கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 September, 2012

இந்திய தலைவர்களை இழிவுப்படுத்தும் விஜயகாந்த்... இதுவா இவரது சாதனை


தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்டது. அதன் ஆண்டு விழா இன்று அந்த கட்சியினரால் கொண்டாடப்படுகிறது.
 
கட்சி தலைவரான விஜயகாந்த் தன்னுடைய முன்‌யோசனையற்ற தன்மையால் பல்வேறு விமர்சனங்களுக்கும், பல்வேறு கன்டணங்களுக்கும் ஆளாகியிருக்கிறார்.

விஜயகாந்த் சினிமாவுக்காக எத்தனையோ கதாபாத்திரத்தில் நடித்தவராக இருக்கலாம். காவல் துறை சார்ந்த அவர் நடித்தப்படங்கள் மிகவும் சக்கைப்போடு போட்டவை. அவருடைய வசனங்கள் கைதட்டவைத்தது...
 
ஆனால் அவர் அவைகளை சினிமாவோடு நிறுத்திக்கொள்ளாமல் தன்னுடைய பொதுவாழ்விலும் கடைபிடிப்பதுதான் வேதனையாக இருக்கிறது.
 
தன்னுடைய வாழ்க்கையில் ஒருவர், மூத்த அல்லது தேசிய தலைவர்கள் போன்று அவர்களது வழியை பின்பற்றி அவர்களைப்போல் வாழமுயற்சிக்கலாம். அதற்காக அவர்கள்போல் வேடமிட்டு கொண்டு அவர்களை இழிவுப்படுத்தி வருவது தவறு. 

இதை இவரே விருப்பப்பட்டு செய்கிறாரா அல்லது ‌ஆர்வகோளாரால் அவரது‌ தொண்டர்கள் இப்படி செய்கிறார்களா என்று தெரியவில்லை. எது எப்படியோ அதை செய்யக்கூடாது என்று தொண்டர்களுக்கு கட்டளையிடாதது அமைதிகாப்பதும் குற்றத்திற்கு துணைப்போவதுபோல்தானே...



கருப்பு எம்ஜிஆர் என்று இவரே இவரை சொல்லிக்கொண்டால் எப்படி, மக்கள் சொல்லவேண்டும். எம்.ஜி.ஆர். செய்ய சேவைகள், அவர் நடத்திய அரசியல், அவருடைய பெருந்தன்மை, அவரது சபை நாகரீகம் கொஞ்சமாவது இவர் பின்பற்றினால் சரி என்று ஏற்றுக்கொள்ளலாம். அவைகள் கொஞ்சமாவது இவரிடத்தில் இருக்கிறதா நீங்களே சொல்லுங்கள்.





எம்ஜிஆர் போல் வேடமிட்டது போதாதென்றுமேற்கண்ட தேசிய தலைவர்கள் போலும் இவரை சித்தரிக்கிறார்கள். பாரதியார், சுபாஸ்சந்திரபோஸ், பகத்சிங்,  திலகர் என இவரது அட்டகாசங்கள் நீள்கிறது. இதற்கு நான் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.






இந்த பட்டத்துக்கு நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை நீங்களே சொல்லுங்கள். விஜயகாந்த் தமிழகத்தின் அன்னா ஹசாராவா..?



இது அவரது உண்மை முகம் இது நான்சொல்ல தேவையில்லை. தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.



தமிழக வரலாற்றில் ஒரு எதிர்கட்சித் தலைவர் சஸ்பெண்ட் செய்ய காரணமான சம்பவம். சட்டமன்றத்தை கூ்ட இவர் நாடக மேடை என்று நினைத்துவிட்டார் போலும்.



இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகளை இவர் அரசியலில் விட்டால்தான் எதிர்காலத்தில் கொஞ்சமாவது மதிக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. இதுபோன்றே தொடர்ந்தால் என்ன ஆவரோ.....?

35 comments:

  1. தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

    இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

    தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

    அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com

    please visit: www.tamilnaththam.blogspot.com

    ReplyDelete
  2. உண்மை முகம் (ஏழாவது படம்) எல்லாமே சொல்லி விடுகிறது...

    குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சி...

    ReplyDelete
    Replies
    1. பொதுவாழ்வுக்ககுண்டாண அனைத்து நற்குணங்களையும் இழந்து வருகிறார் விஜயகாந்த் அவர்கள்...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனபாலன்

      Delete
  3. யோசிக்க வேண்டியதுதான்..

    ReplyDelete
  4. தன்னை எம்.ஜி.ஆர் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லாம் அவராகி விட முடியாது, இப்படி தன்னலமற்ற தலைவர்களாக கேப்டரை சித்தரிப்பது கேலிக்கூத்துதான், என்னத்தச் சொல்ல...?

    ReplyDelete
    Replies
    1. இதை மாற்றிக்கொள்ள வேண்டும் விஜயகாந்த அவர்கள் அப்படி இல்லையென்றால் இன்னும் பின் விளைவுகள் அதிகமானக இருக்கும் எதிர் வரும் தேர்தல்களில்...

      Delete


  5. உண்மைதான்! சகோ! மக்கள் உணர்ந்தால் சரி!

    ReplyDelete
  6. மாற்றத்தை தருவார் என்று பார்த்தால் ஏமாற்றத்தை அல்லவா தருகிறார்! யோசிக்க வேண்டும்! திருத்திக்கொள்ள வேண்டும்!

    இன்று என் தளத்தில்
    சரணடைவோம் சரபரை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html





    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...

      தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  7. அன்பின் சௌந்தர் - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - திருத்த முடியாது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. பாண்டி முதலைமைச்சர விட ரொம்பவும் கம்மிதான் மச்சி!

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. if that is the case, is it right for you graphic his picture with bottle and glass...most of the politicians are drinking and do you have courage do depict them in the same way. how many times we have seen CMs posters in different Gods name in hindu, christian ...can you comment on that. you see things with jaundice eyes. Look at his commitment to society whether he is in politics or not.

    ReplyDelete
  11. கட்சிப் பதவிகளில் இடம் பிடித்து பின்னர் எம்.பி எம் எல்.ஏ பதவிகளை அடைய அவரைக் கவர்வதற்காக இதுபோல் கட்சி தொண்டர்கள் செய்கிறார்கள்.உசுப்பேத்துவதை உண்மை என்று நம்பினால் ரணகளமாகிவிடும் என்று விஜய காந்த உணர வேண்டும்.

    ReplyDelete
  12. Why this Kolaveri about vijaykanth. August 1 to Sep 1 How many ppweople got useful life journey their life. why dont put ur blok like that. Only u take negative statement against vijaykant. vijaykant know only act front of the screen. Not act friend of Tamilnadu public. First u understand that.

    ReplyDelete
  13. U know vijaykanth got Best Indian Citizen award from Ex president ABJ Abdulkalam. No any politician compared to Vijaykanth. Tamilnadu now record only in Tasmac Dept. Please take about that. if u want to realy like tamilnadu people pls put about Tasmac activities in Tamilnadu.

    ReplyDelete
  14. நீங்கதாங்க ரொம்ப Thavarana கருத்தெல்லாம் சொல்றீங்க...

    ReplyDelete
  15. யோசிக்க வேண்டும்! திருத்திக்கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  16. தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்டது. அதன் 8 th ஆண்டு விழா இன்று அந்த கட்சியினரால் கொண்டாடப்படுகிறது.
    2005 - Katchi Aarambam
    2006- Sattamantra urippinar
    2011- Ethirkatchi Thalaivar
    2016- Varunkala Thamilagam
    So many people no take any serious start vijayakanth new party. But within 7 year what happened now.

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் எதிர்பாப்பதும் இதைத்தான் விஜயகாந்த் அவர்கள் சிறந்த அரசியல்வாதியாகவும், நம்பிக்கைமிக்க எதிர்கட்சி தலைவராகவும், சமூகத்தின் அக்கரையோடு ஒரு அரசியல் கட்சித்தலைவராகவும் இருக்கவேண்டும் என்றுதான் தமிழக மக்கள் உட்பட நானும் எதிர் பார்க்கிறேன்...

      என் பார்வைக்கு உள்ளவற்றை நான் எழுதுகிறன்...

      தேசிய தலைவர்கள் போல் விஜயகாந்த்தை சித்தரிப்பது விஜயகாந்த் அவர்களுக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது அவருக்க தெரியாமல் நடக்கிறதா?



      தெரிந்து நடக்கிறது என்றால் கண்டிப்பாக தேசிய தலைவர்களை அவர் அவமதிப்பதாகத்தான் அர்த்தம்...


      தெரியாமல் நடக்கிறது என்றால் அவர் கட்சி தலைவராக சரியாக செயல்பட வில்லை என்று அர்த்தம்..

      Delete
    2. ஒரு அரசியல் தலைவராக அவர் நாகரீகத்துடன் நடந்துக்கொள்கிறார் என்றால்...

      எந்த காரணத்திற்காக அவர் எதிர்கட்சி தலைவர் என்ற பொருப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று தாங்கள் விளக்க முடியுமா...?

      Delete
    3. எந்த ஒரு அரசியல் தலைவர்களோயோ.. அல்லது தனிப்பட்ட ஒரு மனிதரையோ இழிவுபடுத்த வேண்டும் என்று எழுதப்பட்டதல்ல இந்த பதிவு...


      தலைச்சிறந்த மனிதர்கள் அவர்கள் தங்கள் பொருப்பறிந்து நடந்து கொள்ள வேண்டும் அதுதான் என்னுடைய மற்றும் ஒரு குடிமனகின் ஆசையும்கூட...

      Delete
    4. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..!

      Delete
    5. உண்மையில் கருத்து சொல்லும் கந்தசாமியை நினைத்தால் சிரிப்புதான் வருகிரது.internetல் blog என்ற ஒன்றில் தன்னுடைய கருத்தை சொல்லிவிட்டால் அது நடு நிலையான கருத்தாம். அறிஞர் அண்ணா தன் கடுமையான உழைப்பாலும், புத்தி கூர்மையாலும், அறிவாற்றலாலும் திமுக என்ற பேரியக்கத்தை உருவாக்கினார்.அதே போல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் தன் கடுமையான உழைப்பாலும், இக்கட்டான நெருக்கடியிலும், தொடர்ந்து கருனாநிதியின் சூழ்ச்சியையும் கடந்து சென்று அதிமுக வை உருவாக்கினார்.(கரையான் கூடு கட்ட கருநாகம் புகுந்து கொள்வதைப் போல)கருனாநிதியும், ஜெயலலிதாவும் புகுந்து கொண்டார்கள். ஆனால் தன்னந்தனியாளாய் கஷ்டப்பட்டு தேமுதிக வை உருவாக்கியுள்ளேன். ஒரு கட்சியை துவக்கி அதை வெற்றிகரமாக ஆறு ஆண்டுகளில் எதிர்கட்சியாக கொண்டுவந்துள்ளேன். அந்த வலி எங்களை மாதிரி உருவாக்கியவர்களுக்குத்தான் தெரியும் என்று நான் சொல்லவில்லை நீங்கள் குடிகாரர் என்று குறிப்பிடும் திரு.விஜயகாந்த் கேட்கிறார். இந்த கேள்விக்கு மேற்கண்ட இருவராலும் இதுவரை பதில் சொல்லவில்லை.ஆனால் எந்த தகுதியின் அடிப்படையில் நீங்கள் கருத்து சொல்கிறீர்கள். ஒரு திரைப்படத்தை திரையரங்கில் நூரு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்தப்பின் தான் விமர்சனம் செய்வோம். அதே போல் தேர்தலில் விஜயகாந்திற்க்கு ஒட்டு போட்டுவிட்டு பின்னர் அவரின் செயல்பாடுகளைப்பற்றி விமர்சனம் செய்யுங்கள். – சென்னையிலிருந்து ஃப்ரெடினன்

      Delete
  17. ஆமா நண்பரே அந்தாள் என்ன சொன்னாலும் திருந்த மாட்டன் அம்மா சொன்னது தான் சரி சினிமா டயலாக் பேச மட்டுமே தெரியும் போல

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...