கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

23 September, 2012

மத்திய அரசு அந்த விஷயங்களில் உறுதியாகத்தான் இருக்கிறது..! பா.சிதம்பரம்

 மத்தியில் ஆளும் “ஐக்கிய முற்போக்கு கூட்டணி” அரசு உறுதியாக உள்ளது. என்று தமிழகத்தின் தவபுதல்வர் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார். 

உண்மை தான்... அவர் சொன்னதை நாம் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை
மத்திய அரசு எதில் உறுதியாக இருக்கிறது என்றால்..?

கோடிக்கணக்கில் ஊழல் செய்வதில்...
சி.பி.ஐ., மூலம் கட்சிகளை மிரட்டுவதில்...

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதில்...
கூட்டணி கட்சிகளின் ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருப்பதில்...

மத்திய தணிக்கை குழுவை குறை கூறுவதில்...

கூடங்குள அணு மின் திட்டத்தை செயல்படுத்துவதில்...


ராஜபக்சேவுக்கு தாளம் போடுவதில்...

கூட்டணி கட்சிகளிடம் பேரம் பேசுவதிலும், அதற்கு பணிந்து போவதிலும்..

 இந்திய பொருளாதாரத்தை அகல பாதாளத்திற்கு கொண்டு செல்வதில்...
அமெரிக்ககாரனுக்கு பணிந்து போவதில்...

இறுதியாக அன்னை சோனியாஜியின் துதியை 
தொடர்ந்து பாடுவதில்....

என இது போன்ற இன்னும் பல விஷயங்களில், தற்போதைய கூட்டணி அரசு, "உறுதி'யாகவே இருப்பதாக மக்களை நம்பவைக்கின்றனர். நாமும் அவர்கள் கூறும் அறிக்கைகளையும், வாய்வார்த்தைகளையும் நம்பி ஏமார்ந்துக்கொண்டு இருக்கிறோம்.

உறுதியான கொள்கை பிடிப்பு இல்லாமல், மக்களின் எதிர்கால பிரச்சனைகளை தீர்க்காமல், ஒரு தொலைநோக்கு பார்வை யில்லாமல் செயல்பட்டுக்கொண்டிருக்கும்  இந்த மானங்கெட்ட ஜக்கிய முற்போக்கு கூட்டணியை நாம் ‌என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஊழலின் எல்லையைத் தொட்ட இவர்கள் இனி இந்தியாவையே விழுங்காமல் இருந்தால் நல்லது...

8 comments:

  1. மத்திய அரசு எதில் உறுதியாக இருக்கிறது

    இவையெல்லாம் பொருளாதார சீர்த்திருத்தமாம்

    யாருக்குன்னு தெரியலை மக்களுக்காகவ

    அரசியல் அதிபர்களுக்கானு தெரியலை.........????

    படங்கள்அருமையான தேடல் நண்பரே

    ReplyDelete
  2. இவனுங்க பட்டியல் இன்னும் நீளும் அண்ணே .. ஆனால் நறுக்குன்னு சொல்லிருக்கிங்க ..

    ReplyDelete
  3. எல்லாம் சரிதானுங்கோ.....!

    ReplyDelete

  4. அரசன் சொன்னதுபோல பட்டியல் இன்னும் நீளும்

    ReplyDelete
  5. மக்களும் இனி அந்த விஷயஹ்தில் உறுதியாக இருக்க வேண்டியதுதான்.
    த.ம.6

    ReplyDelete
  6. இவனுங்களின் நீண்ட பட்டியியலில் நீங்கள் சொல்லியிருப்பவை முக்கியமானவை...

    ReplyDelete
  7. அன்பின் சௌந்தர் - பசி யின் கூற்று - எந்த எந்த விஷயங்களில் உறுதியாக இருக்கிறதென்று படங்களுடன் விளக்கம் அருமை. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...