கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

19 March, 2013

திமுக விலகல்... கலைஞரின் நாடகமா...? தேர்தல் கருதியே விலகல்..வாசகர்களின் குமுறல்...!

மத்தியில் அரசு அமைத்துள்ள, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., விலகிக் கொண்டதாக, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, அறிவித்தார்.

இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை போர்க் குற்றம், இனப் படுகொலை என அறிவிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், ஐ.“நா., மனித உரிமை அமைப்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய இருவருக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி இரண்டு தினங்களுக்கு முன் கடிதம் எழுதினார். இதை நிறைவேற்றவில்லை எனில், கூட்டணியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றும கூறினார்.

என தினமலர் இணையதளத்தில் செய்தி வெளியானது அந்த செய்தியில் வாசககள் கூறிய கருத்துகளில் சில...


Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
19-மார்-201316:11:21 IST Report Abuse
Ramasami Venkatesan பிரதம மந்திரி அலுவலகம் 2ஜி தீர்மானங்களில் தங்களுக்கு சம்பந்தமில்லை என்றும் இது மந்திரியின் தனிப்பட்ட முடிவு என்றும் கூறிவிட்டது. இனி கேஸ் சூடு பிடிக்கும். இன்னொரு மந்திரி சபை மாற்றம் இருக்கும் தேர்தலுக்கு முன்பே. தி மு க மந்திரிகள் இருவரும் வெளியே. கனிமொழி கேசும் தீவிரமாகும். வரும் பாராளுமன்ற தேர்தலில் தி மு க அம்பேல் ஆனால் (ஆனால் என்ன - ஆகும்) மேலும் தொடரும் வழக்குகள்.
////////////
JOHN SELVARAJ - CHENNAI ,இந்தியா
19-மார்-201316:03:18 IST Report Abuse
JOHN SELVARAJ கருணாநிதி இந்த வயதிலும் இலங்கைப் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகல் என முக்கிய முடிவுகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்த தி.மு.க தலைவர், அடுத்த முதல்வர் என வலம்வந்துகொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினோ, பிறந்தநாள் முடிந்து 20 நாளாகியும், இன்னும் தமிழகமெங்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கிறார். இலங்கைப் பிரச்சினை தகித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில், மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தவேண்டிய இவர் இப்படி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதுதான் அழகா? 
///////////////
MOHAMED GANI - MADURAI,இந்தியா
19-மார்-201316:02:29 IST Report Abuse
MOHAMED GANI இவ்வளவு பிரச்சினைகள், இலங்கைத் தமிழருக்கான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கும் வேளையில், தி.மு.கவின் அடுத்த தலைவர் என்று கருணாநிதியாலேயே முன்மொழியப்பட்ட ஸ்டாலின் எங்கே என்றே தெரியவில்லையே? மானவர்கள் போராட்டம் தமிழகத்தில் உக்கிரமாக இருந்துகொண்டிருக்கும் வேளையில் இன்னும் கருணாநிதிதான் பத்திரிகை அறிக்கை, தலைவர்கள் சந்திப்பு என்று பிசியாக இருக்கிறாரே தவிர ஸ்டாலின் எதிலும் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை. போராட்டம் நடத்தும் மாணவர்களையும் சந்தித்திக்கவில்லை இவர் எப்படி அடுத்த தலைவராக வரமுடியும்?
/////////////
LOTUS - CHENNAI,இந்தியா
19-மார்-201315:56:27 IST Report Abuse
LOTUS வழக்கம் போல ஊளை முட்டையை போட்டுவிட்டு நல்ல முட்டையை எடுத்துவா என்று குழந்தைகள் விளையாடுமே அதுதான் நடந்துள்ளது........ ராஜினாமா அறிவிப்புக்கு பின்னே மணியோசை வந்துவிட்டதே ............. பார்லிமெண்டில் தீர்மான வாசகம் மாற்றப்பட்டு ஒரு சேர தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இந்த ராஜினாமாவும் வாபஸ் பெறப்படும் என்று .............எங்காவது பூனை கருவாட்டை விட்டு விட்டு சைவமாக மாறுமா ? ............ பதவியில்லாத கருணா என்பது அவரது சரித்திரத்தில் இல்லாதது..... எனவே, ஊரெல்லாம் போராடும் பொது தான் மட்டும் வீட்டில் இருப்பதாக யாரும் நினைக்க கூடாது என்று ஒரு நாடகம்............ நம்புவதற்கு முட்டாள் பொதுஜனம் நாமும்.............. மொத்தத்தில் பிரச்சினைக்குரிய ஈழ மக்களுக்கு 5 பைசா பிரயோஜனம் இல்லாத உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் , ஊர்வலங்கள், ராஜினாமா நாடகங்கள் .......... பாவம் அவர்கள்..............
/////////

Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
19-மார்-201315:51:06 IST Report Abuse Aravindh Raman 2ஜீ அலை ஊழலில் தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற கலைஞர் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டும். இல்லையேல் கனிமொழி, தயாளு அம்மாள் மீதும் ராசா மீதும் இறுக்கு பிடி விழும் என்று பலர் முன்னர் இங்கே கருத்து எழுதி இருந்தனர்.... இப்போ? ஒட்டி இருந்தால் பதவியையும் குடும்பத்தையும் பாதுகாக்க வெட்டி விட்டால் வெறும் நாடகம்.. நான் தி மு க அடிவருடியோ கருணாநிதி ஆதரவாளனோ அல்ல..
//////////////
anu - chennai,இந்தியா
19-மார்-201315:44:48 IST Report Abuse
anu இந்த மாணவர்கள் போராட்டத்தை கருணாநிதியின் நாடகத்தால் நீர்த்து போக செய்து இலங்கை தமிழருக்கு தன்னால் மட்டுமே விடிவு உண்டு என்ற பிம்பத்தை ஏற்படுத்தி நம்ப வைத்துவிடுவார். மாணவர்களின் போராட்டம் தி.மு.க, திருமா, சிமான் போன்றவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது என்னவோ உண்மை. 9 வருடம் சுகத்தை அனுபவித்துவிட்டு இப்போது ஆதரவு வாபஸ். இலங்கை தமிழர்கள் இவர்களை நம்பும் வரை இவர்களின் அரசியல் வியாபாரம் களைகட்டும். அட ஏமாளிகளா 
///////////////
Saravana Kumar - Dallas,யூ.எஸ்.ஏ
19-மார்-201315:27:41 IST Report Abuse
Saravana Kumar பிரமாதம் தலைவரே இனி எப்பவும் இல்லன்னு சொன்னீக பாருங்க, அது தான் ராஜதந்திரம்... ப.ஜ.க கு மெசேஜ் சொல்லியாச்சு.. காங்கிரஸ் இனிமே வேண்டாம், நாங்க அடுத்த கூட்டணிக்கு தயார்... நீங்க நீங்க தான்... அணைத்து இராஜதந்திரங்களையும் கரைத்து குடித்து விட்டாய்ட நீ அ.தி.மு.க கு முன்னாடி வெளிய வந்து கூவிட்டீங்க இனிமே ஜே. ஜே ஏதாவது பண்ணியாகணும்.. என்னமோ போங்க.. 
///////////////
sethu - Chennai,இந்தியா
19-மார்-201315:19:40 IST Report Abuse
sethu நம்பாதீர்கள் தமிழா உலகத்தில் நீங்கள் யாரை வேணாலும் நம்புங்கள், கருணாவை நம்பிடாதீர்கள். குதிரைஏய் குப்புற தள்ளி குழியும் பார்த்தது வேறு யாரும் இல்லை. சட்சாத் இந்த கருணாதான். மன்மோகன் தான் பிரதமர். எப்படிவேனாலும் நீங்கள் நம்புங்கள். ஆனால் கர்ணா பின்னாடி போகணும்னு நம்பிடாதீர்கள். ஈழத்தில் நடந்ததை தமிழகத்திலும் நடத்தி அரசியல் செய்து விடுவார் இந்த நல்லவர்.
////////////////
Uthukkaattaan - Padmagiriswaram,இந்தியா
19-மார்-201315:12:16 IST Report Abuse
Uthukkaattaan ஐயா, தேர்தல் நெருங்கிவிட்டது. எல்லா பக்கமும் காங்கிரஸ் படுதோல்வியடையும் என பேசிக்கொள்கிறார்களாம். இதோ வெளியேறி விட்டார். பிஜேபி யும் பாராட்டி விட்டது. பலவகையில் மானத்தை விற்று எல்லா வழியிலும் முயன்று எங்கள் தன்மான தானை தலைவர் பிஜேபி யுடன் கூட்டணியமைத்து விடுவார். வாக்காளகள்தான் பேமானிகள். சொல்லமுடியாது. இந்துக்கள் பாபர் மசூதியை இடித்தது சரி அது காலத்தின் கட்டாயம் என்று தமிழ் தாத்தா ஹிந்தி அத்வானி தாத்தாவுடன் ஒரே மேடையில் கூடிய விரைவில் பேசுவார். காமெடியை ரசித்து தலையில் அடித்துக்கொள்ள தயாராகுங்கள்
//////////////////
Imran - Chennai,இந்தியா
19-மார்-201315:04:46 IST Report Abuse
Imran வெறும் அரசியல் நாடகம் மாணவர் போராட்டம் தான் இதுக்கு காரணம். வாபஸ் வாங்கினா மட்டும் என்ன நடக்க போகுது. என்னிக்கு தமிழ்நாடு பத்தி கவலை பட்டாங்க. இத்தாலி காரங்க 2 பேர சுட்டதுகு அவங்க தூதர அனுப்ப கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா 20000 மக்களை கொன்ன ராஜ்யபக்ஷ இவங்க சிவப்பு கம்பளம் விரிக்கிராங்க. இவனாக மட்டும் யோக்கியமா. ஞாயமா அவன் வரும் போதே இத பண்ணி இருக்கனும். இப்ப மாணவர் போராட்டம் ஆரம்பிச்ச பின்னாடி கூட இத பண்ணலேன்னா நாளைக்கு ஒரு ஓட்டு கூட விழாது. இது கூட ஒரு கேவலமான அரசியல் நாடகம் தான் - உண்மையான ஒரு தமிழ் நாடு பிரஜை மக்கள் உண்மையா நினைப்பது இப்படி தான்  

///////////////

Snake Babu - Salem,இந்தியா
19-மார்-201315:00:59 IST Report Abuse
Snake Babu "சிங்கம் களம் இறங்கிடுச்சி" சொல்லனும்னு ஆசைதான். ஆனா முடியாதே அவ்வளவுக்கு பாதிபடைஞ்சிருக்கோம், மறுபடியும் ஒரு பல்டி வந்தது. இனிமேல தி மு க வால எழுந்திருக்கவே முடியாது. தாத்தாவுக்கு அப்புறம்தான் மாற்றம் வரும்னு எதிர்பார்ப்பு இருக்குது. இப்பவும் ஒரு சந்தர்ப்பம். பார்ப்போம் பொறுத்திருந்து 
/////////////////
Srinivasan Dhakshnamoorthy - Malaysia,மலேஷியா
19-மார்-201314:53:50 IST Report Abuse
Srinivasan Dhakshnamoorthy தமிழக மக்களே ......உங்களை முட்டாள் ஆக்க இதோ கருணாநிதியின் மற்றும் ஒரு கபட நாடகம் ....ஜெயலிதா வரும் பொது தேர்தலில் எந்த கட்சிஉடனும் கூட்டனி கிடையாது என்று அறிவித்து விட்டார் ....கருணாநிதி கு தெரியும் தமிழகதில் இனி எந்த மடையனும் காங்கரஸ் கு ஒட்டு போட மாட்டன் என்று ....நாட்டில் மெல்ல மோடியின் அதரவு பெருகுவது தெரியும் ...அகவே தற்போது எந்த காரணமும் கிடைக்காததால்....ஈழ தமிழர்களின் பிரிச்சனையை எடுத்து மீண்டும் பதவிகளை பிடிக்க முயல்கிறார் ......கருணாநிதி அவர்களே உணர்ச்சிவசப்படும் சராசரி தமிழன் எப்போதும் போல ஏமாறுவான் என்று நினைகாதிர்கள் .....உங்கள் துரோக வரலாற்றை மறக்க மாட்டோம் .....நீங்கள் பதவி க்காக எதையும் செய்பவர் என்பதை எக்காலத்திலும் நினைவு கொள்வோம் .....நீங்கள் , உங்கள் குடும்பம் , உங்கள் மந்திரிகள் , உங்கள் கட்சி காரர்கள் செய்த அத்தனை யும் எங்கள் பிள்ளை களுக்கு சொல்லிவளர்ப்போம் .....உங்களை ஒருபோதும் எதிர்காலம் தவரிபோய் குட உங்களை நல்ல தலைவரை நினைக்க விடமாட்டோம்  
 ///////////
Arul - Chennai,இந்தியா
19-மார்-201314:44:06 IST Report Abuse
Arul கருணாவின் நாடகம் : கேள்வி: நாடாளுமன்றத்தில் நீங்கள் கேட்டபடி திருத்தங்களோடு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், உங்களுடைய தற்போதைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்வீர்களா? பதில்: அதற்கு நேரம் அதிகமாக இருக்கிறது. இன்று மாலை வரையிலே நேரம் இருக்கிறது, நாளைக்கும் இருக்கிறது, 21ம் தேதிக்கு முன்பும் இருக்கிறது. அதற்குள் நாடாளுமன்றத்தில் நாங்கள் எண்ணியவாறு இந்தத் தீர்மானம் திருத்தங்களோடு முன்மொழியப்பட்டு, விவாதத்திற்குக் கொண்டு வரட்டும்.
//////////////
Uma Shankar Umashankar - Tirupur,இந்தியா
19-மார்-201314:42:39 IST Report Abuse
Uma Shankar Umashankar மற்றும் ஒரு அரசியல் நாடகம். மத்திய அரசில் இருந்து வெளியேற இதுவே சரியான சந்தர்பம். மிகவும் சாதுர்யமான காய் நகர்த்தல். இது தான் கலைஞர் ஸ்டைல். அடுத்து கூடாரத்தை பி. ஜே.பி. இடம் நகர்த்த சரியான டைம் . அரசியல் ஒரு நாள் கிரிகெட்டை விட நல்லா தான் இருக்கு. பார்போம் அம்மாவா அய்யாவா. யார் பி.ஜே.பி. யுடன் கூட்டனி என்று. 
//////////////
இன்னும் இருக்குங்க... இதுவே பேர்தும்ன்னு நினைக்கிறேன்...

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இனியும் இந்த கருணா(ய்)நிதியை அரசியலில் விட்டு வைக்கணுமா??? கடசியா நடுவில கொஞ்ச பக்கத்தை மறந்திட்டாரோ ......... இல்லை தமிழர்கள் எதையும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள் என்று நினைகிறாரோ...... என்ன இருந்தாலும் சிவாஜியை மிஞ்சிய நிஜவாழ்க்கை நடிகன் ...

    ReplyDelete
    Replies
    1. இந்த நாடகம் எது வரையில் தெரியவில்லை

      Delete
  3. ஸ்வாமி சரியாகச் சொன்னார்,இதெல்லாம் நாடகம்,கருணாநிதிக்கு ஜெயலலிதாவைக் கண்டு பயம் என்று!(he is scared of jayalaitha)

    ReplyDelete
  4. இவர்ட நடிப்புக்கு ஒன்றல்ல பத்து ஒஸ்கார் கொடுக்கணும்.செய்யிறதெல்லாம் செய்து போட்டு ஒன்றுமே ஆகாதது போல் நடிக்கிறதில கொலைஞர அசைக்கேலாது.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...