கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 August, 2012

இவரைப்பார்த்தா ரொம்ப பாவமா இருக்குங்க...!


குடும்பத்தின் வறுமை தாங்காமல் கோழியைத் திருடிய ஒருவன் அவ்வூர் பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்பதற்காகச் சென்றான்.


“என் குடும்பத்தோட வறுமை தாங்காமல் திருடி விட்டதால் பாவம் செய்ததாக நினைக்கிறேன். எனக்கு உறுத்தலாக உள்ளது. அதனால் நீங்களே கோழியை வைத்துக்கொள்ளுங்கள்” என்று பாதிரியாரிடம் கூறினான்.

பாதிரியார் கோழியை வாங்க மறுத்து விட்டார். இதை என்ன செய்வது என்று பாதிரியாரிடமே கேட்டான். திருடியவனிடமே திரும்பக் கொடுத்து விடுமாறு கூறினார் பாதிரியார்.


“கோழியைக் கெர்டுத்தேன். ஆனால், அவர் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்.” என்றார். யோசித்தார் பாதிரியார். கோழியை சமைத்து குடும்பத்தோடு சாப்பிடுமாறு கூறிவிட்டார். நன்றியுடன் கையெடுத்து கும்பிட்டுவிட்டு வீட்டுக்குப்போனான் கோழி திருடன்.


ஜெபத்தை முடித்துவிட்டு இரவு வீட்டிற்குப் போனார். கூடைக்குள் இருந்த கோழி ஒன்று காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் பாதிரியார். 


(அவன் என்னுவோ திருப்பி கொடுத்தான் வாங்கிடவேண்டியதுதானே.. பாவங்க பாதிரியார்) 

13 comments:

  1. கலக்கல் ஆசிரியரே ...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அரசன்...
      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  2. ஹா... ஹா... வரம் கொடுத்த சிவன் மேலேயே கை வைத்த கதையாயிருக்கே...

    நன்றி… தொடர வாழ்த்துக்கள்... (TM 3)

    ReplyDelete
  3. சிந்திக்க வேண்டிய விஷயம் தான் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  4. ஹா ஹா கோழி போச்சே

    ReplyDelete
  5. அருமையான ‘சஸ்பென்ஸ்’ கதை!
    பாராட்டுகள்.

    ReplyDelete
  6. சூப்பர் காமெடி! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்!
    சென்ரியுவாய் திருக்குறள்
    எம்புள்ளைய படிக்கவைங்க!
    உடைகிறது தே.மு.தி.க
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...