கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 May, 2011

அதிரும் ஹைக்கூ சரவெடி....


உயிர் கொல்லி ‌நோய்
எய்ட்ஸ்...!
சார்ஸ்...!
காதல்...!

*************************************************


இதயங்கள் சூடுப்படுகிறது...
ராகங்கள் மட்டும் ஆனந்தமாய்
காட்டு மூங்கில்...

*************************************************



வியர்வைகள் இனித்தது
ஆனந்தமாய் உழைத்தான்
நடுக்கடலில்  மீனவன்...!

*************************************************



ஆணி வேரை நம்பாத
ஆலமரம்
விழுதுகளுடன்...

*************************************************

தங்கள் மனதில் படும் கருத்தை பதிவு செய்து விட்டுச் செல்லுங்கள்...

29 comments:

  1. நிஜமாகவே இது சரவேடிதான்....

    ReplyDelete
  2. ஆணி வேரை நம்பாத ஆலமரம் -கலைஞர்..?

    ReplyDelete
  3. ////
    விக்கி உலகம் said... [Reply to comment]

    அடடா அடடா!
    /////////


    வாங்க விக்கி...

    ReplyDelete
  4. //வியர்வைகள் இனித்தது
    ஆனந்தமாய் உழைத்தான்
    நடுக்கடலில் மீனவன்...!//

    உழைப்பாளர் தின சிறப்பு கவிதையா? இனிமை

    ReplyDelete
  5. //உயிர் கொல்லி ‌நோய்
    எய்ட்ஸ்...!
    சார்ஸ்...!
    காதல்...!//

    நீங்க எப்பவுமே காதலை எமன் ரேஞ்சுக்கு பார்த்து பயப்படறதை என்னால் ஏத்துக்கமுடியல. ஜஸ்ட் கற்பனைதான் என்றால் கவிதை இனிமை.

    ReplyDelete
  6. காட்டு மூங்கில் புல்லாங்குழல் ஆவதையே அக்கவிதை குறிக்கிறது என எண்ணுகிறேன்.அருமை,சௌந்தர்!

    ReplyDelete
  7. கலக்குறிங்க நண்பரே.....அதுவும் அந்த உயிர்கொல்லி நோய் ஹைக்கூ அருமையோ அருமை....

    ReplyDelete
  8. //ஆணிவேரை நம்பாத ஆலமரம் விழுதுகளுடன்//

    அற்ப்புதம் நண்பா ஒரு வரியில் ஓராயிரம் அர்த்தங்கள்.

    ReplyDelete
  9. ஒவ்வொன்றும் ஒராயிரம் அர்த்தங்களை அறிவிக்கின்றன! அருமையிலும் அருமை..
    அதுவும் //ஆணிவேரை நம்பாத ஆலமரம் விழுதுகளுடன்// நிதர்சன வாழ்வின் எளிமையான வெளிப்பாடு... :)
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  10. நல்ல கவிதைகள். வேறொன்றும் சொல்ல தெரியவில்லை.

    ReplyDelete
  11. அசத்தல் அருமை கவித... நல்லா இருக்கு பாஸ் ..

    ReplyDelete
  12. வெடின்னா சத்தமாக வெடிக்கணும். ராகம் பாடுது. அதுவும் இனிமையாக!

    ReplyDelete
  13. மூங்கில் பற்றிய கவிதை அருமை

    ReplyDelete
  14. //ஆணி வேரை நம்பாத
    ஆலமரம்
    விழுதுகளுடன்...//
    எவ்ளோ பெரிய தத்துவத்தை இவ்ளோ சிம்பிளா சொல்லீட்டீங்க!

    ReplyDelete
  15. சூப்பர் உங்க ப்ளாக்.. கவிதை நல்ல இருக்கு சார்.... நன்றி என்னுடைய ப்ளாக் இணைந்தமைக்கு.. என்றும் அன்புடன்.. நிறைய எழுதுங்க பாஸ்....

    ReplyDelete
  16. இறுதி மூன்று கவிதைகளும் மெல்லியதாய் வருடிச் செல்கின்றன. முதலாவது ஏனோ சற்று உறுத்தலாய் தெரிகிறது. தவறான ஒப்பீடோ?
    வெறுமனே உயிர்க்கொல்லி நோய் என்பதோடு நிறுத்திஇருக்கலாமோ?
    எய்ட்ஸ் என்ற பெயரை தவிர்த்திருக்கலாம்.

    ReplyDelete
  17. படங்களின் தெரிவு அற்புதம்.

    ReplyDelete
  18. அருமையான வரிகள்
    சிரிக்க மட்டுமல்ல..
    சிந்திக்கவும்....

    ReplyDelete
  19. அருமை...அபாரம்!

    ReplyDelete
  20. அருமை...அபாரம்!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...