கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 April, 2012

பதிவுலகில் ஒரு உறவு சங்கமம்... நம்ம ஆபீஷர் வீட்டுக்கல்யாணம்...



தமிழகத்தில் வடகோடியான திருஎவ்வளூரில் (திருவள்ளூர்) இருந்து தென்கோடிக்கு பயணிக்கபோகிறேன். அதுவும் ஒரு சாதாரண நிகழ்வுக்காக அல்ல. உறவுகள் கூடும் அன்பான இருமணங்கள் இனையும் ஒரு நெகிழ்ச்சியான திருவிழாவில் கலந்துக்கொள்ள...

இதுவரை முகம்பார்த்திடாத சில அன்பு உள்ளங்களைக் கண்டுணற, தூரத்தில் இருந்தே மனம் வீசிய அழகிய குறிஞ்சி மலர்களைத் தொட்டுணர, கம்பிகள் வழியே உரவாடிய சில உள்ளங்களை அன்புகள் வழியே அணைத்துக்கொள்ள... இதுவரை நிலத்தை பார்த்திடாத புது மேகம் போல் புறப்படுகிறோம்....

கடந்த சில நாட்களாய்... இரவு முடிந்தால் சுற்றுலா சொல்லும் குழந்தையின் மனதோடே படுக்கிறேன். என் கண்முன்னே நிழலாடும் காட்சிகளை எதுகைமோனையில் வர்ணிக்க எனக்குள் புதியதாய் வார்த்தைகள் ஏதுமில்லை...


வண்ணத்தில் தொடங்கி எண்ணத்தில் முடியும் அத்தனை வேறுபாடுகளையும் தூரத்தில் தூக்கி எரிந்து விட்டு அன்புக்கு அடிப்பணிந்து அரவணைத்துக்கொள்ள என் கரங்களும் நீள்கிறது தமிழகம் முழுமைக்கும்...


எங்கெங்கோ இருந்துக்கொண்டு பதிவுகள் வழியே அறிமுகமாகி, கருத்தால் படைப்புகளால் பழகி... பழகி..., ஒவ்வொறு நாலும் தமிழ்விருந்து படைத்து நட்பு வளர்த்து,  செல்லமாய் சண்டையிட்டு நட்பை வளப்படுத்தி இன்று அதையும் தாண்டி உறவுகளாய் சங்கமிக்கப்போகிறோம்.


தமிழகத்தின் மேற்கும் (சிபி செந்தில்குமார்) கிழக்கும் (நக்கீரன், ராஜபாட்டை ராஜா), வடக்கும் (நானும் வேடந்தாங்கல் கருணும்) தெற்கும் (தமிழ்வாசி பிரகாஷ் உள்ளபட அனைவரும்) தரணி‌போற்றும் தாமிரபரணி நதிக்கரை நகரில் சங்கமிக்கப்போகிறது...


இன்னும் நிறைய நண்பர்களை சந்தித்து உறவாக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... இதுவரை வேலி அளவுக்கூட தாண்டாத என் நட்பின் எல்லை இன்றைக்குத் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் பரவிக்கிடக்கிறது என்று என்னும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


தன்வீட்டு விழாவிற்கு பதிவுலக நண்பர்களை அழைத்த
கௌரவப்படுத்திய   இதயம் கனிந்த அருமை நண்பர் திரு உணவு உலகம் சங்கரலிங்கம் ஐயா அவர்களின் இல்லத்திருமணத்தில் கலந்துக்கொள்வது பெருமைக்குரிய விஷயமே... அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...



நெல்லை நோக்கிய பணயம்.... தாமிர‌பரணியில் சங்கமிப்போம் வாருங்கள் நண்பர்களே..!


பயண விவரம் நானும் (9443432105), நண்பர் கருணும் (9042784428)
நாள் : 24.04.2012 செவ்வாய் காலை 7.30  மணி
குருவாயூர் எக்ஸ்பிரஸ், சென்னை.
நெல்லை : 24.04.2012 மாலை 7.30 மணி அளவில்


எங்களுடன் மதுரையில் தமிழ்வாசி பிரகாஷ் கலந்துக்கொள்வதாக வாக்கு கொடுத்திருக்கிறார்.


16 April, 2012

அன்பார்ந்த புதுக்கோட்டை வாக்காள பெருமக்களே...! ஜெயலலிதாவின் அடுத்த அதிரடி...!


தமிழகத்தில் அனைத்து மதத்திற்கும் இணையாக, மற்றும் தனித்து இருந்து, எங்கு பார்க்கிலும் அதிகமான மக்கள் தொகையைக்கொண்டுள்ள மிகப்பெரிய இனம் அரசியல் இனம். அந்த இனத்திற்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா வருகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தேர்தல் திருவிழாவில் வாக்காளர்கள் அனைவருக்கும் ராஜகிரீடங்கள் சூட்டப்படும். அவர்கள் கொண்டாடப்படுவார்கள். அவர்களுக்கு அளிக்க மரியாதை அடைமொழிகளில் அடங்கிவரும். இவர்களே பிரதான மூலவர்களாக அவதரிப்பார்கள். தேர்தல் தேதி அறிவித்து வாக்கெடுப்பு முடியும் வரை வாக்களர்களுக்கு வார உற்சவம் நடைபெறும்.

5 ஆண்டுகள் மட்டும் இருந்த இந்தத் திருவிழாக்கள் பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என கொஞ்சம் விரிவுப்படுத்திக் கொண்டது. (தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத்தான் பாராளுமன்ற தேர்தல் அதிக அக்கறை செலுத்தப்படுகிறது.) 10 அல்லது 15 ஆண்டுகள் முன் இடைத்தேர்தல் என்ற ஒன்று எங்கு நடக்கிறது. எப்படி நடக்கிறது என்று தெரியாமல் அமைதியாக பரபரப்பு இல்லாமல் நடந்துவிடும்.

ஆனால் தற்‌போது தமிழக இடைத்தேர்தல்கள் ‌ஐ.நா. சபையில் விவாதிக்கு அளவுக்கு மிகப்பெரிய பரபரப்புடன் காணப்படுகிறது. அரசியல் உலகம் பல்வேறு விதத்தில் தயாராகிறது. செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், இணைய விவாதங்கள் அனைத்தும் இடைத்தேர்தல் பற்றியதாக இருந்துவிடுகிறது. தமிழகத்தில் மட்டும் இடைத்தேர்தலுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது.

பொதுவாக ஆளும்கட்சி தன்னுடைய கௌரவத்தை தக்கவைக்க  இடைத்தேர்தலில் ஜெயித்த ஆகவேண்டும். என்றும், பிற எதிர்கட்சிகள் முதல் கடைகுட்டி கட்சிகள் வரை தாம் வாக்கு வங்கிமூலம் தம்முடைய பலத்தை நிறுபிக்க வேண்டும் என்றும் களம் இறங்குகிறது.

தற்போது  தான் சங்கரன் கோயில் திருவிழாவை முடித்த கையோடு அடுத்த திருவிழாவுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. அது வேறு ஏதுவும் இல்லை புதுக்கோட்டைதான்.



புதுக்கோட்டை ‌தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் எம்.எல்.ஏ. திரு. முத்துக்குமரன் அவர்கள் இம்மாதம் (ஏப்ரல் 2-ந்தேதி) நடந்த சாலை விபத்தில் பலியானார்.  அவர் பலியான கையோடு அந்த இடத்தை பிடிக்க போவது யார் என்ற விவாதங்கள் ஆரம்பித்து விட்டது. கிராமத்தில் ஒரு பழ‌மொழி சொல்வார்கள். ஆண்டி ‌எப்பபோவான் திண்ணை எப்ப காலியாகும் என்பது போல் கூட்டணிக்கட்சிகளை வெளியேற்றிவிட்டு அந்த இடங்களையும் அதிமுக-வே கைப்பற்ற ஆயத்தம் செய்து வருகிறது.
 
இனி என்ன புதுக்கோட்டை அடிப்படை வசதிகள் பூர்த்தியாகும். மக்கள் கௌரவிக்கப்படுவார்கள். பணம் லட்சங்களில் அல்ல கோடிகளில் கைமாறும்,  ரவுடிகள் அந்த தொகுதியை ஆக்கிரமிப்பார்கள். ஊடகம் வாக்கு நாள் வரை அங்கு தங்களுடைய கூடாரங்களை அமைத்துவிடும்.



அதற்கும் ‌மேலாக அனைத்து அமைச்சர்களும், நகர்மன்ற தலைவர்களும், ஊள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் அங்கு முகாமிடவேண்டும். (சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் அமைச்சர்கள் மட்டுமின்றி எங்கள் திருவள்ளூர் நகர் மன்ற தலைவர் பாஸ்கரன் இரண்டு வாரம் அங்கு மூமாமிட்டு இருந்தார்.)  அங்கு வெற்றி‌ பெற்றப்பிறகுதான் அவர்கள் ‌சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.  சரியாக வேலைசெய்யாத அமைச்சர்கள் மாற்றக்கூடப்படலாம்.

தற்போதே புதுக்கோட்டையை பிடிக்க அம்மா அவர்கள் பல அறிவிப்புகளை அறிவித்துக்கொண்டிருக்கிறார். புதுக்கோட்டை நகரம் நிர்மானித்து 100 ஆண்டுகள் ஆவதைஒட்டி பல்வேறு நலதிட்டங்களுக்காக 50 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக தற்போதே ஒதிக்கியாகிவிட்டது. (ஓட்டுக்கு தனியாக ஒதுக்குவார்கள் அந்த தகவல் வெளியில் வராது) இன்னும் மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் அந்த தொகுதியில் இந்த மாதத்திற்குள் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஒரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் மட்டுமே அந்த தொகுதியை கண்டுக்கொள்ள வேண்டும் என்ற அறுவருக்கத்தக்க சம்பிரதாயம் நமது தேசத்தில்தான் இருக்கிறது. மாநில மாநிலக்கு இது மாறுபட்டாலும் தமிழகத்தில் இடைத்தேர்தல் ஒரு சூது ஆட்டம்போல் காணப்படுகிறது. எவ்வளவு பணத்தைப்போட்டு எவ்வளவு ஓட்டு வாங்கவேண்டும் என்று கணக்கும் போடும் அநாகரீக அரசியல் இருக்கும் வரை மக்களின் பிரச்சனை என்றுமே ஒழியாது.


அன்பான புதுக்கோட்டை வாக்காள பெருமக்களே, ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ தயவு கூர்ந்து பணத்துக்கு தங்களுடைய பொன்னான ஓட்டுகளை விலைபோகவைக்காதீர்கள்.  அரசியல் வாதிகள் தங்களுக்கு அளிப்பது விருந்து அல்ல. அது தூண்டியலில் மாட்டி தங்களுக்கு அளிக்கப்படும் ஒரு துளி விஷம் தான் அது. யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று நான் சொல்ல வில்லை அதை நீங்களே தீர்மானியுங்கள். அந்த தகுதியை தயவு கூர்ந்து பணத்திடம் விட்டு விடாதீர்கள்.... அவ்வளவுதான்.

09 April, 2012

அவளிடம் அப்படி என்ன கேட்டுவிட்டேன்..!



வ்வொறு நிமிடமும்
வலிகள் கொண்டே நகர்கிறது
என் காதல் காலங்கள்...!

விரைவில் விடியாத 
சில ஊமை இரவுகளுக்கிடையே
பற்றிக் கொள்ளும் அவளின்
நினைவுகளை தவிர்த்து...

ரவோடு போரிட்டு
தூக்கத்தைத் தொடரலாம்
என்றால்முடிவதில்லை
 ஒருபோதும..!

வள் மீதான காதலை 
அதிகப்படுத்தும் ஒவ்வொரு நிமிடங்களும்
 என் வலியின் வீரியங்களை இன்னும்
வலுவடைய செய்கிறது...!

சொல்ல முடியாத என் காதலை
இதயத்தில் வைத்தே
அரித்துக்கொண்டிருக்கிறது
என் இயலாமை கரையான்கள்....!


லிகளைப்போக்கும் 
ஒரு சந்தர்ப்பத்திற்காக 
காத்திருக்கிறேன்
  
து என் காதல் கைக்கூடும்
நாள் மட்டுமே...!


தங்கள் வருகைக்கு 
மிக்க நன்றி நண்பர்களே...!
 

03 April, 2012

இந்த பதிவை நீங்கள் முடித்து வையுங்கள்..?


ஒரு குடம்... தண்ணீர் ஊற்றி...
ஒரே பூ பூத்தது....

இரண்டு குடம்... தண்ணீர் ஊற்றி...
இரண்டே பூ பூத்தது....

மூன்று குடம்... தண்ணீர் ஊற்றி...
மூன்றே பூ பூத்தது....

நாலு குடம்... தண்ணீர் ஊற்றி...
நாலே பூ பூத்தது....


அஞ்சி குடம்... தண்ணீர் ஊற்றி...
அஞ்சே பூ பூத்தது....

ஆறு குடம்... தண்ணீர் ஊற்றி...
ஆரே பூ பூத்தது....

ஏழு குடம்... தண்ணீர் ஊற்றி...
ஏழே பூ பூத்தது....

எட்டுக் குடம்... தண்ணீர் ஊற்றி...
எட்டே பூ பூத்தது....

ஒன்பது குடம்... தண்ணீர் ஊற்றி...
ஒன்பதே பூ பூத்தது....
....
 
அன்பு வாசகர்களே...
அருமை பதிவுலக நண்பர்களே...
நலமா...? (இனிமே எங்க நலம்..)

எங்க இந்த பதிவை அப்படியே தொடர்ந்து எழுதி...  
உங்க திறமையை காட்டுங்க பார்ப்போம்....
( வெயில் காலமா இருக்கு ஏதோ பார்த்து செய்யுங்க..)
Related Posts Plugin for WordPress, Blogger...