கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

21 November, 2011

இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்...?


பூக்களை அறுப்பது 
பாவம் என்று சொல்லிவிட்டு
முழம் பூவை தலையில் சூடிக்கொள்கிறார்...!
இது எப்படி நியாயம்...?

கோயிலுக்கு செல்கையில்
சப்தம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு
காலில் கொலுசு அணிந்து செல்கிறாய்...!
இது எப்படி நியாயம்...?

டவுள் நம்பிக்கை
அதிகம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு
கருப்பு தாவணி அணிகிறாய்...!
இது எப்படி நியாயம்..?

ரவு வான்நிலவை
அதிகம் நேசிப்பேன் என்று சொல்லிவிட்டு
வீட்டுக்குள்ளே முடங்கிவிடுகிறாய்..!
இது எப்படி நியாயம்..?

விதை எனக்கு பிடிக்கும் என்று
கண்சிமிட்டி சொல்லிவிட்டு
என் கடிதத்தை கிழித்துவிட்டாயே..!
இது எப்படி நியாயம்...?

காதல் தவறு என்று
எனக்கு வன்மையாய்  சொல்லிவிட்டு
கண்களில் காதல் பாடம் நடத்துகிறாயே..!
இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்..?

படங்கள் : நண்பர் இளையராஜாவின் ஓவியங்கள்

வருகைப்புரிந்த 
அனைவருக்கும் என் நன்றிகள்...!

28 comments:

  1. கவிதையின் வரிகள் அருமை...

    ReplyDelete
  2. காதலின் சுவை கவிதையில்.

    ReplyDelete
  3. அழகிய கவிதை .முரண்பாடு நியாயம் ஆகுமா என கேட்டு ! அருமை கவிதை

    த.ம 2

    ReplyDelete
  4. நல்லா இருக்கு நண்பா.. எல்லாம் இங்கே முரண் தானே ??

    ReplyDelete
  5. ஓவியங்களும் கவிதை...

    ReplyDelete
  6. ////காதல் தவறு என்று
    எனக்கு வன்மையாய் சொல்லிவிட்டு
    கண்களில் காதல் பாடம் நடத்துகிறாயே..!
    இதுமட்டும் எப்படி நியாயமாகிவிடும்..?
    ////

    சூப்பர் பாஸ்

    ReplyDelete
  7. நல்ல கவிதை
    நல்ல கேள்விகள்!!
    கவிநயம் அருமை!

    த ம ஓ 3

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. வலைப் பக்கம் வருவதேயில்லை
    கோபமா!?

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. என்னாது காதல் தவறா...?
    சம்திங் ராங்கா இருக்கே.....

    கவிதை கலக்கல் நல்ல ரசிக்கும் கேள்விகள்...!!!

    ReplyDelete
  10. நீங்கள் கேட்கும் நியாயங்கள்
    நியாயமாகத்தான் படுகிறது
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 11

    ReplyDelete
  11. @NIZAMUDEEN

    அட... உங்கள் சித்திர கவிதை அருமை.

    ReplyDelete
  12. //பூக்களை அறுப்பது
    பாவம் என்று சொல்லிவிட்டு
    முழம் பூவை தலையில் சூடிக்கொள்கிறார்...!//

    நானும் உங்கள் கட்சி தான். சூடிக்கொள்கி"றார்" வார்த்தையை எச்சரிக்கையாக பயன்படுத்தி இருக்கிறீர்கள்.

    பூவிலும் நீ இருப்பதால் தான் பூவை பறித்து உனக்கு நான் பூஜை செய்வதில்லை, "பார்க்கின்ற மலரூடு நீயே இருந்தி.." என தாயுமானவர் பாடுகிறார்.

    //கடவுள் நம்பிக்கை
    அதிகம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு
    கருப்பு தாவணி அணிகிறாய்...!
    இது எப்படி நியாயம்..?//

    கண்ணன் கருப்பு தானே...

    ReplyDelete
  13. //பூக்களை அறுப்பது // பூக்களை "அறுப்பதை" இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.

    ReplyDelete
  14. //////////
    அமர பாரதி said... [Reply to comment]

    //பூக்களை அறுப்பது // பூக்களை "அறுப்பதை" இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.

    ///////////



    உண்மைதான் நண்பரே...

    சொ்ல்லாட்சியில் பறிப்பது என்பது யதார்த்தமானது...

    ”பறிப்பது“ என்று சொல்லும்போது பூவை கொடுமைப்படுத்துவது போல் ஆகாது.

    கிள்ளுவது... என்ற வாய்ர்த்தையும் மலரை ஓரளவுக்கு காயப்படுத்தும் சொல்போல் தெரிகிறது.

    ஆகையாலே அறுப்பது என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.

    அறுப்பது என்ற வார்த்தை பூ கொலை செய்வதற்க்கு ஈடாககொள்ளப்படும் என்பதால் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன்.

    தாமரை, அல்லி, சாமந்தி போன்ற மலர்களை ஒரு சிறிய கத்திக்கொண்டுதான் அறுப்பார்கள் நண்பரே...

    தங்கள் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  15. அழகிய கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. >கவிதை எனக்கு பிடிக்கும் என்று
    கண்சிமிட்டி சொல்லிவிட்டு
    என் கடிதத்தை கிழித்துவிட்டாயே..!
    இது எப்படி நியாயம்...?

    ஓஹோ, அப்படிப் போகுதா? :-)

    ReplyDelete
  17. அன்பின் சௌந்தர் - அருமை அருமை - கவிதை அருமை - சொல் ஒன்று செயல் ஒன்றாக இருப்பதை அழகாக நயமாகச் சுட்டிக்காட்டுவது நன்று.

    சூடிக் கொள்கிறார் - சூடிக் கொள்கிறாய் என வர வேண்டுமா ....

    வருகைப்புரிந்த - வருகை புரிந்த என இருக்க வேண்டும்

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  18. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...