கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 May, 2011

காலத்தோடு த்துபோவதில்லை வாழ்க்கை..!



காலத்தோடு ஒத்துபோவதில்லை
வாழ்க்கை..!

ழைவேண்டி தவம் கிடக்கும் மனசு
‌எந்த மனம் நனைந்து களிக்கிறது
மழை வந்தவுடன்..!

பூவாத மரங்களை சபித்துமுடிக்கிறோம்
பூத்துக் காய்த்தவுடன்
கல்லெறிந்து காயப்படுத்துகிறோம்....!

நாட்களின் நேரம்
ஒருவனுக்கு போதவில்லை
ஒருவனுக்கு ஓடவில்லை
இருவருக்கும் பயன்படாமல்
பயணப்படுகிறது கடிகார முட்கள்...!

சித்த போது கிடைக்காத உணவு
விருந்தாக வரும் 
விரும்பாதபோது..!

னிமைத்தேடி அலைவோம்
எங்கிருந்து விடும் 
நம் இதயத்தின் ஓலங்கள்..!

திர்ப்படும் அறிந்தமுகங்கள்
இன்பத்தைவிட இன்னல்களையே
அதிகம் ஞாபகப்படுத்துகிறது..!

னிமூட்டம் போல் 
வாழ்க்கையை மூடிக்கொண்டிருக்கிறது
அதற்கான போராட்டங்கள்..!

ணம்தேடும் வாழ்க்கையில்
முடிந்துப்போகிறது 
நம் பயணம்...!

நிகழ்கால வெப்பத்தில்...
நிக‌ழ்கால குளிரில்...
நிகழ்கால கதகதப்பில்
வாழவிரும்புவதில்லை எவரும்...

டி முடித்தப்பின் ஒவ்வொருவருக்கும்
மருந்தாகிறது மரணம்..
 
ண்மைதான்
வாழ்க்கை ஒருநாளும்
காலத்தோடு ஒத்துபோவதில்லை..!


கருத்திடுங்கள்..! வாக்களியுங்கள்...!
இந்த கவிதை உயிர்த்தெழும்...!

30 May, 2011

சமச்சீர் கல்வியும், தமிழக அரசுகளின் அராஜகமும்....


எற்றத்தாழ்வுகளை மாணவர்களிடத்தில் களைந்துவிட வேண்டும் என்ற உயரிய நோக்கில் முந்தைய திமுக அரசால் அறிமுகம் செய்யப்பட்டதுதான் இந்த சமச்சீர் கல்வி முறை. இந்த முறையில் வழங்குவதற்க்கு மொத்தம் 7  கோடியே 50 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இலவசமாக வழங்குவதற்காக 81 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 33 லட்சம் புத்தகங்கள் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் தேவைக்கு விற்பனை செய்யப்படும். 


இந்த ஆண்டு மற்ற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி வருவதால், 2ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் 5 கோடியே 8 லட்சம் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு தற்போது பந்தாடப்படும் இந்த முறையினால் அத்தனை புத்தகங்களும் கிடங்குகளில் குப்பையாக போடப்பட்டுள்ளன. இந்த சமச்சீர் கல்வியைப்பற்றி இந்த சமூத்தினரிடம் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகிறது. சிலர் வரவேற்கிறார்கள் சிலர் வெறுக்கிறார்கள். இருந்தாலும் சமச்சீர் என்பது எழுச்சிப்பெறும்  ஒருசமூகத்தில் இருக்கவேண்டிய ஒன்றுதான்.

லட்சலட்சமாய் செலவு செய்து படிக்கும் ஒரு மாணவனும், அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனும் ஒரே பாடப்புத்தகத்தை படிப்பதா? என்று குமுறுகிறது மேல்தட்டு வர்க்கம். ஆனால் உயரிய கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரவேற்கிறது அடித்தட்டு மனசு. இந்த கல்வி  சரியா தவறா என்று விவாதிப்பதற்குள் இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கிட்டதட்ட 300 கோடிகளுக்கு மேல். தற்போது பழைய பாடப்புத்தகங்களை ஜூன் 15 க்கு  அச்சடித்து வினியோகிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதற்கு ஒரு 200 கோடி என மக்களின் வரிப்பணம் மண்ணுக்கு சென்றுக்கொண்டிருக்கிறது.


திமுக-வின் அவசரத்தனம் :

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கொண்டுவரவேண்டும். தனியார்பள்ளிகளின் வருமானத்தை அடியோடு முடக்கவேண்டும். என்ற கொள்கையோடு திமுக அரசு களத்தில் இறங்கியது. திமுக அரசின் இந்த கொள்கை சரியானதுதான் ஆனால் அவர்கள் அதை நடைமுறைப்படுத்திய விதமும், நேரமும்தான் தவறானது. ஒரு வேளை இத்திட்டதை ஆட்சிக்கு வந்த அந்த வருடமே பின்பற்றியிருந்தால் இந்த 5 ஆண்டுகளில் இத்திட்டம் மகத்தான வெற்றிப்பெற்றிருக்கும்.

1) ஒரு அரசு 5 ஆண்டுகள் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த 5 ஆண்டுகள் எவ்வாறு ஆட்சி நடத்துவது. எந்தவிதமான கொள்கைகளை கையாள்வது என்று ஆட்சிக்கு வந்த 1 வருடத்திற்குள் முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.

2) 2006-2011 வரை ஆட்சியில் இருந்த திமுக அரசு ஆரம்பத்தில் கல்வித்துறையில் எந்த கொள்கையை பின்பற்றுவது என்று முடிவெடுக்காமல் 5 ஆண்டுகளின் கடைசி ஆண்டில்தான் (2010-2011) முதல் முறையாக 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டு அதை ஒவ்வோறு வகுப்பாக அதிகரிக்க முடிவெடுத்தது.

3) அதன்படி ஆட்சி தொடருமா முடியுமா என்று பார்க்காமல் அவசரகதியாக அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் என்று முடிவுகட்டி பல நூறு கோடிகளை கொட்டி புத்தகங்களை அச்சிட்டது. இணையத்திலும் வெளியிட்டது. தற்போது ஆட்சி மாற்றத்தில் இது ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
 
4) திமுக ஆட்சிக்கு வந்த உடனே இக்கல்வி கொள்கையை அமுல் செய்திருந்தால் இவ்வளவு பிரச்சனைகள் இல்லை. அவசர கதியாக அவர்கள் செயல்பட்டதுதான் இத்திட்டம் தோல்வி அடைந்ததற்கு முதல்காரணம்.

5) அரசு ஒரு கல்விசார்ந்த நடவடிக்கை எடுக்கும் போது அதில் அந்த கட்சியின் கொள்கைகளை திணிக்கக்கூடாது. நாத்திகம், செம்மொ‌ழி பாடல், கலைஞர் மற்றும் கனிமொழி கவிதை என்பது  போன்றவை எல்லாத்தரப்பிலும் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.
 
இவைகள் தான் திமுக ஆட்சில் நடந்தவை இத்திட்டம் உண்மையில் நல்லது என்றாலும் இதை அவர்கள் வந்தவுடன் செய்யாததுதான் மிகப்பெரிய தவறு. ஒரு வேளை இத்திட்டம் செயல்பட்டிருந்தால்

1) தனியார் பள்ளிகளின் அட்டுழியம் கொஞ்சம் அடங்கியிருக்கும்.
2) அனைத்து மாணவர்களுக்கு ஒரு சரியான மற்றும் ஆரோக்கியமான போட்டியாக இருந்திருக்கும்.
3) கல்வியின் தரம் கொஞ்சம் உயர்ந்திருக்கும்.

அதிமுக அரசின் அடாவடித்தனம்:


பொதுவாக புதிய கட்சி ஆட்சிக்கு வரும்போது முந்தைய ஆட்சியின் கொள்கைகளை பின்பற்றமாட்டார்கள் ஆனால் கல்வி மற்றும் பிள்ளைகளின் நலன் கருதி இந்த விஷயத்தில் நல்ல முடிவை அதிமுக அரசு எடுத்திருக்கலாம்.

பொதுவாக அதிமுக அரசின் தலைமை எந்த முடிவையும் தானே தனிஆளாக எடுக்க பழக்கப்பட்டவர்.  அவர்தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எதையும் மாற்றக்கூடியவர். அவர் வேறொரு ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த திட்டத்தை எளிதில் ஏற்க மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதிமுக அரசு இத்திட்டத்தை எதிர்பதற்கான காரணங்கள் :

1) இது திமுக அரசு கொண்டுவந்த திட்டம்.

2) பாடங்களில் அட்டைப்படங்களில் திமுகவின் கொள்கைகள் இடம் பிடித்திருப்பது. (செம்மொழி பாடல், கலைஞல் கவிதை போன்றவை)

3) ஆசிரியர்களை 6 நாட்கள் பணி நாட்களாக ஆக்க வேண்டிய அம்மாவின் ஆசை இதன் மூலம் நிறைவுப் பெறும் இனி சனிக்கிழமைகளும் பள்ளி இயங்கும் சூ்ழ்நிலைவரும். (பள்ளியின் வேலைநாட்கள். தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வேலை நாட்கள் 220 நாட்கள், உயர் நிலைப்பள்ளியின் வேலை நாட்கள் 207 நாட்கள், மேல்நிலைக்கு அதிகபட்சமாக 180 நாட்கள் )

 ஆட்சிமாற்றங்கள் அரசின் மாற்றமாக இல்லாமல் கட்சிகளின் மாற்றமாகத்தான் தமிழகத்தில் இருந்து வருகிறது. அந்த ஆட்சியில் அவர்களுடைய பெயரில் திட்டங்கள் அவர்களுடைய கட்சியின் கொள்‌கைகளை திணிப்பது போன்றவை. திமுக, மற்றும் அதிமுக ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்திருந்தாலும் மாற்றுக்கட்சி இல்லாத சூழலில் இவர்களிடடே இந்த பொருப்பை தரவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது... வரும் காலங்களில் கல்விப்போன்ற முக்கியமான பிரச்சனைகளில் அரசு தனிகவனம் செலுத்தி மாணவர்களின் நலனுக்காக பாடுபடவேண்டும். இல்லையேல இதுப்போன்ற பிரச்சனைகளால் மாணவ சமூகம் பதிக்கப்பட வாய்ப்புண்டு.

நண்பர்களே இந்த விஷயத்தைப்பற்றி தங்களுடைய கருத்தையும் பதிவுச்செய்யுங்கள்.. நன்றி...!

27 May, 2011

அ.தி.மு.க. எங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் - விஜயகாந்த் போட்டி


சபாநாயகர் ஜெயக்குமார் ஆளுங்கட்சியிலும் இருந்துள்ளார், எதிர்க்கட்சியிலும் இருந்துள்ளார். எனவே இரு கட்சிகளிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும் என்று கூறியுள்ளார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்.

எந்தவித போட்டியும் இல்லாமல் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டதில் இருந்தே சபாநாயகர் பதவிக்கு தாங்கள் பொருத்தமானவர் என்பது தெளிவாகி விட்டது. சபாநாயகர் பட்டப்படிப்பும், சட்டமும் படித்தவர். ஆளும் கட்சியில் அமைச்சராகவும், எதிர்க்கட்சி வரிசையிலும் பணியாற்றி உள்ளார். எனவே ஆளும் கட்சியான அ.தி.மு.க. எதிர்க்கட்சியான எங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்.

தங்களுக்கு தே.மு.தி.க. முழு ஒத்துழைப்பை வழங்கும். மக்களுடைய மிகப் பெரிய ஆதரவுடன் 3-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சி தலைவிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சபாநாயகர், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் விஜயகாந்த்.

ஓ.பன்னீர்செல்வம்

அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழக மக்களின் பேராதரவை பெற்று 3-வது முறையாக முதல்வர் அம்மா பொறுப்பு ஏற்று உள்ளார். வரலாற்று பெருமை மிக்க இந்த சபையின் தலைவராக தாங்களும், துணை சபாநாயகராக தனபாலும் அவையில் பதவி ஏற்கும் வாய்ப்பை அம்மா வழங்கி உள்ளார்.

பாராளுமன்ற சட்டமன்ற மரபை மதிக்கும் வகையில் இந்த மாமன்றத்தில் தலைவராகும் தகுதி உங்களுக்கு உள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடு இல்லாமல் அணைவரையும் சமமாக நடத்தும் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நீங்கள் பணியாற்றி இந்த அவைக்கு பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

26 May, 2011

ரஜினியைப்பார்த்து திருந்த வேண்டியதுதான்...


ரஜினி 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளில் மறக்கமுடியாத உச்ச நட்சத்திரம். முதல் படத்தில் ஏறிய சூப்பர் ஸ்டார் என்ற அரியணையைவிட்டு இன்னும் இரங்காத நடிப்பு வள்ளல். இவர் நடித்தப் படத்தில் இது வரை யாரும் நஷ்டப்பட்டிருக்கமாட்டார்கள். ரஜினி என்ற வார்த்தை ஆறு முதல் ஆறுபது வயது வரை உள்ள அத்தனை நெஞ்சங்களில் குடிக்கொண்டிருக்கும் ஒரு கலை கடவுள். அவர் உடல் நலம் சீர் பெற்று இன்னும் நிறைய படங்கள் நடிக்க ஆண்டவணை பிராத்திப்போம்.

 ரஜினியின் சினிமா பிரவேசம் வித்தியாசமானது. சிகரேட்டை லாவகமாக போட்டு பிடிக்கும் ஸ்டைலை வைத்தே அவருக்கு அந்த சந்தர்ப்பம் வந்தது. இருந்தும் அந்த ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு அவர் முன்னிலையில் வந்துவிடவில்லை. சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைவதற்க்கு அவர் கொடுத்த உழைப்பு மிகவும் அற்புதமானது. எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்த ஒரு மாபெரும் மனிதர் ரஜினி காந்த் என்பதில் யாருக்கும் துளியும் சந்தேகம் இல்லை.

தன்னில் இருக்கும் ‌ஒரு செயலைப்பார்த்து மற்றவர் வியக்கலாம் ஆனால் அது தன்னுடைய உயிரை குடிக்க வரும் போது என்ன செய்வது. ஆம் மக்களே ரஜினியின் சிகரெட் குடிக்கும் பழக்கத்தைப் பார்த்து அவர்களது எத்தனை ரசிகர்கள் அந்த பழக்கத்திற்கு உள்ளானார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் தற்போது அந்த பழக்கமே அவருடைய உயிருக்கு உலைவைத்ததுப்போன்று ஆகிவிட்டது. அவருடைய உடலில் இதயம், கல்லீரல், நுரையீரல், குடல், சிறுநீரகம், போன்ற அனைத்து உறுப்புகளும் செயலிழந்து உள்ளது என்று மருத்துவ குறிப்புகள் கூறுகின்றது.


 ஆம் மக்களே.... கோடி கோடியாய் பணம் வைத்திருந்தும் ரஜினிக்கே இந்த நிலைமையென்றால் வசதி வாய்ப்பில்லாத மற்றும் வருமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்த  புகைப்பழக்கம் உள்ளவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். புகைப்பழக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு கோடிக்கணக்கான மக்கள் இறந்துவிடுவதாக ஐ.நா. கணக்கெடுப்பு கூறுகிறது. உலக அளவில் புகைப்பழக்கத்தை விடுகோறி செய்யப்படும் விழிப்புணர்வு சார்ந்த செலவும் மிக மிக அதிகம். இருந்தும் புகைக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது.

நல்ல பழக்கங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கும் தீயப்பழக்கங்கள் தம் வாழ்க்கையை மாற்றி அமைத்துவிடும். நம் வாழ்க்கையை அற்பவிஷயங்களா தீர்மானிப்பது. தன்னுடைய தீயப்பழக்கங்கள் தம்முடைய உயிரைக்குடிக்குமுன் வாழ்க்கைக்கு திரும்பிவிடுங்கள். இந்த அற்புதமான உலகில் தீயப்பழக்கங்களுக்கு அடிமையாகி அதுதான் வாழ்க்கை என்று இருக்கும் சிலரை திருத்த முயற்ச்சிப்போம்.


இனியும் வேண்டாம் இந்த விபரீதம் தாங்களோ தங்கள் சுற்றமோ, தங்களுடைய நண்பர்களோ புகைப்பழக்கத்தில் இருந்தால் அவர்களை அதிலிருந்து விடுபட உதவுவோம். அவர்களுக்கு புது வாழ்க்கையை பரிசலிப்போம்.....

டிஸ்கி : நண்பர்களே இது என்னுடைய கருத்து. புகையிலிருந்து விடுபட என்னும் எணணுடைய என்னத்தை பலருக்கு சென்றடைய செய்யுங்கள். இதில் தங்களுடைய கருத்தையும் பதிவு செய்யுங்கள்...

25 May, 2011

என் ஆயுளின் நீளம்...


னது  கனவுகளின் ஆன்மாவிற்கு 
அடிக்கடி நோய் பிடித்து நெடிந்து விடும்
இருந்தும் அது எழுந்து  நடக்கும்...

னது ஆசைகள்
தூங்கி எழும் போதெல்லாம் 
ஆழிக்காற்றின் தூசுகள் அப்பிக் கொள்கின்றன 
ஆனாலும் அவை தப்பிப்பிழைக்கிறது...

னது வெற்றியை தடுக்க 
சூழ்ச்சி சுனாமிகள் சூழ்ந்துக் கொண்டாலும் 
என் மன ஓடம் தலும்பாமல் பயணிக்கிறது...

ய்வெடுக்க ஒதுங்கும்  போது 
என்னை சுற்றி வலைப்பின்ன வரும் 
சிலந்தியின் சீற்றங்களுக்கு 
எச்சரிக்கைவிடும் என் உயிரணுக்கள்...

னக்கு மகுடங்கள் சூட்ட 
மார்தட்டி வந்தவர்கலெல்லாம் 
விழா எடுக்காமல் ஓடியபோதும் 
தாழ்ந்திடவிடவில்லை தன் தன்னம்பிக்கை...

நிழல் பார்த்து 
நின்று விடுவோனோ என்று 
தன் கிளைகளை வெட்டிக் கொண்ட 
சுற்றத்தாரை பார்த்து தவித்ததில்லை 
என் வேர்கள்...

ன் கனவே....
என் கவிதையே....
உங்கள் மீதுதான் பயணிக்கிறது என் ஆயுள்...


தனால்தான் 
சிறகு முறித்தாலும்
பறந்துக்கொண்டிருக்கிறேன்...
கிளைகளை ஒடித்தாலும் 
வளர்ந்துக் கொண்டிருக்கிறேன்... 




கவிதை குறித்த தங்கள் கருத்துக்களை பகிந்துக்கொள்ளுங்கள்...


16 May, 2011

வானம் வசப்படும்...



காலங்கள்
கரைந்தோடுகிறது
அதில் கவலைகளை களைந்தெடுக்க
கடினப்பட்டுப் போகிறோம்...

நொடிக்கொரு நினைவு
மணிக்கொரு  மறதி 
மாதத்திற்கு ஒரு துன்பம்
என நம் இதயத்தை
நாமே ஏழ்மையாக்கி விடுகிறோம்...

காக்கை கூட்டுக்குள்ளே தான்
மணிக்குயில் பிறக்கிறது..!
சேற்றின் வாசத்தில் தான்
செந்தாமரை மலர்கிறது..!

மூச்சடக்க பயந்தால்
முத்து குளிப்பது சுலபமாகாது...

விதைப்போல் வீழ வேண்டும்
அழிவதற்காக அல்ல
ஒவ்வொரு முறையும் எழுவதற்காக...

வாழ்க்கையில் முயற்சி இல்லையேல்
இதயமே நம்பிக்கையற்றுப் போகும்...

விதைக்கவே மறந்து விட்டு
அறுவடை நாட்களை எதிர்பார்ப்பதா?

ருட்டே இல்லாமல் போனால்
நீ விடியலைத் தேடி ஓடியிருப்பாயா?

முயற்சிகள் இருக்கிற இடத்தில் தான்
வெற்றிகள் முரசு கொட்டுகின்றன...

தற்காக
கொஞ்சம் முயற்சித்து பாருங்கள்
இமயம் வளைந்துக் கொடுக்கும்...
வானம் வசப்படும்...
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
என்னைப்பற்றி தெரிந்துக்கொள்ள வலைச்சரம் வாங்க..
வலைச்சரத்தில் இன்று...



11 May, 2011

வெயிலுக்கு இதமா கொஞ்சம் சிரிங்க...

கோடைககாலம் என்பதால் என்னால் இவ்வளவுதான் முடியும்
பார்த்துட்டு சிரிச்சிட்டு போங்க.....

 








என்ன படங்களை பார்த்தாச்சா இப்படித்தான்
சந்தோஷமா இருக்கனும்...

09 May, 2011

108 -ல் ஒரு ஆச்சர்யம், உண்மை சம்பவம்...

இது என் வா‌ழ்க்கையில் நான்கு மாதங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம்....
ஒரு நாள் என் நண்பருடன் திருவள்ளூரில் இருந்து எங்கள் கிராமமான வெள்ளியூருக்கு டூவீலரில் சென்றுக் கொண்டிருந்தோம். அப்போது இரவு 8-00 மணி இருக்கும். நெடுஞ்சாலையினரால் அந்த சாலையில் நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்துக் கொண்டிருந்தது.

திருவள்ளூரில் இருந்து எங்கள் வீ டு சுமார் 20 கி.மீ. வழியில் சுமார் 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஒரு கிராமம் கீழானூர். அப்பகுதியில் ரோட்டின் குறுக்கே மழை நீர் செல்ல காய்வாய் அமைக்க பள்ளம் எடுத்திருந்தார்கள். அது சுமார் 20 அடி ஆழம் கொண்டது. அந்த பள்ளத்தை நாங்கள் மாற்றுப்பாதையில் கடக்கும்போது அந்த குழியில் இருந்து சத்தம் வருதை நான் கவனித்தேன். உடனே நண்பரிடம் சொல்லி வண்டியை நிறுத்தி‌னேன். அருகில் சென்று பார்த்த போது இரண்டுசக்கர வாகனத்துடன் இருவர் அந்த குழியில் விழுந்து கிடந்தனர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்றபட்டிருந்தது.

உடனடியாக என்னுடைய செல் போனில் இருந்து 108-க்கு தகவல் கொடுத்தேன். அது 108 தலைமையக கட்டுப்பாட்டு அறைக்கு சென்றது. அவர்கள் என்னிடம் விவரங்கள் கேட்டுக் கொண்டு மாவட்ட தலைமையகத்திற்கு தெரிவித்து என்னுடைய செல் நம்பரையும் அவர்களுக்கு கொடுத்திருந்தார்கள். அடுத்த 5 நிமிடத்தில் 108 என்று முடியும் ஒரு செல் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. நாங்கள் 108-ல் இருந்து பேசுகிறோம். திருவள்ளூரில் இருந்து கிளம்பிவிட்டோம். நாங்கள் எப்படி வரவேண்டும் என்று வழிச்சொல்லுங்கள் என்று வழிக்கேட்டுக் கொண்டே அடுத்த 10 நிடத்தில் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்கள்.

அதற்குள் அவ்வழி வந்த வாகனங்களை மடக்கி ஆட்களை அழைத்து அந்த இருவரையும் மேலே கொண்டு வந்து விட்டோம். இருவரும் ஓரளவுக்கு சுயநினைவுடன் இருந்தார்கள். ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ரத்தம் வடிந்து உடல் முழுவதும் நனைந்திருந்தது. அடுத்தவருக்கு கால் முறிவு மற்றும் உடல் முழுக்க காயங்கள். அவர்களிடம் தகவல் பெற்று (அவர்கள் திருத்தணி அருகில் உள்ள கனக்கம்மாசத்திரம் என்ற பகுதியை சார்ந்தவர்கள்) அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தோம் நேராக திருவள்ளூர் மாவட்ட மைய மருத்துவமனைக்கு வரும் படி தெரிவித்துவிட்டோம்.

பிறகு அவர்கள் இருவரையும் 108-ல் ஏற்றி அனுப்பி வைத்தோம். அவ்வண்டியில் மூவர் இருந்தார்கள். ஒருவர் வண்டியில் ஏற்றியவுடன் தன்முதலூதவி பணியை தொடங்கி விட்டார். அதன் பிறகு நாங்கள் வீட்டுக்கு சென்று விட்டோம். அந்த வலியிலும் அவகள் எனக்கும் அங்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறியது மிகவும் நெருடலாக இருந்தது.

அதன் பிறகும் ஆச்சரியங்கள் தொடர்ந்தது.

ஒரு 6 நாட்கள் கழித்து என் ‌செல் போனுக்கு 108-ல் முடியும் ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அதில் நீங்கள் இந்த தொலைபேசியை பயன்படுத்தி சிகிச்சைக்கு அனுப்பிவைத்த நபர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்று விட்டார். அ‌வரை தொடர்ந்து கண்காணித்து கொள்ளுங்கள் என்றனர். (அது ஒரு உதவிதான்  அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது என்று நடந்த விஷயத்தை விளக்கியபின் நன்றிகூறி வைத்துவிட்டனர்).
 

அதன் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து 108-ல் முடியும் நெம்பரில் இருந்து அதே விசாரிப்பு அவருக்கு முழுவதும் குணமடைந்து விட்டாதா. அவர் எப்படியிருக்கிறார் என்று....

எனக்கு உண்மையில் இது ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியது. ஒரு அரசாங்கம் அன்றைய சங்கதியோடு தன் பணியை முடித்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு விதி விளக்கான 108-ல் நடந்த நிகழ்வுகள் 108 மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. இது முற்றிலும் உண்மை நண்பர்களே... தன் வண்டியில்  நோயாளியை ‌மருத்துவமனையில் சேர்த்ததோடு முடிந்து விட்டது என்று இருக்காமல் இது போன்ற தொடர் பணி பாரட்டவதற்குறியதாக இருக்கிறது.

ஆகையால் 108-யை தேவையான அவசர உதவிக்கு மட்டும் அழையுங்கள். அவற்றுக்கு வழிவிட்டு செல்லுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் 108-ன் செயல்பாடுகளை விளக்குங்கள். 108 சிறப்பாக செயல்பட நாமும் பங்குகொள்வோம்.. நன்றி...

07 May, 2011

யிர் +மெய்=யிர்மெய்.....



ம்மா 
உயிரும் மெய்யும்  கலந்த
உயிர்மெய்...

நானே விளக்குகிறேன்...
  உயி‌ரெழுத்து
ம் மெய்யெழுத்து
மா உயிர் மெய் எழுத்து
 
ம்... அம்மா 
உயிரும் மெய்யும் கலந்த 
உயிர்மெய்...

நாத்திகர் வீட்டில் கூட 
குடியிருக்கும் தெய்வம்...

விண்ணிலிருந்து வீடுகளில்
சிதறிவிழுந்த
தேவதைகளின் சிதறல்கள்...

த்தத்தில் இருந்து பாலைப்பிரிக்கும்
உயிர்கோளத்தின் அதிசய 
அன்னப்பறவை...
 
திட்டி தீர்க்கும் கரங்களுக்கு மத்தியில்
தட்டிக் கெர்டுக்கும் 
வலையல்கரம்...

னைந்தபடி வீடு நுழைந்தேன்
“அறிவிருக்கா... ஏன் இப்படி நனையற..”
அதட்டினான் அண்ணன்...

“குடை எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே..”
அக்கரையில் அக்கா..

“காய்ச்சல் வந்தா நான் தானே செலவுப் பண்ணனும்..”
ஆதங்கத்தில் அப்பா...

“தலையை துவட்டிக்கப்பா...”
துண்டுடன் அம்மா...
 
ள்ளிக் அள்ளிக் குடித்தாலும்
குறையாத அன்புக்கடல்..
இவள் திட்டினால் சீர்படுவோம்...
இவள் குட்டினால் சிறப்படைவோம்...

அம்மா..
குடும்பம் தழைக்க
அரவணைத்துப்போதும் 
மனித ஆலமரம்....

அனைவரும் அம்மாவை போற்றுவோம்....
மே இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினம்....
(இது ஒரு மீள் பதிவு)

05 May, 2011

அதிரும் ஹைக்கூ சரவெடி....


உயிர் கொல்லி ‌நோய்
எய்ட்ஸ்...!
சார்ஸ்...!
காதல்...!

*************************************************


இதயங்கள் சூடுப்படுகிறது...
ராகங்கள் மட்டும் ஆனந்தமாய்
காட்டு மூங்கில்...

*************************************************



வியர்வைகள் இனித்தது
ஆனந்தமாய் உழைத்தான்
நடுக்கடலில்  மீனவன்...!

*************************************************



ஆணி வேரை நம்பாத
ஆலமரம்
விழுதுகளுடன்...

*************************************************

தங்கள் மனதில் படும் கருத்தை பதிவு செய்து விட்டுச் செல்லுங்கள்...

04 May, 2011

படமாகும் ரஜினியின் வாழ்க்கை வரலாறு

ரஜினி நடித்த படங்களையே எந்த படத்தில் நாம் நடித்தால், நன்றாக இருக்கும், எந்த படத்தின் ரைட்ஸ் வாங்கலாம் என்ற போட்டி நிலவி வரும் இந்த கால கட்டத்தில் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாக வர இருக்கிறது.

அதில் அக்னிஹோத்ரி ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை கதையாக வடிவமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் ஆனால் கண்டிப்பாக ரஜினி இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க மாட்டார் என்றும் கூறி வருகிறார்கள்.

ரஜினியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்படும் எனில், இந்தியாவில் ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படுவது இதுவே முதலாவதாக அமையும்.

ஏற்கனவே யு.டிவி நிறுவனம் இந்தி நடிகரும் பாடகருமான கிஷோர் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுக்க நினைத்து இறுதியில் அது முடியாமல் போனது.

ரஜினியை பார்த்து அவரது ஸ்டைலை காப்பி அடித்து நடிக்கு நடிகர்கள் அதுல் அக்னிஹோத்ரியை அணுகலாமே!

தற்போது இருக்கும் மகுடங்களுடன் தற்போதை இந்த மகுடமும் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.







































இது ஒரு கண்டன மற்றும் எதி்ர் பதிவு...



திர்பார்த்து எதிர்பார்த்து
ஏங்கிக்கிடக்கிறேன்
தினமும் எதிர்படும் நீ
இன்றும் எதிர்படுவாய் என்று.... 

தினமும் எதிர்ப்படும் என்னை
உதாசினம்படுத்திவிட்டு போவாய்
இருந்தும் நான்
எதிர்பார்ப்பதை கைவிடவில்லை...

தெரிந்தும் மற்றும் தெரியாத
முகங்கள் எதிர்ப்படுகையில்
அவர்களுக்கான பதிவுகளை 
சிறு மூளை ஞாபகபடுத்துவதில்லை
உன்னை எதிர்பார்த்து நிற்கும் எனக்குள்...

ன்றொறுநாள் எதிர்படுகையில்
விழிகளால் மோதிவிட்டுச் சென்றாய்
நான் விழுந்ததும் அன்றிலிருந்துதான்...

ன்னும் எவ்வளவு நேரம் 
எதிர்பார்த்துக் கொண்டிருப்பது...

பெண்ணே...
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
என் கனவுகளுக்கு வந்து காட்சிக்கொடு

ன் கருவிழிகள் கண்டனங்கள் 
தெரிவிக்கும் முன்...

(அப்பா... ‌எப்படியோ எதிர்பதிவு என்பதால் அதிக இடத்தில் எதிர் என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டேன், கண்டனம் என்ற வார்த்தையில் கவிதை முடிகிறது..... ஏங்க இது டிஸ்கிங்க)

உங்கள் விருப்பம்போல் பின்னூட்டங்கள் இடலாம்..

03 May, 2011

எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை... (ஆனந்த அஞ்சலி)



ந்த பூவுலகில்
அழித்தலுடன் கழித்தலை செய்தவனே....

ன் அழிவிற்கு உலகமே
கண்ணீர் சிந்துகிறது
ஆனந்தத்தால்...

தை அடைந்தாய்
உன் வன்முறைக் கொண்டு
ரத்தங்களும் சதைகளும் தவிர...

மாற்றான் தோட்டத்தில்
மலர்களுக்கு தீவைத்துவிட்டு
“புனித போர்” என்கிறாய்...
அப்படியென்றால் 
அஹிம்சையை என்னவென்று சொல்வது...

லக தீவிரவாதமே...
உள்ளங்களில் எழுதிக்கொள்ளுங்கள்
இனி இந்த பூமியில்
உங்களுக்கு ஆறடி நிலம்கூட சொந்தமில்லை...

ங்கள் உடலை புதைத்து
பூமியை மாசுப்படுத்த விரும்பவில்லை
அதனால் தான்
கடலில் கரைத்திருக்கிறோம்...

றுதியாய் தீவிரவாதிகளே
மனம்திருந்துங்கள்
இல்லையேல்...
இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது
சுறாக்கள்....


இனி உலக தீவிரவாதத்திற்கு மூடுவிழா தான்
கருத்து சொல்லுங்கள்...


02 May, 2011

அவள் மீது அப்படியொரு ஆசை நிறைவேறுமா..?



நான் சின்னதாய் கவலையுருகையில்
அவள் கண்களில் நீர் சுரந்தது...
 
நான் தவறி விழுகையிலே
அவள் படபடக்கிறாள்...
 
ன் மூச்சுக்காற்றுகள் குளிர்கையில்
அதை சூடேற்ற அவள் படும் பாடு
நேரடியாக‌வே உணர்கிறேன்...

ன் பிறந்த நாட்களிலும்...
நான் பாராட்டப் படுகையிலும்...
என்னை விடவும் மகிழ்வது அவளே

ங்கே
உடல்கள் வேறுவேறுதான்
உயிர் மட்டும் ஒன்றோ?
நான் ஓடியாட அவள் ஏன் சுவாசிக்கிறாள்...

வள் விழிகளிலும் மொழிகளிலும்
என் கனவுகள் மட்டுமே...
 
னைவியாய்
என்னை மகிழ்வித்து விட்டு
அவள் அயர்ந்துப் போகையில்
என் நுனி விரல்களால் வருடிக்கொடுத்து
மெய் சிலிர்க்கும் என் எண்ணத்திற்குள்
ஒரு விண்ணப்பம் எழுகிறது...

று ஜென்மத்தில் நாங்கள்
இடம்மாறி  பிறக்கவேண்டும்

வள் தாயாய்...
நான் மகனாய்...
 

அன்பான வாசகர்களுக்கு, மற்றும் பதிவுலக நண்பர்களுக்கு
இந்த கவிதை தங்களை தங்கள் மனதை கவர்ந்திருந்தால் மட்டும்
பின்னூட்டம் இடுங்கள்...

01 May, 2011

அஜித் ரசிகர் மன்ற கலைப்பு - பரபரப்பு பிண்ணனி



நடிகர் அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ள அஜித், நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்று கூறியுள்ளார். 40வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும் இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் – சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். 

என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை – பார்க்கவும் மாட்‌டேன். கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை

சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும்‌ போதும் என்பதே என் கருத்து.

வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது த‌லைமையின் ‌கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.

மாறிவரும் காலகட்டத்தில் ‌பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு ‌பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.

இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

 அஜித்குமாரின் இந்த அதிரடியான முடிவு அவரது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனினும் அஜித் சொல்லியிருக்கும் கருத்துக்கள் ஏற்கக்கூடியவை என்பதால் பெரும்பாலானவர்கள் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்கள். முன்பொருமுறை தலைமைக்கு கட்டுப்படாமல் ஒரு ரசிகர் மன்றம் இயங்கியதால், ரசிகர் மன்றத்தையே கலைப்‌பேன் என்று அஜித் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம். 

அவரது எச்சரிக்கையையும் மீறி சில மன்றங்கள் தேர்தல் நேரத்தில் செயல்பட்டதால்தான் இப்படியொரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். அஜித்தின் இந்த முடிவு சரியானதுதானா? அல்லது இன்னும் கொஞ்சம் யோசித்து முடி‌‌வெடுத்திருக்க வேண்டுமா? என்பதை இங்கே கருத்தாக பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே…!!

என்ன இருந்தாலும் ரசிகர் மன்றம் வைத்து அரசியல் நடத்தும் நடிகர்கள் மத்தியில் நம்ம தல தனித்து நிர்கிறார்...

அவருக்கு கவிதை  வீதியின் வாழ்த்துக்கள்..
Related Posts Plugin for WordPress, Blogger...