கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 November, 2011

புரட்சிக்காரனின் போலிமுகம்...... ஊருக்கு மட்டும்தான் உபதேசமா...?..

நாளுக்குநாள் புதுப்புது வலைப்பூக்கள் இங்கே பூத்துக்கொண்டிருக்கிறது. இதி்ல் ஒன்றிலிருந்து ஒன்று வித்தியாசமானதாகவும், அந்த வித்தியாசத்தில் நிலைத்திருக்க தங்கள் பாணியில் பல்வேறு பதிவுகள் இந்த வலைப்பூவில் பூத்துக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில்.... ஒரு பதிவர் சிலருடைய குற்றங்கள் கண்டுபிடித்து  அதில் பெரிய வல்லவராகிவிடலாம் என்று வந்திருக்கிறார். அவர் வேறுயாருமில்லை...  புரட்சிக்காரன்தான். குறைச்சொல்லும் இந்த பதிவருக்கு புரட்சிக்காரன் என்று பெயர்.

அவர் என்பதிவில் இருக்கும் எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிட்டிருந்தால் இந்த பதிவு தேவைப்பட்டிருக்காது.  (என்னுடைய ஒரு வருட பதிவுகளில் எதற்கும் அவர் வந்ததில்லை) அதைவிடுத்து அவருடைய வலைப்பூவில் தேவையில்லாமல் என்னை மிகவும் மோசமாக விமர்சித்து  ”ஐயோ.. நான் 'இதுல' பெயிலாயிட்டேன்” ”கேவலமான வாத்தியாரும்.....”அது”வும்......”   என்ற இரண்டு பதிவுகளிட்டு என்னை வம்புக்கு இழுத்ததால் இது அவசியமாகிறது.

முதலில் தன்னிடம் அழுக்குகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு மற்றவர்களை குறைசொல்ல வேண்டும். நாம்தான் வல்லவர்கள் என்று களத்தில் குதித்தவர் மண்ணைக்கவ்விய வரலாறு ஒன்றல்ல இரண்டல்ல இந்த உலகில்.

எதிலும் யாரும் வல்லவர் அல்ல என்பதை எடுத்துக்காட்ட அவருடைய வலைப்பூவில் இருந்து எடுக்கப்பட்ட சில எழுத்துப்பிழைகள்.



//////// எனக்கு பிடல் காஸ்ட்ரோவை பிடிக்கும்....அதுக்கு காரரணம் கம்யூனிசமில்லை....அமெரிக்காகாரனுங்க கண்ணுல விரல விட்டு ஆட்டுவதால்... ///////////////




படத்தில் காட்டியுள்ள பிழைகளை கீழே சிகப்பு எழுத்துகளில்..


//////////சிறந்த தமிழ்மன மகுடம் பெருவோர் விருது /////////

/////////////சிறந்த அடிக்கடி பிளாக் தொலைப்பவர் விருது
நல்லனேரம் சதீஸ் குமார்////////

/////////சிறந்த தனிமனித தாக்குதல் விருது//////// 

///////// சிறந்த கானமல் போன பதிவர் விருது  //////

இவை அனைத்து ஒரே பதிவில் உள்ள பிழைகள்





////////////// மன்னிக்கவும் நன்பரே...ஒரு ஆதங்கதில் எழுதிய பதிவு.வார்த்தைகலை திருத்தி விடுவொம //////////////


இது அவரால் இடப்பட்ட பின்னூட்டம்.


இவைகள் அனைத்தும் அவருடைய ஒருசில பதிவிலிருந்து எடுக்கப்பட்ட எழுத்துப்பிழைகள். இதை ஏன் சுட்டிக்காட்டுகிறேன் என்றால் எழுத்துப்பிழை என்பது யாராலும் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை காட்டவே.

இது போகட்டும்.. இதுவரை ஒரு முறைக்கூட என் கவிதைவீதிப்பக்கம் வராமல் என்னவோ நான் மிகப்பெரிய குற்றவாளி என்ற பெயரில் தொடர் பதிவுகளை பதிவிட்டுவருகிறார். அதற்கான விளக்கங்கள் நான் கொடுக்கவில்லையென்றால் நான் அவர் சாட்டும் குற்றத்திற்கு நான் பொறுப்பாகிவிடுவது‌போல் ஆகிவிடும்.

அந்தப்பதில் நான் கொடுத்த அத்தனை பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்காமல் அதிலுள்ள எழுத்துப்பிழைகளை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அதனாலே அந்த கருத்துக்களை நீக்க வேண்டியதாயிற்று. 

////////// நேரத்தை செலவு செய்து பதில் பின்னூட்டம் அளித்தால் அனைத்து பின்னூட்டங்களையும் அழித்து விட்டு புறமுதுகிட்டு ஓடிவிட்டார். ////////////


அப்படி ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை புரட்சிக்காரன். வார்த்தை சண்டையில் நீர் வல்லவராக இருக்கலாம் உண்மையில் உள்முகத்தைக் காட்டுங்கள் யார் வீரரென்று புரியும். முகவரிகள் மறைத்தப்பின் நான் கூட வீரன்மட்டுல்ல மாவீரன்தான்.


அன்புள்ள புர‌ட்சிக்காரனுக்கு... கேவலமான வாத்தியாரும்.....”அது”வும்......
 என்ற பதிவில் தங்களின் கீழ்த்தரமான கேள்விகளுக்கு என்பதில்.


/////////
அவருக்கு போட்டியா இந்த கவிதைத்தெரு வாத்தியும் கவிதைங்கற பேருல எழுதுவாரு பாருங்க...ஆத்தாடி நம்ம வாலி, வைரமுத்து எல்லாம் பிசசை வாங்கனும் அவருகிட்ட..//////////////


ஐயா...  நான் வாலியோ வைரமுத்துவோ அல்ல. அந்த எண்ணமும் என்மனதில் வந்ததில்லை. நான் கிறுக்குவது குப்பையாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை..? கருப்பாக இருக்கிறது என்பதற்காக என்பிள்ளையை வெறுக்கவா சொல்கிறீர்கள். வளைந்திருந்தாலும் அவைகள் எனக்கு இனிப்புள்ள கரும்புகள்தான்.


////////////// கவிதைதெருவுக்கு ஜிகினா வேலைப்பாடுகள்.///////////


கவிதைகளை அழகுப்படுத்த நான் எதையோ செய்துவிட்டுப்போகிறேன். வேண்டுமென்றால் வாருங்கள் தங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன். என் சொந்த செயல்களை விமர்சிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை.



//////////////என்று ஒன்றின்கீழ் ஒன்றாய் வார்த்தைகளை அடுக்கி, அந்த மொக்கைக்கு ஜிகினா வேலைப்பாடுகளெல்லாம் கொடுத்து, கலர் கலரா வண்ணம் பூசி கவிதைன்னு சந்தைப்படுத்திவிடுவாரு. அவ்வளவு திறமை நம்ம கவிதைதெரு வாத்திக்கு../////////////

உண்மையே..! அதில் தங்களுக்கு என்ன நட்டம்... சந்தைப்படுத்தப்பட்ட என்கவிதை தோல்வி முகத்தோடு திரும்பினாலும் எனக்கு கவலையில்லை. அவைகளை ஆயுளுக்கும் தாய்பறவைப்போல் காக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு. தங்களுக்கு மொக்கையாகத்தான் தெரியும். கவிதை ரசிக்க ஒரு ரசனை வேண்டும். அது தங்களிடம் இருக்கிறதா இல்லையா என்ற கவலை எனக்குதேவையில்லை.


/////////
என்பதற்காக அந்த 'அது' வார்த்தையை பயன்படுத்தி அதுவும் தாயே (ஆத்தா)  நான் அதுல பாஸ்  ஆயிட்டேன் என்று எழுதுவது ஒரு ஆசிரியருக்கு அழகா?//////////


// அதுல ///// என்பதற்கு தீய அர்த்தங்கள்  தங்களுக்கு மட்டும்தான் வரும். மனசு சுத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு இது தவறான வார்த்தைதான். அப்படியிருக்க தாங்கள் அந்த வார்த்தையை தவிர்த்து தலைப்பிட்டிருக்கலாம்.



//////// இந்த அது இது போன்ற வார்த்தைகளை ரெண்டு வாத்திகளும்தான் அதிகம் பயன்படுத்தறாங்க.....//////////////


மீண்டும் கேட்கிறேன். அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை. அதிக ஹிட்ஸ்க்காக என்று குற்றம் சாட்டுகிறீர்கள். ஆமாம் மறுமடியும் சொல்லுங்கள் அதில் தங்களுக்கு என்ன பிரச்சனை. அதனால் தங்களுக்கு பாதிப்பு என்று சரியான காரணம் சொல்லுங்கள் நாங்கள் அதை தவிர்த்துவிடுகிறோம்.


/////////தயவு செய்து பிழை இன்றி எழுதுங்கள் என்று எத்தனை முறை சொன்னாலும் திருந்த மாட்டீர்களா? நான் அப்படித்தான் என்று சொல்வது உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம்///////////


எத்தனை முறை என்பதிவுகளை படித்துவிட்டு குறைசொன்னீர்கள். இதுவரை எந்த பதிவுக்கு வந்ததில்லை. நேற்றுதான் முதல் முதலாக வந்துள்ளீர்கள். மாதத்திற்கு ஒரு பதிவிடும் தங்களிடமே இத்தனை பிழைகள் என்றால், தினமும் பதிவிடுங்கள்.. அப்போது தெரியும் உங்களுடைய லட்சனம்.


//////அனுதாப ஓட்டு வாங்குவதை நிறுத்துங்கள்.////////

என் நியாயங்களை நாகரீகமாக சொன்னால் அது தங்களுக்கு அனுதாப ஓட்டுக்கேட்பதுபோல் இருக்கிறதா...? அனுதாப ஓட்டுவாங்கி நான் என்ன பிரதமர் பதிவிக்கா வரப்போகிறேன். கோவப்படமாமல் அமைதியான முறையில் நாகரீகமாக கருத்திடுவது தங்களுக்கு அனுதாப ஓட்டு வாங்குவதுபோல்தான் தெரிகிறதா.

ஒரு ஆசிரியர் இப்படி எழுத்துப்பிழையோடு எழுதலாமா என்று கேட்கலாம். ஆசிரியர்கள் ஒன்றும் கடவுள்கள் இல்லை குறையே இல்லாமல் இருக்க. தாங்கள் என்னிடம் அந்த ஒரு குறைமட்டும்தானே கண்டீர் பின் ஏன் ‌இவ்வளவு கேவலமான பதிவுகளிட்டீர்.


சிறந்த பதிவுகளிட, புரட்சியான விஷயங்கள் சொல்ல, எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. அடுத்தவரை குறைச்சொல்லி அதில் குளிர்காயும் பழக்கத்தை விடுங்கள் இதோடு.

அனைவருக்கும் ஒரு செய்தி. இந்த புரட்சிக்காரன் வேறு யாரும் இல்லை நம்போடு இருக்கும் ஒரு பிரபல பதிவர்தான். அவர் யாரென்று யோசித்ததின் விளைவாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

புரட்சிக்காரனின் உண்மை முகம் எது?
புரட்சிக்காரனின் கோவம் உண்மையில் என் எழுத்துப்பிழைகள் மீது மட்டும்தானா..?
என்மீது கோவப்பட்டு இரண்டு அவதூறு பதிவுகள் போட காரணம் என்ன?
எவ்வாறு என்மீது அவர் பார்வை திரும்பியது...?
தொடர் பதிவுகளிட்டு என்ன விமர்சிக்க காரணம் என்ன..?
இன்னும்... இவருக்கு துணை நிற்கும் பிரபல பிரச்சனைக்குரிய பிண்ணனியாளர் யார்?


போன்ற விஷயங்கள் அடுத்த பதிவில் அம்பலப்படுத்த போகிறேன்.....



அன்பார்ந்த பதிவுலகமே....

என் கவிதைகள் என் சூழ்நிலையை பிரிதிபலிக்ககூடியது. அவைகளில் கவித்துவம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. என்மனதில் தோன்றுவதை, நான் பார்ப்பதை, எனக்கு எது சரியென்று படுகிறதோ அதைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
என் படைப்புகள் ஒருசில எழுத்துப்பிழைகளை கொண்டுள்ளது என்பதற்காக  அவைகள் தரம்தாழ்ந்து விடாது. 

தவறான கருத்துகளாக இல்லாத பட்சத்தில், என்னையோ அல்லது என் கவிதைகளையோ விமர்சிக்கக் கூடிய உரிமை யாருக்கும் இல்லை. அப்படி விமர்சிக்கப்படும் போது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் கோழை அல்ல.

இவைகளை வாசிக்கும் தாங்கள் வாக்கிடவேண்டும் என்றோ, கருத்திடவேண்டும் என்றோ கட்டாயமில்லை. 

எனக்கு கருத்திட்டு வாக்களித்தால் மட்டுமே மற்றவர் பதிவை வாசிக்க நான் வருவேன் என்றில்லை. எப்போதும் போல என்னுடைய வருகைகள் இருக்கும்.  

இவ்வளவு நாகரீகமாக பதிவிட்டதைக்கூட சிலர் அனுதாபம் தேட முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டலாம். அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை நான்.....


வருத்தத்துடன்....
கவிதை வீதி சௌந்தர்...

தொடர்ந்து எனக்கு எப்போதும் ஆதரவளிக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்...!

129 comments:

  1. என் கருத்து என்னன்னா அவங்கவங்க அவங்கவங்க வேலையை பார்க்கனும்.. சொந்த சரக்கு போடறாங்களா? காபி பேஸ்ட் சரக்கு போடறாங்களா? என்பதை மக்கள் பார்த்துக்குவாங்க.. காலம் கழித்து விடும்.. அதை விட்டுட்டு அஞ்சாங்கிளாஸ் பையன் மாதிரி டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான், அவன் என்னை அடிச்சிட்டான் அப்டினு பதிவு போட்டா நோ யூஸ்..

    ReplyDelete
  2. அடுத்தவங்களை குறை சொல்லிட்டே இருப்பது தமிழனின் தனி குணம்

    ReplyDelete
  3. ///////
    சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]

    மொத ஆப்பு

    /////////

    இந்த ஆப்பு யாருக்கு..?

    ReplyDelete
  4. விடுங்க சகோ. இதுவும் கடந்து போகும்.

    ReplyDelete
  5. //////
    சி.பி.செந்தில்குமார் said...

    என் கருத்து என்னன்னா அவங்கவங்க அவங்கவங்க வேலையை பார்க்கனும்.. சொந்த சரக்கு போடறாங்களா? காபி பேஸ்ட் சரக்கு போடறாங்களா? என்பதை மக்கள் பார்த்துக்குவாங்க.. காலம் கழித்து விடும்.. அதை விட்டுட்டு அஞ்சாங்கிளாஸ் பையன் மாதிரி டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான், அவன் என்னை அடிச்சிட்டான் அப்டினு பதிவு போட்டா நோ யூஸ்..
    ////////


    அப்படியிருந்தா எப்படி பப்ளிகு்ட்டி ஆகுறது..

    அதுவும் அட்ரஸ் இல்லாம....

    ஏதோ அவர்களால் முடிஞ்சது...

    ReplyDelete
  6. தங்கள் பதிவுகளின் தரம் நாங்கள் அறிவோம்.. தொடர்பவர்கள் நானூறு பேரும், அது தவிர்த்து தினமும் படிக்கும் ஆயிரம் பேரும் அறிவோம்.. தமிழ்மணம் தந்துள்ள ஆறாமிடம் எங்களை போன்றோர் தந்துள்ள முதலிடம் இருக்கையில் உம பணி சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அவரவர் மனதிற்குத் தோன்றுவதைப் பதிவிடலாம். குற்றம் கண்டுபிடிப்பவருக்கு நீங்கள் பதிலளிப்பதன் மூலம் அவரையும் பிரபலப்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். புறக்கணித்து உங்கள் வேலையைப் பார்ப்பதே சாலச் சிறந்தது என்பது என் கருத்து.

    ReplyDelete
  8. /////////
    சி.பி.செந்தில்குமார் said...

    அடுத்தவங்களை குறை சொல்லிட்டே இருப்பது தமிழனின் தனி குணம்
    /////////////

    உண்மைதான்...

    தானும் மேலே செல்லாமல் அடுத்தவரும் மேலே செல்லவிடாமல் செய்வது ஒரு சிலருக்கு பொழுதுபோக்கு...

    அந்த பொழுதுபோக்குக்கு நான் தான் ஊறுகாயா...?

    ReplyDelete
  9. ///////
    கணேஷ் said...

    அவரவர் மனதிற்குத் தோன்றுவதைப் பதிவிடலாம். குற்றம் கண்டுபிடிப்பவருக்கு நீங்கள் பதிலளிப்பதன் மூலம் அவரையும் பிரபலப்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். புறக்கணித்து உங்கள் வேலையைப் பார்ப்பதே சாலச் சிறந்தது என்பது என் கருத்து.
    //////////

    தங்களுடைய கருத்துக்கு நான் தலைவணங்குகிறேன் ஐயா...!


    அப்படி இருந்துவிட்டால் அந்த குற்றங்களுக்கு நான் பொறுப்பாளியாகிவிடுவேன்...

    அப்படி எதிர்த்து கேட்காவிட்டால் நாம்மை கோழையாக கருதிவிடுகிறார்கள்...

    அதனால்தான் என்னுடைய பொருமையையும் இழந்து.. இன்று இந்த பதிவிடவேண்டியதாயிற்று...

    ReplyDelete
  10. /////
    கோவி said...

    தங்கள் பதிவுகளின் தரம் நாங்கள் அறிவோம்.. தொடர்பவர்கள் நானூறு பேரும், அது தவிர்த்து தினமும் படிக்கும் ஆயிரம் பேரும் அறிவோம்.. தமிழ்மணம் தந்துள்ள ஆறாமிடம் எங்களை போன்றோர் தந்துள்ள முதலிடம் இருக்கையில் உம பணி சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.
    /////////

    தங்களுகளின் கருத்திற்க்கு மிக்க நன்றி கோவி...

    அந்த நபர் என்னுடைய குறைகளை சுட்டிக்காட்டிருந்தால் விட்டிருப்பேன்...

    தொடர் பதிவுகளிட்டு என்மீது அவதூரு வீசுவதால்தான் அமைதியிழந்து என்னுடைய நியாயத்தை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கேன்...

    ReplyDelete
  11. திரு விளையாடல் படத்துல ஒரு வசனம் வரும். தருமி, நக்கீரர்கிட்ட சொல்வார்..., பாட்டெழுதி பேர் வாங்குற புலவர்கள் ஒரு விதம், மத்தவன் எழுதுன பாட்டுல இருக்குற குறைகளை சொல்லி பேர் வாங்குறவங்க ஒரு விதம் நீர் எந்த விதம்ன்னு யோசிங்கன்னு. அதுப்போல, “அந்த பதிவர்” எந்த விதம்னு அவரும், பதிவுலகமும் புரிஞ்சுக்கிடும் சகோ.

    அவரை விடுத்து, உங்களுக்குன்னு இருக்குற வாசகர்கள் வட்டத்துக்காக உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும் சகோ. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஐயோ அப்படீண்ணா என் பதிவு நீங்க படிச்சதில்லையா?

    பிரசுரித்த பிறகு தான் சரி பிழையே பார்ப்பேன். அதுவும் சில தடவை பார்ப்பதில்லை.

    தப்புத் தான் ஏனொ திருத்த மறந்து விடுவேன்...

    ReplyDelete
  13. நண்பரே நான் முன்பே சொன்னது போல உங்களிடம் நேர்மை இருக்கிறது. ஆகவே எதை பற்றியும் கவலை கொள்ள தேவை இல்லை. இந்த பதிவை எழுத முழு உரிமையும் உண்டு. இனி அதில் உழன்று கொண்டிருக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  14. நண்பா, பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லை மீறினால் இப்படித்தான் பொங்கி எழ வேண்டும்.

    ReplyDelete
  15. உங்கள் கவிதை படைப்புகளும், மற்ற கட்டுரை படைப்புகளும் சிறந்த படைப்புகள், உங்கள் வழியில் உங்கள் பயணம்.

    ReplyDelete
  16. ங்கொய்யால மாப்ள அருவாள இந்த சுழட்டு சுழட்டி இருக்க... விடாத அடுத்த பதிவு எப்போ சீக்கிரம் போடு மச்சி ரெண்டுல ஒன்னு பார்த்துடுவோம்...

    ReplyDelete
  17. மாப்ள நமக்கு தெரியுதான்னு டெஸ்ட் பண்ண தான் தப்பு தப்பா போட்டு இருப்பாரோ...

    ReplyDelete
  18. வணக்கம் நண்பரே..நான் பதிவுலகில் நுழைந்ததிலிருந்தே தங்கள் படைப்புகளை வாசித்து வருகிறேன்

    வள்ளுவனின் வாக்கு நினைவுக்கு வருகிறது..

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்.

    இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம் தங்கள் பதிவிற்க்கு கருத்துரையிட்ட நண்பர்களையும் வம்பிழுத்தது உண்மையில் வருத்தமளிக்கிறது

    தங்களின் எண்ணங்களை தொடர்ந்து பதிவிடுங்கள் நாங்கள் பின் தொடர்கிறோம்..வருத்தமேதுமின்றி தங்கள் பயணம் தொடரட்டும்

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  19. போடாங் நீயே இவ்ளோ தப்பா எழுதிட்டு பெரிய தமிழ் ஞானி மாதிரி எல்லோருக்கும் அறிவுரை கொடுக்குற.. இப்ப தெரியுதா பிழைகள் தெரியாமல் நடப்பது தான் என்று...

    ReplyDelete
  20. சார் என்னைய திட்றதா இருந்தாலும் திட்டி புடுங்க...எதுக்கும் சொல்லி வைக்கிறேன் ஹிஹி!

    ReplyDelete
  21. நண்பர் கவிதை வீதி அவர்களே !

    //எனக்கு பிடல் காஸ்ட்ரோவை பிடிக்கும்....அதுக்கு காரரணம் கம்யூனிசமில்லை....அமெரிக்காகாரனுங்க கண்ணுல விரல விட்டு ஆட்டுவதால்...//

    இந்த வரிகளை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஏதோ ஒரு பேட்டியில் கூறியதாய் ஞாபகம் .... but not sure

    ReplyDelete
  22. விடுங்க பாஸ் பூனை கண்ணை முடுனா பூலோகம் இருண்டுடாது ..

    ReplyDelete
  23. அன்புள்ள சவுந்தருக்கு வணக்கம்!

    நண்பர்கள் சிலரது தொலைபேசி அழைப்பினைத் தொடர்ந்து, உங்கள் பதிவினைப் படிக்க வந்தேன்! இதில், புரட்சிக்காரன் நான் தான் என்பதாக நீங்கள் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறீர்கள்! நண்பா, இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டாகும்!

    எனக்கு அந்தப் புரட்சிக்காரன் யாரென்றே தெரியாது! நம்புங்கள்! விரைவில் உங்களுக்கு உண்மை தெரியவரலாம்! அப்போது, நீங்கள் கண்டிப்பாக வருந்துவீர்கள்!

    சௌந்தர், உங்களுக்கு என்னைப்பற்றி நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும்! நான் யாருக்கும் பயப்பிடுவதில்லை! மேலும் போலிப் பெயரில் வந்து, சக பதிவர்களைத் தாக்குவது எனது வழக்கம் அல்ல! நான் எது எழுதுவதாக இருந்தாலும், நேரடியாக எனது பெயரில்தான் எழுதுவேன்! ( ஓ.வ.நா மற்றும் ஐடியாமணி)

    சில வாரங்களுக்கு முன்னர், சக பதிவர்கள் பலரோடு, நான் நேரடியாக மோதியதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்! உங்களைவிட எனக்கு மிகவும் நெருக்கமான பதிவர்களோடு, ஐடியாமணியாக மோதிவிட்டு, உங்களோடு மோதுவதற்கு மட்டும் ஏன் இன்னொரு பேரில் வரவேண்டும்?

    உங்களுக்கு அவ்வளவு பயமா என்ன?

    சவுந்தர், நான் கோழை கிடையாது! பதிவுலகத்தில் மட்டுமல்ல, வேறு ஊடக உலகிலும் நான் பலரோடு மோதியிருக்கிறேன்!

    நண்பா, உங்களின் சில எழுத்துப்பிழைகளைச் சுட்டிக்காட்டவா, நான் வேறு வேஷம் போடணும்?

    மேலும், நான் இப்போது பதிவுலகில் பெரிதாக அக்கறை செலுத்துவதும் இல்லை! யார் எழுத்துப் பிழை விட்டால் என்ன? யார் காப்பி பேஸ்ட் பண்ணினால் என்ன? ஐ டோண்ட் கேர்!

    நண்பா, இப்பதிவில் எனது பெயரை இழுத்தமைக்காக, நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்பீர்கள் என நம்புகிறேன்! இங்கு சம்மந்தமே இல்லாமல், என்னைக் குற்றம் சாட்டியமையால், நான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவோ, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகவோ நான் சொல்ல மாட்டேன்! ஹி ஹி ஹி ஹி ஹி எனக்கு எங்கையா இருக்கு நற்பெயர்? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

    மேலும், இந்தப் புரட்சிக்காரனுக்கு அமெரிக்காவைப் பிடிக்காதாம்! ஹி ஹி ஹி ஹி எனக்கு அமெரிக்காவை ரொம்ப பிடிக்கும்! ஃபிரான்ஸ் + இங்கிலாந்து அனைத்து வல்லரசு நாடுகளையும் பிடிக்கும்!

    சவுந்தர் நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது, அந்தப் புரட்சிக்காரன் யாரென்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்!

    சரி, சரி என்மீது ஏற்கனவே கடுப்பில் இருப்பவர்கள், உங்களுடைய இப்பதிவுக்குத் தந்திருக்கும் ஆதரவைப் பார்க்கும் போது, பாவமா இருக்கு!

    யோவ், புரட்சிக்காரா, நீ யாருய்யா?

    இப்படிக்கு,

    ஓ.வ.நா ஆகிய ஐ.மணி!

    ReplyDelete
  24. போடாங் நீயே இவ்ளோ தப்பா எழுதிட்டு பெரிய தமிழ் ஞானி மாதிரி எல்லோருக்கும் அறிவுரை கொடுக்குற.. இப்ப தெரியுதா பிழைகள் தெரியாமல் நடப்பது தான் என்று.../////

    நண்பா, சசி! நீங்கள் என்னை என்று நினைத்தா இப்படித் திட்டியிருக்கிறீர்கள்? கிழிஞ்சுது! எனக்கும் உங்களுக்கும் ஒருபோதும் பிரச்சனை வந்ததில்லை!

    கவனம் நண்பா!

    ReplyDelete
  25. மாப்ள யாரு இந்த மனுசன்னு எனக்கும் சத்தியமா தெரியாதுய்யா!...என்னமா கோத்து விடுறாங்கய்யா நாட்டுல நல்லவங்க!

    ReplyDelete
  26. //Powder Star - Dr. ஐடியாமணி said... [Reply to comment]
    போடாங் நீயே இவ்ளோ தப்பா எழுதிட்டு பெரிய தமிழ் ஞானி மாதிரி எல்லோருக்கும் அறிவுரை கொடுக்குற.. இப்ப தெரியுதா பிழைகள் தெரியாமல் நடப்பது தான் என்று.../////

    நண்பா, சசி! நீங்கள் என்னை என்று நினைத்தா இப்படித் திட்டியிருக்கிறீர்கள்? கிழிஞ்சுது! எனக்கும் உங்களுக்கும் ஒருபோதும் பிரச்சனை வந்ததில்லை!

    கவனம் நண்பா!//

    நண்பா ரஜீவா நீ தான் புரட்சிக்காரன் என்பதை நான் எங்கும் எந்த இடத்திலும் சொல்லவில்லை, எனக்கும் அதில் உடன்பாடு இல்லை. நான் கூறி இருக்கும் கருத்துரைகளை பார்த்தால் உங்களுக்கே புரியும் நான் கேட்டிருப்பது புரட்சிக்காரன் பெயரில் போலி வேஷம் போட்டு இங்கு நாடகம் நடத்தி கொண்டு போலியைதான்

    ReplyDelete
  27. யோவ் புரட்சிக்காரா

    நான் என்னவோ உன்னை பெரிய புடுங்கின்னு நினைச்சேன்... இம்புட்டு மட்டமான ஆளா நீ

    குற்றம் சொல்றதுக்கு ஒரு தகுதி வேணும் அது உனக்கு இல்லன்னு நினைக்கிறேன்

    போய் உம்மை சரிபண்ணுயா

    ReplyDelete
  28. @Powder Star - Dr. ஐடியாமணி


    நண்பா ஐடியா மணி
    என்யா தீடிர்ன்னு நீர் முக்கை நுழைக்கிறீர்

    உம்மைச்சொன்னது போல் எங்கும் காணவில்லையே...

    யோவ் என்னய்யா இது ஒரே ராவடியா போச்சி...

    முதல்ல இந்த அட்ரஸ் இல்லாத மாக்கான்களையெல்லாம் ஒழிச்சிக்கட்டணும்

    ஐடியா மணி..
    இந்த செளந்தர் எங்க போனான்
    பதிலே சொல்ல....

    ReplyDelete
  29. மாப்ள, என்ன! கோபம் வருது உங்களுக்கு?

    ReplyDelete
  30. நண்பா ரஜீவா உங்களுக்கென்ன இந்த கோபம்? அவர் என்ன உங்களையா சொல்லி இருக்கிறார்?

    ReplyDelete
  31. மாப்ள சௌந்தர், யாரோ ஒரு அனானிக்காக இவ்ளோ நேரம் வேஸ்ட் இவ்ளோ பெரிய பதிவு எதுக்கு ?

    ReplyDelete
  32. @சசிகுமார்

    //Powder Star - Dr. ஐடியாமணி said... [Reply to comment]
    போடாங் நீயே இவ்ளோ தப்பா எழுதிட்டு பெரிய தமிழ் ஞானி மாதிரி எல்லோருக்கும் அறிவுரை கொடுக்குற.. இப்ப தெரியுதா பிழைகள் தெரியாமல் நடப்பது தான் என்று.../////

    நண்பா, சசி! நீங்கள் என்னை என்று நினைத்தா இப்படித் திட்டியிருக்கிறீர்கள்? கிழிஞ்சுது! எனக்கும் உங்களுக்கும் ஒருபோதும் பிரச்சனை வந்ததில்லை!

    கவனம் நண்பா!//

    நண்பா ரஜீவா நீ தான் புரட்சிக்காரன் என்பதை நான் எங்கும் எந்த இடத்திலும் சொல்லவில்லை, எனக்கும் அதில் உடன்பாடு இல்லை. நான் கூறி இருக்கும் கருத்துரைகளை பார்த்தால் உங்களுக்கே புரியும் நான் கேட்டிருப்பது புரட்சிக்காரன் பெயரில் போலி வேஷம் போட்டு இங்கு நாடகம் நடத்தி கொண்டு போலியைதான் :///////

    நன்றி சசி! உங்களிடம் நான் பொய் சொல்லப் போவதில்லை! எனக்கும் இந்த ஃபிரெஞ்சுக்காரனுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை! நீங்கள் நம்பினால் போதும் சசி!

    ReplyDelete
  33. @யாருக்கும் பயப்படாதவன்...


    நண்பா ஐடியா மணி
    என்யா தீடிர்ன்னு நீர் முக்கை நுழைக்கிறீர்

    உம்மைச்சொன்னது போல் எங்கும் காணவில்லையே...

    யோவ் என்னய்யா இது ஒரே ராவடியா போச்சி...

    முதல்ல இந்த அட்ரஸ் இல்லாத மாக்கான்களையெல்லாம் ஒழிச்சிக்கட்டணும்

    ஐடியா மணி..
    இந்த செளந்தர் எங்க போனான்
    பதிலே சொல்ல..../////

    நண்பா, பயப்படாதவன்....!

    மாத்தி மாத்தி யோசிக்குறதுன்னும், ஈஃபில் டவரோட படத்தையும் போட்டிருந்தாரு! போதாக்குறைக்கு சில நண்பர்கள் ஃபோன் பண்ணி, “ யோவ், உன்னைய சவுந்தர், குத்தம் சொல்லியிருக்காரு” அப்டீன்னு சொன்னாங்க!

    நண்பா, நானும் ஓ.வ.நாவும் ஒன்றுதானே! அதுதான் வந்து விளக்கம் சொன்னேன்!

    ReplyDelete
  34. @!* வேடந்தாங்கல் - கருன் *!

    நண்பா ரஜீவா உங்களுக்கென்ன இந்த கோபம்? அவர் என்ன உங்களையா சொல்லி இருக்கிறார்? //////

    நன்றி கருன்! மாத்தியோசின்னு சவுந்தர் சொன்னத வைச்சுத்தான் இப்படி சொன்னேன்! நண்பர்கள் சிலரும் எங்கிட்ட விளக்கம் கேட்டிருந்தாங்க!அதான்!

    ReplyDelete
  35. ஐயையோ சண்டை.......ஒருத்தரும் சண்டையே போடலையேன்னு நேற்றுதான் விக்கி ராஸ்கல் புலம்பினான், இன்னைக்கு நடந்துருச்சே, ஆமா யாருய்யா இந்த பிரச்சி காரன்...???

    ReplyDelete
  36. நண்பா அவரு என்னை காபி பேஸ்ட் பதிவர் ன்னு, என்னையும் தாக்கி இரண்டு மோசமான பதிவுகள் போட்டு இருந்தார்.//

    அவரும் சில பதிவுகள் காபி பேஸ்ட் போட்டு இறுக்கிறார். பின்பு நீக்கி இருக்கிறார்.

    சுட்டிக் காட்டுவதால் காப்பி- பேஸ்ட் சரி என்று சொல்லவில்லை.


    கீழ்க்கண்ட பதிவு அவருடையது. இப்போது நீக்கி விட்டார். இந்த பதிவு
    http://puratchikkaaran.blogspot.com/2011/10/blog-post_22.html
    http://www.chennailivenews.com/news/newsitem.aspx?id=20115122105112&subcatid=tamil
    http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=63779
    இந்த தளத்திலும் உள்ளது. யாரு யாரை காப்பி அடிச்சது?

    //
    http://puratchikkaaran.blogspot.com/2011/09/blog-post_25.html இந்த பதிவு விகடனில் வந்த கட்டுரை. அதையும் அவர் நீக்கி விட்டார்.
    http://adrasaka.blogspot.com/2011/09/blog-post_25.html இது அட்ராசக்க பிளாக்கில் போட்ட பதிவு, அவர் கீழே நன்றி விகடன் என போட்டுள்ளார்.
    //

    ReplyDelete
  37. புரட்சிக்காரன் யாருன்னு சொன்னா 1000 பொற்காசுகள் பரிசு அறிவிப்பு...By சௌந்தர்

    ReplyDelete
  38. வணக்கம் பாஸ்
    எழுத்துப்பிழைவருவது என்பது தவிர்க்கமுடியாது.அதற்காக அவர் உங்களை சாடியது சரியல்ல காரணம் நீங்கள் இணைத்திருக்கும் போட்டோக்களில் அவரும் எழுத்துப்பிழைகள் விட்டிருக்கார் எனவே புரட்சிக்காரன் தான் எழுத்துப்பிழைவிட்டு எழுதும் போது மற்றவரை குற்றம் சொல்லவது சரியானது இல்லை.

    ReplyDelete
  39. உங்கள் கவிதைகளை வாசிக்க வரும் வாசகர்களின் ரசனையை நீங்கள் பூர்த்திசெய்கின்றீர்கள் எனவே இவர்களைப்பற்றி நீங்கள் கவலை அடையாமல் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  40. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    நண்பா அவரு என்னை காபி பேஸ்ட் பதிவர் ன்னு, என்னையும் தாக்கி இரண்டு மோசமான பதிவுகள் போட்டு இருந்தார்.//

    அவரும் சில பதிவுகள் காபி பேஸ்ட் போட்டு இறுக்கிறார். பின்பு நீக்கி இருக்கிறார்.

    சுட்டிக் காட்டுவதால் காப்பி- பேஸ்ட் சரி என்று சொல்லவில்லை.


    கீழ்க்கண்ட பதிவு அவருடையது. இப்போது நீக்கி விட்டார். இந்த பதிவு
    http://puratchikkaaran.blogspot.com/2011/10/blog-post_22.html
    http://www.chennailivenews.com/news/newsitem.aspx?id=20115122105112&subcatid=tamil
    http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=63779
    இந்த தளத்திலும் உள்ளது. யாரு யாரை காப்பி அடிச்சது?

    //
    http://puratchikkaaran.blogspot.com/2011/09/blog-post_25.html இந்த பதிவு விகடனில் வந்த கட்டுரை. அதையும் அவர் நீக்கி விட்டார்.
    http://adrasaka.blogspot.com/2011/09/blog-post_25.html இது அட்ராசக்க பிளாக்கில் போட்ட பதிவு, அவர் கீழே நன்றி விகடன் என போட்டுள்ளார்.
    //


    ங்கொய்யால புள்ளி விவரம் செம மச்சி ஹா ஹா அடி சக்கை போடு போடட்டும்....

    ReplyDelete
  41. மச்சி கருன் கருத்திட்ட புள்ளிவிவரங்கள் உண்மையே... இப்போது அந்த இடுகைகள் புரட்சிக்காரன் தளத்தில இல்லை.

    ReplyDelete
  42. நானும் மேற்கண்ட ஆதாரங்கள் கொண்டு ஒரு பதிவு போட்டு இருக்க முடியும். அவர் அட்ரஸ் இருந்திருந்தால், எதுக்கு அவருக்கெல்லாம் நாம பதில் சொல்லி நம்ம டைம் ம வேஸ்ட் பண்ணனும்,

    இவங்களை கண்டுக்கவே கூடாது, அப்படியே விட்டுனும்..

    சாக்கடை மேல கல் அடிச்சா நம்ம மேலையும் படும்..

    ReplyDelete
  43. //தமிழ்வாசி - Prakash said...
    மச்சி கருன் கருத்திட்ட புள்ளிவிவரங்கள் உண்மையே... இப்போது அந்த இடுகைகள் புரட்சிக்காரன் தளத்தில இல்லை.//

    புரட்சிக்காரன் என்ன அவ்ளோ முட்டாளா இன்னும் அந்த இடுகைகளை அழிக்காமல் இருக்க

    ReplyDelete
  44. ///http://puratchikkaaran.blogspot.com/2011/09/blog-post_25.html இந்த பதிவு விகடனில் வந்த கட்டுரை. அதையும் அவர் நீக்கி விட்டார்.
    http://adrasaka.blogspot.com/2011/09/blog-post_25.html இது அட்ராசக்க பிளாக்கில் போட்ட பதிவு, அவர் கீழே நன்றி விகடன் என போட்டுள்ளார். ////

    சிபி விகடனிலிருந்து கேட்டு வாங்கி பதிவு போட்டிருப்பார். ஆனால் இந்த புரட்சி விகடன்ல இருந்து சுட்டுட்டார்...அதை இப்போ அழிச்சிட்டார். ஹே ஹே ஹே...

    ReplyDelete
  45. //பதவு ஆரூமை ///

    இப்படி தப்பு தப்பா கமென்ட் போட்டாலாவது குறை சொல்ல புரட்சி வெளியில வருதான்னு பார்ப்போம்....

    ReplyDelete
  46. எழுத்து பிழை இல்லாம எழுதணும்னா நாம ஒரு பிஏ வச்சுக்கணும் போல...

    தேவை: "பதிவு எழுதும் அனைவருக்கும் பிஏ தேவைப்படுகிறது" என விளம்பரம் போடலாம்.

    ReplyDelete
  47. ////////
    ♔ம.தி.சுதா♔ said... [Reply to comment]

    ஐயோ அப்படீண்ணா என் பதிவு நீங்க படிச்சதில்லையா?

    பிரசுரித்த பிறகு தான் சரி பிழையே பார்ப்பேன். அதுவும் சில தடவை பார்ப்பதில்லை.

    தப்புத் தான் ஏனொ திருத்த மறந்து விடுவேன்...

    //////////////


    அது வேறெதுவும் இல்ல நண்புரே...
    அவசர காரணத்தினாலே மற்றும் அதிக அக்கரை எடுக்க வேண்டிய விஷயமல்ல என்ற காரணத்தினாலே தான் இந்த பிழைகள் வரநேரிடுகிறது

    இதை கண்டிப்புடன் பார்க்க போனால் தவறுதான்...

    இந்த அவசர உலகில் நேரக்குறைவினால் இந்த பிழைகள் நேர்ந்து விடுகிறது..

    ReplyDelete
  48. //தமிழ்வாசி - Prakash said...
    எழுத்து பிழை இல்லாம எழுதணும்னா நாம ஒரு பிஏ வச்சுக்கணும் போல...

    தேவை: "பதிவு எழுதும் அனைவருக்கும் பிஏ தேவைப்படுகிறது" என விளம்பரம் போடலாம்.//

    மாப்ள போடவே போடுற நல்ல PA வா போடு, இப்ப இருக்குற மாதிரி போட்டுட போற...

    ReplyDelete
  49. இந்த புரட்சிக்காரன் பிளாகில் அவருடைய நண்பன்- சிஷ்யன் (அப்படி அவரே சொல்லிக் கொண்டார்)போட்ட கமென்ட் இது ..
    //
    //
    புதிய புரட்சிக்காரன் கருத்து இது :
    November 6, 2011 6:39 PM
    மீண்டும் தமிழ் மணத்தில் காப்பி பேஸ்ட் பதிவுகளை பிரபல பறவைகளின் சரணலாயல்ப் பதிவர் எழுதி வாசகர் பரிந்துரை, திரைமணம், சூடான இடுகைகளை ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கிறார்.


    இது பதிவர் வாத்தியாரின் லிங்
    இனி அவர் தமிழ்மணத்தில் இணைத்துள்ள பதிவுகளும், அப் பதிவுகளின் அசலையும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்..

    http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog-post_70.html


    இப் பதிவானது http://www.envazhi.com/?p=29389

    இந்த லிங்கிலிருந்து ஒத்தி ஒட்டப்பட்டுள்ளது.

    http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog-post_04.html


    http://cinema.dinamalar.com/cinema-news/5526/special-report/Tamil-film-industries-boycott-thyagaraja-bhagavathar.htm
    தினமலரிலிருந்து எடுக்கப்பட்டுப்பட்டுள்ளது.


    http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog-post_03.html

    இப் பதிவானது
    http://tamil.webdunia.com/newsworld/news/national/1111/03/1111103010_1.htm
    இந்த இணைப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

    http://sakthistudycentre.blogspot.com/2011/11/women-secret.html

    http://tamil.oneindia.in/art-culture/essays/2011/what-most-men-don-t-realize-about-women-aid0174.html
    //

    என்னுடைய வாசகர்களுக்கு இது தெரியும் எது காபி பேஸ்ட் என்று -
    புரட்சிக்காரர்..
    சந்தேகம் இருப்பின் அவர் கொடுத்த லிங்க் -கிலேயே செக் பண்ணிப் பாருங்கள் நான் போட்டது காபி-பேஸ்ட் டா என்று தெரியும்.

    ReplyDelete
  50. என் பதிவில் எந்த எழுத்து பிழையும் இருக்காது என யாருமே உறுதியாக கூற முடியாது.. அப்படி எழுத்து பிழை இல்லாமல் எழுதுபவர்கள் மட்டும் தான் எழுத வேண்டுமென்றால் வள்ளுவனும்,கம்பனும் தவிர வேறு யாரும் பதிவு எழுத முடியாது...

    ReplyDelete
  51. புதிய புரட்சிக்காரன் கருத்து இது :
    November 6, 2011 7:22 PM
    ஜனங்களே, அந்த வாத்தியோட பதிவில கமெண்ட் போட்டால் நீக்கிடுறான்.
    அதனால இங்கே நானும் கமெண்ஸ் காப்பி பேஸ்ட்டூ பண்ணிக்கிறேன்.

    மன்னிச்சுக்குங்கப்பா.
    மக்கள்ஸ் இன்னோர் அல்டிமேட் காமெடி, கவுன்சிலர் சண்முகலிங்கம் அவர்கள் ரெண்டு நாளைக்கு முன்னாடி எழுதி தமிழ்மணத்தில் ஹிட் அடித்த பதிவினை நகல் எடுத்து இந்தாளு இன்னைக்கு எழுதியிருக்கான். என்ன அவர் பேஸ்புக் பத்தி எழுதினத இந்த பாவி பய ப்ளாக் பத்தி மாற்றி அவரோட quotation உடன் இணைச்சு எழுதியிருக்கான்.
    http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog.html

    இது காப்பி பேஸ்ட் கதா நாயகனின் பதிவு

    இது கவுன்சிலரின் பதிவு
    http://counselforany.blogspot.com/2011/11/blog-post_04.html //

    அய்யா கவுன்சலரே உங்க பதிவும் , நான் போட்ட பதிவும் ஒன்றா சொல்லுங்கள்..

    ReplyDelete
  52. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    ////
    அய்யா கவுன்சலரே உங்க பதிவும் , நான் போட்ட பதிவும் ஒன்றா சொல்லுங்கள்..///

    அப்படிப் பார்த்தா நேத்து நடிகை ஐஸ்க்கு பெண் குழந்தை பிறந்தது. அதை எத்தன பத்திரிகைகள் போட்டிருக்காங்க. பலவிதத்துல போட்டிருக்காங்க. அப்போ அந்த செய்தி காப்பி பேஸ்ட் அல்லது வார்த்தைகளை மாற்றி போட்ட செய்தின்னு சொல்ல முடியுமா?

    ReplyDelete
  53. @ சசிகுமார்

    /////என் பதிவில் எந்த எழுத்து பிழையும் இருக்காது என யாருமே உறுதியாக கூற முடியாது.. அப்படி எழுத்து பிழை இல்லாமல் எழுதுபவர்கள் மட்டும் தான் எழுத வேண்டுமென்றால் வள்ளுவனும்,கம்பனும் தவிர வேறு யாரும் பதிவு எழுத முடியாது/////

    அட போங்கப்பா அவங்களே எழுத்துப் பிழை விட்டிருக்கிறாங்களாம்...

    (சசி இது தான் பதிவுலகத்தில் உண்மை நிலை...)

    ReplyDelete
  54. நாளை மழை பெய்ய சில இடங்களில் வாய்ப்பு உள்ளது என எல்லா டிவியிலும் நியுஸ் சொல்றாங்களே? அதுவும் காப்பி/பேஸ்ட்டா...

    ReplyDelete
  55. ஒரு செய்தியை ஒருத்தர் தான் சொல்லனும்னு இருந்தா மீடியாக்களின் நிலை என்னாவது? போட்டிகள் நிறைந்த உலகில் அவர்களுக்கென தனித்தன்மையை வைத்துக் கொண்டு போட்டிகளை சமாளித்து நியூஸ் போட்டுக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

    ReplyDelete
  56. புதிய புரட்சிக்காரன் கருத்து இது :
    November 6, 2011 7:22 PM
    ஜனங்களே, அந்த வாத்தியோட பதிவில கமெண்ட் போட்டால் நீக்கிடுறான்.
    அதனால இங்கே நானும் கமெண்ஸ் காப்பி பேஸ்ட்டூ பண்ணிக்கிறேன்.

    மன்னிச்சுக்குங்கப்பா.
    மக்கள்ஸ் இன்னோர் அல்டிமேட் காமெடி, கவுன்சிலர் சண்முகலிங்கம் அவர்கள் ரெண்டு நாளைக்கு முன்னாடி எழுதி தமிழ்மணத்தில் ஹிட் அடித்த பதிவினை நகல் எடுத்து இந்தாளு இன்னைக்கு எழுதியிருக்கான். என்ன அவர் பேஸ்புக் பத்தி எழுதினத இந்த பாவி பய ப்ளாக் பத்தி மாற்றி அவரோட quotation உடன் இணைச்சு எழுதியிருக்கான்.
    http://sakthistudycentre.blogspot.com/2011/11/blog.html

    இது காப்பி பேஸ்ட் கதா நாயகனின் பதிவு

    இது கவுன்சிலரின் பதிவு
    http://counselforany.blogspot.com/2011/11/blog-post_04.html //

    அது சரி யார் காபி-பேஸ்ட் போட்டா அவருக்கென்ன? நான் என்ன மத்தவங்களோட பதிவுகலையா காபி பன்னி போடுறேன்,செய்திதானே? அதுவும் என்னோட பார்வையில், என்னோட ஸ்டைலில் ..என் வாசகர்களே அதைப் பற்றி கவலைப் படுவதில்லை, இவருக்கென்ன? போச்சு? அதுவும் குறிப்பிட்டு எங்க இருவரை மட்டும் தாக்கி போஸ்ட் போட என்ன காரணம்?

    ReplyDelete
  57. வணக்கம்!
    ஐயா பிரகாசு முதல்ல எனக்கு தாங்கோய்யா அந்த பிஏ வை நான் தான்யா பிளாக்கிளேயே அதிக பிழை விடுறேன்யா.. சசியே சொல்லீற்றார் உங்களுக்கு ஏற்கனவே எக்கசக்கமான பிஏ இருக்குன்னு..!!!. ஹா ஹா ஹா ஒரு எழுத்து பிழைக்கு இவ்வளவு பெரிய பதிவா..??

    ReplyDelete
  58. //♔ம.தி.சுதா♔ said...
    @ சசிகுமார்

    /////என் பதிவில் எந்த எழுத்து பிழையும் இருக்காது என யாருமே உறுதியாக கூற முடியாது.. அப்படி எழுத்து பிழை இல்லாமல் எழுதுபவர்கள் மட்டும் தான் எழுத வேண்டுமென்றால் வள்ளுவனும்,கம்பனும் தவிர வேறு யாரும் பதிவு எழுத முடியாது/////

    அட போங்கப்பா அவங்களே எழுத்துப் பிழை விட்டிருக்கிறாங்களாம்...

    (சசி இது தான் பதிவுலகத்தில் உண்மை நிலை...)//

    உண்மை தான் நண்பா...சில நரிகளின் தொந்தரவு தாங்க முடியல...

    ReplyDelete
  59. எனது கமெண்டுக்கு சவுந்தர் பதில் சொல்லாதது ஏமாற்றமா இருக்கு!

    ReplyDelete
  60. அட கருண் இவ்வளவு கொமொன்ஸ் போட்டத இன்றுதான் பாக்கிறேன்..! செளந்தருக்கு நன்றி.. ஹி ஹி

    ReplyDelete
  61. //நன்றி சசி! உங்களிடம் நான் பொய் சொல்லப் போவதில்லை! எனக்கும் இந்த ஃபிரெஞ்சுக்காரனுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை! நீங்கள் நம்பினால் போதும் சசி!//

    ரஜீவா யார் இந்த பிரஞ்சுகாரன் அவன பத்தி இங்க யாரும் பேச வில்லையே... நீங்களே ஏன் இப்படி சொல்றீங்க...யார் இந்த பிரஞ்சுகாரன்... ஒண்ணுமே புரியல...

    ReplyDelete
  62. எப்பிடி எல்லாம் டென்ஷன் ஆகுறீங்க சௌந்தர். இது உடம்புக்கு நல்லது இல்லை.

    தப்பும் தவறுமா தான் எல்லோரும் இங்கே இருக்கோம். நம்ம வேலையை நாம பார்த்துக்கிட்டே இருப்போம் யார் என்ன சொன்னா என்ன? don't worry be happy.

    ReplyDelete
  63. உங்கள் பணியைத் தொடருங்கள்!

    ReplyDelete
  64. @காட்டான்
    ஐயா காட்டான், பிஏ வேணுமா... விளம்பரம் போட்டிருக்கேன். வந்தாங்கன்னா உங்களுக்கு தகவல் சொல்றேன்...

    ReplyDelete
  65. @சசிகுமார்

    //நன்றி சசி! உங்களிடம் நான் பொய் சொல்லப் போவதில்லை! எனக்கும் இந்த ஃபிரெஞ்சுக்காரனுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை! நீங்கள் நம்பினால் போதும் சசி!//

    ரஜீவா யார் இந்த பிரஞ்சுகாரன் அவன பத்தி இங்க யாரும் பேச வில்லையே... நீங்களே ஏன் இப்படி சொல்றீங்க...யார் இந்த பிரஞ்சுகாரன்... ஒண்ணுமே புரியல...///////

    ஐயையோ ஸாரி ஸாரி, சசி, நான் தவறுதலா டைப் செய்துவிட்டேன்! அது ஃபிரெஞ்சுக்காரன் இல்லை! புரட்சிக்காரன்!

    அப்புறம் ஃபிரெஞ்சுக்காரன் எனும் பேரில் ப்ளாக் வைத்திருப்பது அடியேன் தான்! அழகான ஃபோட்டோக்கள் போடுகிறேன்! டைம் இருந்தா எட்டிப் பாருங்க!

    ஆனா, இந்தப் புரட்சிக்காரன் தான் யாரென்றே தெரியவில்லை!

    ஒருவேளை ஃபிரெஞ்சுக்காரனும் புரட்சிக்காரனும் ஒரே விதமான உச்சரிப்பு இருப்பதால், நான் தான் என்று தவறுதலாக நினைத்திருப்பார்களோ?

    இப்ப தெளிவா சொல்லுறேன்! ஃபிரெஞ்சுக்காரன் நான் தான்! ஆனா, புரட்சிக்காரன் நான் இல்லை!

    ஸாரி சசி! ஒரு சின்னக் கன்ஃபியூஷன்!

    ReplyDelete
  66. ////
    பாலா said...

    நண்பரே நான் முன்பே சொன்னது போல உங்களிடம் நேர்மை இருக்கிறது. ஆகவே எதை பற்றியும் கவலை கொள்ள தேவை இல்லை. இந்த பதிவை எழுத முழு உரிமையும் உண்டு. இனி அதில் உழன்று கொண்டிருக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்.
    ///////

    கண்டிப்பாக நண்பரே...

    தங்களின் அறிவுரையை முழுமையாக ஏற்க்கிறேன்.

    தொடர்ந்து என்னைப்பற்றி அவதூரு பதிவிட்டு என் அமைதியை கெடுத்துவிட்டார்...

    ReplyDelete
  67. @Powder Star - Dr. ஐடியாமணி


    வாங்க ஐடியா மணி...

    தாங்களாக இல்லாத பட்சத்தில் எதற்க்கு இந்த பதட்டம்...

    பதிவில் நான் மாத்தியோசிக் சொன்னேன் அப்போதுதான் விடை கிடைக்கும் என்பதற்க்காக....

    மாத்தியோசிங்கள்...

    ReplyDelete
  68. @விக்கியுலகம்


    மறைமுகமாக தாங்கள் புரட்சிக்காரனான இல்லாத பட்சத்தில் தங்களுக்கு ஏன் பயம் நண்பரே...

    தங்கள் படம் சேர்ந்து ஒரு படம் வந்திருப்பதால் இந்த சந்தேகமா..

    அது ஸ்கிரின் ஷாட் செய்யும் போது புரட்சிக்காரனின் கருத்துக்கு மேல் தங்களுடைய கருத்து உள்ளது அவ்வளவுதான்..

    மற்றபடி ஒன்றுமில்லை...

    ReplyDelete
  69. ///////
    ஜ.ரா.ரமேஷ் பாபு said...

    எப்பிடி எல்லாம் டென்ஷன் ஆகுறீங்க சௌந்தர். இது உடம்புக்கு நல்லது இல்லை.

    தப்பும் தவறுமா தான் எல்லோரும் இங்கே இருக்கோம். நம்ம வேலையை நாம பார்த்துக்கிட்டே இருப்போம் யார் என்ன சொன்னா என்ன? don't worry be happy.
    //////

    என்னைவிமர்சித்து ஒரு பதிவோடு நிறுத்தியிருந்தால் நான் கோவப்பட்டிருக்க காட்டேன் ரமேஷ்...

    தொடர்ச்சியாக பதிவிட்டு என்னை அவமானம் படுத்தியால் வந்த கோவம் இது...

    ReplyDelete
  70. சரியா போச்சு... கிளம்பியாச்சா... அடுத்த சண்டை...

    //தவறான கருத்துகளாக இல்லாத பட்சத்தில், என்னையோ அல்லது என் கவிதைகளையோ விமர்சிக்கக் கூடிய உரிமை யாருக்கும் இல்லை.//

    இது மட்டும் புரியல

    ReplyDelete
  71. /////
    suryajeeva said...

    சரியா போச்சு... கிளம்பியாச்சா... அடுத்த சண்டை...

    //தவறான கருத்துகளாக இல்லாத பட்சத்தில், என்னையோ அல்லது என் கவிதைகளையோ விமர்சிக்கக் கூடிய உரிமை யாருக்கும் இல்லை.//

    இது மட்டும் புரியல
    /////////


    புரட்சிக்காரன் என்பவர் என்னுடைய கவிதைகள் கவிதைகளே இல்லை என்றும்..

    அவைகள் ஒன்றுக்குகீழ் ஒன்று ஏதேதோ கிருக்குகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அது மட்டுமில்லாமல்

    ஏதையோ கவிதைஎன்று கிறுக்கிவிட்டு அவைகளுக்கு ஜிகினா வேலைப்பாடுகள் செய்து அதை சந்தைப்படுத்திவிடுவார்

    என்று புரட்சிக்காரன் குறிப்பிட்டுள்ளார்.

    அவைகளைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.

    பொதுவாக ஒரு கவிதையில் அதன் பொருள் மற்றும் அதன் கருப்பொருள் மட்டுமே விளக்கங்களோ அல்லது விவரங்கள் தரவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

    ஆனால் அவைகள் கவிதைதானா என்ற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல...

    ReplyDelete
  72. /////////
    காட்டான் said...

    அட கருண் இவ்வளவு கொமொன்ஸ் போட்டத இன்றுதான் பாக்கிறேன்..! செளந்தருக்கு நன்றி.. ஹி ஹி
    ///////


    வாங்க காட்டான் அவர்களே...

    இவ்வளவு கருத்திடுவதற்க்கு காரணம் அவருக்கும் புரட்சிக்காரன் மீது அவ்வளவு கோவம்...

    ReplyDelete
  73. ////
    வேங்கை said...

    நண்பர் கவிதை வீதி அவர்களே !

    //எனக்கு பிடல் காஸ்ட்ரோவை பிடிக்கும்....அதுக்கு காரரணம் கம்யூனிசமில்லை....அமெரிக்காகாரனுங்க கண்ணுல விரல விட்டு ஆட்டுவதால்...//

    இந்த வரிகளை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஏதோ ஒரு பேட்டியில் கூறியதாய் ஞாபகம் .... but not sure
    /////////

    அப்படியென்றால் இதுகூட புரட்சிக்காரனுடைய சொந்த வசனம் இல்லையா...

    ReplyDelete
  74. November 17, 2011 4:31 AM

    Anonymous said...
    டேய் ....
    உன்னைப்பத்தி உண்மைய சொன்னா
    அதுக்கு பதில் போடு ...நீ ...கல்யாணம்
    பண்ணி..ஒரு பொண்ணு ..பெத்துட்டு ..
    இந்தியா-வில தவிக்க விட்டுட்டு ...
    ஓடிப்போயட்ட .....
    இதை மறுக்க முடிஉமா ???/

    சொல்லுங்க புரசிக்காரரே ....

    November 17, 2011 4:36 AM

    Anonymous said...
    இந்த நாயி ஹிட்ஸ்காக எதையாவது
    எழுதும் ....அப்புறம் பஞ்சாயத்து
    பண்ணும....நம்மளை முட்டாள்
    ஆக்கும் ....யார் என்று தெரிய
    இவன் பதிவையும்....அந்த பதிவையும்
    படிங்க ....எல்லாம் ஒண்ணுதான் ....
    இவனுக்கு தமிழ்மணம்-ல யாரும் வரக்குடாது....அப்படி வந்தா இவனுக்கு
    புடிக்காது,...
    உடனே ..எதையாவது சொல்லி அவங்களை ....நீக்க வைப்பார் ....
    அப்புறம் வேறு பேரில் இவர் மீண்டும்
    உலக பட்டதை போட்டுக்கிட்டு வருவார்....போங்கப்பா போய்
    பொழப்ப பாருங்கப்பா ....

    மேல உள்ள கேள்விக்கு இவனின் பதில் என்ன ????

    அவன் மிகவும் விரும்பும் தலைவர்
    மேல் ஆணை இட்டு கஊரமுடிஉமா ????

    November 17, 2011 4:43 AM

    Anonymous said...
    டேய் ....நீ இவ்வளவு மெண்டல் -லா ???
    நீயே வசிக்கடா அந்த மகுடத்தை ....

    நண்பர்களே ...இவனுக்காக...பரிஞ்சிக்கிட்டு வராதிங்க ....இவனுடைய உண்மையான முகம் உங்களுக்கு தெரியாது ....

    அப்புறம் நீங்க வருத்த படுவீங்க ....
    இவனா......என்று

    November 17, 2011 4:46 AM
    ////////////////////////////////////////////////////////////////

    இது அங்க உள்ள கமெண்ட் ....

    ReplyDelete
  75. /////////////////////////
    Powder Star - Dr. ஐடியாமணி said... [Reply to comment]

    @சசிகுமார்

    //நன்றி சசி! உங்களிடம் நான் பொய் சொல்லப் போவதில்லை! எனக்கும் இந்த ஃபிரெஞ்சுக்காரனுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை! நீங்கள் நம்பினால் போதும் சசி!//

    ரஜீவா யார் இந்த பிரஞ்சுகாரன் அவன பத்தி இங்க யாரும் பேச வில்லையே... நீங்களே ஏன் இப்படி சொல்றீங்க...யார் இந்த பிரஞ்சுகாரன்... ஒண்ணுமே புரியல...///////

    ஐயையோ ஸாரி ஸாரி, சசி, நான் தவறுதலா டைப் செய்துவிட்டேன்! அது ஃபிரெஞ்சுக்காரன் இல்லை! புரட்சிக்காரன்!

    அப்புறம் ஃபிரெஞ்சுக்காரன் எனும் பேரில் ப்ளாக் வைத்திருப்பது அடியேன் தான்! அழகான ஃபோட்டோக்கள் போடுகிறேன்! டைம் இருந்தா எட்டிப் பாருங்க!

    ஆனா, இந்தப் புரட்சிக்காரன் தான் யாரென்றே தெரியவில்லை!

    ஒருவேளை ஃபிரெஞ்சுக்காரனும் புரட்சிக்காரனும் ஒரே விதமான உச்சரிப்பு இருப்பதால், நான் தான் என்று தவறுதலாக நினைத்திருப்பார்களோ?

    இப்ப தெளிவா சொல்லுறேன்! ஃபிரெஞ்சுக்காரன் நான் தான்! ஆனா, புரட்சிக்காரன் நான் இல்லை!

    ஸாரி சசி! ஒரு சின்னக் கன்ஃபியூஷன்!
    /////////////////////



    இது என்ன புது பிரச்சனை...

    தாங்கள் ஃபிரெஞ்சுக்காரனா..?

    புரட்சிக்காரனாக தாங்கள் இல்லாத பட்சத்தில் தங்களுக்கு இதில் ஏதும் சம்மந்தம் இல்லை நண்பரே...

    ReplyDelete
  76. நண்பரே...பயம்...ஹாஹாஹா.......எனக்கு இல்லை...நீர் என்னை தவறாக நினைக்க கூடாது என்பதால் தான் என் கருத்தை பதிவு செய்தேன்...நண்பா நன்றி!

    ReplyDelete
  77. அன்பிற்குரிய சகோ,
    அண்மைக் காலத்தில் கொஞ்சம் பிசியாக இருந்த காரணத்தினால் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை.
    புரட்சிக்காரனை யார் என இனங் காண்பதற்கு உங்கள் வலையில் உள்ள விட்ஜெட் கவுண்டரே போதுமானது.

    உங்கள் வலையில் Feedjit சைட் பாரில் இருக்கிறது தானே.

    இதன் மூலம் கமெண்ட் போடும் நபர்களை அடையாளம் காண முடியும்.

    இன்னோர் விடயம் புரட்சிக்காரன் ப்ளாக்கிலும் உலக உருண்டைப் படத்தோடு சுழல்கின்ற கவுண்டர் வைத்திருக்கிறார். அவர் பதிவு எழுதிப் பிரசுரித்ததும் பார்த்தீர்களானால் அந்த புரட்சிக்காரன் எங்கே இருக்கின்றார் என்ற விடயம் சரியாக உங்களுக்கு தெரிய வரும்.

    ஆகவே இதனை விடுத்து. ஸ்கிரீன் சொட்டினை மட்டும் காண்பித்து, தாங்கள் ஈபிள் டவரின் படத்தினைப் போட்டு மாத்தி யோசிக்க சொன்னால் எவருக்குமே போதிய ஆதாரங்கள் கிடைக்காது.

    ஈபிள் டவர் போட்ட ஊரில் உள்ள நண்பர் தற்போது பதிவுலகில் வம்பிழுப்பதனை விடுத்து தனியாக தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கின்றார். ஆகவெ தங்களின் கருத்தினை ஒரு தடவை பரிசீலனை செய்வீர்கள் என நினைக்கிறேன்!

    ReplyDelete
  78. நண்பா புரட்சிக்காரனின் மெயிலுக்கு நீங்கள் ஒரு ஈமெயில் அனுப்பினாலே இலகுவாக அவரது ஊரினைக் கண்டு பிடிக்க முடியும்.
    வந்தேமாதரம் சசி அவர்களிடம் கேளுங்கள். எப்படிக் கண்டு பிடிப்பது என்று சொல்லித் தருவார்.

    அதனை விடுத்து மறைமுகமாக பிரான்ஸில் இருக்கும் பதிவரைச் சாடுவதென்பது அபத்தமாக உள்ளது.

    ReplyDelete
  79. ப்ரீயா விடுங்க!

    ReplyDelete
  80. சௌந்தர், என்னுடைய கமெண்டுக்கு, நீங்கள் தந்த பதில் திருப்தியாக இல்லை!

    “ புரட்சிக்காரனாக தாங்கள் இல்லாத பட்சத்தில் தங்களுக்கு இதில் ஏதும் சம்மந்தம் இல்லை நண்பரே...”

    இப்படியான பதில் சொல்வது, மிகவும் குறைந்தளவு ரெஸ்பான்சிபிலிட்டியையே வெளிப்படுத்துகிறது!

    சவுந்தர், நீங்கள், ஈஃபில் டவரின் படத்தையும், மாத்தியோசியுங்க என்று சொல்லியிருப்பதும் எதற்காக!

    நான் ஃபிரான்ஸில் வசிப்பதும், முன்பு மாத்தியோசி எனும் ப்ளாக்கை நடத்தி வந்ததையும் அனைவரும் அறிவர்!

    இதன் காரணமாக, அந்தப் புரட்சிக்காரன் நான் தான் என்று பலரும் கருத வாய்ப்புண்டு! சில நண்பர்கள் அப்படிக் கருதித்தான், எனக்கு மெயில் அனுப்பினார்கள்!

    உங்கள் பதிவில் மறைமுகமாக குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் நான் இல்லை என்றால், அது யார் என்பதை தயவு செய்து விளக்க முடியுமா?

    ஃபிரான்ஸில் வசிக்கும் எல்லாப் பதிவர்களையும் எனக்குத் தெரியும்! அப்படியானால், என்னைவிட இன்னொரு பதிவரையா நீங்கள் இலக்கு வைத்து, இந்தப் பதிவைப் போட்டிருக்கிறீர்கள்?

    நண்பா, இந்தப் புரட்சிக்காரன் யாரென்பதைக் கண்டறிவதில், நிரூபன், வந்தேமாதரம் சசி போன்றவர்கள் உங்களுக்கு உதவக்கூடும்! உடனடியாக அவர்களின் உதவியினைப் பெற்று அவர் யாரென்பதைக் கண்டறியுங்கள்!

    மேலும், அந்த புரட்சிக்காரன் நான் தான் என்பதை நம்பிய மேலும் சிலர், அனானியாக வந்து, சில தகவல்களைச் சொல்லிப் போயிருக்கிறார்கள்! ஹி ஹி ஹி ஹி ஹி அவையும் அரைகுறையாகக் கேட்டு, திரிக்கப்பட்ட செய்திதான்!

    இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என்மீது ஆல்ரெடி கடுப்பில் இருப்பவர்கள், இங்கு வந்து துள்ளுகிறார்கள்! என்கூட சண்டை போட அவ்வளவு ஆசை போலும்!

    ஆனால், நானோ ஊர்சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கிறேன்!

    சவுந்தர்! அந்தப் புரட்சிக்காரன் யாரென்பதை விரைவில் கண்டுபிடியுங்கள்! அப்படிக் கண்டுபிடித்த பின்னர், தயவு செய்து அறியத்தாருங்கள்!

    இதொன்றும் பதட்டமாக போடப்பட்ட கமெண்டு அல்ல! நிதானமாகவே சொல்கிறேன்!

    ReplyDelete
  81. சகோ அப்போது கருத்துக்களை நான் முழுமையாக வாசிக்காததால் விடயத்தை என்னால் சரியாகப் புரிய முடியாமல் போய் விட்டது...

    எப்போதும் ஒரு அடையாளம் தெரியாதவருக்காக பதிவு போடவதால் பல அடையாளம் தெரிந்தவர்கள் நட்பு இழக்கப்படலாம்..

    நான் தொடர்ந்து பதிவுலகத்தில் இல்லா விட்டாலும் ரஜீவன் எப்படியானவர் எனத் தெரியும் என்னோடோ நெருக்கமாக இருந்தாலும் கூட பதிவு முரண்பாடு வரும் போது நேரடியாகத் தான் திட்டினார்...

    அவரை உறுதிப்படுத்த எத்தனையோ குறுக்கு வழிகள் இருக்கு சகோ முயற்சித்துப் பாருங்கள்...

    ReplyDelete
  82. சகோ அப்போது கருத்துக்களை நான் முழுமையாக வாசிக்காததால் விடயத்தை என்னால் சரியாகப் புரிய முடியாமல் போய் விட்டது...

    எப்போதும் ஒரு அடையாளம் தெரியாதவருக்காக பதிவு போடவதால் பல அடையாளம் தெரிந்தவர்கள் நட்பு இழக்கப்படலாம்..

    நான் தொடர்ந்து பதிவுலகத்தில் இல்லா விட்டாலும் ரஜீவன் எப்படியானவர் எனத் தெரியும் என்னோடோ நெருக்கமாக இருந்தாலும் கூட பதிவு முரண்பாடு வரும் போது நேரடியாகத் தான் திட்டினார்...

    அவரை உறுதிப்படுத்த எத்தனையோ குறுக்கு வழிகள் இருக்கு சகோ முயற்சித்துப் பாருங்கள்...:///////

    நன்றி சுதா! உண்மையில் சுதா கருத்து முரண்பாடு வரும்போது, நாம் நேரடியாகத்தானே மோதுவோம்!

    இந்தவாரம் நிரூபனுடன் கடும் சண்டை! 3 நாட்களாகப் பேசவில்லை! நிரூபனைப் பற்றி, நிரூபன் நடத்துகிற “ நாற்று “ குழுமத்திலேயே பல கமெண்டுகள் போட்டு, அவனுடன் மோதினேன்!

    பின்னர் நேற்று இருவரும் பேசித் தீர்த்துக்கொண்டோம்!

    சுதா, சவுந்தருக்கு எதிராகப் பதிவு போடுவதற்கு எதற்காக, நான் புரட்சிக்காரன் வேஷம் போடணும்! நண்பர் சி பி க்கு எதிராக பதிவு போடும் போதுகூட நான் ஐடியாமணியாகத்தான் பதிவு போட்டேன்!

    அதுபோல அன்பு நண்பர் பன்னிக்குட்டி ராம்சாமியுடனும், அவரது டெரர்கும்மி நண்பர்களுடனும் சண்டை போடும் போது கூட, நேரடியாகத்தானே மோதினேன்!

    அப்புறம் எதுக்கு இப்ப மட்டும், வேறு பேரில் வர வேண்டும்?

    சுதா, இன்னுமொரு மிகவும் காமெடியான விஷயம் எனது மனைவியையும், மகளையும் இந்தியாவில் தவிக்க விட்டேனாம்!

    ஹி ஹி ஹி ஹி எனது மனைவி இரண்டரை லட்சம் இந்திய ரூபாய்கள் செலவு செய்து, ஒரு பிரபல அழகுக்கலை நிபுணரிடம் அழகுக்கலை பயின்று விட்டு, இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பாரிஸ் வந்து சேர்ந்தார்! மகளோ சென்னையில் இங்கிலீஸ்மீடியத்தில் கல்வி கற்றுவிட்டு, இங்கு வந்து தமிழில் பேசவே மறுக்கிறாள்!

    ஹி ஹி ஹி ஹி இதுவா, மனைவியையும் மகளையும் தவிக்க விட்ட லட்சணம்??

    ReplyDelete
  83. நீங்க இவ்வளவு கோபப்பட்டு பதிவு எழுதி நான் பாத்ததே இல்ல, விடுங்க அவரு இன்னொரு பதிவு போட்டா நாம பதிலடி பயங்கரமா கொடுப்போம்.. இந்த மாதிரி நமக்கு பிடிக்காதவங்க யாராச்சும் போலி ப்ரொஃபைல் வச்சு தான் வம்புக்கு வருவாங்க..

    ReplyDelete
  84. சவுந்தர் அண்ணே, மெயின் மேட்டரான காபி பேஸ்ட்ட விட்டுட்டு, ஏதோ நான் எழுத்து பிழைய மட்டும் தான் பேசுற மாதிரி எல்லாம் பேசுறீங்களே. ஏன் இவ்ளோ சண்டை? சரிப்பா கோப்பி அடிக்கிறது தப்புதான் இனிமே பண்ணாம இருக்க முயற்சி பன்றேன்ன டீல் ஓவரு. அத விட்டுட்டு, உங்களுக்கும் எனக்கும் என்ன வாய்க்கா சண்டையா? வேடந்தாங்கல் அண்ணே உங்களுக்கும் அதே தான். நான் ஆரம்பிச்ச நோக்கம் அதான். தப்ப திருத்த முயற்சி பண்ணாம, தப்ப சுட்டி காற்றவனோட மல்லு கட்றீங்களே. என்ன விடுங்க. நாளைக்கு இந்த புரட்சிக்காரன் போய்ட்டா? அடுத்து சீமான் வர மாட்டாரா? திருந்துங்கப்பா.

    நீங்க ஒரு ஆசிரியர் அப்டிங்க காட்டி எழுத்து பிழைய சுட்டிக் காட்டினேன். மத்தபடி மெயின் மேட்டரு காபி பேஸ்ட். அதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும். பெரிசா தமிழினத்த பத்தி பேசுறீங்க? கால வாருவாங்கன்னு? ஆசிரியர்களே அறிவு திருட்டு பண்ணிக்கிட்டு, அத சுட்டி காட்னா அடாவடி பண்ணிக்கிட்டு, அதுக்கு கொஞ்ச பேரு வக்காலத்தும் வாங்கிட்டு இருந்தா வெளங்கிரும் என் தமிழினம்.

    பட், உங்க தலைப்பு என்ன ரொம்ப கவர்ந்துச்சு, எவ்ளோ அழகா யோசிச்சு எழுதி இருக்கீங்க. இதே மாதிரி டெய்லி யோசிச்சு எழுதலாமில்ல. அப்புறம் என் கோப்பி பேஸ்ட்? யோசிக்கணும்..நல்லா யோசிக்கணும்.. புரியிரவரை யோசிக்கணும்.

    ReplyDelete
  85. நான் பிரான்சில் இருந்து எழுதவில்லை... தேவை இல்லாமல் Powder Star அவர்களை சந்தேக படவேண்டாம். நண்பரே மன்னிக்கவும். இவர்கள் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். மேலும் புரட்சிக்காரனின் நோக்கம் இது போன்ற சில்லறை சண்டைகள் இல்லை. சில சமயங்களில் வேண்டா வெறுப்பாக இது போன்ற காரியங்களில் ஈடுபடவேண்டி உள்ளது. நானும் மனம் உகந்து செய்யவில்லை. பட் இவங்க இப்டியே காபி அடிசுகிட்டு இருந்தா என்ன தான் தீர்வு? சொந்தமாக எழுதும் பதிவர்களின் மனக்குறை தீரும் வரை, இந்த காபி பேஸ்ட் ஒழியும் வரை என் போராட்டம் தொடரும். நீங்கள் என்னை கண்டுபிடித்தாலும், நேரடியாக இப்போதை விட மிகக்கடுமையாக நான் போராடுவேன் என்று உங்களிடம் நான் உறுதி கூறுகிறேன்.

    ReplyDelete
  86. உங்க பதிவில் நீங்கள் யாரை சாடினீர்கள் என்பதை பதிவுலகில் இருப்பவர்கள் ஒரு முறை வாசித்தாலே தெரிந்திருக்கும். ஒருவேளை நீங்கள் புரட்சிகாரன் யாரென்று கண்டுபிடித்திருந்தால் மறைமுகமாக சொல்லாமல் ஆதாரத்தோடு நிரூபித்திருந்தால் இத்தகைய மனக்கசப்புகள் ஏற்பட்டிருக்காது சகோ

    ஐடியா மணி புரட்சிகாரன் தான் என உங்களின் அடுத்தபதிவில் நீங்கள் ஆதாரத்தோடு நிரூபிப்பீர்கள் என நம்புகிறேன்.

    அப்படி நிரூபிக்காத பட்சத்தில்
    //அனைவருக்கும் ஒரு செய்தி. இந்த புரட்சிக்காரன் வேறு யாரும் இல்லை நம்போடு இருக்கும் ஒரு பிரபல பதிவர்தான். அவர் யாரென்று மாத்திமாத்தி யோசித்ததின் விளைவாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

    ஒரு புகைப்படத்தை தருகிறேன் தாங்களே யுகித்துக்கொள்ளுங்கள்.

    //

    மறைமுகமாக சொல்லப்பட்ட இந்த வார்த்தைகள் எந்த பிரபல பதிவரை நோக்கி சாடப்பட்ட வரிகள் என்பதையும் நீங்கள் குறிப்பிட்டே ஆகவேண்டும். அவரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் (மறைமுகமாக சாடிய ஒரு பதிவரை தவறென தெரிந்த பின் நேரடியாய் அந்த பதிவரின் தளத்திற்கே சென்று விளக்கமும் மன்னிப்பும் கேட்ட நிரூபனை போன்று.


    தவறுகள் இருப்பின் பொருத்தருள்க :-)

    உங்கள் சகோதரி
    ஆமினா முஹம்மத்

    ReplyDelete
  87. /தவறான கருத்துகளாக இல்லாத பட்சத்தில், என்னையோ அல்லது என் கவிதைகளையோ விமர்சிக்கக் கூடிய உரிமை யாருக்கும் இல்லை. அப்படி விமர்சிக்கப்படும் போது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நான் ஒன்றும் கோழை அல்ல.//

    சரியான கருத்து. கவிதைக்குரிய கருபொருள் தவறாய் இருக்கும் பட்சத்தில் விமர்சிக்க வேண்டியது தான். தேவையற்ற தனிமனித தாக்குதல் வீணானது!

    பிந்தொடர்பவர்களையும் பின்னூட்டமிடுபவர்களையும் சாடுவது இன்னும் கேவலமானது!

    ReplyDelete
  88. ம்ம்ம்...

    செளந்தர்ஜி... இன்னும் ஒரு வருஷம் கழிச்சு இந்த பதிவை படிச்சு பாத்தீங்கன்னா... ச்சே இப்படி ஒரு சில்லறைத்தனமான விஷயத்துக்கு போய் சண்டை போட்டிருக்கோமேன்னு நிச்சயமா ஃபீல் பண்ணுவீங்க... (நான் சசிகுமாரை திட்டி பதிவெழுதியதை நினைவு கூர்கிறேன்) உங்க மேல தப்பு இருக்குறதா நீங்க மனதார உணர்ந்தால் எழுத்துப்பிழைகளையும், காப்பி பேஸ்ட்டையும், அது - இது - எது என்று ஜல்லியடிக்கும் தலைப்புகளையும் நிறுத்துங்கள்... இல்லைன்னா நான் இப்படித்தான்டா எழுதுவேன்னு சொல்லிட்டு போயிட்டே இருங்க... எதுக்கு தேவை இல்லாம மனசை போட்டு அலட்டிக்கிறீங்க...

    ReplyDelete
  89. BTW, முதல்முறையாக சிபி திருவாய் மலர்ந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது... மற்றவர்கள் நம்மை புகழும் போது வாய் நிறைய பல்லோடு அதை வாங்கிக்கொள்கிறோம்... ஆனால் குறை சொன்னால் மட்டும் வேப்பங்காயாக கசக்கிறதோ...

    ReplyDelete
  90. மழலை உலகம் மகத்தானது!

    இந்த பதிவு தொடர் பதிவு என்பதால் இதனை தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொண்ட (சகோதரர் விசு)ரசிகன் அவர்களுக்கு என் முதல் நன்றியும், வணக்கங்களும்.
    இப்பதிவை மேலும் தொடர இருக்கின்ற அன்புச்சகோதரர்கள்
    1.murugan
    2.முனைவர்.இரா.குணசீலன்
    3.vinayagamurthy
    4கவிதை வீதி... // சௌந்தர் //
    ஆகியோர்களுக்கும் என் நன்றியும்,வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  91. மழலை உலகம் மகத்தானது!

    இந்த பதிவு தொடர் பதிவு என்பதால் இதனை தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொண்ட (சகோதரர் விசு)ரசிகன் அவர்களுக்கு என் முதல் நன்றியும், வணக்கங்களும்.
    இப்பதிவை மேலும் தொடர இருக்கின்ற அன்புச்சகோதரர்கள்
    1.murugan
    2.முனைவர்.இரா.குணசீலன்
    3.vinayagamurthy
    4கவிதை வீதி... // சௌந்தர் //
    ஆகியோர்களுக்கும் என் நன்றியும்,வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  92. கோபம் குறைத்து, உங்கள் கொள்கைகளோடு குதூகல நடை போடுங்கள். காலம் கனியும்.

    ReplyDelete
  93. தாங்கள் வழியில் நடை போடுங்கள் நண்பரே.
    உண்மையான படைப்பாளரின் சிறு பிழைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், ஆனால் குறை மட்டுமே சொல்லித் திரிபவர்களின் வார்த்தைகளை ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு வெறுப்போடு போய்விடுவார்கள். உங்கள் பாதையில் செல்லுங்கள் வேகத்தடைகள் நம் வேகத்தை குறைக்குமே தவிர நம்மை தடுத்து நிறுத்த முடியாது..... தோழர் உண்டு தோள் கொடுக்க நாங்கள் உள்ளோம்.
    Mahes

    ReplyDelete
  94. அவையோர்களே ...சண்டை வேணாம்...இது ஒரு டைம் பாஸ் ZONE ..அன்பை நிலை நாட்டுங்கள் ...

    ReplyDelete
  95. அன்பார்ந்த பதிவுலகிற்க்கு வணக்கம்...
    வேலைபலு காரணமாக இந்த தாமதம்...

    ஒவ்வோரு விஷயத்திற்க்கும் சிலஅனுமானங்கள் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.இந்த அனுமானங்கள் மட்டுமில்லாமல் முதல்தர தகவகளை வைத்தே பிரான்ஸ் என்று முடிவெடு்ததிருக்கிறேன். என்னிடம் நிறைய தகவல்கள் இருக்கிறது.

    இந்த புரட்சிக்காரன் யார்... எதற்காக இப்படி செய்தார்.. அவருடைய உண்மையான முகம் எது என்பதில் தற்போதைக்கு 20 சதவீத ஐயமே மீதமிருக்கிறது. அதுவும் நளைக்கும் தெளிபடுத்தப்படும்.

    அப்படி தற்போது இருக்கும் ஆதாரங்களை தற்போதைக்கு என்னால் வெளிப்படுத்த முடியாது.

    அந்த தகவல்கள் வேண்டும் என்பவர்கள்... அதற்காக விளக்கங்களை என்னுடைய மெயிலில் வந்துப் பெற்றுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  96. அன்பிற்குரிய சகோதரம்,
    வணக்கம் நலமா?
    தாங்கள் இங்கே ஈபிள் கோபுரத்தின் படத்தினையும், மாத்தி மாத்தி யோசியுங்கள் என்று சொல்லி விட்டும் புரட்சிக்காரன் யார் என்று கண்டு பிடியுங்கள் என்று சொன்னால்;
    பால் குடிப் பையன் கூட அட இவர் தான் என்று கண்டு பிடிப்பான்.

    ஆனாலும் தனி மனிதர் மீது ஆதாரங்கள் ஏதுமற்றுத் தாங்கள் எப்படிக் குற்றம் சாட்டுகின்றீர்கள்?
    ஒருவர் வலைக்கு வந்து பின்னூட்டமிட்டால், ஒருவர் பதிவெழுதினால் அவரது ஐபி முகவரியினை ரேஸ் பண்ணி அவரைக் கண்டு பிடிக்கலாம் அல்லவா? அப்படி இருக்க எப்படி நீங்கள் மறைமுகமாக ஒருவரைச் சாடி அவரது பெயரை மாத்திரம் படிப்போர் அறிந்து கொள்ளும் வரையில் கூற முடியும்?

    ஆமா அன்பு நண்பர்களே! இங்கே பின்னூட்டமிட்ட ஏனைய உறவுகளில் ஆமினா அக்காவைத் தவிர வேறு யாருக்கும் சகோதரன் சௌந்தர் இப்படிச் சொல்கிறாரே! இதற்கு ஆதாரங்கள் இருக்கா? என்று கேட்க வேண்டும் எனத் தோன்றலையா? எல்லோருக்கும் Comment sense இல்லையா? இந்தப் பதிவினைப் படித்துக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ள அத்தனை உள்ளங்களிடமும் ஒரு கேள்வி!

    ஐடியாமணிக்காக பரிந்து பேசவில்லை! தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புரட்ச்சிக்காரன் தான் ஐடியாமணி என்று நிரூபிக்காது எப்படி மறைமுகமாக ஈபிள் கோபுரத்தினைப் போட்டுச் சாட முடியும்?

    இதே வழியினை நான் வேண்டுமானாலும் நாளை என் பதிவில் பின்பற்றலாம் அல்லவா? கையில் பூக்களோடு இருப்பவரின் படத்தினை எடுத்து அந் நபரின் முகத்தினை மறைத்து விட்டு தமிழகத்தில் திருவள்ளுர் பகுதில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் என்று ஒரு சேதி போட்டால் அதன் வீரியம் எப்படி இருக்கும்?

    கோவிச்சுக்காதீங்க! ஆதாரம் இல்லாமல் என்னிடம் ஆதாரம் இருக்கே என்று நானும் இதே பாணியினைப் பின்பற்றலாம் அல்லவா? ஹி....ஹி...

    இல்லே இன்னொரு விதமாக கேட்கிறேன்! மாத்தி மாத்தி யோசியுங்க என்று எழுதிவிட்டு பதிவர்களின் பதிவுகளில் ஆபாச கமெண்ட் போட்ட தெருக்களில் வலம் வரும் பெயரோடு தொடர்புபட்ட கவிஞர்!
    இப்படி நான் ஒரு சேதியைக் கிரியேட் பண்ணி எழுதி விட்டு ஆதாரம் இருக்கு நாளை வரும் என்று சொன்னால் எப்படி இருக்கும்?

    நீங்கள் ஒரு மன்னிப்புக் கூட கேட்கவில்லை! ஏதோ வலிந்திழுத்து ஐடியாமணியுடன் மல்லுக்கட்ட வேண்டும்! ஐடியாமணிக்கு எதிரானோர்களைக் குளிர்விக்க வேண்டும் எனும் நோக்கில் இப்படி ஒரு பதிவினைப் போட்டிருக்கிறீங்களா?
    புரட்சிக்காரனை கண்டு பிடிக்க வேண்டுமெனில் அவனது ஈமெயிலுக்கு Spypig முகவரியினூடாக கோடிங் பெற்று மெயில் அனுப்பி பாருங்கள்!
    அவனது ஒவ்வோர் அசைவையும் நீங்கள் உங்கள் வீட்டில் வைத்தே கண்டு பிடிக்கலாம்.

    அவன் எங்கே எங்கே சென்று மெயில் ஓப்பின் பண்ணுகிறான், என்ன கணினி யூஸ் பண்ணுகிறான் எனப் பல விடயங்களை அறியலாம். வந்தேமாதரம் சசியிடம் கேளுங்கள்! அவர் பல ஐடியாக்கள் சொல்லித் தருவார். அடுத்த விடயம் புரட்சிக்காரன் ப்ளாக்கிலேயே இருக்கும் உலக உருண்டையில் அவர் பதிவெழுதியதும் இந்தியா என்று தானே காண்பிக்கிறது! அதனை வத்தும் புரட்ச்சிக்காரன் யார் என்று கண்டு பிடிக்க முடியாதா?

    அநீதிகளைக் கண்டு பொங்குபவனும், மக்களுக்கு நேர்மையான கருத்துக்களைச் சொல்பவனும் தன் உணர்வுகளை மெருகேற்றிப் பகிர்பவனும் தான் கவிஞன் என்று தமிழ் இலக்கியம் வரைவிலக்கணம் கூறுகின்றது.
    ஆக நீங்கள் இங்கே மறைமுகமாக ஓட்டவடை - ஐடியாமணி- பிரெஞ்சுக்காரனைச் சாடி விட்டு, அவர் மன்னிப்புக் கேட்கச் சொல்லி கேட்டதனைக் கூடப் பொருட்படுத்தாது அலட்சியப்படுத்துகின்றீர்கள்!

    இது ஒரு கவிஞனுக்கு அழகா? இம்மாம் பெரிய பதிவெழுதி வலிந்திழுத்து ஒருவனை இவ் விடயத்தினுள் சொருக வேண்டும் எனுமளவிற்கு உங்களுக்கு நேரமிருக்கிறது! யார் புரட்சிக்காரன் என்பதனைத் தெளிவுபடுத்த தங்களுக்கு நேரம் இல்லையா?

    ஏன் இப்படி ஆதாரம் இல்லாது இன்னொருவர் மீது குற்றம் சாட்டி காழ்ப்புணர்வுகளைத் தேடிக் கொள்கின்றீர்கள்? இதற்காகவா நாம் ஒவ்வொருவரும் வலை எழுத வந்தோம்? இது தான் தமிழனின் குணமா?

    ReplyDelete
  97. http://www.padamparpadi.com/2011/04/blog-post.html

    இந்த இணைப்பில் உள்ள பதிவில் பாருங்கள், எப்படி ஆதாரத்தோடு பின்னூட்டம் இட்ட நபரை அடையாளம் கண்டுள்ளோம் என்று!

    ReplyDelete
  98. அண்ணே ஆதாரங்களை பதிவிலே போடுங்களேன்! ஏன் மெயிலில் கொடுத்து அனுப்ப வேண்டும்! இவ்வளவு கீழ்த்தரமாக ஒருவர் மீது ஆதாரமற்ற முறையில் சேறு பூசி விட்டு எப்படி உங்களால் பதிலேதும் கூறாது பொறுமையாக இருக்க முடிகிறது?

    ReplyDelete
  99. @ நிரூபன்

    அன்பு நிருபனுக்கு...

    தாங்கள் ஒரு நல்ல கண் வைத்தியரை நாடுவது நல்லது என்பது எனது திண்ணம்...

    ஏனெனில் ஆமினா அக்கா மட்டும் தான் சொல்லியிருக்கிறாரா என வடிவாக வாசித்துப் பார்க்கவும்.. அவா அளவுக்கு சொல்லாட்டியும் நானும் சொல்லியிருக்கிறேன்...

    ReplyDelete
  100. சகோதரன் மதிசுதா கூறியிருக்கும் கருத்துக்களைக் கவனிக்கத் தவறி விட்டேன்! மன்னிக்கவும்! மதிசுதாவிற்கு நன்றிகள்!

    ReplyDelete
  101. இந்த பிரச்சனையில் இங்குவந்து கருத்திட்ட அனைவருக்கும் என் நன்றிகள்...

    பொதுவாக நான் யார் மனதையும் காயப்படுத்த விடும்பவில்லை....

    என்னுடைய ஒட்டுமொத்த கோவம் அத்தனையும் புரட்சிக்காரன் என்ற ஒரு தனிப்பட்ட நபரைச்சார்நததுதான்...

    இதில் என் அறிவுக்கு எட்டியதின் அடிப்படையில் முதல் தர ஆதாரங்களை வைத்து அது பிரான்ஸ் என்று தீர்மானித்து அந்த படத்தை போட வேண்டியதாயிற்று.

    ReplyDelete
  102. நண்பர்கள்...
    மதிசுதா..
    நிருபன்..
    ஆமினா...
    ஐடியா மணி.. ஆகியோருக்கு...


    புரட்சிக்காரன் மீது நான் கொண்ட கோவம் நியாயமானது அதைதாங்கள் புரிந்துக்கொள்ளுங்கள்.

    மேற்கண்டபதிவில் ”மாத்திமாத்தி யோசித்ததின் விளைவாக” என்ற வார்த்தையில் வரும் மாத்தியோசி என்ற வார்த்தை நண்பர் ஐடியாமணியை தாக்குவதுபோல் இருக்கிறது என்று அனைவரும் சுட்டிக்காட்டியதின் விளைவாக அந்த வார்த்தையையும், அந்தப்படத்தையும் நான் நீக்கியிருக்கிறேன்.

    ஊகங்களின் அடிப்படையில் நான் சிலமுடிவுகளை எடுத்து அதன்விளைவாக நான் பிரான்ஸை சுட்டிகாட்ட வேண்டியதாயிற்று.

    அதற்காக பிரான்ஸ் பதிவர்கள் மற்றும் நண்பர் ஐடியாமணி அவர்களிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்.

    இன்னும் இறுதிகட்ட சோதனையில் அந்த புரட்சிக்காரன் யார் என்று என்னால் கண்டுபிடித்துவிடமுடியும்.

    நண்பர் ஐடியாமணியின் பெயர்பொருள்படும்படி பதிவில் குறிப்பிட்டது தவறே. இணையகோளாறு மற்றும் அவசர வேலையின் காரணமாக பதிவை திருத்துவதிலும், கருத்துகளுக்கு பதில் சொல்வதிலும் தாமதம் ஏற்பட்டது.

    அதற்காக மேற்கண்ட அனைவருக்கும் என்னுடைய வருத்தத்தை பதிவுசெய்கிறேன்.

    ReplyDelete
  103. @Powder Star - Dr. ஐடியாமணி



    நண்பர் ஐடியா மணிக்கு வணக்கம்.

    குறைந்தளவு ரஸ்பான்ஸ் என்று தாங்கள் குறிப்பிட்டதற்க்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன்.

    அப்படி ஒன்றும் இல்லை.


    தாங்கள் மாத்தியோசி என்ற ஒரு வார்த்தையில் தாங்கள் சம்மந்தப்பட்டிருப்பீர்கள் என்று நான் என்னவில்லை.

    அதற்காக தங்களிடமும், தங்களுக்கு ஆதரவாக கருத்திட்ட அனைவருக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  104. /////////
    புரட்சிக்காரன் said... [Reply to comment]

    சவுந்தர் அண்ணே, மெயின் மேட்டரான காபி பேஸ்ட்ட விட்டுட்டு, ஏதோ நான் எழுத்து பிழைய மட்டும் தான் பேசுற மாதிரி எல்லாம் பேசுறீங்களே. ஏன் இவ்ளோ சண்டை?
    //////////

    மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் புரட்சிக்காரன் என்னிடம் தாங்கள் சுட்டிக்காட்டியது எதை...

    காபி பேஸ்ட் பதிவுக்கு எனக்கும் எந்த சம்மந்தமும்இல்லை. தாங்கள் என்னைப்பற்றி பதிவில் சொன்ன கருத்துக்கள் தாங்கள் கூறும் பதில் இதுமட்டும்தானா..

    தாங்கள் அப்படி எத்தனை முறை என்னிடம் பதிவில் வந்து எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டீனீர்கள்...

    என்னுடைய எதிர்பதிவு்க்கு தாங்கள் கொடுத்தம் விளக்கம் போதுமானதாக இல்லை...

    ReplyDelete
  105. ///////
    புரட்சிக்காரன் said... [Reply to comment]

    நான் பிரான்சில் இருந்து எழுதவில்லை... தேவை இல்லாமல் Powder Star அவர்களை சந்தேக படவேண்டாம். நண்பரே மன்னிக்கவும். இவர்கள் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
    /////////

    என்சார்பாக தாங்கள் மன்னிப்பு கோரவேண்டிய அவசியம் இல்லை. அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.

    அதற்காக விளக்கத்தை நான் அவருக்கு மெயில் தெரிவித்திருக்கிறேன்.

    ReplyDelete
  106. @Philosophy Prabhakaran



    என்னுடைய படைப்புகளின் தலைப்புகளை கொஞ்சம் படித்து பாருங்கள் அத்தனையும் அவ்வளவு அழகாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன்.

    பார்வையாளர்களின் வரவை அதிகரிக்க சில பதிவுகளின் தலைப்பை கொஞ்சம் வித்தியாசப்படுத்த வேண்டியிருக்கிறது.

    உதா. சிலசமயம் என்ற தலைப்பிட்டு ஒரு கவிதை பதிவிட்டேன்..

    அதை வெறும் 100 மட்டுமே வாசித்தார்கள்..

    அதே கவிதையை மீள்பதிவாக இந்த மனைவிகளே இப்படித்தான் என்று மாற்றி பதிவிடும்போது அதை வாசித்தவர்களின் எண்ணிக்கை 1000 த்தை தாண்டுகிறது.

    படைப்புகள் அதிகமானவரை சென்றடையவே இந்த முயற்சி..

    தாங்கள் சொல்வது போல் நான் வம்பிழுக்க மட்டுமே இந்த பதிவை போடவில்லை...

    புரட்சிக்காரன் எனைக்குறித்து மூன்று அவதூறு பதிவுகள் வெளியிட்டதின் விளைவாகத்தான் இந்த கோவத்தின் வெளிப்பாடு.

    ReplyDelete
  107. ///////
    Philosophy Prabhakaran said... [Reply to comment]

    BTW, முதல்முறையாக சிபி திருவாய் மலர்ந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது... மற்றவர்கள் நம்மை புகழும் போது வாய் நிறைய பல்லோடு அதை வாங்கிக்கொள்கிறோம்... ஆனால் குறை சொன்னால் மட்டும் வேப்பங்காயாக கசக்கிறதோ...

    ///////////

    குற்றம் சொல்லுபவர்களை நான் வரவேற்கிறேன். அதை என்பதிவில் அல்லவா சொல்ல வேண்டும் அதை விடுத்து ஒரு பதிவாக போட்டு என்னை அவமானம் படுத்துவதை நான் பொருத்துக்கொள்ள மாட்டேன்..

    அதுவும் காரணம் இல்லாமல் என்னை வம்பிழுத்ததை என்னால் எப்படி ஏற்றுக்கொள்வது..

    ReplyDelete
  108. @நிரூபன்


    தங்களின் அத்தனைக்கருத்துக்களும் ஏற்புடையதுதான் அதற்காக என்னுடைய ஆதாரங்களை வெளிப்படையாக நான் வெளியிடமுடியாது என்னுடைய மெயில் ஐடிக்கு ஒரு கோரிக்கை அனுப்புங்கள் அவராக இருக்குமோ என்ற என்னுடைய நியாயங்களை நான் தருகிறேன்.

    ReplyDelete
  109. நிருபனுக்கு ஒரு கேள்வி....


    தாங்கள் இவ்வளவு பரிந்து பேசுகிறீர்கள்..

    புரட்சிக்காரன் என்ற கற்பனை நபர் தங்களையும், ஐடியா மணியை குறித்து மட்டுமே மிகவும் அக்கறைக் கொண்டுள்ளார்.

    அப்படியிருக்க அவருடைய மெயில் ஐடி அவர் கொடுத்திருந்தும் தாங்களோ அல்லது ஐடியா மணியோ அவரை இதுவரையில் மெயில் மற்றும் சாட்டிங் போற்றவைகளில் இதுவரையில் தாங்கள் தொடர்பு கொள்ள வில்லையா..?

    என்னுடைய அனுமானங்களின் படி அனைத்துதரப்பிலும் நட்புறவு கொள்ளும் தாங்கள் சாட்டிங்கில் வரும் தாங்கள் இதுவரையில் புரட்சிக்காரனை தெரியாது என்பதற்கு என்ன காரணம்.


    தங்களை குறித்து அவர்

    http://puratchikkaaran.blogspot.com/2011/08/blog-post.html

    என்ற பதிவும்..

    ஐடியா மணி குறித்து
    http://puratchikkaaran.blogspot.com/2011/09/blog-post_26.html


    இதற்கும் தங்கள் பதில் இதுசின்னபிள்ளைத்தனமாக இருக்கிறது என்று சொல்லலாம்...

    எங்களை தெரிந்துக்கொண்ட வருரை நாங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லையே என்றுதான் சொல்லப்போகிறீர்களா...

    ReplyDelete
  110. புரட்சிக்காரனின் எண்ணம் தமிழ்மணத்தின் தரவரிசையில் அதிக அக்கறை எடுத்திருக்கிறது.

    பொதுவாக... புதியதாக வரும் நபர் என்றால் அவர் பிறபதிவர்களை கண்டிப்பாக சாடமாட்டார். திரட்டிகள் குறித்து அதிக அக்கறையும் எடுக்க மாட்டார். அப்படியிருக்க தமிழ்மணத்தின் மீது அதிக அக்கறை எடுப்பவர் என்றால் அதன் அபிமானியாக இருக்கலாம் அல்லது இவ்வளவு விவரங்கள் தெரிந்த அவர் கண்டிப்பாக ஒரு பிரபல பதிவராகத்தான் இருக்க வாய்ப்பிருக்கிறது.

    ReplyDelete
  111. //////
    அநீதிகளைக் கண்டு பொங்குபவனும், மக்களுக்கு நேர்மையான கருத்துக்களைச் சொல்பவனும் தன் உணர்வுகளை மெருகேற்றிப் பகிர்பவனும் தான் கவிஞன் என்று தமிழ் இலக்கியம் வரைவிலக்கணம் கூறுகின்றது.
    ஆக நீங்கள் இங்கே மறைமுகமாக ஓட்டவடை - ஐடியாமணி- பிரெஞ்சுக்காரனைச் சாடி விட்டு, அவர் மன்னிப்புக் கேட்கச் சொல்லி கேட்டதனைக் கூடப் பொருட்படுத்தாது அலட்சியப்படுத்துகின்றீர்கள்!
    ////////////


    கவிஞர் குறித்த அத்தனை தகுதிகளும் நானும் அறிவேன் தங்களுடைய விளக்க தேவையில்லை.

    அந்த வரையறையிலிருந்து நான் எப்போதும் ஒதுங்கியவனும் இல்லை.

    தாங்கள் குறிப்பிட்ட ////////ஓட்டவடை - ஐடியாமணி- பிரெஞ்சுக்காரனைச் சாடி விட்டு////////

    என்ற வார்த்தைகளை என்னுடைய பதிவில் நான் எங்கும் சேர்க்கவில்லை..

    மாத்திமாத்தி யோசித்ததின் விளைவாகத்தான் என்று ஈபிள் டவரைப் போட்டால் ஐடியாமணியைத்தான் குறிக்கும் என்பது ஏற்புடையதாக இல்லை. அவருக்கும் எனக்கும் எந்தவிதத்திலும் பகைமையோ அல்லது அவரை அவமானம்படுத்தவேண்டும் என்ற எண்ணமோ இதுவரையில் வந்ததில்லை.


    இணையத்துண்டிப்பின் விளைவாகத்தான் கருத்துகளுக்கு பதில் சொல்லமுடியவில்லையே தவிர ஓடி ஒளிய வேண்டிய அவசியமோ அல்லது பயப்பட வேண்டிய அவசியமோ எனக்கில்லை.

    ReplyDelete
  112. ////////
    நீங்கள் ஒரு மன்னிப்புக் கூட கேட்கவில்லை! ஏதோ வலிந்திழுத்து ஐடியாமணியுடன் மல்லுக்கட்ட வேண்டும்! ஐடியாமணிக்கு எதிரானோர்களைக் குளிர்விக்க வேண்டும் எனும் நோக்கில் இப்படி ஒரு பதிவினைப் போட்டிருக்கிறீங்களா?
    /////////

    மீண்டும் சொல்கிறேன். தனிப்பட்ட ஒருவரை நான் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம்இல்லை.

    ஐடியா மணியிடம் நான் மன்னிப்பு கேட்க நான் தயாராக இருக்கிறேன்.

    அதற்காத தாங்கள் எவ்வளவு குற்றச்சாட்டுளை அடுக்கிகொண்டே சென்றுவிடலாம் நினைக்காதீர்கள்.

    இந்த பதிவுலகம் வந்தபிறகு எந்த ஒரு கருத்துக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் நடுநிலையோடு இருந்தவன் நான்.

    யாருயோ குளிர்விக்க யாரையும் குற்றப்படுத்தலாம் என்ற எண்ணம் ஒருபோதும் வந்ததில்லை.

    ReplyDelete
  113. மாத்தியோசி என்ற ஒரு வார்த்தையைக்கொண்டு மறைமுகமாக சாடிவிட்டிர்கள் என்று வாதாடவந்திருக்கும்தாங்கள் நேரடியாக என்னையும், கருண் அவர்களையும் புரட்சிக்காரன் சாடும் போது வாயை முடிக்கொண்டு இருக்க காரணம் என்ன சொல்லுங்கள்..

    ஐடியா மணி உங்கள் நண்பர் என்றால் நான்...?


    என்னைப்பற்றி மற்றும் கருண் அவர்களைப்பற்றி விமர்சித்த அந்த பதிவில் தாங்கள் கருத்திடவில்லை யென்றாலும் தமிழ்மணத்தில் தாங்கள் பதிந்திருப்பது.. Like


    எங்களைப்பற்றி குற்றசாட்டிய பதிவுக்கு ஆதரவுஅளித்த தங்களின் நிலைப்பாடை நாங்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வது.

    ReplyDelete
  114. ///////
    புரட்சிக்காரன் said...

    புரட்சிக்காரனின் நோக்கம் இது போன்ற சில்லறை சண்டைகள் இல்லை. சில சமயங்களில் வேண்டா வெறுப்பாக இது போன்ற காரியங்களில் ஈடுபடவேண்டி உள்ளது. நானும் மனம் உகந்து செய்யவில்லை. பட் இவங்க இப்டியே காபி அடிசுகிட்டு இருந்தா என்ன தான் தீர்வு? சொந்தமாக எழுதும் பதிவர்களின் மனக்குறை தீரும் வரை, இந்த காபி பேஸ்ட் ஒழியும் வரை என் போராட்டம் தொடரும். நீங்கள் என்னை கண்டுபிடித்தாலும், நேரடியாக இப்போதை விட மிகக்கடுமையாக நான் போராடுவேன் என்று உங்களிடம் நான் உறுதி கூறுகிறேன்.
    //////////


    இதுவல்ல சில்லரைச்சண்டை புரட்சிக்காரரே...


    குறைகளை நாகரீகமாக சொல்லாமல் என்னை இழிவுப்படுத்தி தாங்கள் மூன்று பதிவுகள் போட்டீர்களே அப்போது தங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் எது சில்லரைத்தனம் என்று...

    இதைவிட கடுமையாக போராடுங்கள் ஏன்னென்றால் நாட்டில, உலகில, இதைவிட பெரிய பிரச்சனை வேறில்லை.

    காபி டூ பேஸ்ட் பதிவர்கள் திருந்தி வி்ட்டால் இந்த உலகமே திருந்தி விடும்

    ReplyDelete
  115. இதோடு இந்த பிரச்சனையை விடுங்கள் என்று தொடர்ந்து மெயில் மற்றும் சாட்டிங் தெலைபேசி வாயிலாக நண்பர்கள் வாயிலக அறிவுருத்தப்பட்டதால் இதோடு இந்தபிரச்சனையை நான் முடிவுக்கு கொண்டுவருகிறேன்.

    மீண்டும் சொல்கிறேன் இந்தபதிவு மூலமாக யாருடைய மனதையாவது புண்படித்தியிருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்.

    இது முழுக்க முழுக்க புரட்சிக்காரன் என்ற ஒரு அனானியின் எதிராக வெளியிடப்பட்டுள்ள பதிவு.

    அந்த புரட்சிக்காரன் தற்போது ஓடி ஒளியலாம் அவனுடைய உண்மையான முகம் நாளை உலகி்றக்கு தெரியும்.

    திங்கள் முதல் நான் என்னுடைய வழியில் பயணிக்கிறேன்.


    நன்றிகளுடன்
    கவிதைவீதி செளந்தர்...

    ReplyDelete
  116. @கவிதை வீதி... // சௌந்தர் //
    மீண்டும் வணக்கம் சகோ,
    என்னுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக நான் மெயில் மூலமாக நன்கு தெரியாதவர்கள் அல்லது அதிகம் அறிமுகமில்லாத நண்பர்களோடு தொடர்புகளைப் பேணுவதில்லை. இது தொடர்பான விடயங்கள் மனோ அண்ணருக்கும், சிபி அண்ணருக்கும், விக்கி அண்ணருக்கும், கருண் மச்சிக்கும் தெரியும்.

    இலங்கைப் பதிவர்களுள் எல்லோருடனும் நான் ஈமெயில் மூலமாகத் தொடர்பு கொள்வதில்லை. ஆகவே எல்லோருடனும் நட்புப் பாராட்டும் நான் புரட்சிக்காரனோடு நட்புப் பாராட்டவில்லையே என்று தாங்கள் இங்கே ஆதங்கப்படுவது நியாயமில்லை! முகம் தெரியாத புரட்சிக்காரன் அல்லது என்னை நன்கு தெரியாத/ எனக்கு நன்கு அறிமுகமில்லாத ஒருவரோடு நான் தொடர்பு கொள்வது எவ் வகையில் நியாயமாகும்?

    அடுத்த வினா, என்னுடைய நட்பு வட்டம் குறுகியது! நான் பல பதிவுகளுக்குச் சென்று நட்போடு பின்னூட்டம் எழுதினாலும் பர்சனலாக மின்னஞ்சல் மூலம் தொடர்பு வைத்திருப்போரின் எண்ணிக்கை மிக குறைவே! ஒரு சிலரோடு முகப் புத்தகத்திலும் தொடர்பு வைத்துள்ளேன்.

    என்னைக் குறித்து ஒரு பதிவெழுதினால் அவர் என் மீது அக்கறை கொண்டுள்ளவர் என்று நினைக்கிறீர்களா?

    இதே புரட்சிக்காரன் தமிழ்மணத்தில் அதிகம் ஓட்டு வாங்கும் நிரூபன் என்று எழுதிய ஒரு பதிவினைத் தாங்கள் படிக்கவில்லையா? அந்தப் பதிவில் நான் பின்னூட்டம் எழுதியிருந்தேனே! தாங்கள் அதனைப் படித்தால் புரட்சிக்காரனோடு நான் நட்புறவாட விரும்புகிறேனா என்று எண்ணத் தோன்றுமா?

    எனக்குத் தொடர்பில்லாத ஒருவருடன், எனக்கு அவசியமற்ற நபரோடு நான் எப்படி நட்புறவு கொள்ள முடியும்?
    பதிவுலகில் எழுதும் அத்தனை நபர்களோடும் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எனக்கு என்ன அவசியம் இருக்கிறது?


    புரட்சிக்காரன் என்னைப் பற்றிய எழுதிய பதிவிற்கு முன்பதாக நான் காப்பி பேஸ்ட் பதிவர்கள் தொடர்பில் எழுதிய ஒரு பதிவினைப் படிக்கவில்லையா?

    http://www.thamilnattu.com/2011/07/blog-post_3660.html
    இந்த இணைப்பில் என் பதிவுகளைத் திருடுவோர் பற்றி எழுதியிருக்கேனே! அதற்காகத் தான் புரட்சிக்காரன் ஒரு பதிவினை எழுதினார். எனக்கு இருக்கும் வேலை பிசியில் எல்லோருடனும் நட்புப் பாராட்ட வேண்டும் என்று என்ன அவசியம்?

    ReplyDelete
  117. @கவிதை வீதி... // சௌந்தர் //
    மீண்டும் வணக்கம் சகோ,
    என்னுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக நான் மெயில் மூலமாக நன்கு தெரியாதவர்கள் அல்லது அதிகம் அறிமுகமில்லாத நண்பர்களோடு தொடர்புகளைப் பேணுவதில்லை. இது தொடர்பான விடயங்கள் மனோ அண்ணருக்கும், சிபி அண்ணருக்கும், விக்கி அண்ணருக்கும், கருண் மச்சிக்கும் தெரியும்.

    இலங்கைப் பதிவர்களுள் எல்லோருடனும் நான் ஈமெயில் மூலமாகத் தொடர்பு கொள்வதில்லை. ஆகவே எல்லோருடனும் நட்புப் பாராட்டும் நான் புரட்சிக்காரனோடு நட்புப் பாராட்டவில்லையே என்று தாங்கள் இங்கே ஆதங்கப்படுவது நியாயமில்லை! முகம் தெரியாத புரட்சிக்காரன் அல்லது என்னை நன்கு தெரியாத/ எனக்கு நன்கு அறிமுகமில்லாத ஒருவரோடு நான் தொடர்பு கொள்வது எவ் வகையில் நியாயமாகும்?

    அடுத்த வினா, என்னுடைய நட்பு வட்டம் குறுகியது! நான் பல பதிவுகளுக்குச் சென்று நட்போடு பின்னூட்டம் எழுதினாலும் பர்சனலாக மின்னஞ்சல் மூலம் தொடர்பு வைத்திருப்போரின் எண்ணிக்கை மிக குறைவே! ஒரு சிலரோடு முகப் புத்தகத்திலும் தொடர்பு வைத்துள்ளேன்.

    என்னைக் குறித்து ஒரு பதிவெழுதினால் அவர் என் மீது அக்கறை கொண்டுள்ளவர் என்று நினைக்கிறீர்களா?

    இதே புரட்சிக்காரன் தமிழ்மணத்தில் அதிகம் ஓட்டு வாங்கும் நிரூபன் என்று எழுதிய ஒரு பதிவினைத் தாங்கள் படிக்கவில்லையா? அந்தப் பதிவில் நான் பின்னூட்டம் எழுதியிருந்தேனே! தாங்கள் அதனைப் படித்தால் புரட்சிக்காரனோடு நான் நட்புறவாட விரும்புகிறேனா என்று எண்ணத் தோன்றுமா?

    எனக்குத் தொடர்பில்லாத ஒருவருடன், எனக்கு அவசியமற்ற நபரோடு நான் எப்படி நட்புறவு கொள்ள முடியும்?
    பதிவுலகில் எழுதும் அத்தனை நபர்களோடும் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று எனக்கு என்ன அவசியம் இருக்கிறது?


    புரட்சிக்காரன் என்னைப் பற்றிய எழுதிய பதிவிற்கு முன்பதாக நான் காப்பி பேஸ்ட் பதிவர்கள் தொடர்பில் எழுதிய ஒரு பதிவினைப் படிக்கவில்லையா?

    http://www.thamilnattu.com/2011/07/blog-post_3660.html
    இந்த இணைப்பில் என் பதிவுகளைத் திருடுவோர் பற்றி எழுதியிருக்கேனே! அதற்காகத் தான் புரட்சிக்காரன் ஒரு பதிவினை எழுதினார். எனக்கு இருக்கும் வேலை பிசியில் எல்லோருடனும் நட்புப் பாராட்ட வேண்டும் என்று என்ன அவசியம்?

    ReplyDelete
  118. பதிவுலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் காப்பி பேஸ்ட் பதிவுகள் பற்றிய போதிய அறிவின்றி சிபி அவர்களுக்காகவும், கருணுக்காகவும் புரட்சிக்காரன் பதிவில் போய் பரிந்து நான் பின்னூட்டம் எழுதியிருந்தேனே?
    அதனைத் தாங்கள் படிக்கவில்லையா?

    இதோ இந்த இணைப்பில் பாருங்கள் சகோ!
    http://puratchikkaaran.blogspot.com/2011/05/blog-post.html

    ReplyDelete
  119. நிரூபன் கருத்து இது :
    May 21, 2011 10:22 PM
    மற்றுமோர் விடயம், சிபி, கருண் முதலிய முன்னணிப் பதிவர்களின் படைப்புக்களில் அவர்களது திறமைகள் ஒன்றேன்றாலும் நாளுக்கு ஒன்று எனும் வீதத்தில் வரும். சிபி, கருண் இரண்டு பதிவுகள் போட்டாலும், நாளொன்றுக்கு ஒரு பதிவு சொந்தச் சரக்காக தான் இருக்கும், ஆகவே எல்லாப் பதிவர்களையும் இதனுள் உள்ளடக்க முடியாது சகோ.
    http://tamilmanam.net/top/blogs/1

    ReplyDelete
  120. @கவிதை வீதி... // சௌந்தர் //


    கவிஞர் குறித்த அத்தனை தகுதிகளும் நானும் அறிவேன் தங்களுடைய விளக்க தேவையில்லை.

    அந்த வரையறையிலிருந்து நான் எப்போதும் ஒதுங்கியவனும் இல்லை.

    தாங்கள் குறிப்பிட்ட ////////ஓட்டவடை - ஐடியாமணி- பிரெஞ்சுக்காரனைச் சாடி விட்டு////////

    என்ற வார்த்தைகளை என்னுடைய பதிவில் நான் எங்கும் சேர்க்கவில்லை..
    //

    உங்களுக்கு ஆதரவாகப் பேசாது நான், ஏன் ஐடியாமணிக்கு ஆதரவாகப் பேசுகின்றேன் என்று கேள்வி கேட்கின்றீர்கள்!
    சகோதரன் - மச்சி கருணிடம் எவ்வளவு அன்பாக காப்பி பேஸ்ட் பற்றி நான் எடுத்துக் கூறியிருப்பேன்! நாளாந்தம் எப்படியான பதிவுகளை கருண் மூலமாக எழுத முடியும் எனச் சொல்லித் தூண்டியிருப்பேன்!
    உங்கள் கவிதைகளில் பல முறை எழுத்துப் பிழைகள், தவறுகளை எத்தனை தடவை சுட்டிக் காட்டியிருப்பேன்!

    கருணுடன் மின்னஞ்சல் மூலமாக நான் பல தடவை ஐடியாக்கள் ஒரு நண்பனாக சொல்லியிருக்கிறேன்!
    சிபி அண்ணா மீது காப்பி பேஸ்ட் குற்றச்சாட்டுத் தொடங்கப்பட்டு அவருக்கு எதிராக ஒரு வலைத் தளம் தொடங்கிய போது, நானும் இன்னும் சில நபர்களும் அந்த நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வளவு தூரம் முயற்சி செய்தோம் என்று தங்களுக்குத் தெரியுமா

    சிபி அண்ணாவையும், விக்கி அண்ணாவையும் கேளுங்கள்! சொல்லுவார்கள்!

    தங்களுக்கு ஆதரவாகவும், கருணுக்கு ஆதரவாகவும் நான் எப்படிப் பரிந்து பேச முடியும்?????????????

    கருணுக்கு காப்ப்பி பேஸ்ட்டை நிறுத்துவதற்குப் பல வழிகள் சொல்லிக் கொடுத்த்தேன்! வசன கவிதை அமைப்பது தொடர்பான ஆலோசனைகளைத் தனி மடலில் வழங்கினேன்!
    பல பதிவுகளைப் படித்து விட்டு, கருணின் பதிவுகளில் பின்னூட்டம் எழுதாது ஓட்டுக்கள் மாத்திரம் போட்டு விட்டு தனி மெயிலில் மச்சி இங்கே இருந்து நீ சுட்டிருக்கிறாய் என்று சொல்லி அனுப்பியிருக்கேன்! இது வேண்டாமே! நான் இப்படியான பதிவுகளுக்கு கமெண்ட்ஸ் போட மாட்டேன் என்று பர்சனலாக சொல்லியிருக்கேன்!

    ஏன் இங்கே புரட்சிக்காரன் வலையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பதிவுகள் காப்பி பேஸ்ட் என்று புரட்சிக்காரன் சொல்ல, கருண் இவை காப்பி பேஸ்ட் இல்லை என்று சொல்கிறாரே எனும் நிலையினை ஆராயக் கூட நேரமின்றி, நத்தார் விடுமுறைக்கு முன்பதாகப் புராஜெக்ட் முடித்துக் கொடுக்க வேண்டிய அவசரத்தையும் பொருட்படுத்தாது அவரது பதிவுகளுக்கு ஓட்டுப் போட்டிருக்கேன்!
    அப்படி இருக்க,

    மற்றவர்கள் போல நான் காப்பி பேஸ்ட் எழுதுவதில்லை என்றும், காப்பி டூ பேஸ்ட் போடாது சொந்தச் சரக்கினை எழுதுகின்றேன் என்று உங்களைப் பற்றிய வலைச் சர அறிமுகத்திலும் பிற இடங்களிலும், உங்கள் வலையிலும் சக பதிவர்களைச் சாடி விட்டு,

    அதே உங்கள் வலையில் நேரமின்மையால் பத்திரிகைச் செய்திகளை காப்பி பேஸ்ட் போடுகின்றேன் என்று எழுதி நீங்களாகவே உண்மையினை ஒத்துக் கொள்வது போலச் சொல்லி விட்டுத் தற்போது காப்பி பேஸ்ட் பதிவுகளே நான் போடுவதில்லை என்று கூறும் உங்களுக்கு ஆதராவாக நான் எவ்வாறு ஐயா புரட்சிக்காரனோடு போய் சொற்போர் தொடுக்க முடியும்?

    ReplyDelete
  121. @கவிதை வீதி... // சௌந்தர் //

    மேற்கண்டபதிவில் ”மாத்திமாத்தி யோசித்ததின் விளைவாக” என்ற வார்த்தையில் வரும் மாத்தியோசி என்ற வார்த்தை நண்பர் ஐடியாமணியை தாக்குவதுபோல் இருக்கிறது என்று அனைவரும் சுட்டிக்காட்டியதின் விளைவாக அந்த வார்த்தையையும், அந்தப்படத்தையும் நான் நீக்கியிருக்கிறேன்.

    ஊகங்களின் அடிப்படையில் நான் சிலமுடிவுகளை எடுத்து அதன்விளைவாக நான் பிரான்ஸை சுட்டிகாட்ட வேண்டியதாயிற்று.
    /
    //


    தாங்கள் குறிப்பிட்ட ////////ஓட்டவடை - ஐடியாமணி- பிரெஞ்சுக்காரனைச் சாடி விட்டு////////

    என்ற வார்த்தைகளை என்னுடைய பதிவில் நான் எங்கும் சேர்க்கவில்லை..//

    சகோ; மேலே உள்ள ரெண்டு பின்னூட்டங்களுக்கும் இடையில் ஏன் வேறுபாடு? இரண்டு பின்னூட்டங்களையும் எழுதியது நீங்கள் தானே?

    ஒன்றில் ஐடியாமணியைத் தாக்குதவதால் அந்த வார்த்தையினை நீக்கியிருப்பதாக சொல்லுகின்றீர்கள்.

    மற்றையதில் ஐடியாமணியினைச் சாடவில்லை என்று சொல்லுகின்றீர்கள்!

    ஹி.....ஹி......

    ReplyDelete
  122. @கவிதை வீதி... // சௌந்தர் //
    என்னுடைய அனுமானங்களின் படி அனைத்துதரப்பிலும் நட்புறவு கொள்ளும் தாங்கள் சாட்டிங்கில் வரும் தாங்கள் இதுவரையில் புரட்சிக்காரனை தெரியாது என்பதற்கு என்ன காரணம்.//

    இணயத்தில் அனுமாங்களின் அடிப்படையில் எவற்றையும் கணிப்பிட முடியாது சகோ!

    ஆதாரப்படுத்துங்கள்!
    புரட்சிக்காரன் ஐடியாமணியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஆதரவாக சூடான தலைப்போடு நான் பதிவிட்டு ஐடியாமணியின் முகத்திரையை கிழிக்கிறேன்!

    ஏன் நான் சொல்கிறேன் என்றால் நாம் இருவரும் கிளிநொச்சியில் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக புலிகளால் இயக்கப்பட்ட ஊடக கல்லூரியில் படித்தவர்கள்!

    ஐடியாமணி பற்றி நன்கு அறிந்தவன் நான்!
    யாரையாவது தாக்க வேண்டும் என்றால் அவனது புரோபைலில் தான் வந்து தாக்குவான்! இல்லையெனில் அவன் வலையில் தன் பெயரில் பதிவு எழுதுவான்.

    உங்களுக்காக பிரான்ஸில் இருந்து வேஷம் போட்டு அவனுக்கு இருக்கும் வேலையினையும் விடுத்து டைம் வேஸ்ட் பண்ண அவன் ஒன்றும் கோழை கிடையாது!

    புரட்சிக்காரன் பதிவு ரிலீஸ் பண்ணிய உடனே புரட்சிக்காரன் வலைக்குப் போய் பார்த்தீங்களானால் அவன் எங்கே இருந்து எழுதுகிறான் என்பதனை நீங்கள் இலகுவில் கண்டு பிடிக்கலாம்.

    சிபி அண்ணா பற்றி புரட்சி எழுதிய போது நான் தேடிப் பார்த்தேன். அவன் இருக்குமிடம் தமிழ்நாடு இந்தியா என்று தான் காண்பிக்கின்றது. பிரான்ஸில் அதிகாலையாக இருக்கும் நேரத்தில் புரட்சிக்காரன் எப்படி ஐயா பிரான்ஸில இருந்து பதிவு போட முடியும்?

    ReplyDelete
  123. @கவிதை வீதி... // சௌந்தர் //

    கவிஞர் குறித்த அத்தனை தகுதிகளும் நானும் அறிவேன் தங்களுடைய விளக்க தேவையில்லை.
    //

    சகோ, கவிஞனுக்கு கர்வம் இருக்க வேண்டும்! கர்வம் அவசியம்! ஏற்றுக் கொள்கிறேன்! நான் எவ்ளோ பொறுமையாக உங்கள் மனம் புண்படா வண்ணம் ஒரு கருத்தினை முன் வைத்திருக்கிறேன்! நீங்கள் எவ்வாறு கருத்து எழுதியுள்ளீர்கள்?
    என் முகத்தில் அறைவது போன்று அது பற்றி நீங்கள் விளக்கத் தேவையில்லை! ஹி...ஹி...
    Please Don't treat me as a slave.

    இந்த மாதிரித் தான் உங்கள் பதிவில் நான் ஏதாவது தவறு என்று பின்னூட்டம் எழுதினால் அடுத்த நிமிடமே அதனை நீக்கி விடுவீர்கள். நானும் ஆரம்ப காலத்தில் நினைத்தேன் ப்ளாக்கில் ஏதோ கோளாறு என்று!

    உங்கள் கவிதைகளில் சகோ, இவ் இடத்தில் சிறிய எழுத்துப் பிழை என்று அன்பாகச் சுட்டினாலே மாலை வந்து பார்க்கும் போது அந்தப் பின்னூட்டம் நீக்கப்பட்டிருக்கும்!

    இப்படியான நல்லுறவைப் பேணும் உங்களுக்காக புரட்சிக்காரனோடு நான் எப்படி ஐயா பரிந்து பேச முடியும்?

    அடுத்த விடயம், நான் பதிவுலகிற்கு வந்த புதிதில் முதன் முதல் சகோதரன் தமிழ்வாசி பிரகாஷ் வலையில் சீனா ஐயாவின் பேட்டியில் தான் ஒரு பேட்டி எவ்வாறு அமைய வேண்டும் என்று விமர்சனம் முன் வைத்தேன்! நான் பணிவாகவும், அன்பாகவும் சொல்லிய வார்த்தைகள் சகோதரன் பிரகாஷிற்குப் பிடிக்கவில்லை! ஆனாலும் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டு இன்று வரை எவ்வளவு நட்போடு இருக்கிறேன் என்று கேட்டுப்பாருங்கள்!

    தமிழின் நம்பர் ஒன் பதிவர் எனும் நிலையில் இருக்கும் சிபி அண்ணாச்சியிடம் கேட்டுப்பாருங்கள்! நான் விமர்சனம் சொன்னாலோ இல்லை யாராவது விமர்சித்தாலோ அவர் எவ்வாறு பதிலளிக்கின்றார் என்று! எங்கேயாச்சும் சிபி அண்ணரின் பதிவுகளில் உள்ள தவறுகளை நான் சுட்டிய போது அவர் அந்தப் பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறாரா? இல்லையே! அப்படியிருக்க இதற்கு எதிர்மறையாக நடக்கும் உங்களுக்கு ஆதரவாக எப்படி ஐயா நான் பேச முடியும்?

    கருத்து மோதல்களை கருத்துக்களால் நாகரிகமாக நீங்கள் கையாண்டிருந்தால் பரிந்து பேசலாம்!

    இரண்டு நான் உங்கள் பதிவுகளிற்கு வந்து பதிவினைப் படித்து, பின்னூட்டம் எழுதினால், நீங்கள் என் சகோ ரொம்ப லேட்டா வந்திட்டேன் என்று சொல்லி விட்டுப் போவீங்க!

    என் பதிவினைப் படிக்கவில்லையே எனும் ஆதங்கத்தில் சொல்லவில்லை! ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஒரு பதிவின் உட்கிடக்கையினைப் புரிந்து தாங்கள் கருத்திட முடியாவிட்டாலும் பரவாயில்லை! ஆனால் நான் ரொம்ப லேட்டு! உங்கள் பதிவுகளிற்கு நான் வரமுடியவில்லை, நீங்கள் விடிகாலையில் பதிவினைப் போடுறீங்க!
    நான் வரும் போது அதிக பின்னூட்டங்கள் இருக்கு! அதால உங்கள் பதிவினை விமர்சிக்க முடியலை! இப்படியெல்லாம் சொல்லுவதும், பல பதிவர்கள் அவர்களின் பதிவுகளில் என்ன கூறியிருக்கின்றார்கள் என்று புரியாமலே ரைட்டு ரைட்டு என நீங்கள் பின்னூட்டம் இடுகின்ற நிலையினையும் வைத்து எப்படி ஐயா நான் உங்களுக்காக பரிந்து பேச முடியும்?

    ReplyDelete
  124. @கவிதை வீதி... // சௌந்தர் //

    கவிஞர் குறித்த அத்தனை தகுதிகளும் நானும் அறிவேன் தங்களுடைய விளக்க தேவையில்லை.
    //

    சகோ, கவிஞனுக்கு கர்வம் இருக்க வேண்டும்! கர்வம் அவசியம்! ஏற்றுக் கொள்கிறேன்! நான் எவ்ளோ பொறுமையாக உங்கள் மனம் புண்படா வண்ணம் ஒரு கருத்தினை முன் வைத்திருக்கிறேன்! நீங்கள் எவ்வாறு கருத்து எழுதியுள்ளீர்கள்?
    என் முகத்தில் அறைவது போன்று அது பற்றி நீங்கள் விளக்கத் தேவையில்லை! ஹி...ஹி...
    Please Don't treat me as a slave.

    இந்த மாதிரித் தான் உங்கள் பதிவில் நான் ஏதாவது தவறு என்று பின்னூட்டம் எழுதினால் அடுத்த நிமிடமே அதனை நீக்கி விடுவீர்கள். நானும் ஆரம்ப காலத்தில் நினைத்தேன் ப்ளாக்கில் ஏதோ கோளாறு என்று!

    உங்கள் கவிதைகளில் சகோ, இவ் இடத்தில் சிறிய எழுத்துப் பிழை என்று அன்பாகச் சுட்டினாலே மாலை வந்து பார்க்கும் போது அந்தப் பின்னூட்டம் நீக்கப்பட்டிருக்கும்!

    இப்படியான நல்லுறவைப் பேணும் உங்களுக்காக புரட்சிக்காரனோடு நான் எப்படி ஐயா பரிந்து பேச முடியும்?

    அடுத்த விடயம், நான் பதிவுலகிற்கு வந்த புதிதில் முதன் முதல் சகோதரன் தமிழ்வாசி பிரகாஷ் வலையில் சீனா ஐயாவின் பேட்டியில் தான் ஒரு பேட்டி எவ்வாறு அமைய வேண்டும் என்று விமர்சனம் முன் வைத்தேன்! நான் பணிவாகவும், அன்பாகவும் சொல்லிய வார்த்தைகள் சகோதரன் பிரகாஷிற்குப் பிடிக்கவில்லை! ஆனாலும் நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டு இன்று வரை எவ்வளவு நட்போடு இருக்கிறேன் என்று கேட்டுப்பாருங்கள்!

    தமிழின் நம்பர் ஒன் பதிவர் எனும் நிலையில் இருக்கும் சிபி அண்ணாச்சியிடம் கேட்டுப்பாருங்கள்! நான் விமர்சனம் சொன்னாலோ இல்லை யாராவது விமர்சித்தாலோ அவர் எவ்வாறு பதிலளிக்கின்றார் என்று! எங்கேயாச்சும் சிபி அண்ணரின் பதிவுகளில் உள்ள தவறுகளை நான் சுட்டிய போது அவர் அந்தப் பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறாரா? இல்லையே! அப்படியிருக்க இதற்கு எதிர்மறையாக நடக்கும் உங்களுக்கு ஆதரவாக எப்படி ஐயா நான் பேச முடியும்?

    கருத்து மோதல்களை கருத்துக்களால் நாகரிகமாக நீங்கள் கையாண்டிருந்தால் பரிந்து பேசலாம்!

    இரண்டு நான் உங்கள் பதிவுகளிற்கு வந்து பதிவினைப் படித்து, பின்னூட்டம் எழுதினால், நீங்கள் என் சகோ ரொம்ப லேட்டா வந்திட்டேன் என்று சொல்லி விட்டுப் போவீங்க!

    என் பதிவினைப் படிக்கவில்லையே எனும் ஆதங்கத்தில் சொல்லவில்லை! ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஒரு பதிவின் உட்கிடக்கையினைப் புரிந்து தாங்கள் கருத்திட முடியாவிட்டாலும் பரவாயில்லை! ஆனால் நான் ரொம்ப லேட்டு! உங்கள் பதிவுகளிற்கு நான் வரமுடியவில்லை, நீங்கள் விடிகாலையில் பதிவினைப் போடுறீங்க!
    நான் வரும் போது அதிக பின்னூட்டங்கள் இருக்கு! அதால உங்கள் பதிவினை விமர்சிக்க முடியலை! இப்படியெல்லாம் சொல்லுவதும், பல பதிவர்கள் அவர்களின் பதிவுகளில் என்ன கூறியிருக்கின்றார்கள் என்று புரியாமலே ரைட்டு ரைட்டு என நீங்கள் பின்னூட்டம் இடுகின்ற நிலையினையும் வைத்து எப்படி ஐயா நான் உங்களுக்காக பரிந்து பேச முடியும்?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...