கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

25 May, 2013

எப்படி புரிஞ்சிக்கிட்டாலும் சிரிப்புதான்...! / Weekend special Jokes


"மேனேஜர், உங்க ஹோட்டல் ரூம் 708-லேருந்து பேசறேன்"

"சொல்லுங்க ஸார், என்ன வேணும்?"

"எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய வாக்குவாதம்.. ஜன்னல் வழியா வெளியே குதிச்சிருவேன்னு மிரட்டறா.."

"ஸார் இது உங்க பர்ஸனல் விஷயம்.."

"முட்டாள், ஜன்னல் திறக்க வரலை, சீக்கிரம் அதை திறக்க ஒரு ஆளை அனுப்பு"


என்ன சொல்றீங்க, உங்க வீட்டுக்காரரை தினமும் திட்டுனீங்களா? ஏன்?"

"நீங்கதானே டாக்டர் மருந்து எழுதிக்கொடுத்து, தினமும் ஒரு டோஸ் கொடுக்க சொன்னீங்க!"


சாமி… நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்…?”

அடப்பாவி… நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?”

நீங்கதானே சாமி கவலைகளைத் தூக்கியெறியணும்னு சொன்னீங்க?” 
 

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சுப்ரமணியசாமி.

சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டு கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார்,

"வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால்,

நீ ரொம்ப அழகாயிருப்பே,

அப்புறம்,

வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் நல்ல கருப்பாகிவிடும் ­....." என்று சொல்ல,

குழம்பிப்போன சர்வர் கேட்டார்,

"சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"

அதுக்கு நம்ம சுப்ரமணியசாமி சொன்னார்,

"மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"
LKG Boy- 1: மாப்ள! எக்ஸாம்’ல எதுவும் தெரியாததால எதுவும் எழுதாம வெறும் பேப்பரை கொடுத்துட்டு வந்துட்டேன்டா!

LKG Boy – 2: நானும்தாண்டா... வெறும் பேப்பரைக் கொடுத்தேன்!

LKG Boy – 1: அட முட்டாப் பயலே! ஏன்டா அப்டி பண்ணுன? டீச்சர் நம்மள காப்பி அடிச்சதா நினைச்சுட மாட்டாங்க?
நல்லது மக்களே...!

18 comments:

  1. ஹா... ஹா... கலக்கல் ஜோக்ஸ்...

    படங்கள் அதை விட Special...!

    ReplyDelete
  2. படங்கள் அழகு. சிரிக்க வைத்த வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்து சிரித்தமைக்கு மிக்க நன்றி சசிகலா...

      Delete
  3. நீண்ட காலத்திற்கு பிறகு இன்றைக்காவது உங்களது ஆக்கத்தைப்
    படிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி (சலங்கையை தூக்கி எறிந்தாச்சுப் போல !..:) )

    "எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பெரிய வாக்குவாதம்.. ஜன்னல் வழியா வெளியே குதிச்சிருவேன்னு மிரட்டறா.."

    "ஸார் இது உங்க பர்ஸனல் விஷயம்.."

    "முட்டாள், ஜன்னல் திறக்க வரலை, சீக்கிரம் அதை திறக்க ஒரு ஆளை அனுப்பு"

    :)))) அருமையான நகைச்சுவைகள் தொடர வாழ்த்துக்கள்
    சகோ .

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப மகிழ்ச்சிங்க..


      இப்போ எல்லா நட்டிலேயும் ஓபன் ஆகும்ன்னு நினைக்கிறேன்...

      நன்றிங்க...

      Delete
  4. எல்லாமே கலக்கல், அது சரி உங்க வீட்டுல உங்க பதிவையெல்லாம் படிக்கமாட்டாகளா?

    ReplyDelete
    Replies
    1. நாங்க நல்லாயிருக்கிறது பிடிக்கலையா பாஸ்....

      Delete
  5. உண்மைதான் நண்பா எப்படி புரிஞ்சிக்கிட்டாலும் சிரிப்புதான்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே... தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  6. ஹிஹி..சிரிச்சுட்டேன்

    ReplyDelete
  7. கலக்கலான சிரிப்புக்கள்! பகிர்வுக்குநன்றி!

    ReplyDelete
  8. சிரிப்போ சிரிப்பு.அதெல்லாம் சரி தூரத்தில் நிலாஆ தெரிய நீள்கிற வெற்றுச்சாலை கறுப்பாய் ஆயிரம் சொல்லிச்செல்கிறது.படைப்பினுள் இருக்கிற அல்லது தெரிகிற ப்டைப்பு என்பது இதுதானோ?

    ReplyDelete
  9. கடைசி ஜோக் அபாரம்!! [மத்ததெல்லாம் இப்பத்தான் எங்கேயோ படிச்ச மாதிரியே இருக்கே..... எங்கே பார்த்தேன்....ம்ம்ம்....... ]

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...