுக்கு நன்றி மனோ..

    ReplyDelete
  38. //////
    MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]

    நாமும் அன்பெனும் விதை விதைப்போம்....
    //

    நன்றி..

    ReplyDelete
  39. ///////
    ரஹீம் கஸாலி said... [Reply to comment]

    இன்று ஓட்டு மட்டுமே ....மன்னிக்கவும்
    /////

    அவ்வளவுதானா..

    ReplyDelete
  40. /////
    சென்னை பித்தன் said... [Reply to comment]

    அன்பே சிவம்!
    ////

    உண்மைதாங்க..

    ReplyDelete
  41. //வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    FOOD said... [Reply to comment]

    --- உங்க பதிவு வந்து ரொம்ப நாளாச்சே...
    நாளைக்கு காலைல பதிவுடன்
    சந்திப்போமா, நண்பரே!

    ReplyDelete
  42. அன்பை விதைக்க ஆர்வமூட்டும் அருமையான சிந்தனை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. ஒரு நல்ல விஷயத்தை இன்று கற்றுக் கொண்டேன். நன்றி. [நிச்சயம் வாழ்வில் இதை செயல் படுத்துவேன்!!]

    ReplyDelete
  44. ///
    FOOD said... [Reply to comment]

    //வேடந்தாங்கல் - கருன் said... [Reply to comment]

    FOOD said... [Reply to comment]

    --- உங்க பதிவு வந்து ரொம்ப நாளாச்சே...
    நாளைக்கு காலைல பதிவுடன்
    சந்திப்போமா, நண்பரே!
    ///

    ம்.. போடுங்க.. நானும் வர்றேன்..

    ReplyDelete
  45. //////
    இராஜராஜேஸ்வரி said... [Reply to comment]

    அன்பை விதைக்க ஆர்வமூட்டும் அருமையான சிந்தனை.வாழ்த்துக்கள்.
    ///

    நன்றி..

    ReplyDelete
  46. /////
    Jayadev Das said... [Reply to comment]

    ஒரு நல்ல விஷயத்தை இன்று கற்றுக் கொண்டேன். நன்றி. [நிச்சயம் வாழ்வில் இதை செயல் படுத்துவேன்!!]
    //////

    நன்றி..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...