கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 January, 2011

முட்டை பரோட்டா (31-01-2011)

  • அன்பா வசக பெருமக்களே.. கவிதை போட்டு போர் அடித்து விட்டது..அதான் ஒரு வித்தியாசத்துக்காக
    (கண்டிப்பாக இது கொத்து பரோட்டாவுக்கு மாற்றாக இல்லை)

 தெரிந்துக் கொள்ளுங்கள் :
  • மைதா மாவு - அரை கிலோ
  • வெங்காயம் - 3
  • பச்சை மிளகாய் - 1
  • முட்டை - 3
  • எழும்பில்லாத கோழி - 4 , 5 துண்டுகள்
  • இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • மிளகாய் தூள் - சிறிதளவு
  • கரம் மசாலா தூள் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு


வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். கோழியை சுத்தம் செய்து சிறு சிறுத் துண்டுகளாக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பச்சை மிளகாய், கோழி துண்டுகள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் போட்டு நன்கு வதக்க வேண்டும். சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மைதா அல்லது கோதுமை மாவை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பிணைந்து வைத்துக் கொள்ளவும். முட்டையை ஒரு கிண்ணத்தில் அடித்து வைத்துக்கொள்ள வேண்டும்
மாவை எடுத்து சப்பாத்திக்கு வளத்துவது போல் ஓரங்கள் மெல்லியதாக செய்துக் கொள்ளவும்.
அதில் ஒரு தேக்கரண்டி வெங்காய கலவையை வைத்து,அதன் மேல் 3 ஸ்பூன் முட்டையை ஊற்றி விடவும்.
படத்தில் உள்ளது போல் முதலில் மேல் கீழ் பக்கங்களை உள்ளே வைத்து மடிக்கவும். பின்னர் இடது வலது பக்கங்களை (முட்டை வெளியே வராமல் இருக்கும்படி மடிக்கவும்.)
இதைப் போலவே மற்ற மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் பரோட்டாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
தீயை மிதமாக வைக்க வேண்டும். அதிகமான தீ இருந்தால் வெளியே பொரிந்து உள்ளே வேகாமல் இருக்கும்.
சுவையான முட்டை பரோட்டா ரெடி.
 (நன்றி : அறுசுவை சமையல்)


முடிந்தால் செய்து பாருங்கள் இல்லையென்றால் ஓட்டலில் வாங்கி சாப்பிடுங்கள்... அது சரி இப்போ நீங்க படிச்சிட்டு தமிழ் 10 ஒரு 20 ஓட்டு... இன்ட்லி-ல் 25 ஓட்டு.. தமிழ்மணத்தில் 10 ஓட்டு போடுங்க.. போட்டா பார்சல் வரும்.. இல்லான மவனே.. ராணகலமாயிடும் 
(யாருக்கு) யாருக்கோ...

30 January, 2011

விதிக்குள் சிக்காத விதி..!


லைகள் சலசலக்கிறது
அருகில் ஆலமரம்,,,!


டைவிடாமல் குறைக்கிறது
தெரு நாய்கள்,,,!
 

ரவில்கூட உழைக்கிறது
தெருமுனை கைபம்பு,,,!
 

டிக்கடி வந்துப்‌போகும்
மின்சார ரயிலின் இறைச்சல்,,,!
 

வீட்டு பரண்டையில்
உருட்டல் சத்தம்
உணவு தேடி எலிகள்,,,!
 

கிருஷ்ணன் மாமாவின்
குறட்டைச் சத்தம்,,,
பக்கத்து வீட்டு தாத்தாவின்
இருமல் சத்தம்,,,,!
 

டபடத்துக் கொண்டிருக்கிறது
மின் கம்பத்தில் மாட்டிய 

நூல் அறுந்த பட்டம்,,,!
 

சின்னத்தாயி பாட்டிக்கு
இதுதான் வேலை
பாக்கு இடிக்கும் சத்தம்,,,!
 

ங்கிருந்‌தோ வருகிறது
வா‌னொலிப் பெட்டியில்
ஆங்கிலம் கலந்த புதுப்பாடல்,,,!



வைகளையும் மீறி
அறைத் துக்கத்தில் இருக்கும்

என்னை தாலாட்டிக் கொண்டுதான் இருக்கிறது,,,!
 

தூரத்தில் இசைக்கும் 
குயிலின் பாட்டு,,,!

28 January, 2011

முத்துக்குமரனுக்கு வீரவணக்கம்


தமி‌ழீழம் தவித்தபோது
நாங்கலெள்ளாம் கண்ணீர் வடிக்கையிலே
உயிர் வடித்தவனே...

போர்வேண்டாம் என 
வாசலில் நாங்கள் தீபம் ஏற்றினோம்
நீயோ... வசலில் தீபமாய் எரிந்தாய்...

தீயில் வெந்தபிறகு கூட
தமிழினம் பற்றி பேசினாயே
உன் மனத்திடத்திற்காகத்தான் 
பழகிக்கொண்டிருக்கிறது தமிழகம்...!

சுயநலத்தோடு தீக்குளிப்பவர் மத்தியில்
தன்இனத்திற்காக தீக்குளித்தவனே
ஆண்டுகள் இரண்டோடியும்
உன் தேகத்தின் வாசனை இன்னும்
எங்கள் மூக்குள்ளே தான் 
முகாமிட்டுக்கொண்டிருக்கிறது

தன்மானத்தமி‌ழனே
நீ ஏற்றிய தீபம்தான் தழிழீழம் மலரும்மட்டும் 
இங்கே நீர்பூக்காமல் நிலைத்திருக்கும்

என்ன ஜாதி என்று எனை கேட்டால்
கர்வமாய் சொல்லிக் கொள்கிறோன்..
நான் முத்துக்குமரன் ஜாதி என்று...

இளகிய உணர்வுகள் உறைந்து குளிர்ந்தன
உனை நினைக்கும் போதெல்லாம்...

அழகிய கனவு கலைந்து கரைகிறது
உன் கனவு இன்னும் விடியவில்லையே என்று என்னும் போது..

நெடுஞ்சாலை மைல்கல்லைப்போல்
தமிழினத்தின் ஒவ்வோறு பாதையில்
நீ எதிர்ப்பட்டே ஆகவேண்டும்..

உன் நினைவு நாளில் மட்டுமல்ல்
எங்கள் வாழ்நாலெல்லாம்
உன் நினைவுதான்...

இனி உன் நினைவுகள் எங்களை
உயிர்ப்படையவிக்கும்...
 
இனி உன் தியாகம் எங்களை
இன்னும் போராட வைக்கும்...
(29-01-2011 தமிழினத்தியாகி திரு முத்துக்குமரன் அவர்களின் நினைவு நாளின் கவிதை வீதியின் கண்ணீர் கலந்த கவிதாஞ்சலி)

27 January, 2011

என் தரப்பு நியாயங்கள்

என் அன்பான வாசகப்பெருமக்களே...

பொதுவாக இந்தியா தங்களுடைய பயணத்திற்காக போக்குவரத்து கழகங்கள் மற்றும் ரயில் போக்குவரத்தையே நம்பி இருக்கிறது. இன்றும் தமிழகத்தில் அதிகமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகினறன. தற்போது கிராமங்களும் பயனடையும் வகையில் ”மினி பேருந்து” வசதியும் தமிழக அரசு செய்துள்ளது.

 தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 50 சதவீத பேருந்துகள் சரியான பராமரிப்பு இன்றி இயங்கிக்கொண்டிருக்கிறது. பேருந்தின் உன் பாகம் பார்க்க அறுவறுப்பாக உள்ளது. உ‌டைந்த கணப்படும் கண்ணாடிகள், கிழிந்து இருக்கும் இருக்கைகள், சுத்தப்படுத்தாமல் இருக்கும் தரை, இந்த அவலங்களுக்கு அரசை மட்டுமே குறை சொல்வதில் உடன்பாடில்லை எனக்கு, ‌பேருந்தின் இந்த நிலைக்கு நாமும் காரணம் இல்லையா?


இவற்றில் பாதுபாப்பதிலும். பராமரிப்பதிலும் நமக்கு வேலை ஒன்றும் இல்லை. பஸ் ஏறினோமா அடித்து பிடித்து இடம் பிடித்தோமா காசு கொடுத்து டிக்கெட் வாங்கினோமா? என்ற வேலையோடு நமது முடிந்து விடுகிறது..
அரசு 2 ரூபாய் அல்லது 1 ரூபாய் விலை ஏற்றிவிட்டால் கொடிபிடித்து போராட்டத்தில் இறங்கிவிடுகிறது ஒரு குழு,  டிக்‌கெட் வாங்கும் அனைத்து பயணிகளும் நடத்துனரை ஒரு கேள்வியாவது கேட்டுவிட்டுச் செல்வோம்.

ஆனால் லட்சகனக்கான பணம் போட்டு அரசு விடும் பேருந்துகளில் நாம் கண்ணியமாக நடந்து கொள்கிறோமா?


  • ‌பேருந்தில் நொருக்குதீணிகளை தின்று போடுவது
  • இருக்கை மற்றும் பேருந்தின் உள் பக்கம் முழுவதும் மார்க்கர் பேனாவால் பெயர்கள், கவிதைகள், தத்துவங்கள் என எதை எதையோ கிருக்கி வைப்பது.
  • உடனடி வேலை வாய்ப்பு என்ற துண்டு பிரசுரங்கள் ஓட்டுவது.
  • பஸ்க்கு வெளிபுறத்தில் இறந்தவரின் மரண அறிக்கை எழுதுவது.
  • சீட்டை கிழிப்பது.
  • டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது
  • முறையான இருக்கையில் ஆமராதது. (உத. முதியோர்,  அல்லது மாற்றுத்திறனாளிகளின் சீட்டில் இருப்பவர் ஒரு மாற்று திறனாளி வந்தால் இடம் கொடுப்பதில்லை)
  • மகளிரிடம் தரக்குறைவாக நடப்பது
  • படிக்கெட்டில் பயணிப்பது. (இந்த கல்லுரி மாவர்தான் என்றால் இப்போது பள்ளி மாணவர்கள் கூட படிக்கட்டில் தான் பயணிப்பது வழக்கமாகிவிட்டது)
 இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு வேளை அரசு இது உங்கள் சொத்து ‌என்று எழுதியதால்தான் நாம் இப்படி நடந்துக்கொள்கிறோமா?. தான் வாகனம் என்றால் எப்படி நடந்துக் கொள்கிறோம்  ஆனால் பொது சொத்து என்றால் அதற்காக இப்படியா? 

1 ரூபாய் ஏற்றினால் அரசுக்கு எதிராக போராடும் நாம்.. 
பஸ்ஸில் தவறு செய்யும் ஒரு சில பயணிகளுக்கு எதிராக வாய் திறப்பதில்லையே ஏன்?

இறந்த ஒருவன்
ஞாபகத்தில் இருந்து மறைந்துப் போனான்...
அந்த கட்சித் தலைவர்
கைதாகி விடுதலையும் ஆகிவிட்டார்
 
ஆனால் 
அந்த சம்பவய்களின் சுவடுகள் மட்டும்
இன்னும் பேருந்தில்...
 

அரசுடன் நாமும் நம்முடைய கடமையை பின்றவேண்டும் இதை வாசிக்கும் அன்பர்களே... ஒரு வேளை நீங்கள் பேருந்தில் பயணிக்கும் போது மேற்கண்ட குற்றங்கள் நடைபெறலாம். அந்த பயணியிடம் சண்டையிட வேண்டாம் குறைந்த படசம் ‌ஒரு கேள்வியாவது கேட்டுவிட்டு வாருங்கள்.

அப்போதுதான் நம் போக்கு வரத்து துறை உலக நாடுகளுடன் ஒப்பிட்டுபார்க்கும் நிலைக்கு வளறும்.

பத்துக்கு பதது (தமிழ் சினிமா இந்த வாரம்)

**************************************************************************************

சீமான்-விஜய்  கூட்டணி உறுதி


காவலன் வெற்றியடைந்த உற்சாகத்தில் இருக்கும் நடிகர் விஜய், சீமான் இயக்கத்தில் நடிக்கவுள்ள பகவலன் கதையில்தான் இப்போது ஆர்வமாக இருக்கிறாராம். புரட்சிகரமான படங்களை எடுத்து, வெற்றியும் கண்ட சீமானின் பகலவன் மூலம் தன்னை வெற்றி நாயகனாக தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற முடிவிற்கு வந்து விட்ட விஜய், பகலவன் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் கேட்டு விட்டார். இந்நிலையில் சமீபத்தில் சீமா‌னும், விஜய்யும் சந்தித்துக் கொண்டனர். அப்போது படத்தில் நடிக்கும் பிற நடிகர் - நடிகைகள், டெக்னீஷியன்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.

மேலும் இச்சந்திப்பின்போது, சீமானிடம் விஜய் ஒரேயொரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதாகப்பட்டது, பகலவனை ஆரம்பிச்சுட்டா எங்கயும் பிரேக் இல்லாம முடிச்சிடணும். அதனால படம் முடியிற வரைக்கும் நீங்க சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதையும் பேச வேண்டாம். மீண்டும் ஜெயிலுக்கு போகிற நிலைமையும் வரக் கூடாது, என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள், பிரச்னைகளில் சிக்கி விழிபிதுங்கி, ஒருவழியாக அதில் இருந்து மீண்டு வந்திருக்கும் விஜய்யின் வேண்டுகோளில் நியாயம் இருப்பதை உணர்ந்த சீமான், விஜய்யின் நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறாராம். 
**************************************************************************************************
காவலனுக்கு போட்டா போட்டி

 
காவலன் படம் விஜய்யின் சமீபத்திய படங்களின் தோல்வி கணக்கிற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இந்தப் படத்தை தெலுங்கில் ‌‌ீமேக் செய்கிறார்கள். பெல்லம்பொண்ட சுரேஷ் ‌ரீமேக் உ‌ரிமையை வாங்கியிருக்கிறார்.
மலையாளத்திலும், தமிழிலும் வெற்றிபெற்ற படம் என்பதால் காவலன் தெலுங்கில் ‌‌ரீமேக்கில் நடிக்க போட்டா போட்டி.
முதலில் பாலகிருஷ்ணா நடிப்பார் என்றார்கள். அவரது வயது படத்தின் கதைக்கு பொருந்தாது என்பதால் கோபிசந்தை ஹீரோவாக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதுவும் முடிவில்லை. பலரும் முட்டி மோதுவதால் கடைசி நிமிடத்திலும் ஹீரோ பெயர் மாறலாம். 
 ***************************************************************************************************
பில்லா வேலை ஆரம்பம்

மங்காத்தாவுக்குப் பிறகு அ‌ஜீத் பில்லா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். அ‌‌ஜீத்தின் கடைசி மற்றும் மாஸ் ஹிட் பில்லா என்பது முக்கியமானது. 
மங்காத்தா புரொட‌க்சனில் இருக்கும் போதே பில்லா 2-வின் வேலைகளை தொடங்கியிருக்கிறார் விஷ்ணுவர்தன். இவர்தான் பில்லா முதல் பாகத்தை இயக்கியவர். அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷபில்லா 2-க்கும் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன ஹெச்டி கேமராக்களை இந்தப் படத்துக்காக பயன்படுத்தவுள்ளனர்.
முதல் பாகத்துக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜஇரண்டாம் பாகத்துக்கும் இசையமைக்கிறார்.
பில்லாவில் ஹைலைட்டாக அமைந்தது காஸ்ட்யூம். இரண்டாம் பாகத்தில் காஸ்ட்யூமுக்கு மட்டும் பல லட்சங்களை செலவழிக்கவுள்ளனர். 
 ***************************************************************************************************  
வானம் ரிலீஸ் சிக்கல்

யங் சூப்பர் ஸ்டார் சிம்பு, பரத், அனுஷ்கா நடித்துள்ள படம் ‘வானம்'. புதுமுக இயக்குனர் க்ரிஷ் இயக்கியுள்ளார். வழக்கமாக படத்தில் இருக்கும் எல்லா பாடல்களை வெளியிடுவது தான் வழக்கம் ஆனால் வானம் படத்தில் சிம்பு-யுவன்சங்கர்ராஜா இணைந்து பாடியுள்ள ஒரு பாடல் மட்டும் கொண்ட சிடி ரிலீஸ் செய்யப்பட்டது. மற்ற பாடல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்தது. 

இதனை தொடர்ந்து வானம் படத்தை காதலர் தினத்தில் திரைக்கு வரும் என சொல்லப்பட்டது. ஆனால் சிம்புவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக வானம் பிப்.14 காதலர் தினத்துக்கு திரைக்கு வரவில்லை என்பது சிம்பு ரசிகர்களை வருத்தமடையச் செய்யும் விஷயம். படம் எப்போது திரைக்கு வரும் என்பது சிம்புவுன் உடல்நிலையைப் பொறுத்த விஷயம் என்கிறார்கள்.  
 ***************************************************************************************************  
ரஜினி ஜோடி தேர்வு
ரஜினிகாந்த்தை வைத்து சுல்தான் தி வாரியர் என்ற பெயரில் முதலில் அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்ததை இப்போது ராணா என்ற பெயரில் மாற்றி ரஜினியையே நேரடியாக நடிக்க வைத்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் அனிமேஷன் அல்லாத ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வருமாறு தீபிகா படுகோனேவை அழைத்துள்ளனராம். ஆனால் இதுவரை அவர் பதில் ஏதும் தரவில்லையாம்.

ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினி உருவாக்கிய படம்தான் சுல்தான் தி வாரியர். முதலில் முழுமையான அனிமேஷன் படமாக இது எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அதை அப்படியே மாற்றி முழுமையான பொழுது போக்குப் படமாக கொண்டு வருகின்றனர்.
அனிமேஷன் ரஜினி காட்சிகளை படத்தில் ஆங்காங்கு செருகி, புதிய படமாக மாற்றியுள்ளனர். படத்தின் பெயரையும் ராணா என்று மாற்றியுள்ளனராம். அனிமேஷன் அல்லாத காட்சிகளை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
அனிமேஷன் அல்லாத ரஜினிக்கு தற்போது ஜோடி தேடி வருகின்றனர். முதலில் திரிஷா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தீபிகாவை அணுகியுள்ளனராம்.

ரஜினி படத்திற்காக தன்னை அணுகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் தீபிகா. இருப்பினும் இன்னும் தான் முடிவெடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அவருடைய கால்ஷீட் புத்தகம் 2011 இறுதி வரை நிரம்பி வழிகிறதாம். இருப்பினும் ரஜினி படம் என்பதால் அந்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் தக்க வைத்துக் கொள்வதற்காக, கால்ஷீட்டில் அட்ஜெஸ்ட் செய்யும் முயற்சியில் இருக்கிறாராம் தீபிகா.

தான் ஒரு தீவிர ரஜினி ரசிகை என்று கூறியுள்ள தீபிகா, அவருடைய படத்தில் இணைந்து நடிப்பது பெருமைக்குரியது என்றும் கூறியுள்ளார்.

 ***************************************************************************************************  
விஷாலின் பட்டத்து யானை

 தேவதையை கண்டேன், திருவிளையாடல், மலைக்கோட்டை. காதல் சொல்ல வந்தேன் படங்களுக்கு பின் 'பட்டத்து யானை' படத்தை இயக்க உள்ளார். பூபதி பாண்டியன் 

முன்னதாக, சீயான் விக்ரம் நடிக்கும் வெடி படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படம் நின்று போனது. இதனால் சிறிது காலம் தன் கதைக்கு ஹீரோ தேடிக் கொண்டிருந்த பூபதி பாண்டியன் தற்போது விஷாலுடன் 'பட்டத்து யானை' படத்தில் இணைய உள்ளார். ஆனால் இது விக்ரமுக்கு தயாரான கதையா அல்லது புது கதையா என்பது தெரியவில்லை.
 ***************************************************************************************************  
கார்த்திகாவுக்கு ஈடுகொடுக்க முடியாம கஷ்டப்பட்டேன் : ஜீவா


மாஜி நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன் என்று நடிகர் ஜீவா கூறினார். கோ படத்தில் ஜீவாவுடன் ஜோடி போட்டிருக்கும் கார்த்திகா ராதாவின் மகள் என்பது கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். நடிப்பில் அம்மாவையே மிஞ்சி விடுவார் என்று கோ படக்குழுவினர் கார்த்திகா புராணம் பாடிக் கொண்டிருக்கின்றனர். டைரக்டர் முதல் படத்தின் ஹீரோ ஜீவா வரை அனைவருமே கார்த்திகாவை பாராட்டியிருக்கிறார்கள்.

கார்த்திகா பற்றி ஜீவாவிடம் கேட்டால்... கார்த்திகாவுக்கு அவங்க அம்மா ராதா ட்ரெய்னிங். வீட்ல ஹோம் வொர்க் பண்ணிட்டு வந்து நடிச்சாங்க. ஈடு கொடுத்து நடிக்க ரொம்பவே சிரமப்பட்டேன், என்கிறார். அந்த அளவுக்கு நடிப்புக் கலையை கற்று வைத்திருக்கிறாராம் கார்த்திகா. 

*************************************************************************************************
இளையராஜாவிடம் பாராட்டு பெற்ற இயக்குநர்

வர்ஷா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.சேகர்ராஜன் தயாரிக்கும் படம் 'அய்யன்'. 'மாமதுரை' வாசன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக, புதுமுகம் திவ்யா பத்மினி நடித்துள்ளார். ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கியுள்ள இந்த படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். வாலி, மு.மேத்தா, நா.முத்துக்குமார், கபிலன், சினேகன், சிற்பு பாலசுப்பிரமணியன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

இப்படத்தில் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று (ஜன.26) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இளையராஜா முதல் பாடல் சிடியை வெளியிட, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெற்றுக்கொண்டார்.

படம் பற்றி பேசிய இளையராஜா, "இயக்குநர் கதை சொன்னபோது பிடித்திருந்தது. அவருடைய இளவயது வேகம் அதில் தெரிந்தது. இப்போது படத்தை முடித்துவிட்டு வந்து காட்டியதும் அவருடைய திறமையை தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில் பாடலாசிரியர்களுடன், எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியத்தையும் பாடல் எழுத வைத்திருக்கிறேன். எனக்கு படம் பிடித்திருக்கிறது. இருந்தாலும் படத்தை மக்கள் பார்த்துதான் அவங்க கருத்தை சொல்லனும்.." என்றார்.

அதே நாள் மாலையில் நடைபெற்ற இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், சசி, ராஜகுமார், நடிகை தேவயானி ஆகியோர் கலந்து
கொ
ண்டார்கள். 
*******************************************************************************

தமிழில் ரிலீசாகும் ஹாலிவுட் ஆக்ஷன் படம்
 
ஹாலிவுட்டில் தயாரான “தி க்ரீன் ஹார்னெட்” என்ற ஆங்கில ஆக்ஷன் படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. சேத்ரோகன், காமரூன் டயாஸ், ஜேய்சூ ஆகியோர் நடித்துள்ளனர். மிக்கேல் காண்ட்ரி இயக்கியுள்ளார். 

லாஸ்ஏஞ்சல்சில் பிரிட்டின் தந்தை மர்மமாக சாகிறார். அதன் பின்னணியை கண்டு பிடிக்க பிரிட் புறப்படும் போது ஒரு நிழல் உலகம் இருப்பதை உணர்கிறான். குற்றவாளிகளை பிடிக்க முகமூடி அணிந்து குற்றவாளி போலவே மாறுகிறான். பரபரப துப்பாக்கி சண்டைகள், மர்ம சாகசங்களுடன் உருவாகியுள்ள இப்படம் 3டி தொழில் நுட்பத்துடன் வருகிறது.
*******************************************************************************
யோகாவால்  “உடல் எடை குறைத்தேன்” -நமீதா
 
நடிகை நமீதா கடும் உடற்பயிற்சி, யோகா மூலம் ஒல்லியாகி இருக்கிறார். இது பற்றி அவர் சொல்கிறார். குண்டான என் உடம்பு தற்போது பழைய பொலிவுக்கு மாறியுள்ளது. அதற்கு காரணம் உடற்பயிற்சி, யோகா, தினமும் ஜிம்முக்கு போய் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்தேன்.
 
வெளியூர் படப்பிடிப்புக்கு போனாலும் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்தேன். கடந்த இரு மாதங்களாக யோகாவும் செய்கிறேன். யோகா மூலம் உடலின் உள் பாகங்கள் சீராகின்றன. புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. விரைவில் புது நமீதாவை காணலாம்.
 
இளைஞன் படத்தில் ஒல்லியாக நடித்தேன். முதல்-அமைச்சரின் வசனம் பேசி நடிக்கும் வாய்ப்பு கிட்டியதற்காகவே அப்படத்தில் நடிக்க சம்மதித்தேன். இளைஞன் படம் பார்த்த ரசிகர்கள் பலர் என்னை வெறுத்தனர். அந்த அளவுக்கு எனது நடிப்பு அதில் சிறப்பாக அமைந்தது.
  ******************************************************************************

23 January, 2011

தேன் நிலவு...!


“என்ன சார்... ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா‌மே..?

“ஹி... ஆமாம் சார்...!“

“ஒருவனுக்கு ஒருத்திங்கறதுதான் நம்ம நாகரீகம்... பண்பாடு...!”
 
“உண்மைதாங்க... இருந்தாலும் சந்தர்ப்பம்.. சூழ்நிலை.. இப்படி ஆயிட்டுது..?”
 
“சரி... தேன் நிலவு எங்கே?”
 
“‌அதெல்லாம் ஒண்ணும் வேணாம் சார்... தேனாவது.. நிலவாவது..!”

“அது சரி.. ஹனிமூன்ங்கற பேரு எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு?”
 
“தெரியலையே..!”
 
“கல்யாணத்துக்குப் பிறகு மணமக்கள் முப்பது நாளைக்கு தினமும் தேன் சாப்பிடறது ஒரு பழக்கமாம்! அதை ஹனிமன்த் (HONEYMONTH)-ன்னு சொல்லுவாங்களாம்... இதுதான் பின்னாடி HONEY MOON -ன்னு ஆயிட்டுது..!”
 
“அப்படிங்களா..?”
 
“புது மணமக்கள் ஒரே கிண்ணத்துலே தேன்பருகும் வழக்கம் எல்லா ஐ‌ரோப்பிய நாடுகள்லேயும் இருந்ததாம்..!. மணமகள் வீட்டுக்கதவுலே தேனைத் தெளிக்கறது கிரேக்க விவசாயிகள் வழக்கமாம். ருமேனிய மக்கள் ‌பெண்ணின் முகத்தில் தேனைத் தடவுவாங்களாம்...? போலந்து மக்கள் மணபெண்ணின் உதட்டுலே தேன் தடவுவாங்களாம். சில நாடுகள்லே மணமக்கள் பலகாரங்களைத் தேன்லே தொட்டுச் சாப்பிடறது ஒரு மரபு. ஒரு கோப்பையிலே தேனை வச்சிக்கிட்டு ‌பெண்ணும் மாப்பிள்ளையும் மாறி மாறிச் சாப்பிடறதும் ஒரு வழக்கமாம்..!”
 
“இப்ப ஏன் சார் அதையெல்லாம்  ஞாபகப் படுத்தறீங்க?”
 
“புதுசாக் கல்யாணம் பண்ணியிருக்கீங்க.. அதனாலே தான்?”
 
“ரெண்டாம் கல்யாணம் தானே...!”
 
“உங்களைப் பொறுத்தவரைக்கும் அதுவும் ஒரு சந்தோஷமான சமாச்சாரம் தானே...!”
 
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க.. என்னோட முதல் மனைவி ரொம்ப நல்லவ சார்..!”
 
“அப்புறம் எதுக்கு ரெண்டாவது மனைவி?”
 
“இவ வந்த பிறகுதானே அவ எவ்வளவு நல்லவங்கறது எனக்குப் புரிஞ்சது...”

(அன்பர்களே... தமிழ‌ர் நெஞ்சங்களில் என்றும் குடியிருக்கும் மரியாதைக்குரிய திரு. தென்கச்சி சுவாமிநாதன் அவர்களின் நகைச்சுவை ததும்பிய இக்கட்டுரைகள் புத்தகத்தோடு முடிந்தவிடக்கூடாது எக்பதற்காகத்தான் அவருடைய கட்டுரைகளை பதிவாக இடுகிறேன்..)

22 January, 2011

டக்வோர்த் லூயிஸ்

நேற்று தென்னாப்பிரிக்கா எதிராக இந்தியா டக்வோர்த் லூயிஸ் முறையில் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டு ஒரு சரித்திர நிகழ்வை தள்ளி வைத்திருக்கிறது.. தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒரு நாள் தொடரை வென்று சாதனைப்படைக்க அடுத்த ஆட்டம் வரை காத்திருக்கவேண்டும். தோனி தலைமையில் இந்த சாதனையும் இந்தியா நிகழ்த்தும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்..

அது என்ன டக்வோர்த் லூயிஸ் முறை (D/L mathod)  தெரிந்துக் கொள்ளுங்கள்..

டக்வோர்த் லூயிஸ் முறை (Duckworth-Lewis method) அல்லது ட/லூ முறை என்பது துடுப்பாட்ட பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் (ODI) மற்றும் இருபது20 (T20) போட்டிகளில் ஆட்டம் வானிலை அல்லது பிற காரணங்களால் தடைபட்டால், இரண்டாவதாக ஆடும் அணிக்கான ரன் இலக்கை கணிதவியலின் உதவியுடன் அறுதியிடும் (நிர்ணயிக்கும்) ஓர் முறையாகும். 

இது ஆங்கிலேய புள்ளியியலாளர்களாகிய பிராங் டக்வோர்த், டொனி லூயிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாகும். பன்னாட்டு துடுப்பாட்ட மன்றம் இதனை சீர்தரமாக (நியமமாக) ஏற்றுக் கொண்டுள்ளது.இது பொதுவாக நியாயமான, துல்லியமான இலக்கை அறுதியிடும் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஆட்டம் இயல்பாக முடிந்திருந்தால் என்ன நடந்திருக்கலாம் என்று முன்னுரைக்க முயல்வதால் சிலநேரங்களில் சர்ச்சைகளை கிளப்புகிறது.

கணக்கிடும் தத்துவம்

ட/லூ முறையின் சாராம்சம் வளங்கள் ஆகும். ஒவ்வொரு அணியும் மிகுந்த கூடுதல் ஓட்டங்கள் எடுக்க இரு வளங்களைக் கொண்டுள்ளன; பெறவிருக்கும் ஓவர்களின் (அல்லது பந்துகளின்) எண்ணிக்கை மற்றும் இன்னும் விழாத விக்கெட்கள். எந்தமுறை ஆட்டத்திலும் எந்தநிலையிலும் ஓர் அணி கூடுதலாக எடுக்கக்கூடிய ஓட்டங்களின் எண்ணிக்கை இந்த இரு வளங்களைப் பொறுத்தே அமையும். பல்லாண்டு ஓட்ட எண்ணிக்கைகளை ஆராயந்தால் ஓர் அணியின் இறுதி எண்ணிக்கைக்கும் அந்த அணிக்குக் கிடைத்த இவ்விரு வளங்களுக்கும் இடையே ஓர் ஒப்பு இயைபு இருப்பதைக் காணலாம். இதனையே ட/லூ முறை பயன்படுத்துகிறது.

அச்சிடப்பட்ட அட்டவணைகளிலிருந்து, இவ்விரு வளங்களின் சதவீதத்தை மீதமிருக்கும் ஓவர்கள் (அல்லது பந்துகள்) மற்றும் விக்கெட்கள் இழப்பு இவற்றைக்கொண்டு அறிந்து மேற்பட்டு எழும் வளங்களின் குறைவிற்கு ஏற்ப மேலேயோ கீழேயோ சரிசெய்து ஓட்ட இலக்கினை அறுதியிட முடியும். இந்த சதவீதத்தைக் கொண்டு கணக்கிடப்படும் இலக்கு சமன் என்று கூறப்படும். இரண்டாவது அணி இதனை எட்டினால் வென்றதாக அறிவிக்கப்படும். அதே இலக்கை (கீழுள்ள முழு எண்ணிற்கு திருத்தப்பட்டது) அடைந்தால் ஆட்டம் சமநிலையில் முடிந்ததாகக் கொள்ளப்படும்
.
இம்முறையில் ஆட்டத்தின் வெற்றிதோல்விகளை கணக்கிட ஒரு நாள் துடுப்பாட்டப்போட்டிகளில் குறைந்தது 20 ஓவர்களும் இருபது20 ஆட்டங்களில் குறைந்தது 5 ஓவர்களும் ஆடப்பட்டிருக்க வேண்டும்.

உதாரணங்கள்

முதல்முறை ஆட்டத்தின்போது ஆட்டம் தடைபட்டால்


2008 தொடரில் நான்காவது இந்தியா- இங்கிலாந்து ஒருநாட்போட்டியில் முதல்முறை ஆட்டமே மழையினால் இருமுறை தடைபட்டு ஒவ்வொரு அணியும் 22 ஓவர்களே விளையாடுமாறு அமைந்தது. முதலில் ஆடிய இந்தியா 166/4 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்தின் ஓட்ட இலக்கு ட/லூ முறையில் 22 ஓவர்களில் 198 ஓட்டங்களாக அறுதியிடப்பட்டது.

இந்த எடுத்துக்காட்டில் முதல்முறை ஆட்டம் தடைபட்டால் இரண்டாம் முறை ஆடும் அணியின் இலக்கு ட/லூ முறையில் எவ்வாறு கூடுதலாகிறது என்பதை விளக்குகிறது. இங்கிலாந்து அணிக்கு முன்னதாகவே 22 ஓவர்கள் மட்டுமே ஆடவேண்டும் என்பது தெரிந்திருந்தமையால் தடைபட்ட முதல்முறை ஆட்டத்தில் இந்தியா எடுத்த ஓட்டங்களை விட கூடுதலாக எடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பை உள்ளடக்கியுள்ளது. இங்கிலாந்து 22 ஓவர்களில் 178/8 எடுத்ததால் ஆட்டத்தை இந்தியா ட/லூ முறையில் 19 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டது

இரண்டாம் முறை ஆட்டத்தின்போது ஆட்டம் தடைபட்டால்

2006ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் நடந்த முதல் ஒருநாள் போட்டி ஓர் எளிய எடுத்துக்காட்டாகும். முதலில் ஆடிய இந்தியா 49வது ஓவரிலேயே 328 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவதாக ஆடிய பாக்கித்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 47வது ஓவரில் ஒளிக்குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்த எடுத்துக்காட்டில், பாக்கித்தானின் இலக்கு, ஆட்டம் தொடர்ந்திருந்தால் மூன்று ஓவர்களில் (18 பந்துகளில்) 18 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்திருக்கும். ஆட்டத்தில் எடுத்த ஓட்டவேகத்தைக் கணித்தால் இதனை பெரும்பாலான அணிகள் எட்ட இயலும். ட/லூ முறையின்படியும் ஓட்ட இலக்கு 47 ஓவர் முடிவில் 304 ஓட்டங்களாக இருந்தது. ஆகவே பாக்கித்தான் ட/லூ முறையில் 7 ஓட்ட வேறுபாட்டில் வென்றதாக பதியப்பட்டது.

20 January, 2011

அன்புள்ள எதிரிக்கு...


இதுவரை நண்பர்களுக்கே
வாழ்த்துப்பாக்கள் பாடிய என் நா...

தோழர்களோடு ‌தோழமைப்பாராட்டி
சிறகு முளைத்த என் தூரிகைகள்...

முதன் முதலாய்...

என் எதிரிகளுக்கும்
வண்ணம் பூசிஅழகுபார்க்க துடிக்கிறது..

என் அன்புள்ள எதிரியே..

உன் வாழ்க்கைப்பதிவை பார்த்துதான்
என் படிக்கட்டுகள் பயணப்படுகிறது..

நீ வெற்றிக்கனியை பறிக்கும்போதெல்லாம்
என் தோல்விகள் துரத்துகிறது
அடுத்தமுறை அதை அடைந்து விட...

நீ கொண்டுள்ள வேகத்தை 
குறைத்துக் கொள்ளாதே
உன் வேகம் தான்

என் தற்காப்புக்கு என்னை தயார்படுத்துகிறது
உன் வேகம் தான் 
அதிகமாய் முயற்சிக்கவும்..
அதிகமாய் ஆயத்தப்படவும்..
‌அதிகமாய் போராடவும் கற்றுக் கொடுத்திருக்கிறது...

என் மீசைகளில்
சிலந்திகள் தங்கிவிடாமல் தூக்கி நிறுத்தவும்..

என் பாதங்கள் பாழ்படாமல்
பயணப்படவும்..!

என் உயிர் அணுக்கள் 
ஓய்வை தவிர்த்து உறுதிபடவும்..!
என் எதிரியே நீ மட்டும் தான் காரணம்

காயப்படுத்தியும்.. காயப்பட்டும்...
மீண்டுவிடுகிறேன்

உன் பயணமும் உன் வளர்ச்சியும்
என்னை தூங்கவிடுவதில்லை...!

என்னோடு போரிட நீ எடுத்த ஆயுதம் உழைப்பு..!
அதனால் தான்
கத்தியின்றி ரத்தமின்றி
பயணப்படுகிறது நம் போர்முறை

ஓ... அன்புள்ள எதிரியே

என்றாவது ஒருநாள் நீயோ.. நானோ..
வீ‌ழ்ந்து விடும் தருணம் வரும்போது
தேர்ல்  கொடுத்து தோழனாகிவிடுவோம்..
 
அதுவரை
நாம் எதிரிகளாகவே பயணிப்போம்...



என்றும் போராட்ட களத்தில்
சௌந்தரபாண்டியன்...

 

19 January, 2011

பத்துக்கு பத்து (தமிழ் சினிமா இந்த வாரம்)

கௌதம் படத்தை வாங்கிய கிளவுட் நைன்

கௌதமின் ஃபோட்டோன் கதாஸ் நிறுவனம் மூன்று படங்களை தயா‌ரித்து வருகிறது. நடுநிசி நாய்கள், வெப்பம், அழகர்சாமியின் குதிரை. 
அழகர்சாமியின் குதிரை படத்தை வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் வெண்ணிலா கபடிக்குழுவில் டீக்கடை வைத்திருப்பவராக நடித்த காமெடி நடிகர் ஹீரோவாக்கப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் விநியோக உ‌ரிமையை ஒட்டுமொத்தமாக கிளவுட் நைன் நிறுவனம் வாங்கியுள்ளது. கௌதமின் வாரணம் ஆயிரம் படத்தை வெளியிட்டதுதான் கிளவுட் நைனின் முதல் திரை முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. 


********************************************************************************************* 
மீண்டும் தன் கதையை துசு தட்டிய செல்வராகவன்!  

செல்வராகவன் அறிவித்து அறிவிப்போடு நின்றுபோன படங்கள் பல. டாக்டர்ஸ், இது மாலை நேரத்து மயக்கம், சிந்துபாத்... 'காதல் கொண்டேன்' படம் வெற்றிக்குப் பிறகு தனுஷை வைத்து 'டாக்டர்ஸ்' என்ற படத்தை இயக்க முடிவு செய்தார் செல்வராகவன். ஆனால் கதை விவாத்துடன் 'டாக்டர்ஸ்' முடிந்தது. தற்போது தனுஷ், ஆன்ட்‌ரியா நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தை இயக்கி வருகிறார். இது ஏற்கனவே அவர் அறிவித்த டாக்டர்ஸ் படம் என்ற பேச்சு எழுந்துள்ளது. காரணம் படத்தில் ஆன்ட்‌ரியா மருத்துவராக வருகிறார். மேலும் அவர் மனநல மருத்துவர் என்ற செய்தியும் கசிந்துள்ளது. படத்தில் தனுஷ் கண்ணாடி அணிந்து நாலு நாள் தாடியுடன் வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார். 

**********************************************************************************
நடிகை ரம்பாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
நடிகை ரம்பாவுக்கும், கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கனவருடன் கனடாவில் இருந்தார் ரம்பா.   நிறைமாத கர்ப்பமாக இருந்த அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டது. உடனடியாக டொரான்டோ நகரில் உள்ள மவுன்ட் சினை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக, ரம்பாவின் கணவர் இந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

*********************************************************************************** 
நடிகர் பா.விஜய் வீட்டில் கொள்ளை முயற்சி

வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் ராகவேந்திரா நகரில் சினிமா பாடலாசிரியரும் நடிகருமான பா. விஜய் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று நள்ளிரவு, 1 மணியளவில் இவர் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து இரண்டு நபர்கள் உள்ளே புகுந்தனர். சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த விஜய்யின் பெற்றோர் திடுக்கிட்டு எழுந்தனர். விளக்கு வெளிச்சத்தில் இரண்டு வாலிபர்களின் நடமாட்டம் தெரிந்தது. விஜய் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ரோந்து பணியில் இருந்த போலீசார் பா.விஜய் வீட்டிற்கு விரைந்தனர். போலீஸ் வருவதை அறிந்த மர்ம நபா¢கள் அங்கிருந்து  தப்பி ஓடிவிட்டனர். போலீசார், மர்ம நபர்களின் அடையாளங்களை விஜய்யின் பெற்றோரிடம் கேட்டறிந்தனர். மர்ம நபர்கள், திருடுவதற்காக வந்தார்களா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.

**********************************************************************************
தேவா வேதனை

ஆத்தூர் நகர பொங்கல் விழா கழகம் சார்பில் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்த இசை அமைப்பாளர் தேவா கூறியதாவது:-

தற்போது 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சின்னதிரைக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னர் மத்திய அரசில் வரைபட கலைஞராக தொலைக்காட்சியில் வேலைப்பார்த்தேன்.

நான் சினிமாவுக்கு வந்த பின்பும் அந்த வேலையில் தொடர்ந்தேன். ஏன் என்றால் சினிமாவில் தொடர முடியாது என்ற அச்சத்தில் இருந்தேன். சினிமாவில் `ரீமிக்ஸ்' பாடல்கள் என்று பாடல்களை மாற்றம் செய்கிறார்கள்.

இந்த மாற்றம் பாடலை படைத்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம் அல்ல. பலர் படம் வெளியிட முடியாமல், தியேட்டர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றன.

 எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போன்றவர்களின் பாடல்கள் எல்லாம் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. தற்போது வரும் புதிய பாடகர்களின் பாடல்கள் மக்கள் மனதில் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.

புதிய பாடகர்கள் 2 பாடல் முடித்துவிட்டு வேறு வேலைக்கு சென்று விடுகிறார்கள். இவர்கள் தரமான பாடல்கள் தரமுடியாததால் சினிமாதுறையில் நிலைக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
***********************************************************************************

வருடத்திற்கு இரண்டு படங்கள்!

சமீரா ரெட்டி தமிழில் நடித்துள்ள "நடுநிசி நாய்கள்' படம் தெலுங்கிலும் டப் ஆகிறது. வருடத்திற்கு இரண்டு பெரிய படங்களிலாவது நடிக்க வேண்டும் என்பது இவரது முடிவாம்.
*********************************************************************************** 
அதர்வா நடிக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள்  
பெயரையே கவிதையாக தேர்ந்தெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கணேஷ். இவரது முதல் படத்தின் பெயர், முப்பொழுதும் உன் கற்பனைகள்.
லண்டன் கணேஷ் தயா‌ரிக்கும் இந்தப் படத்தில் சமீபத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கிறார். முதல் படத்திலேயே நடிப்பில் முத்திரைப் பதித்த அதர்வா இந்தப் படம் தன்னை தமிழகமெங்கும் கொண்டு சேர்க்கும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்துக்காக பல வாரங்கள் நடிப்புப் பயிற்சியும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த சின்சியா‌ரிட்டிக்காகவே இந்தப் படம் ஓடும் என்கிறார்கள் ஸ்டுடியோ வட்டாரத்தில். 



***********************************************************************************


எஸ்ஏசி; அலுவலக எ‌ரிப்பு காட்சி 

சட்டப்படி குற்றம் என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். இதில் தனது மகன் விஜய்யின் காவலன் படத்தை திரையிடவிடாமல் தடுத்த அரசியல் சக்திகளை வெளுத்து வாங்கியிருக்கிறார். இதற்காக அவர் கைகோர்த்திருப்பது சத்யரா‌ஜ் மற்றும் சீமான்.

இந்தப் படத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சித்திருக்கிறாராம். இதற்காகவே ஒரு நீதிமன்ற காட்சியை படத்தில் சேர்த்திருக்கிறாராம் எஸ்ஏசி. அதேபோல் மதுரை தினகரன் அலுவலகத்தில் மூன்று அப்பாவிகள் உயிரோடு கொளுத்தப்பட்டதை நினைவுப்படுத்தும் விதமாக ஒரு காட்சியையும் சமீபத்தில் ஷூட் செய்திருக்கிறார்.

காட்சிகளில் ரவுண்ட் கட்டுகிறவர் வசனத்தில் நெருப்பை கக்கியிருக்கிறார். ரணகள ஆட்டத்துக்கு ரசிகர்கள் இப்போதே தயார். 


***********************************************************************************
ஆடுகளத்தை தாக்கும் சுனாமி 

இப்படியே போனால் மௌனப் படம் மட்டும்தான் எடுக்க முடியும்போல.
எப்படி வசனம் எழுதினாலும், இது எங்களை கேவலப்படுத்துது என்று முண்டாதட்ட ஒருசிலர் இருக்கதான் செய்கிறார்கள். ஆடுகளம் படமும் இதற்கு பலியாகியுள்ளது.
பயத்தைப் பற்றி இந்தப் படத்தில் பேசும் தனுஷ், பயமா... எனக்கா... நாங்க சுனாமியிலேயே ஸ்விம்மிங்கை போடுறவங்க என்பார். சும்மா ரைமிங்காக எழுதப்பட்ட வசனம்.
இது சுனாமியால் வீடு, வாசல், உறவுகளை இழந்த எங்களை அவமானப்படுத்துகிறது என மீனவ அமைப்புகள் கூட்டம் போட்டு கொதிப்பை காட்டியிருக்கின்றன.
மேலும் குறிப்பிட்ட வசனத்தை உடனே நீக்க வேண்டும் என்று கோ‌ரிக்கையும் வைத்திருக்கிறார்கள். 


*********************************************************************************** 
அருள்நிதி நடிக்கும் உதயன் 

முதல் படத்திலேயே தனது திறமையை வம்சம் 'அருள்நிதி' வம்சம் படத்துக்குப் பிறகு ஏராளமான கதைகளை கேட்டு வந்தார். இந்நிலையில் இரண்டு கதைகளை மட்டும் ஓகே செய்திருந்தார் அருள்நிதி. ஒன்று ஈரம் அறிவழகன் கூறிய கதை. இரண்டாவது அறிமுக இயக்குனர் சாப்ளினுடையது. ஆனால் சாப்ளினை அழைத்து படத்தை தொடங்குவதற்கான உத்தரவை வழங்கியிருக்கிறார் அருள்நிதியின் தந்தையும், படத்தை தயா‌ரிக்கப் போகிறவருமான மு.க.தமிழரசு. நகரத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இந்தப் புதிய படத்துக்கு உதயன் என்று பெயர் வைத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படம் முடிந்த பிறகு அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பார் என தெரிகிறது.

**********************************************************************************

17 January, 2011

இளையராஜாவுக்கு தமிழக அரசு விருது

ஆண்டு தோரும் தமிழக அரசு கலை-பாண்பாட்டுதுறை சார்பில் இயல்-இசை-நாடகத்தில் சாதித்த சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.


அதன் படி இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இசைஞானி இளையராஜாவுக்கு “எம்.எஸ் சுப்புலட்சுமி” விருது வழங்கப்படுகிறது.




இலக்கியத்துறையில் சாதனைப்படைத்த இலக்கியவாதி சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களுக்கு “பாரதி விருது“ அறிவிக்கப்பட்டுள்ளது.



நாட்டியத்துறையில் சிறந்து விளங்கும் திருமதி பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு “பால பாரதி விருது”ம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விருதுகளை இம்மாத இறுதியில் கலை-பண்பாட்டுத்துறையால் முதல்வர் தலைமையில் வழங்கப்படும் இத்துடன் 1 லட்சம் ரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்படும்  என்று அறிவி்க்கப்பட்டுள்ளது.

15 January, 2011

காகித புலிகள்...


“ஏன் சார்... எனக்கு ஒரு சந்தேகம்....”

“என்ன?”

“காகிதப் புலின்னா என்னா சார் அர்த்தம்?”

“பார்க்கறதுக்குப் பலசாலி மாதிரி இருந்துக்கிட்டு உள்ளுக்குள்ளே பலமில்லாமே இருக்காங்க பாருங்க.. அவங்களைத்தான் காகிதப் புலின்னு சொல்லுவாங்க..”

“அப்படிங்களா?”

“ஆமாம். இந்த வார்த்தையை முதல்லே உபயோகப் படுத்தினவர் யார் தெரியுமா?”

“முன்னாள் சீன அதிபர் மா-சோதுங்-தான். 1946 ஆம் ஆண்டிலே ஒரு நிருபர்கிட்டே பேசும்போது அவர் சொன்னாராம்”

“என்ன சொன்னார்..?”

“பிற்போக்குவாதிகள் எல்லோருமே காகிதப் புலிகள் (Paper Tigers) பார்வைக்கு பயங்கரமாக தெரிவாங்க. ஆனா உண்மையிலே அவங்க பலம் இல்லாதவங்க.. அப்படின்னாராம்.”

“அப்படியா?”

“ஆமாம். அதுக்கப்புறம் அந்த வார்த்தையை நிறையப்பேர் உபயோகப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க?”
 
“அதுதான் இந்த அளவுக்கு ஆயிட்டுதா?”
 
“எந்த அளவுக்கு?”
 
“என் சம்சாரமே என்னைப் பார்த்துச் சொல்லும் அளவுக்கு..!”
 
“என்ன சொன்னாங்க?”
 
“என்னப் பார்த்து நீங்க ஒரு காகிதப் புலிங்கறா சார்!”
 
“நீங்க வீட்டுலே தைரியமா இருக்கணும்.. துணிச்சலாப் பேசணும்... அவங்க ஏதாவது தப்பு செய்தாக் கண்டிக்கணும்!”
 
“நான் அப்படித்தான் சார்... அவ ஏதாவது தப்புப் பண்ணினா நான் உடனே கண்டிப்பேன். ஆனா அதுலேயும் ஓர் இடைஞ்சல்..!”
 
“எனன?”
 
“நான்திட்டினா அவ தன் உயிரை அழிசுடுவேன்ங்கறா சார்!”
 
“அதுக்காகவா பயப்படுறீங்க?”
 
“என்ன சார் அவ உயிரா நினைக்கிறது.. என்ன தானே...”

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்
 

இளைஞன் - திரைவிமர்சனம் (First in Net)

1959 ஆம் ஆண்டு கப்பல் கட்டும் தொழிற்சாலையில் முதலாளி வம்சத்திற்கும், அடிமைப்பட்டு கிடக்கும் தொழிலார்களை ஒன்றிணைத்துப் போராடும் இளைஞனின் கதையே இளைஞன். 

கதை :

ரஷ்ய நாவலாசி‌ரியர் மாக்சிம் கார்க்கியின் நாவலை தழுவி முதல்வர் கருணாநிதி கதை திரைக்கதையுடன் எழுதியிருக்கும் படமே இளைஞன்.

1959 கா‌லகட்‌டத்‌தி‌ல்‌ செ‌ன்‌னை‌க்‌கு அருகே‌ உள்‌ள ஒரு கி‌ரா‌மத்‌தி‌ல நி‌கழும்‌ கதை‌. தெய்வநாயகம் (சரத்பாபு) கடற்‌கரை‌யோ‌ர அந்‌த கி‌ரா‌மத்‌தி‌ல்‌, ஆங்கிலேயர்களுக்காக ஒரு‌ கப்‌பல்‌ கட்‌டும்‌ தொ‌ழி‌ற்‌சா‌லை‌ நி‌றுவப்‌படுகி‌றது.  ஆயி‌ரக்‌கனக்‌கா‌ன தொ‌ழிலா‌‌ளர்‌கள்‌, இந்‌த கப்‌பல்‌ கட்‌டும்‌ தொ‌ழி‌ற்‌சா‌லை‌யை‌ நம்‌பி‌ இருக்‌கி‌ன்‌றனர்‌. தங்‌களி‌ன்‌ வி‌டி‌வெ‌ள்‌ளி‌யா‌க, சோ‌று போ‌டும்‌ சொ‌ர்‌க்‌கமா‌க அந்‌த கப்‌பல்‌ கட்‌டும்‌ தொ‌ழி‌ற்‌சா‌லை‌ தி‌கழும்‌ என்‌று நம்‌பி‌யவர்‌களுக்‌கு, வெ‌கு வி‌ரை‌வி‌லே‌யே‌ அந்‌த நி‌னை‌ப்‌பு‌ தவறா‌னது என்‌பது பு‌ரி‌ந்‌து போ‌கி‌றது. அதிகாரமும், முரட்டு தனமும் கொண்ட தெய்வநாயகத்தின் மகன் ராஜநாயகம் (சுமன்) தோழிளாளர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்குகிறார். தினமும் 16 மணிநேரம் வேலை செய்யும்படி உத்திரவிடுகிறார். இதனால் கோபமுற்ற தொழிளாளர்களை சித்திரவதை செய்கிறார். தன் தந்தையான ஆரோக்கியசாமியை (நாசர்) கொன்ற பிறகு அந்த வேலைக்கு சேரும் கார்க்கி (விஜய்) அங்கு நடக்கும் அநியாயங்களை கண்டு பொங்கியெழுந்து ஒரு புரட்சியை ஏற்படுத்தி அனைத்து தொழிலார்களையும் ஒன்று திரட்டி ஆரம்பித்த கப்பலை கட்டிமுடித்து அந்த கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து எவ்வாறு அனைவரையும் மீட்கிறார் என்பதே கதை.

விமர்சனம் :

கார்க்கி என்ற கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக அர்பணித்துக்கொண்டு ஆரம்பமுதலே புரட்சிகர வசனம் பேசி அடிமை தனத்தை வெட்டிமுறிக்க ஆயுதம் தான் சரியானவழி என்று ஆயுதம் எடுத்து தன்னுடைய தாயின் (குஷ்பூ) அறிவுரைப்படி புரட்சி வழியில் போராடத்துணிந்து வஞ்சகர்களின் சூழ்ச்சிவலையில் அகப்பட்டு ஆயுதம்தான் தீர்வுக்கு ஒரேவழி என்று ஆயுதம் ஏந்தி ஆளும் வர்கத்தினரை ஒழித்துக்கட்டும் கம்பீரமான இளைஞனாக நடித்திருக்கிறார், பா.விஜய். 

தொ‌ழி‌லா‌ள தோ‌ழர்‌களோ‌டு முற்‌போ‌க்‌கு சி‌ந்‌தனை‌களை‌ பகி‌ரங்‌கமா‌க பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌ளும்‌ அவன்‌, நே‌ர்‌மை‌யா‌க தனது எழுத்‌தி‌ன்‌ மூ‌லம்‌ நம்‌பி‌க்‌கை‌ வி‌தை‌களை‌ வி‌தை‌க்‌கி‌றா‌ன்‌. ஆனா‌ல்‌ பே‌னா‌ முனை‌ எல்‌லா‌ சூ‌ழ்‌நி‌லை‌களுக்‌கும்‌ சி‌றந்‌ததல்‌ல என்‌பதை‌ நி‌னை‌ப்‌பவன்‌ சமயங்‌களி‌ல்‌ ஆயு‌தத்‌தை‌யு‌ம்‌ பயன்‌படுத்‌த வே‌ண்‌டும்‌ என்‌பதை‌ உணர்‌ந்‌து ஆயு‌த போ‌ரா‌ட்‌ட பா‌தை‌க்‌கு தன்‌னை‌ மா‌ற்‌றி‌க்‌கொ‌ள்‌கி‌றா‌ன்‌.

இவருடைய நடிப்பு ஒரு ஆக் ஷன் கதாநாயகனுக்கு தேவையான அனைத்து அம்சமும் அடங்கியுள்ளது. கார்க்கி என்ற கதாபாத்திரத்தில்  கலைஞரின் வீர வசனங்களை பேசி முற்போக்கு‌ இளை‌ஞனாக அதி‌கா‌ர வர்‌க்‌கத்‌துக்‌கு சம்‌மட்‌டி‌ அடி‌க்‌கி‌றா‌ன்‌. வஞ்‌சி‌க்‌கப்‌பட்‌டவர்‌களி‌ன்‌ வா‌ழ்‌வி‌ல்‌ பு‌துச்‌சி‌றகு பூ‌ட்‌டி‌னா‌ன்‌.  

நாயகி ரம்யா ரம்பீசன் கதைக்கு தேவைபடவில்லை செட்டியார் மகள் என்ற கேரட்டரில் நாயகனை சுற்றிவரும் இவர் டுயட் பாடல்களுடன் இவ்ர் வேலை முடிகிறது..

வில்லனாக சுமன் படம் முழுக்க மிரட்டியிருக்கிறார் இவரின் அடியாட்களுடன் இவர் செய்யும் அட்டகாசம் சூப்பர்.

கதைக்கேற்றவாறு அத்தனை கதாபாத்திரங்களும் கச்சிதமான பொருந்தியிருக்கிறார்கள். சுமனி‌ன்‌ கா‌தலி‌யாக சே‌னா‌ வே‌டத்‌தி‌ல்‌ நடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ நமீதா. படத்‌தி‌ல அவர்‌ கவர்ச்சி காட்டி வி‌ல்‌லத்தனம் செய்திருக்கிறார் 

கா‌மெடி தேவையில்லை என்பதால் வடிவேலை சரியாக பயன்படுத்த வில்லை. ஒரு மிகபெரிய நடிகப்பட்டாளமே நடித்திருக்கிறது.
 
தோட்டா தரணி கலை ஒரு முழுநீள கப்பலையும், 50 ஆண்டுகளுக்கு முன்னைய கலாச்சாரத்தையும் கண்முன்னே காட்டியிருக்கிறது வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்கள் பா.விஜய். மூன்று பாடல்களை வெளிநாட்டில் படமாக்கியுள்ளனர்.
 

சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கம் இந்த இடத்தில் படத்தை தோய்வில்லாமல் கொண்டுச் சென்றிருக்கிறார்.


இறுதியாக கலைஞரின் வீர மற்றும் புரட்சி வசனங்கள் அனைவரையும் கைத்தட்ட வைத்திருக்கிறது. தன்னுடை 75-வது படத்திலும் தன்னுடைய 80-வது வயதிலும் இன்னும் வீரியம் குறையால் எழுதியிருப்பது பாரட்டுக்குரியது. ‌கலைஞருக்கு ஒரு வணக்கம் வைத்தே ஆகவேண்டும்.
 

இந்த இளைஞன் அனைவராலும் பேசப்படுவான்
 

நண்பர்களே இந்த விமர்சனம் படித்த கையோடு அப்படியே ஒரு பின்னுட்டம் இடுங்களேன்.. 
Related Posts Plugin for WordPress, Blogger...