கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

30 October, 2011

இந்த ஐம்பது பைசா கரையுமா..? கரையாதா..?


வேதியியல் ஆய்வுக்கூடத்தில் கூடியிருந்தார்கள் மாணவர்கள்.  வேதியியல் ஆசிரியர் அமிலம் ஒன்றினைப்பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அமிலம் இருந்த ஒரு பாட்டிலுக்குள் தனது சட்டைப் பையிலிருந்து ஒரு ஐம்பது பைசா நாணயத்தைப் எடுத்து போட்டார். அதன்பிறகு ஒரு மாணவனைக் அழைத்து “இந்த நாணயம் கரையுமா? கரையாதா?“ என்று கேட்டார்.


அதற்க்கு அந்த மாணவன் “கரையாது“ என்று கூறிவிட்டான். காரணம் கூறத்தெரியவில்லை. மீண்டும் இன்னொறு மாணவனைக் ‌கேட்டார் ஆசிரியர். அவனும் “நாணயம் கரையாது“ என்று கூறிவிட்டான்.  ஏன் என்று அவனிடம் காரணம் கேட்டார் ஆசிரியர்.


“அந்த ஐம்பது பைசா கரையும்னு தெரிஞ்சிருந்தா அமிலத்துக்குள் போட்டிருக்கமாட்டீர்கள் சார்.” என்று கூறினான் அந்த மாணவன்.


மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியரும் “கல.. கல..” வென சிரித்துவிட்டார்கள்...



எப்படி நம்ம பசங்க...



தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நண்றி மக்களே...

28 October, 2011

படுக்கையறை.... வெளிப்படாத அனுபவங்கள்...



து....
கனவுகளின் தொழிற்சாலை...
ஏக்கங்களின் உற்பத்திகூடம்...
ஓடிய படகுகள் ஒதுங்கும் கறை...
 
பாடும் பறவைகளின் பல்லவிதேசம்...
வாழ்க்கை தேசத்து வசந்த மண்டபம்...
இளைய தலைமுறையின் அந்தப்புரம்...
 
ணம் படைத்தவனுக்கு
இங்கு நரகத்தின் அவஸ்தைகள்...
ஏழைவாசிக்கு
இங்கு சொர்கத்தின் சுகங்கள்...

நாணம் கொள்ள இது நாடகமேடை...
மோகம் கொள்ள இது பள்ளியறை...
 
குடுமபத்தலைவிக்கு
‌இது விண்ணப்ப மையம்...
பெண்ணை பெற்றவனுக்கு
இது வேதனை கூடம்...

சோகங்களை சொல்லி அழுது
தலையனைகளோடு
தாம்பத்தியம் கொள்வதும் இங்குதான்

மோகங்களை அள்ளியனைத்து
தலைகால் புரியாமல்
தலை சுற்றி கவிழ்வதும் இங்குதான்...

ட்டில் வெறுத்து தொட்டில் வெறுத்து
முட்டிய காமத்தை முழுதாய் தீர்த்து
காவிக்கதைகள் துவங்கியதும் இங்குதான்...

காதல் ‌கொண்டவனுக்கு
இவ்விடம் முட்களை விதைக்கிறது...
காதலை ‌வென்றவனுக்கு
இவ்விடம் மலர்களை விதைக்கிறது...

ங்குதான் நிகழ்த்தப்படுகிறது
நிரந்தர மரணத்திற்கான
நிகழ்கால ஒத்திகைகள்...

நித்தம் நித்தம் தென்றல் வீசி
ஜன்னலோடு சில கதைகள் பேசி
வாடிய மனதை மலர வைக்கும்
வாலிப மனதை வாட வைக்கும்

விதை வரும்
அதை எழுதி தொலைக்கும் வரை
இவ்விடம் என்னை எதிரியாய் நடத்தும்

ஜீவன் சுமந்து ஜீரணிக்கும் வரை
படுக்கை அறை ஒரு சுதந்திரசிறை

டுக்கை அறையில் சண்டைகள் இருக்கும்
தோற்றவர் வெல்வார் வென்றவர் தோற்பார்

டுக்கை அறையில் மௌனம் இருக்கும்
உறக்கத்தில் கொஞ்சம் மயக்கத்தில் கொஞ்சம்

றுதியாய்...

படுக்கை அறை
ஆக்கலும் அழித்தலும் மட்டுமல்ல
காத்தலும் செய்கிறது...

டுக்கை அறை
ஓய்வையும் உறக்கத்தையும் மட்டுமல்ல
வாழ்க்கையைகூட நிர்ணயிக்கிறது...



இதில் தங்களை பாதித்த வரிகளையும்,
தங்கள் அனுபவங்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்....
(இது ஒரு மீள் பதிவு)
தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி...

27 October, 2011

பயிர்களை மேயும் வேலிகள்... என்ன செய்ய போகிறது தமிழக அரசு....

வேலிகளே பயிரை மேய்வது என்று கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு அதுபோன்ற பயிரை மேயும் வேலிகள் நம்நாட்டில் அதிகம் உண்டு. காவல் துறை மக்களை சுரண்டுவது, அரசியல்வாதிகள் ஊழல் செய்வது என்று எத்தனையோ வேலிகள் பயிரை மேயும் பணியை செம்மையாக செய்துக்கொண்டு இருக்கிறது. அதற்கெல்லாம் நாங்கள் கொஞ்சமும் குறைந்தவர் இல்லை என்பதுபோல் தமிழக சர்வீஸ் கமிஷன் செய்திருப்பது இளைஞர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

படித்து எதாவது வேலை கிடைக்காதா என்று ஏங்கித்தவிக்கும் இளைஞர்களின் வாழ்வில் இவர்கள் செய்திருப்பது சாதாரண துரோகம் அல்ல... பணம் வாங்கிக்கொண்டும், சிபாரிசு என்ற ‌பெயரில் தகுதியற்றவர்களுக்கு வேலையை வழங்கியுள்ளார்கள்.  இதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் நாடு என்னவாகும்.

தமிழக சர்வீஸ் கமிஷன் தலைவரும், உறுப்பினர்களும், விஜிலென்ஸ் சோதனைக்குள்ளாக்கப்பட்டு ஆதாரங்களை திரட்டியுள்ளது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேர்வுக்கு வருபவர்களின் அறிவைச் சோதித்துப் பார்க்கும் இவர்களது வீட்டிலா, விஜிலென்ஸ் சோதனை? யாரைத்தான் நம்புவதோ? தேர்வில் பாஸ்மார்க் போடும் இவர்கள் வீட்டிலா, டாஸ்மாக் பாட்டில்கள்? சிபாரிசு எடுபடாத இடங்களான இவர்களது வீட்டிலா, சிபாரிசு கடிதங்கள் சிக்கின? 

சிவப்பு விளக்கு சுழல் கார், சொகுசான பங்களா, பணம், பதவி என, மடி நிறைய பொருள் இருந்தும், மனம் நிறைய இருள் இருந்துள்ளதே! இவர்கள் வசதிக்காக எத்தனைப்பேர் வாழ்வில் விளையாடி உள்ளனரே! மானமும், ஈனமுமில்லையே! படிக்காத மேதை காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஆகியோரால் நியமிக்கப்பட்ட தேர்வாணைய குழுவினர், நீதி நெறியாளர்களாக, வேலையற்றோருக்கு ஒளிவிளக்காக திகழ்ந்தனரே! 

ஸ்பெக்ட்ரம் ஊழலால் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக தேர்வாணைய ஊழலும், அதன் கிளையாக முளைத்துள்ளதே! சர்வீஸ் கமிஷன் என ஆங்கில பெயர் வைத்துக் கொண்டு, அதை கமிஷன் மண்டியாக்கி விட்டனரே!

இதனால் லஞ்சம் சிபாரிசு பெற்று வேலைக்குசேர்ந்த தரமற்ற ஆட்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும். தமிழக சர்வீஸ் கமிஷனை புதியதாக மாற்றி அமைக்க வேண்டும் இப்படிப்பட்ட குற்றங்கள் தமிழகத்தில் மீண்டும் நடக்காமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தேர்வணையத்தின் மீது மக்களுக்கும் படித்த இளைஞர்களுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்ப்படும்.

25 October, 2011

எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்...?




உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த தீபஒளித்திருநாள் வாழ்த்துக்கள்....

இந்த பண்டிகை நாளில் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று சிறப்புற வாழ ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்...


பதிவு போட்டு போரடிக்காமல் நல்லதா நாலு நகைச்சுவையுடன் முடித்துக் கொள்கிறேன்...

பிச்சைக்காரன்: இந்த வருடம் தீபாவளிப் பலகாரம் ஒன்றும் நல்லாயில்லம்மா...!

பெண்: என்னப்பா... எங்க வீட்டிலிருந்து உனக்கு இன்னும் ஒன்றுமே கொடுக்கலையே...
 

பிச்சைக்காரன்: உங்க வீட்டில இருக்கிறவங்க சாப்பிட்டு பார்த்துட்டு உடனே எல்லோரும் என்கிட்ட சொல்லிட்டாங்கம்மா...!


  மாப்பிள்ளை: என்ன மாமா, தீபாவளிக்கு வந்த என்கிட்டே நாலு வார்த்தை பேச மாட்டீங்களா?
 
மாமனார்: எப்போ ஊருக்குப் போறதா உத்தேசம்?


ஒருத்தி: உன் மாமியார் இறந்ததற்கு ஒரு வார்த்தை கூட பேசாம அழுது புலம்பாம இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டியே... உன் மாமியார் மேல் அவ்வளவு பாசமா?

மற்றவள்: அட நீ வேற... தலை தீபாவளிக்கு ஒரு மாசம் இருக்கிறப்ப செத்துட்டாங்களே... இந்த வருசம் பட்டுப் புடவை, பண்டிகை எல்லாம் போச்சேங்கிற துக்கம் தொண்டையை அடைச்சிட்டுது...!

  என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே?

பின்ன நீ செஞ்சு வச்ச பலகார‌த்தை எ‌ல்லா‌ம் சா‌ப்‌பிட‌ணு‌ம்னா வேற எ‌ன்ன ப‌‌ண்றது சொ‌ல்லு?


வருகைத்தந்த அத்தனைப்பேருக்கும் என் நன்றிகள்...!

24 October, 2011

மாணவ மாணவிகள் ஏன் இப்படி செய்தார்கள்... (பள்ளியில் நடந்த ஒரு உண்மை சம்பவம்)



ள்ளியில் துவங்கியது ஆண்டுவிழா
வழக்கமான உற்சாகத்துடன்...

ண்டறிக்கையை தலைமையாசிரியர் வாசிக்க
தலைமையேற்றவரின் உரையோடு
துவங்கியது கோலாகலம்...

மாவட்ட கல்வி அதிகாரி
சிறப்பு விருந்தினராக
மேடையை அலங்கரித்தார்...

ள்ளி மாணவர்களின்
ஆடல் பாடலுடன் அமர்க்களப்பட்டது விழா...
 
சிறந்த மாணவர்களுக்கு
பரிசுகளும்... பாராட்டுகளும்....
கரகோஷங்களுக்கிடையே...!

றுதியாய்...
மாணவர்கள் யாராவது ஆசிரியர்களுக்கு
பரிசளிக்க விரும்பினால்...
என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது..

ரு மாணவ மாணவியர் குழு ‌மேடையேரியது
பரிசு பொருட்களுடன்...

யாரை அழைக்க வேண்டும் என கோரினார் 
சிறப்பு விருந்தினர்...
மாணவர்கள் கூட்டாக கூறினார்கள்
எங்க “சமூக அறிவியல் சார்”.. என்று

தயம் நின்று போனது எனக்கு
பல தெய்வங்கள் குடியிருக்கும்
இந்த கோயிலில்
எனக்கு மட்டும் கும்பாபிஷேகமா என்று...

ண்களில் எட்டிப்பார்க்கும்
கண்ணீரோடு பரிசுவாங்கினேன்
இந்த உலகை காணும் புது உயிர்போல...

ப்படி நான் என்ன செய்து விட்டேன்
இவர்களுக்கு...
தட்டிக்கொடுத்ததை தவிர....!

 அந்தரங்கம்  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி... அந்தரங்கம்

15 October, 2011

பிரதமரும், காங்கிரஸாரும் கூடங்குளத்தில் குடியேற தயாரா..?


தற்போது தமிழகத்தில் பரபரப்பு செய்திகளில் ஒன்று உள்ளாட்சித் தேர்தல் அதைமிஞ்சி மக்கள் மத்தியில் மாபெறும் எதிர்ப்பும், எதிர்ப்பார்ப்புமிக்கதாகவும் கவலையாடைய செய்வதாகவும், தீராப்பிரச்சனையாகவும் கருத்தில் ‌கொண்டு இருப்பது கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனை.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மாபெரும் உண்ணாவிரதத்தை கடந்த மாதம் துவங்கி 15 நாளுக்கு மேலாக 110 பேற்பட்ட நபர்களும் உண்ணாவிரதமும், பல்லாயிரக்கணாகானோர் ஆதரவு தெரிவித்தும் போராட்டத்தில் கலந்துக்கொண்டு நடைபெற்றது. அவ்வுண்ணாவிரதம் மாநில அரசின் ‌வேண்டுகோளை ஏற்று கைவிடப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மீண்டும் கூ்டங்குளத்தில் மாபெரும் உண்ணாவிரதத்தை அந்த மக்கள் துவங்கியுள்ளனர். அதனூடே.. சாலைமறியல், ஊழியர்கள் வழிமறிப்பு, ஆர்ப்பாட்டங்கள் என வலுப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

ஊடங்கள், பதிவுகள், செய்திதாள்கள் என இப்பிரச்சனயை அறிந்த நான் அந்த இடத்தின் சூழ்நிலையை அறியாதவன் என்றாலும் அவர்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது என்னுடைய கடமை. பொதுவாக பொதுமக்கள் ஒரு சேர போராட்டங்கள் நடத்தும் போது அதனுடைய மதிப்பு அறிவோம். கூடங்குளம் பிரச்சனையில் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ள நண்பர்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சூழ்நிலை இப்படியிருக்கையில் கூடங்குள பகுதி மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளாமல் நாட்டை கட்டிகாக்கும் பிரதமர் அவர்கள் மாநில அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த அணு மின் நிலையத்தால் மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்று அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் கூடங்குள பகுதி மக்களின் உணர்வுக்கு அவர் மதிப்பளிக்க வில்லைஎன்பதே அர்த்தமாகிறது.

இது போதாதென்று தமிழ காங்கிரஸில் இருக்கும் காமெடி பீஸ்களான ஈ.வி.கே.எஸ. இளங்கோவன் அவர்கள் கூடங்குளத்தில் மின் உற்பத்தி உடனடியாக துவங்க வேண்டும் என்றும், அடுத்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அவர்கள் இன்னும் 15 நாட்களில் அணு மின்நிலையம் துவங்கப்பட்டு உற்பத்தியை துவங்கிவிடும் என்றும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி துவங்கினால் மின் பற்றாக்குறை சரி செய்யப்படும்தான் அதற்காக எதிர்காலத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும் பணயம் வைக்க முடியாது. எதிர்காலத்தில் மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்காமல் இன்றைய தீர்வை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதும் பிரச்சனைக்கு முடிவாக அமையாது.

இப்படி பேசும் தமிழக காங்கிரஸாரையும், மிஸ்டர் பிரதமரையும் கூடங்குள அணு மின் நிலைத்திற்கு அருகில் வீடுகட்டி குடியேறட்டும் அப்போது வேண்டுமென்றால் இப்பிரச்சனை தீர வழிவகுக்கும்...

இதற்கு இவர்கள் தயாரா..? 

அங்கு தன்னுடைய வாழ்வாதாரத்தையும், உ‌யிரையும் பணயமாக வைத்து போராடிக்கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் கவிதைவீதி தலைவணங்கி ஆரவளிக்கிறது.

13 October, 2011

இவங்க ராவடி தாங்க முடியலடா சாமி.....


உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து தொற்றிக் கொண்டது தமிழகத்தில் பரபரப்பு. மனுதாக்கள் முடிந்து சின்னங்கள் அறிவித்தப்பின் வேட்பாளர்கள் தங்களுடைய சின்னத்தை அறிமுப்படுத்த மற்றும் ஓட்டு கேட்க கடும் பாடு இருக்கிறதே... அவர்கள் காட்டும் பரபரப்பு மற்றும் விளம்பர படுத்தும் யுக்திகள் உண்மையில் சுவாரஸ்யம்...

மாலை நேரம் ஆனால் போதும் ஓவ்வோறு அரை மணி நேரத்திற்கும் ஒரு வேட்பாளர் தன்னுடைய படை சூழ புறப்பட்டு விடுகிறார். ஒளி பெருக்கிமூலமும், ஒரு சில வாண்டுகளையும் அழைத்துக் கொண்டும் அமர்க்களப்படுத்துகிறார்கள்.

ஒவ்வோறு வீட்டு வாசலிலும் தேர்தலில் நிற்கும் வார்டு உறுப்பினர், தலைவர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் என அத்தனைப்பேருடைய துண்டு பிரச்சுரங்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. வீடு முழுக்க எங்கு பார்த்தாலும் இந்த துண்டு பிரசுரங்கள் தான்.

இதில் நகைச்சுவை என்னவென்றால்... நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சாலை வசதி, குடிநீர், மின் விளக்கு, துப்புறவு போன்ற வேலைகளை செய்வேன் என்று அறிக்கை விடுகிறார்கள். ஒரு உள்ளாட்சி அமைப்புகளின் வேலையே இதுதான் அதை நான் செய்வேன் என்று ஏதோ புதுமையாய் சொல்வது போல் பழைய பல்லவிகளையே பாடிக்கொண்டிருக்கிறார்கள். புதுமையாக சொல்லி யாரும் ஓட்டு கெட்ட மாதிரி எனக்கு தெரியவில்லை.

17-ந் தேதி வாக்கு பதிவிற்க்கு 15 ஆம் தேதியுடனும், 19 ந் தேதி வாக்கு பதிவுக்கு 17-ந் தேதியும் பிரச்சாரம் முடிவடைகிறது. ஒரு சில நாட்களே இருக்கும் தருவாயில் பிரச்சாரம் அனல் பரக்கிறது. ஊரில் வேலைவெட்டியில்லாத அனைவரும் தற்போது வேட்பாளராக களத்தில் உள்ளார்கள். 

இன்னும் ஒரு சில நாட்களுக்கு நேரம் போவது தெரியாது என்றாலும் நாள்முழுக்க இவர்கள் இம்சை தாங்க முடியவில்லை. தெருவெங்கும், வீடுகளெங்கும், பார்க்குமிடமெங்கும் வேட்பாளர் முகமும் சின்னமும்தான் பளிச்சிடுகிறது. இதையெல்லாம் சரிசெய்ய நாம் படும்பாடு அவர்களுக்கு என்ன தெரியும். தற்போது எவ்வளவு செலவு செய்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் சம்பாதித்து விடப்போகிறார்கள்

வாக்களிப்போம்... நியாயமானவர்களுக்கு.. (அப்படியாரும் எங்கள் பகுதியில் இல்லை என்று மட்டும்  சொல்லிவிடாதீர்கள்.. )

12 October, 2011

போலிகளாகும் நிஜங்கள்...

வெயில் தனிந்த ஒரு
‌கோடைக்கால இரவு...!

யிர்துடித்துக் கொண்டிருந்த மின்சாரம் 
மூச்சை நிறுத்திக் கொண்டது..

வீடெல்லாம் இருட்டு...
வீதியெல்லாம் கருமை...

நிஜம் தந்த இருட்டை யாவரும்
விளக்கு வைத்து விரட்டிக்கொண்டிருந்தனர்...

தோ... இருட்டில் தான்
மு‌ழுமையாய் முகம் காட்டுகிறது
பிரபஞ்சம்...

விளக்குகள் இல்லாத இரவில்
விளக்கமாய் தெரிகிறது.. நிலவும்.. விண்மீனும்..

சும்மரங்கள் பூக்களையும்சேர்த்து
வண்ணங்களை இழந்து காட்சி அளிக்கிறது..

தென்னையும் பனையும் 
விண்வெளியில் வரைந்த  ஓவியங்களாய்..

ஜாதிகளையும்.. மதங்களையும்..
உயர்ந்தவனையும்.. தாழ்ந்தவனையும்..
அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம் இருட்டுக்குள்..

வெளிச்சம் பிரித்து வைக்கிறது..
இருட்டு ஒன்றினைக்கிறது..

தாம் ஏவாளுக்கு பிறகு
அனைவரும் இருட்டின் உற்பத்திகளே...

லலோரும் விளக்கைத் தேடுகிறார்கள்
வெளிச்சம் பெற..
நான் இருட்டைத் தேடுகிறேன்
மோட்சம் பெற...

ண்ணெய் குடித்து
உயிர் துடிக்கிறது விளக்கு...

ற்போது
போலிகளாயின நிஜங்கள்...

(மீள் பதிவு)

10 October, 2011

பலமுனைப்போட்டியில் மூன்றாம் இடத்தை தக்கவைப்பாரா விஜயகாந்த்...


கட்சி ஆரம்பித்த 7 ஆண்டுக்குள் தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி அந்தஸ்த்தை அடைந்திருக்கும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் தற்போது நடக்கவிருக்கும் உள்ளாட்சி யுத்தத்தில் தனித்து களம் இறங்குகிறது.

2006-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும், அதை தொடர்ந்து நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக-வும், அதிமுக-வும் இருக்கும் அத்தனைக் கட்சிகளையும் பகிர்ந்துக் கொண்டும் கூட்டணியுடன் களம் இறங்கியது. இந்த இரு கூட்டணியில் இடம்பிடிக்காமல் கடவுளுடன் மட்டும்தான் கூட்டணி என்று மார்த்தட்டிய விஜயகாந்த் குறிப்பிடும் படியான மூன்றாது இடத்தை பிடித்தார். மூன்று தரப்பு மட்டுமே இருக்கும் இடத்தில் மூன்றாவது இடம் என்பது அவ்வளவாக அதனுடைய தரத்தை எடுத்துக்காட்டாது. இருப்பினும் மூன்றாம் இடத்தை பிடித்து அதிமுக-வின் தோல்விக்கு காரணமாக அமைந்தார் என்று சொல்லலாம்.

அடுத்ததாக தற்போது நடந்து முடிந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் எப்படியோ கெஞ்சி கூத்தாடி அதிமுக-வுடன் இணைந்து கணிசமான இடத்தைப்பிடித்து  சாதனை படைத்தது தேமுதிக. அதைத் தொடர்ந்து வரும் இந்த உள்ளாட்சி தேர்தலில் அத்தனை கூட்டணி கட்சிகளையும் கழட்டிவிட்டு திமுக-வும் அதிமுக-வும் தனித்து களம்காண ‌போகிறோம் என்று அறிவித்துவிட்டபிறகு தமி‌ழகத்தின் இருக்கும் அத்தனைக்கட்சிகளும் ஏறக்குறைய முன்றாம் அணி என்ற சொல்லுக்கு இடம் கெர்டுக்காமல் தனித்தே களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது.


தற்போது திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக,  வலது இடது கம்னியூஸ்ட், பட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ‌ஜனதா கட்சி,  விடுதலை சிறுத்தைகள் என இருக்கும் அத்தனைக் கட்சிகளும் தனித்துப்போட்டி போடுகிற சூழலில் முன்பெல்லாம் இருமுனை, மும்முனை போட்டிகளாக இருந்தது தற்போது அது ஆறு முனை, ஏழு முனை போட்டி என்ற நிலையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் மும்முனையில் மூன்றாம் இடம்பிடித்த தேமுதிக தற்போது பலமுனைப் போட்டியில் எந்த இடத்தைப்பிடிக்கும் என்றும், விஜயகாந்தின் பலம் பெருகியிருக்கிறாதா...? இல்லையா...? என்று இந்த தேர்தல் படம் பிடித்துக்காட்டும்.

விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் பதிவிக்கு வந்தபிறகு சட்டச்சபையிலோ அல்லது வெளியிலேயோ ஏதாவது பேசியதாக எந்த தகவலும் இல்லை. அதிமுக கூட்டணியில் சேர்ந்து ஆட்சிக்கு வந்தபிறகு விஜயகாந்த் அவர்கள் வேடிக்கைப்பார்க்கும் வேலையை மட்டும்தான் செய்துக் கொண்டிருக்கிறார்.

விஜயகாந்த் உள்ளாட்சியில் கிடைக்கும் ஆதரவைப்பொருத்துதான் அவரின் சொல்வாக்கு கூடியுள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்று தெரிந்து விடும். தேமுதிக மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் அந்தனை கட்சிகளின் லட்சணமும் இன்னும் இந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவில் தெரிந்து விடும்.

09 October, 2011

இது என் அன்புள்ள எதிரிகளுக்கு...


துவரை நண்பர்களுக்கே
வாழ்த்துப்பாக்கள் பாடிய என் நா...

தோழர்களோடு மட்டுமே ‌தோழமைப்பாராட்டி
சிறகு முளைத்த என் தூரிகைகள்...

முதன் முதலாய்...
என் எதிரிகளுக்கும்
வண்ணம் பூசிஅழகுபார்க்க துடிக்கிறது..

ன் அன்புள்ள எதிரியே..
தற்போது
உன் வாழ்க்கைப்பதிவை பார்த்துதான்
என் படிக்கட்டுகள் பயணப்படுகிறது..

நீ வெற்றிக்கனியை பறிக்கும்போதெல்லாம்
என் தோல்விகள் துரத்துகிறது
எப்படியாவது அதை அடைந்து விட...

நீ கொண்டுள்ள வேகத்தை
குறைத்துக் கொள்ளாதே...
உன் வேகம் தான்
என் தற்காப்புக்கு என்னை தயார்படுத்துகிறது...

ன் வேகம் தான்
அதிகமாய் முயற்சிக்கவும்..
அதிகமாய் ஆயத்தப்படவும்..
‌அதிகமாய் போராடவும்
எனக்கு கற்றுக் கொடுக்கிறது...

ன் மீசைகளில்
சிலந்திகள் தங்கிவிடாமல் தூக்கி நிறுத்தவும்..
என் பாதங்கள் பாழ்படாமல்
பயணப்படவும்..!

ன் உயிர் அணுக்கள்
ஓய்வை தவிர்த்து உறுதிபடவும்..!
என் எதிரியே நீ மட்டும்தான் காரணம்

காயப்படுத்தியும்.. காயப்பட்டும்...
மீண்டுவிடுகிறேன்
உன் பயணமும் உன் வளர்ச்சியும்
என்னை தூங்கவிடுவதில்லை...!

ன்னோடு போரிட 
நீ எடுத்த ஆயுதம் உழைப்பு..!
அதனால் தான்
கத்தியின்றி ரத்தமின்றி
பயணப்படுகிறது நம் போர்முறை....

ஓ... அன்புள்ள எதிரியே
என்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
வீ‌ழ்ந்து விடும் தருணம் வரும்போது
தோல் கொடுத்து தோழனாகிவிடுவோம்..

 

துவரை
நாம் எதிரிகளாகவே பயணிப்போம்...

தற்போது வருகைப்புரிந்த
என் அத்தனை அன்புள்ள .........களுக்கும்
என் நன்றிகள்...


07 October, 2011

தன்னை மறந்த நிலையில் தான்...


தன்னை மறந்த நிலையில் தான்....
      ஒருவன் கவிதை எ‌ழுதுகிறான்      
      ஒருவன்  கழுத்தை அறுக்கிறான்
      ஒருவன் தீயிடுகிறான்
      ஒருவன்  தீமிதிக்கிறான்

தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் சக்தி பெறுகிறான்
      ஒருவன் முக்தி பெறுகிறான்
      ஒருவன் வாழ்வை வெல்கிறான்
      ஒருவன்  மரணத்தை கொள்கிறான்

தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் அமைதி இழக்கிறான்
      ஒருவன்  கோவம் கொள்கிறான்
      ஒருவன் சாபம் கொடுக்கிறான்
      ஒருவன்  நியாயம் மறக்கிறான்

தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் வீடுதுறந்து துறவியாகிறான்
      ஒருவன்  தன்னை மறந்து துரோகியாகிறான்
      ஒருவன் காதலித்து பித்தனாகிறான்
      ஒருவன்  கடவுளின் பக்தனாகிறான்

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் போதி மரத்தடியில் ஞானமடைகிறான்
      ஒருவன்  மரத்தை வெட்டி பாவியாகிறான்
      ஒருவன் இம்சை செய்து இட்லராகிரான்
      ஒருவன்  அகிம்சை செய்து மாகாத்மாவாகிறான்

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் ஆசைக் கொண்டு திருடனாகிறான்
      ஒருவன்  காமம் கொண்டு காமூகனாகிறான்
      ஒருவன் சட்டம் இயற்றி மேதையாகிறான்
      ஒருவன்  சட்டைக் கழற்றி ஞானியாகிறான்

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் பணத்திற்காக கொலை செய்கிறான்
      ஒருவன்  நாட்டுக்காக உயிர் கொடுக்கிறான்
      ஒருவன் ஆட்சியேறி அடிமை செய்கிறான்
      ஒருவன்  அடிமையாயிருந்தே புரட்சி செய்கிறான்

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் நாட்டை துறந்து காடுபோகிறான்  (ராமாயணம்)
      ஒருவன்   சூதாடி சூழ்ச்சியில் விழுகிறான் (மகாபாரதம்)
      ஒருவன்  கொலைபழிக்கு ஆளாகிறான் (சிலப்பதிகாரம்)
      ஒருவன்  முல்லைக்கெல்லாம் தேர் கொடுக்கிறான்  (பாரி)

தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் நபிகள் மீது கல்‌லெறிகிறான்
      ஒருவன்  ஏசுவை சிலுவையில் அறைகிறான்
      ஒருவன் சிலைகளை கல்லென்கிறான்
      ஒருவன்  சிவன் தலை மீதே கை வைக்கிறான்

      அனுமன் அமைதியாய் இருந்ததும்...
      ராவணன் மதி இழந்ததும்....
      மகாவீரர் அரண்மனையில் இருந்ததும்...
      ஆதிமனிதன் குரங்கில்  இருந்ததும்...
      அ‌லெக்சண்டர் ஆசைக் கொண்டதும்...
      சிவன் சக்தியை எரித்ததும்...
      கண்ணதாசன் மதுவில் இருந்ததும்...

தன்னை மறந்த நிலையில் தான்...     




 (மீள் பதிவு)

தேர்தல் பணி காரணமாகவே பதிவுகள் எழுத நேரம் போதவில்லை.
நண்பர்களின் பதிவுகளுக்கும்  வந்து வாசிக்க நேரமில்லை.
தவறாக என்ன வேண்டாம்...
 

06 October, 2011

இதை விடவா மனிதன் உயர்ந்தவன்...!



ரு செங்கல் உதிர்த்த வைரவரிகள்...

ஓ... மனிதா
நீ சுட்டப்பின் சாம்பலாகிறாய்....

நான்...
சுட்டப்பின் உயிர் வாழ்கிறேன்...




ரு பாறையின் மூச்சு....

ஓ.. மனிதா...
நீ வலிகளால் கோழையாகிறாய்....

நான் வலிகளால்
கடவுளாகிறேன்...




ரு பனித்துளியின் சுவாசம்..

ஒ.. மனிதா.. 
நீ நீரில் மூழ்கையில் 
மூர்ச்சையாகிறாய்...

நான் மூச்சடக்கி 
முத்தாகி‌றேன்....


 தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!

04 October, 2011

கவனம் தேவை மக்களே... பின் வேண்டாம் விபரீதம்...



“என்ன சார் இது... தபால் பெட்டிக்கு முன்னாடி தலைகுனிஞ்சி நின்னுகிட்டிருக்கீங்க...?”

“ஹி!.. ஒண்ணுமில்லே.... மனுஷனுடைய ஞாபக சக்தியைப் பத்தி யோசனை பண்ணிக்கிட்டிருக்கேன்..!”

“சில பேருக்கு அது குடுத்து வச்சிருக்கு சார்...!”

“லண்டன்லே ஒரு பெரிய உணவு விடுதி. அங்கே ஒரு பணியாளர். தினமும் நிறையப் பேர் சாப்பிட வருவாங்க அப்படி வர்றவங்களோட குடை, கைப்பபை, இவற்றையெல்லாம் வாங்கி இவர் பத்திரமா வச்சிக்குவார். சாப்பிட்டுவிட்டு வெளியே வர்றப்ப, அவங்க அவங்க பொருளை அவங்க அவங்கிட்டே சரியா ஒப்படைப்பார்.!”

“அப்படி எப்படி..? எல்லா குடையும் ஒரே மாதிரிதானே இருக்கும்?”

“இருந்தாலும் அவருக்கு அது ஞாபகம் இருக்கும் வர்றவங்க முகத்தையும் அவர்களுடைய பொருளையும் மறக்காம ஞாபகத்துலே வச்சிருந்து திருப்பிக் கொடுப்பார். இதுக்குக் குறிப்போ பெயரோ எழுதியும் வச்சிக்கறதில்லை!”

“ஆச்சரியமா இருக்கு சார்..!”

“ஏறக்குறைய 20 வருஷம் அங்கே அவரு வேலை பார்த்திருக்கார். ஒரு நாள்கூடப் பொருள்களை மாற்றி கொடுத்ததில்லை: குழப்பம் வந்ததில்லை!”

“நமக்கெல்லாம் இது சரிப்பட்டு வராது சார்..?”

“என்ன சொல்றீங்க..?”

“ஞாபகசக்தி போதாதுங்கறேன். அதனாலேதான் இப்படி இந்தப் தபால்பெட்டிக்கு முன்னாடி தலைகுனிஞ்சி நின்னுகிட்டிருக்கேன்!”

“என்ன ஆச்சு? விவரமாத்தான் சொல்லுங்களேன்!”

“அவசரமா ஒரு லெட்டர் எழுதி இந்தப் பெட்டிக்குள்ளே போட்டேன். ஆனா அதுலே கையெழுத்துப் போட மறந்துட்டேன்!”

“நீங்க பரவாயில்லை சார். நான் கையெழுத்தெல்லாம் கரெக்டாப் போட்டுட்டேன்... ஆனா லெட்டர் தான் எழுதாமே விட்டுட்டேன்..!”




ஞாபக மறதி  நோய் இன்று  உலக மக்கள் அத்தனைப்பேரிடமும் இருக்கிறது தம்முடைய அன்றாட வேளைகளில் எதையாவது ஒன்றை மறந்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு இது அதிகஅளவில் ஏற்பட்டு நோயாக மாறுகிறது. பொதுவாக ஒரு விஷயத்தில் அதிக அக்கறைக் கொண்டு நினைவில் ‌வைத்திருக்கும் போது மற்ற விஷயங்கள் நம் நினைவில் இருந்து போய்விடுகிறது.

தொடர்ந்து சில விஷயங்களை மனதிற்க்கு அசைப்போடுவது மூலமாகவும், குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டு அதன்படி நடக்கும்போதும், சரியான பயற்சிகள் எடுப்பது மூலமும் இதுபோன்ற நோயை குணபடுத்தமுடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.




இந்த உலகத்தில் மிகவும் பெரிய ஞாபக மறதிக்காரர்கள் யார் என்றால் அது அரசியல்வாதிகள் தான் தன்னுடைய தொகுதி பற்றிய சிந்தனை ‌ஐந்தாண்டுக்கு ஒருமுறைதான் ஞாபகத்திற்க்கு வரும். அதுவும் ஓட்டுக்கேட்க தேர்தல் வரும் நேரத்தில்.

உண்மை காதலுக்கு உசுர கொடுக்கலாம்.. இந்த காதலுக்கு...


உன்னை  மறந்து 
விழிகள் தூங்கினாலும்...
இதயமொன்னவோ
விழித்துக் கொண்டுதான் இருக்கிறது...

############################################################


எனக்குத் தெரியாமலே 
ஏதேதோ நடந்து விடுகிறது...
காதல் உள்பட... 

############################################################


வார்த்தை வசமிருந்தும் 
“கவிதை“ எழுதவில்லை
அவளுக்கு கவிதை பிடிக்காதாம்...

############################################################


 உன்னிடம் 
நிறைய பேச வேண்டும்
ஒரே வார்த்தையில்....

############################################################

 
 
எவ்வளவு நேரம்
என்றாலும்
உனக்காக காத்திருப்புகள்
எனக்குள் சுகமானவை...

############################################################ 

 

பயமில்லை...!
வலிக்கு பயந்திருந்தால்
நான் காதலிக்க அல்லவா 

பயந்திருக்க வேண்டும்..

############################################################


காதல் மென்மையானது
ஒரு துளி கண்ணீர் கூட
அதற்கு சுமைதான்...
###########################################################

படங்களுக்கு கவிதைக்கும் சம்மந்தமில்லை..
கவிதை என்னுடைய காதல் கவிதைகள்....
படங்கள் நாட்டுக்கு கேடான சங்கதிகள்...

இந்தமாதிரியான காதலை ‌என்னவென்று சொல்வது....

03 October, 2011

உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் இப்படி செய்வது நியாயம்தானா...?


தமிழகத்தில் அரசியலுக்கு என்று தனிவரவேற்பு இருக்கிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன் ஆளும் கட்சியான திமுக-வை தூக்கிஎறிந்துவிட்டு அடுத்த கட்சியான அதிமுக-விற்கு வாய்ப்பு கொடுத்தாயிற்று. அதே வேகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தலை நாம் சந்திக்க போகிறோம். அதற்கான விறுவிறுப்பு தற்போது தமிழகம் முழுவதும் காணப்படுகிறது.

இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், பெரும்பாலானோர், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என போட்டியிடுவது கிடையாது. வியாபாரம் போல, கொஞ்சம் பணம் செலவு செய்தால், வெற்றி பெற்று பதவிக்கு வந்த பின், நன்கு அறுவடை செய்து கொள்ளலாம் என எண்ணுகின்றனர். இது தவறு, முறையற்ற வழியில் சொத்து சேர்த்தவர்கள் எல்லாம் என்ன நிலையில் உள்ளனர் என்பது எல்லாருக்கும் தெரியும். 
  
வள்ளுவரும், களவினால் வருகின்ற வசதி வாய்ப்புகள் சிறப்பாக இருப்பது போல் தோன்றினாலும், சீரழிவைத்தான் தரும் என்று,"களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்துஆவது போலக் கெடும்' என்று கூறியுள்ளார். இப்போது மக்கள் விழிப்படைந்தோ, பகையினாலோ, ஒருவர் மாறி ஒருவர் முறைகேடுகளை வெளியில் கொண்டு வந்து, தண்டனை பெற்றுத்தருவதில் உறுதியாக உள்ளனர். இதை அறியாதவர்கள் தான் தப்புக் கணக்கு போட்டு தேர்தலில் ஜெயித்து, கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணத்தில், போட்டி போட்டு பணம் செலவு செய்கின்றனர்.

வாக்காளர்களோ, ஜெயித்தால் நீங்கள் ராஜாதான் பிறகென்ன இப்ப செலவழிக்க வேண்டியதுதானே என போட்டியிடும் எல்லாரிடமும் சாப்பாடு, குவார்ட்டர், செலவுக்கு பணம் என அனுபவிக்கின்றனர். இதில் ஒருவர் தான் வெற்றி பெற முடியும் தோற்றவரின் வெறுப்புக்கும், பகைக்கும் இவர்கள் ஆளாகக் கூடும். இது, உள்ளாட்சி தேர்தல் என்பதால், போட்டியாளர்களும், வாக்காளர்களும் நன்கு அறிமுகமான தெரிந்தவர்களாகத்தான் இருப்பர். இதனால் ஏற்படும் பகை, சண்டை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.சிலஇடங்களில் கடந்த முறை தேர்தலின்போது இருந்தப்பகை கூட தற்போது வெளிப்படும்.

வேட்பாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் விளம்பரத்திற்க்கு, ஓட்டுக்கு, குடிக்க, பொருளாக என அதிகம் பணம் செலவு செய்வதை நிறுத்திக் கொண்டு, சேவை செய்ய வாய்ப்பு கொடுத்தால் சேவை செய்யலாம் என்ற எண்ணத்துடனும், வாக்காளர்கள் இரு பக்கமும் ஜால்ரா அடித்து, ஆசை காட்டி, மோசம் செய்து பகையை தேடிக் கொள்வதையும் நிறுத்திக் கொண்டால், பின்னாளில் மட்டுமல்லாது என்னாளிலும் பிரச்னை இல்லாமல் தேர்தல் கண்ணியத்துடன் நடக்கவும், நிர்வாக அமைப்புகள் சரியாக செயல்படவும் வழிவகுக்கும். எனவே, வேட்பாளர்களும், வாக்காளர்களும் உஷார் ஆகிக்கொள்ளுங்கள்; இல்லையென்றால், துயரம் உங்களுக்கு நண்பனாக இருக்கும். 

உள்ளாட்சி அமைப்புகள் என்பது அருகில் இருக்கும் ஆட்சியாளர்கள் அவர்களை திறம்பட தேர்வு செய்வது வாக்காளர்களின் கடமையாகும். காசுக்கு ஆசைப்பட்டு கடமையிலிருந்து தவறாமல் ஒரு நல்ல குடிமகன் என்று நிருபியுங்கள்...

02 October, 2011

மகனாய் இருக்க வெட்கப்படுகிறேன் நான்....


சிந்தனை சிதறல்கள் சிதறியடிக்க
இரவுத்தூக்கம் கனாவாய் போனது...

காலை உணவில் கால்பாகம் தான்...
செய்தித்ததாளில் தலைப்பு செய்திகளோடு சரி...
அயர்ன் செய்யாத சட்டை....
காலுறை மறந்த காலணி சகீதம்...
பேருந்து நிலையம் வந்து நின்றேன்

காலை நேரம்கழித்து எழுந்ததால்
காலைக்கடன்... அலுவலகம்... என
அத்தனைக்கும் தாமதமாகிக் கொண்டிருந்தது...

தாமதமாக வந்த பேருந்து பிடித்து
எப்படியோ போய் சேர்ந்தேன்...

லுவலகம் முடிந்து வீடு திரும்பி
சாப்பிடும்போதுதான் ஞாபகம் வந்தது
காலையில் அம்மா வாங்கி வரச்சொன்ன
மருந்தை வாங்காமல் வந்தது...

மீண்டும் அவசரகதியில் பயணம்
மருந்து வாங்க...

தாயின் தேவைகளைக்கூட
தாமதப்படுத்திவிட்டு மகனாய் இருக்க
தற்போது...
வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்...!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!


01 October, 2011

விஜய் -ன் வேலாயுதம் வில்லு பட சாதனையை முறியடிக்குமா....


தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல விஜய்க்கும் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்து தொடர் தோல்விப்படங்களுக்கு பிறகு காவலன் கொஞ்சம் பேசப்பட்டது. அந்த வெற்றியை தொடர வேலாயுதம் கைகொடுக்குமா அல்லது விஜயின் தொடர் தோல்விகள் இன்னும் தொடருமா என்று படம் வெளிவந்த பிறகு தெரியும். மேலும் விஜய் அரசியலுக்கு வந்தப்பிறகு வெளிவரும் முதல் படம் என்ற எதிர்பார்ப்பையும் ‌வேலாயுதம் படம் பெற்றுள்ளது...

நண்பன் படத்தில் விஜய் நடித்தாலும் அவருக்கென்று தனிப்பட்ட பெயர் அதில் கிடைக்குமா என்று தெரியவில்லை. அதில் பல ஹிரோக்கள் மற்றும் ஷங்கரின் பெயர்களே முன்னிருத்தப்படும். ஆகையால் வேலாயுதம் படமே தற்போதைக்கு விஜய்க்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

அது சரி அது என்ன வில்லு படசாதனையா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது.... வில்லு படம் தமிழுக்கு‌ ‌மிகப்பெரிய சாதனையை பெற்றுத் தந்துள்ளது.

அது என்ன தெரியுமா...

வில்லு படம் வெளியான அந்த வாரத்தில் செல்போன் நிறுவனங்கள் வெளியிட்ட ஒரு அறிக்கை.
 
அந்த ஒரு வாரத்தில் அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் (SMS) பட்டியல்

“காலை /  மாலை வணக்கம்” என 10 ஆயிரம் குறுந்தகவல்கள்.

“குட் நைட்” என 15 ஆயிரம் குறுந்தகவல்கள்.

“நட்பு சார்ந்த தகவல்கள்” என 22  ஆயிரம் குறுந்தகவல்கள்.

“சர்தார்ஜி ஜோக்ஸ்” என 50 ஆயிரம் குறுந்தகவல்கள்.

“கிரிக்கெட் அலார்ட்ஸ்” என 75 ஆயிரம் குறுந்தகவல்கள்.

“கமர்சியல்” என 1 லட்சம் குறுந்தகவல்கள்.

ஆனால்
“வில்லு” படத்தை கிண்டல் செய்து 20 லட்சம் குறுந்தகவல்கள்.

பகிர்ந்துக் கொள்ளப்பட்டது என தகவல் வெளியானது

SMS-ல் இவ்வளவு பெரிய சாதனையை எந்த ஒரு படமும் செய்யவில்லை ‌என சர்வதேச சினிமா சங்கங்கள் வில்லு படத்திற்க்கு புகழாரம் சூட்டியது.

தற்போது வெளியாக இருக்கும் வேலாயுதம் படம் அந்த சாதனையை முறியடிக்குமா பெருத்திருந்து பார்ப்போம்...
 
Related Posts Plugin for WordPress, Blogger...