கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 May, 2013

அந்த நாலு பேர் யாருன்னு தெரியுமா..! இதுல நீங்க எந்த வகை..?

 
மனிதர்களில் நான்கு வகையான மனிதர்கள் இருக்கின்றனர் என்று இந்து சமயப் புராணக்கதைகள் தெரிவிக்கின்றன.

1. உண்டு, உண்டு வகையினர்

2. இல்லை, இல்லை வகையினர்

3. உண்டு, இல்லை வகையினர்

4. இல்லை, உண்டு வகையினர்


உண்டு, உண்டு வகையினர்


இவ்வகையினர் உழைத்துச் செல்வம் சேர்த்த வள்ளல்கள். அவர்களிடம் செல்வம் இருக்கிற காரணத்தால், இம்மையில் அடையக் கூடிய தார்மிகத்திற்குப் புறம்பில்லாத அனைத்து சுகங்களையும் அடைகிறார்கள்.


அதே சமயம், தானதர்மம் செய்து வள்ளல்களாகவும் அவர்கள் இருப்பதால், அந்தப் புண்ணியத்தின் மூலம் அவர்களுக்குச் சொர்க்கமும் கிடைக்கிறது.


எனவே, இவர்களுக்கு இம்மை, மறுமை ஆகிய இரண்டு சுகங்களும் இவர்களுக்கு உண்டு.


இல்லை, இல்லை வகையினர்


இவ்வகையினர் செல்வமுள்ள கஞ்சப் பிரபுக்கள். அவர்களிடம் செல்வம் இருந்தும், கஞ்சத்தனமும் கூடவே இருப்பதால், இம்மை சுகங்களை அவர்கள் அடைவதில்லை.


தான தர்மம் செய்யாததால், மறுமையிலும் அவர்களுக்கு உயர்ந்த நிலை கிட்டுவதில்லை.


எனவே, இவர்களுக்கு இம்மை, மறுமை ஆகிய இரண்டு சுகங்களும் இவர்களுக்கு இல்லை.


உண்டு, இல்லை வகையினர்


இவ்வகையினர் தாசிகள். எந்த தர்ம நியாயத்திற்கும் உட்படாமல் அனைத்து சுகங்களையும் அவர்கள் தேடி அடைகிறார்கள்.


ஆனால், அவர்கள் செய்வது பாவச்செயல் என்பதால், மறுமையில் அவர்களுக்கு நற்கதி கிடைப்பதற்கு வழியே இல்லாமல் போய்விடுகிறது. மாறாக, நரகத்தில் துன்பம் அனுபவிக்க வேண்டிய கட்டாய நிலையும் அவர்களுக்கு ஏற்படுகிறது.


எனவே, இவர்களுக்கு இம்மை உண்டு; மறுமை இல்லை.


இல்லை, உண்டு வகையினர்


இவ்வகையினர், சந்ந்நியாசிகள், எளிய வாழ்க்கை நடத்தும் தர்மசீலர்கள் போன்றவர்கள். அவர்கள் இந்த உலக சுகபோகங்களைத் தாங்களாகவே விரும்பி நிராகரிக்கிறார்கள்.


ஆனால், தூய தவ வாழ்க்கையின் காரணமாக அவர்களுக்கு மறுமையில் முக்தி கிடைக்கிறது.


எனவே, இவர்களுக்கு இம்மை இல்லை; மறுமை உண்டு. (படித்தது)

9 comments:

  1. முதல்ல எனக்கு இம்மை, மறுமை அப்படின்னா என்னன்னே தெரியலையே நண்பா,...

    ReplyDelete
    Replies
    1. இம்மை.. என்றால் தற்போதைய ஜென்மம்...
      மறுமை... என்றால் அடுத்த ஜென்மம்....

      Delete
  2. "உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்" என்பது இது தானோ...?

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


    தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
    அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
    அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

    ReplyDelete
  4. மனிதனின் மறுபக்கமோ?

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...