கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 December, 2012

2012-ன் சிறந்த 10 பாடல்கள் / 2012 Top 10 Songs

2012-ல் தமிழில் கலக்கிய சிறந்த 10 பாடல்களின் தொகுப்பு....

******************************

‌நண்பன் : ‌அஸ்க அஸ்கா

******************************
வேட்டை : பப்ப.. பப்ப...

******************************
மனம் கொத்தி பறவை : ஊரான ஊருக்குள்ளே...


******************************
அட்டக்கத்தி : ஆடிப்போனா ஆவணி...


******************************
கழுகு : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்


******************************
ஒரு கல் ஒரு கண்ணாடி : வேணா மச்சாம் வேணாம்...



******************************
3 : ஒய் திஸ் கொலவெறி...


******************************
நான் : தப்பெல்லாம் தப்பேயில்லை...



******************************
கும்கி : சொல்லிடாலே....


******************************
துப்பாக்கி : கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன்...

விஜய், விஜயகாந்த், பவர்ஸ்டார் / 2012 -ன் Top 10 பிரபலங்கள்


2012-ல் நம் பதிவுலகில் ஆயிரக்கணக்காக பதிவுகள் வெளிவந்திருக்கும். நானே 143 பதிவுகள் போட்டிருக்கே பாருங்களேன். ஒவ்வொறுவரும் தன்னுடைய படைப்புகளை மற்றவர்கள் ரசிக்கும் படி அழகாக தொகுத்து கொடுத்திருந்தனர். சில பொது தலைப்புகளில் மற்றும் விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி அதிக பதிவுகள் வெளிவந்திருந்தது.


அப்படி 2012-ம் ஆண்டில் எந்த தலைப்புக்கு அல்லது எந்த விஷயத்துக்கு அதிகமுக்கியத்துவம் கொடுத்து அதிக பதிவுகள் வந்தது என்று சிறந்த 10 அம்சங்களை இங்கு தொகுத்திருக்கிறேன். இவைகள் வரிசைப்படுத்தப்படவில்லை. அவைகள்.

*****************************************



இந்தவருடம் அதிகஅளவில் அனைத்து பதிவர்களும் பகிர்ந்துக்கொண்ட செய்திகளில் முதல் இடம் வகிப்பது இந்த மின்தடை குறித்த பதிவுகள்தான்.

கவிதை, கட்டுரை, கண்டன பதிவுகள், கேலி சித்திரங்கள், பேஸ்புக்கில் தகவல்கள் என அதிகமானோர் இந்த மின்தடையை பதிவிட்டார்கள்.

*****************************************
 
இந்த வருடமும் விஜயகாந்த் பற்றிய அதிரடி பதிவுகள் வந்தது. சட்டமன்றத்தை விட்டு வெளியேற்றம், தன்னுடைய கட்சி அமைச்சர்கள் அதிமுக வுக்கு ஆதரவான செயல்பாடு போன்ற விவகாரங்களில் விஜயகாந்த் பரபரப்பாக காணப்பட்டார்.

*****************************************
 அம்மாவை பற்றி சொல்லவே தேவையில்லை.
இந்த வருடம் முழுவதும் அம்மா மற்றிய பதிவுகள் அதிகஅளவில் வந்து பதிவுலகை கலக்கியது.

*****************************************

விஜய் இந்த வருடமும் அதிக பதிவுகளில் இடம் பிடித்து அதிக பதிவர்களுக்கு அதிக அளவில் ஹிட்ஸ் எடுக்க உதவினார். நண்பன் படம் அது குறித்த விமர்சனம், துப்பாக்கி படம் விமர்சனம், முஸ்லீம் பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு என அஜித்தை விட விஜய் இந்த வருடம் அதிக பதிவுகளில் இடம்பிடித்தார்.

*****************************************

ஆகஸ்ட் மாதம் ‌சென்னையில் நடைப்பெற்ற  பிரமாண்ட பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி முடிவு செய்ததில் இருந்து அதன் காணொளிகளை வெளிட்ட வரை அது குறித்து எண்ணற்ற பதிவுகள் பதிவுலகால் பகிரப்பட்டது. அதுவும் பரபரப்பு தலைப்புளுடன்.

*****************************************

பவர் ஸ்டார் இந்த வருடமும் பதிவுலகால் அதிக அளலில் கவனிக்கப்பட்டார். அவருடைய கைது, திரைப்படங்கள், போன்றவை அதிக அளவில் இடம்பிடித்தது. இன்னும் தலைப்பில் பவர்ஸ்டார் என்று பதிவிட்டால் ஹிட்ஸ் அள்ளும் என்று நிறைய பதிவர்களுக்கு தெரியும்.

*****************************************
இந்த ஆண்டு இருமுறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதிதேர்வு, VAO, TNPSC, போன்ற ‌தேர்வுகள் குறித்த பதிவுகளும் அதுகுறித்த செய்திகளும் அதிக இடத்தை பிடித்திருந்தது.

*****************************************

படம் துவங்கியல் இருந்து பரபரப்பு தகவல்களை கொண்டதாக இந்த விஸ்வரூப தகவல்கள் இருந்து வருகிறது.

*****************************************

அன்னீய முதலீடு குறித்த வால்-மார்ட் குறித்த பதிவுகளும் அதிக அளவில் இடம் பிடித்தது.

*****************************************

 ‌எல்லாவருடமும் போல் இந்த வருடமும் அதிக பதிவுகளில் இடம்பிடித்தவர் அறிக்கை அறிஞர் நம்ம கலைஞர்.

*****************************************

வேறு ஏதாவது அதிக அளவில் பதிவுகளாக வந்திருந்தால் தங்களுடைய கருத்தாக பதிவுசெய்யுங்கள்.

30 December, 2012

விஸ்வரூபம் பிரச்சனை... நான் தியேட்டர் கட்டப்போகிறேன்: கமல் அதிரடி


ரூ.92 கோடி செலவில் கமல் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படம் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. ஏர்டெல், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், சன் டைரக்ட் ஆகிய டி.டி.எச்.களில் வெளியிடப்படுவதாக கமல் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் டாடா ஸ்கை டி.டி.எச்.சிலும் இப்படத்தை வெளியிடப்போவதாக கமல் தெரிவித்துள்ளார். இதுகுறித்தான அறிவிப்பை நேற்று பத்திரிகையாளர்களுக்கு கமல் அறிவித்தார்.

இதுகுறித்து கமல் மேலும் கூறும்போது, இந்த முயற்சியைப் பற்றிச் சொல்லும்பொழுது இது நிகழும் என்பது பல பேருக்குத் தெரியும். என்னவோ நான் தான் கண்டுபிடித்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது டி.டிஎச்சையே நான் தான் கண்டு பிடித்தேன் என்று நினைக்கிறார்கள். அப்படி கிடையாது.

இதற்கு முன்பாக ஒரு வடநாட்டு நண்பர் ஒருவர் முயற்சி செய்து தோற்றுப்போன ஒன்று. அவர் கூழுக்கும் மீசைக்கும் ஆசைப்பட்டு விட்டார். அதாவது அவர், தியேட்டர்காரர்களிடம் எம்ஜி வாங்கிவிட்டு டி.டி.எச்சிலும் கொடுத்து விட்டார். அதனால் தியேட்டர்காரர்கள் அவருக்கு எதிராக திரும்பி விட்டார்கள். அது நியாயாமான ஒன்றுதான்.

அவர்களுக்கு எதிரான ஒரு விஷயம் என்றால் அவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். ஆனால் நான் அப்படி இல்லை என்னை வாழ வைத்த இந்தச் சூழலை கெடுத்துக்கொண்டு நான் எந்த வேலையையும் செய்ய விரும்புவன் இல்லை. ஒரு விவசாயி வயலில் வேலை செய்வான். ஆனால், அதை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். அதைதான் நான் செய்கிறேன்.

செல்போன் வந்தது, அதில் பேசலாம் என்று தெரியும், அதை கையில் எடுத்து பேசினார் சுட்டு விடும் என்று பல பேர் பயந்தார்கள், நான் தைரியமாக எடுத்துப் பேசினேன். எனக்கு எதிர்முனையில் ஒருவர் பேசினார் அதனால் நான் பேசினேன் அவ்வளவுதான்.

சாட்டிலைட் சேனல்கள் வந்தபொழுது அதற்கு நான் ஆதரவாக குரல்கொடுத்தேன், இது விஞ்ஞானம் வரத்தான் செய்யும் என்று சொன்னேன் என்பதற்காக என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால் நான் தைரியமாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னேன். அந்த தைரியம்தான் இன்று உங்கள் முன்னால் என்னை நிற்க வைத்திருக்கிறது. அதேபோலத்தான் சொல்கிறேன் இது பிழையல்ல, குற்றமல்ல அதனால் செய்கிறேன்.

தியேட்டர்காரர்களுக்கு அது சொத்து, ஆனால் இந்தப்படம் எனக்கு செலவு. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் என்னால் செலவு செய்ததை எடுக்க முடியாது. ஆகையால், யார் அந்த பொருளுக்கு சொந்தக்காரனோ அவன் தான் அந்தப்பொருளை பயன்படுத்த வேண்டும்.

இது கசப்பு மருந்துதான். கசப்பு என்று தெரிந்துதான் சாப்பிடுகிறோம். ஆனால் இந்த கசப்பு மருந்து உடம்புக்கு நல்லது. வேம்பு கசக்கும் ஆனால் பாம்பு கடிக்கு போட்டால் சரியாகிவிடும். உங்களை கடித்திருக்கும் பாம்பு திருட்டு வி.சி.டி, அதற்கு கசப்பு மருந்தாக வந்திருப்பதுதான் இந்த சிஸ்டம். இந்தக் கசப்பு மருந்து எந்தளவுக்கு குணமாக்கும் என்பது போகபோகத்தான் தெரியும்.

தியேட்டர்களை மூடி விடவேண்டியதுதான் என்று சொல்கிறார்கள். ஆமாம், பராமரிப்பில்லாத தியேட்டர்களை மூடித்தான் ஆக வேண்டும். தியேட்டர்களுக்கு வருகிறவர்களுக்கு படம் பார்க்கக்கூடிய நல்ல சூழல் இல்லாத தியேட்டர்களை கண்டிப்பாக மூடிவிடுவார்கள். ஆனால் அதற்கு இதை ஒரு காரணமாக சொல்லாதீர்கள்.

எங்கள் வயிற்றில் அடித்துவிட்டுத்தானே இந்த பணத்தை சம்பாதிக்கிறீர்கள். இதை வைத்துக் கொண்டு என்னச் செய்யப்போகிறீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். இந்த பணத்தை வைத்து நான் தியேட்டர் கட்டப் போகிறேன். என்னுடைய தம்பிகள் தியேட்டர் வைத்திருக்கும்போது எனக்கும் தியேட்டர் கட்டணும் என்ற ஆசை இருக்காதா?

தொழில் செய்யும் உரிமையையும், எனக்கான குடியுரிமையையும் இந்த அரசாங்கம் எனக்கு கொடுத்திருக்கிறது. இதைத் தடுப்பது சட்டப்படி குற்றமாகும்.

இந்தப்படத்தை சன் டி.டி.எச், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய டி.டி.எச்.களில் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டது. தற்போது, இன்னொரு புதிய டி.டி.எச் நிறுவனமும் சேர்ந்திருக்கிறது. அது டாடா ஸ்கைதான். அவர்கள் முதலில் வருவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் டிவிஆர் என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரில் இந்தப்படத்தை ரெக்கார்டிங் செய்யும் தொழில்நுட்பத்தை தடை செய்யவேண்டும் இல்லையென்றால் உங்களுடன் நான் வியாபாரத்துக்கு வரமாட்டேன் என்று சொன்னேன்.

அதேபோல இதை கமர்ஷியலாக இல்லாமல் ஒரு தனி சேனலாக காட்ட வேண்டும் என்று சொன்னேன். மேலே உள்ள அந்த இரண்டு கண்டிஷன்களுக்கும் டாடா ஸ்கை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் வராமல் இருந்தார்கள் ஆனால் மற்றவர்கள் வந்து விட்டார்கள். இப்போது சுமார் 1 மணி நேரத்துக்கு முன்னதாக அவர்களும் இந்த கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டு நாங்களும் வருகிறோம் என்று வந்துவிட்டார்கள்.

ஆக இப்போது இந்தியாவில் இருக்கும் ஆறு டி.டி.எச்சிலும் இந்தப் படம் ரிலீஸாகிறது. இதையெல்லாம் தியேட்டர்களை பாதுகாப்பதற்காகத்தான் நான் செய்தேன். இதைப்புரிந்து கொண்டு என் பின்னால் வருபவர்களுக்கு நான் வரவேற்பு செய்கிறேன். வராதவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை.

‘இழப்பதற்கு ஒன்றுமில்லை, நடப்பதற்கு ஒரு தங்கப்பாதை’ என்று சொன்னார்கள். இதை என்னுடைய கம்யூனிஸ்டு தோழர்கள் சொல்வார்கள். அது இப்போது வியாபாரத்துக்கும் பயன்படுகிறது.

இந்த தங்கப்பாதைக்கு வாருங்கள் என்று நான் கூப்பிடுகிறேன், ஆனால் நீங்கள் செருப்பு தேய்ந்து விடும் என்று கவலைப்படுகிறீர்கள். இது தான் என்னுடைய வேண்டுகோள். வந்தவர்கள் வரைக்கும் எனக்கு சந்தோஷம்; வராதவர்கள் இருந்தாலும் ரொம்ப சந்தோஷம்.

இவ்வாறு நடிகர் கமல் கூறினார்.

கமல்ஹாசனுக்கு ஆதரவாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், டைரக்டர் பாரதிராஜா, திருப்பூர் சுப்பிரமணியம், பட அதிபர்கள் கேயார், காட்றகட்ட பிரசாத் ஆகியோர் பேசினார்கள்.

மேலும், விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி ஜி சேகரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன், ரூக் மாங்கதன், சித்திரா லட்சுமணன், பாபு கணேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

29 December, 2012

நான் சரியாகத்தான் இருக்கேனா...?














28 December, 2012

நித்தியானந்தாவே எல்லாம் - ரஞ்சிதா பேட்டி, நித்தியானநத்தாவை சந்தித்த திரை பிரபலங்கள்

 நாட்டில் எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரது போதனைகள் பிடித்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அவரிடம் சென்றால் கவலைகள் போகும் என்று கூறியுள்ளார் நடிகை ரஞ்சிதா. 

நித்தியானந்தா குறித்தும், சிடி சர்ச்சை குறித்தும் ரஞ்சிதா ஒரு டிவி சேனலுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் நித்தியானந்தாவுடன் இன்னும் நல்ல தொடர்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது... நித்தியானந்தாவையும் என்னையும் பற்றி வந்த சி.டி. போலியானது. அதை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி கேட்டார்கள். பணம் தராவிட்டால் விபசார வழக்கில் சிக்க வைப்பதாகவும் மிரட்டினர். அவர்களை சும்மா விடமாட்டேன். கோர்ட்டில் ஏற்றுவேன். சிறு வயதிலேயே எனக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டு. அதுவே நித்தியானந்தா ஆசிரமத்துக்கு செல்ல தூண்டியது. 

நடிகர், நடிகைகள் பலர் ஆன்மீகத்தில் ஈடுபாடு வைத்துள்ளனர். ரஜினிகாந்த் ஆன்மீகவாதியாக இருக்கிறார். நான் நித்தியானந்தா பக்தையாவதற்கு முன்பே நடிகர் விவேக் அவரிடம் சென்று வந்தார். நடிகர் சந்தானம், நடிகை கவுசல்யா போன்றோரும் ஆசிரமத்துக்கு அடிக்கடி வருகிறார்கள். 

எத்தனையோ சாமியார்கள் இருந்தாலும் நித்தியானந்தாவே என்னை கவர்ந்தார். அவரது போதனைகள் பிடித்தது. மனதுக்கு நிம்மதி தந்தது. அவரிடம் சென்றால் கவலைகள் போகும். சி.டி. விவகாரத்துக்கு பிறகு முன்பைவிட அதிக பக்தர்கள் ஆசிரமத்துக்கு வருகிறார்கள். 

வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.. நித்தியானந்தா தற்போது வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். ஜனவரி 6-ம் தேதி அவரது பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள் நடக்கும் என்றார் ரஞ்சிதா.

அம்மாடி...! இதுதாங்க இந்த பதிவுக்கு தலைப்பு...!


















































Related Posts Plugin for WordPress, Blogger...