கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

20 September, 2012

என்ன செய்யலாம் இந்த உலகை...?



ம்பிக்கை ஒன்றே என் மூலதனம்
அதனால்தான் இன்னும்
என் வாழ்க்கை சக்கரத்தின் அச்சு 
மழுங்காமல் இருக்கிறது..!

விதிவசம் அகப்பட்டு,
இந்த மண்மீது வீழ்கையில்
என்னைத் தூக்கிவிடுவது
நம்பிக்கையே...!
 
விடியும் ஒவ்வொறு நாளிலும்
துளிர்விடும் என் முயற்சிகளுக்கு
அதுவே உரம் ஊட்டுகிறது..!

ம்பித்தான் 
வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்
என்வீட்டில்...

ற்போது 
வீட்டுக்குள்ளே கூடுகட்டுகிறது
என் வீட்டில் நம்பிக்கையில்லாத 
குருவி ஒன்று...!

மீள் பதிவு...

14 comments:

  1. நம்பிக்கை ஒன்றே என் மூலதனம்
    அதனால்தான் இன்னும்
    என் வாழ்க்கை சக்கரத்தின் அச்சு
    மழுங்காமல் இருக்கிறது..!

    .............நம்பிக்கை இல்லா வாழ்க்கை , வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

    உணமைதான் ஒரு நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி சௌந்தர்.

    ReplyDelete
  2. //விதிவசம் அகப்பட்டு,
    இந்த மண்மீது வீழ்கையில்
    என்னைத் தூக்கிவிடுவது
    நம்பிக்கையே...!//

    அருமையான வரிகள்

    ReplyDelete
  3. வீட்டுக்குள்ளே வீடு அழகு.

    ReplyDelete
  4. நம்பிக்கை வரிகள்! நம்புவோம்! வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  5. நம்பிக்கைதானே வாழ்க்கை! நன்று!

    ReplyDelete
  6. \\ தற்போது
    வீட்டுக்குள்ளே கூடுகட்டுகிறது
    என் வீட்டில் நம்பிக்கையில்லாத
    குருவி ஒன்று...!\\

    குருவி கூடுகட்டுவது உங்கள் வீட்டின் மீது நம்பிக்கை இல்லாமலா? எப்படி சொல்கிறீர்கள்?
    தங்கள் வீட்டின் மேல் உள்ள நம்பிக்கையினால் தான், குருவி அதற்குள்ளேயே தனக்கு என ஒரு வீட்டை உருவாக்கிக் கொள்கிறது. தனது குஞ்சுகளுக்கு நம்பிக்கை ஊட்ட!

    ReplyDelete
  7. நம்பிக்கையின் அவசியத்தை அழகாக சொல்கிறது வரிகள்

    ReplyDelete
  8. என்னதான் இருந்தாலும் அதன்கூடு மாதிரி வருமா!
    நம்பிக்கை கவிதை அழகு.

    ReplyDelete
  9. சில நாட்களில் இது கவிஞர் வீடு
    எனத் தெரிந்த்தும் நிச்சயம் நம்பிக்கைக் கொள்ளும்
    படமும் அதற்கான கவிதையும் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...