கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

14 June, 2013

தில்லு முல்லு / The Great...


ஒரு கோழிப்பண்ணை முதலாளியை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள்.

உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே? அதற்குக் காரணம் என்ன என்று கேட்டனர்.. பண்ணைக்காரர், அதெல்லாம் ஒன்னுமில்லீங்க, நான் அவைகளுக்கு, பாதாம், பிஸ்தா எல்லாம் கொடுக்குறேன், அதனாலத்தான் இப்படி இருக்கு என்றார்.

வந்தவர்கள், அதைக் கேள்விப்பட்டுத்தான் நாங்கள் இங்கே வந்தோம்.
நான்கள் எல்லாம் வருமானத்துறை அதிகாரிகள், எடு கணக்கு நோட்டை என்று சொல்லி 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்..

பண்ணைக்காரர், தலையில் கையைவைத்துக் கொண்டு வருத்தமாக இரண்டு நாள் சாப்பிடவில்லை.

ஒருவாரம் கழித்து, ஒரு கும்பல் வேனில் வந்திறங்கியது. உங்கள் கோழிக்கெல்லாம் என்ன தீனி போடுகிறீர்கள் என்று கேட்டனர். பண்ணைக்காரர் சுதாரித்துக் கொண்டு, இந்தமுறை வந்தவர்கள் மூக்கை அறுக்கிறமாதிரி ஏதாவது பதில் சொல்லனும்னு, நான் ஒன்றுமே போடுவதில்லை என்றார்.

வந்தவர்கள் நாங்கள் ஜீவ காருண்ய சங்கத்திலிருந்து வந்துள்ளோம்.. நீங்கள் கோழிகளை பட்டினி போட்டதற்காக உங்களுக்கு ரூபாய் 50,000 அபராதம் என்று பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, ரசீது கொடுத்தனர்.

பண்ணையார் நிலைமை கேட்கணுமா?

என்னடாயிது, எதைச் சொன்னாலும் பணம் பிடுங்குரானுங்க... என்றிருந்த நிலையில்... மூன்றாவது அணி ஒன்று வந்து, அதே போல உங்கள் கோழிகளுக்கு என்ன சாப்பாடு போடுறீங்க என்றனர்.

பண்ணையார் பாதி பயத்துடன், அதுங்க கிட்ட ஆளுக்கு ஒரு ரூபா கொடுத்துடுறேன். அதுங்க எதையோ வாங்கித்தின்னுட்டு வந்திடுது.. என்னா திங்குதுனு எனக்குத் தெறியாது என்று சொல்லி ஒருவழியாக தப்பித்தார். :))

**********************************

 
ஒரு பொண்ணு என்ன ரொம்ப Distrub பண்ற ..?

என்னோட நம்பர் எப்படி அவளுக்கு கிடைச்சது இன்னு தெரியல .!

நான் யாருக்கு Phone பண்ணலும் அவளே எடுத்து .

"NO BALANCE" னு சொல்றா ..

என்ன நினைக்கிறான்னே தெரியல...ஹி ஹி ஹி ஹி ஹி

**********************************

 
வழக்கறிஞர் : நீதிபதி அவர்களே ! குற்றவாளி மாரிமுத்து செய்த குற்றத்திற்காக, இவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அளித்து தீர்ப்பு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

மாரிமுத்து : அய்யா சாமி, என்ன விட்ருங்க எனக்கு மூணு பொண்டாட்டி

நீதிபதி : (சிறிது யோசனைக்குப்பின் )இனிமேல் இந்த மாதிரி தப்புப் பண்ணாத. உன்ன விடுதலை செய்றேன், நீ போகலாம்.

வழக்கறிஞர் : கணம் கோட்டார் அவர்களே, மாரிமுத்துவுக்கு மரண தண்டணை கொடுப்பதை விடுத்து, தாங்கள் விடுதலை செய்ததற்கான காரணத்தை நான் அறிந்து .கொள்ளலாமா ?

நீதிபதி : யோவ் . . . .அவன் ஏற்கனவே வீட்ல மரண தண்டணைய அனுபவிச்சுகிட்டு இருக்கான்யா.
**********************************

டிஸ்கி :  பதிவின் தலைப்பா... அதாவது பார்த்தது, படித்தது, கேட்டதை வச்சி எப்படியாவது தில்லுமுல்லு பண்ணி பதிவைதேத்திடுறேன் இல்ல.... அதுக்ககாகத்தான்...

6 comments:

  1. நல்ல தீர்ப்பு...

    (மற்றவை முகநூல் : நன்றி...)

    உண்மையான டிஸ்கி... ஹிஹி...

    ReplyDelete
  2. டிஸ்கி ல வந்த ஜோக் அருமை.., அப்புறம் அந்த முட்டை ஓட்டுல செடி.., செம

    ReplyDelete
  3. நல்லயிருக்குப்பா....

    ReplyDelete
  4. சுவையான ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
  5. ஏமாளிப் பண்ணைக்காரன் ஏழையாய் இருப்பான் போல.சிரிப்பும் சிறப்பே.--த.ம.7

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...