கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 October, 2012

இது இரவில் அவளை தேடியதின் விளைவு...!


ராரின் ‌இமைகள மூடிக் கொண்ட 
ஒரு கருப்பு இரவில்...

திர்ப்புகளின் சுவர்தாண்டி
உன் தெருவுக்குள் குதித்த போது...

தெ ரு விளக்கின் வெளிச்சத்தில்
சாத்திக் கிடந்த வீட்டின் முன்
பூத்துக் குலுங்கின நீ போட்ட கோலம்.......
 
ன்னும் புன்னகையோடுதான் இருக்கிறது
நீ.... நிலவொளியில் காயவைத்த மல்லிகைச்சரம்
உன் வீட்டு கூரை மீது...

வீ ட்டு முற்றத்தில் துளசி செடியின் மீது
வெளிச்சத்தை உமிழ்ந்துக் கொண்டு இருந்தது
மின்மினிப் பூச்சிகள்...

டிக்கடி என்னை பயமுறுத்தி கொண்டிருந்தது
பனைமரத்தில் குடிக்கொண்டிருந்த
கோட்டான்கள்...

விடிய விடிய இவைகளை ரசித்த பின்
அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
 
ன்னை காணாத சோகத்தையும்
உனக்கான காதலையும்..

 நன்றி... (மீள் பதிவு)

16 comments:

  1. கோட்டானுக்கும் தெரிந்து போச்சா சரியா போச்சி.

    ReplyDelete
  2. அழகான கவிதை வரிகள்.

    ReplyDelete
  3. சுவாரசியமான மீள் பதிவு பொருத்தமான அழகிய படங்கள்...

    ReplyDelete
  4. விடிய விடிய இவைகளை ரசித்த பின்
    அனைத்திடமும் சொல்லி விட்டு வந்தேன்
    >>
    சொல்ல வேண்டியவங்ககிட்ட சொல்லாம மத்ததுக்கிட்டலாம் சொல்லி என்ன பிரயோஜனம்?

    ReplyDelete
  5. பகல்ல தேடுங்கப்பு!

    ReplyDelete
  6. ஆத்தி நீங்களும் அந்த வர்க்கமா..:)

    சிறியதொரு சந்தேகம் சார்
    கோளம் சரியா
    கோலம் சரியா

    ReplyDelete
    Replies
    1. உங்க சந்தேகம் சரிதாங்க...


      கோலம் தான் சரி...

      சுட்டிகாட்டியமைக்கு நன்றி...!

      Delete
  7. அன்பின் சௌந்தர் - மீள் பதிவு - கவிதை அருமை - தேடிச் சென்று - பார்க்க இயலாமல் - பார்த்த அனைத்தின் மூலமும் தூது விட்டது நன்று. கவிதை படம் - இரண்டுமே நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...