கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 July, 2013

சிம்புவிடம் சண்டைபோட்டது உண்மைதான்... தனுஷ் + மசாலா கார்னர்


 தமிழ்த் திரையுலகில் சமீபத்தில் பரபரப்பாக எல்லோராலும் பேசப்பட்டு வருவது சிம்பு-ஹன்ஸிகா காதல் சமாச்சாரம் தான். ஹன்சிகா சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் என இரண்டு படங்களில் கமிட் ஆகும்போதே சிலர் ’சிம்பு ஒரு மாதிரியான ஆளு. நமக்கு எதுக்கு வம்பு. கொஞ்சம் தள்ளியே இரும்மா’ என எச்சரித்திருக்கிறார்கள்.





திரைப்படங்களில் வருவது போல, இந்த அறிவுரையே இருவரிடமும் காதல் உண்டாக வழி ஏற்படுத்திக்கொடுத்துவிட்டது. சிம்புவுடன் ஹன்ஸிகா காதலா? என தமிழ், தெலுங்கு திரையுலகங்கள் ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில், தனுஷ் ’சிம்புவைப் பற்றி ஹன்ஸிகா கூறியது உண்மைதான்’ என கூறியுள்ளது பரபரப்பை எற்படுத்திவிட்டது.


முன்பு ஒரு பேட்டியில் ’உங்களுக்கும் தனுஷுக்கும் என்ன பிரச்சனை’ என்று கேட்டபோது சிம்பு “நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸா தான் இருந்தோம். தனுஷ் நடிச்ச காதல் கொண்டேன் திரைப்படமும், நான் நடிச்ச அலை திரைப்படமும் ஒரே சமயத்துல ரிலீஸ் ஆச்சு. அதுல இருந்து தனுஷ் என்னோட பேசுறதில்ல” என்று கூறியிருந்தார். 
ஆனால் தனுஷ்-ஐஸ்வர்யா காதல் விவகாரத்தால் தான் இருவருக்கும் பிரச்சனை என்று பரவலாக பேசப்பட்டது. ஹன்ஸிகாவும், சிம்புவும் காதல்வயப்பட்டுள்ள நிலையில் அவர்களைப் பற்றி தனுஷ் பேசியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.


சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனுஷ் “சிம்புவுக்கும் எனக்கு பிரச்சனை இருந்தது உண்மைதான். எங்களுக்கிடையில் சரியான பேச்சுவார்த்தை இல்லாததால புரிஞ்சிக்காமலே இருந்துட்டோம். ஆனா நாங்க மனசுவிட்டு பேசினதுக்கப்புறம் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிகிட்டோம்.


வாலு பட டிரெய்லரில் ஹன்ஸிகா சொல்றது மாதிரி சில பசங்களை பாக்க பாக்க தான் புடிக்கும். ஆனா சிம்பு மாதிரி பசங்கள பாத்ததுமே புடிச்சிடும். என்ன எனக்கு சிம்புவ புடிக்க கொஞ்சம் லேட் ஆச்சு அவ்ளோ தான்” என்று கூறியுள்ளாராம்.


*****************************************
ஒரு பேஸ்புக் போராளி,

தன்னுடைய பக்கத்தில் ஒரு அமைச்சரை "முட்டாள்" என்று பதிவிட்டு விட்டார்.

இதை அறிந்து கொதித்துப் போன அமைச்சர் அந்த பேஸ்புக் போராளி மேல் மானநஷ்ட வ‌ழக்கு தொடர்ந்தார்.

பேஸ்புக் போராளிக்கு எதிராக தீர்ப்பு வந்தது.

"அமைச்சரை அவமானப்படுத்தியதற்கு இரண்டு வருசமும், அரசாங்க இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு எட்டு வருசமும் ஆக மொத்தம் பத்துவருசம் சிறை தண்டனை

*******************************************




ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

பந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக‌ இருந்தது.

"உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே...!" என்று கேட்டேன்.

"அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே..." என்றார் அவர்.

ஞாபகம் வந்துவிட்டது. சாப்பிட்டபின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்புகையில்...

"ஏங்க மொய் வைக்கலே..." கேட்டேன் அவரிடம்.

அவர் சொன்னார்,

"அட... மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல... நான் ஏன் மொய் வைக்கணும்?"
***********************************************
***********************************************
நோ கமாண்ட்ஸ்....
 நான் ரசித்தவைகளை நீங்களும் ரசித்ததற்கு மிக்க நன்றி...!

8 comments:

  1. படங்கள் அத்தனையும் நல்ல கருத்தும் காமெடியும் அருமை ..நண்பரே

    ReplyDelete
  2. அரசாங்க ரகசியம் தான் அதிகம் சிரிக்க வைத்தது என நினைத்தேன்.

    அதற்குள் அந்த விருந்து ஜோக் சிரித்தேன். சிரித்தேன். என்ன
    விஷயம் என்று புரியாமல் பக்கத்தில் ஊட்டுக்கிழவி வந்து
    என்னங்க அது அப்படி சிரிக்கிரீக, அப்படி என்ன சமாசாரம் என்று விசாரித்தார்கள்.

    நான் அதை காண்பித்தபோது , அதை விட அந்த நம்ம நாட்டு
    மக்கள் எதை யார் கவனிக்கிறார்கள் என்ற படம் அவர்களை
    ரொம்பவே கவர்ந்தது போலும்..!!

    அதையே கவனித்து கொண்டிருந்த கிழவியிடம் கேட்டென்.

    என்ன அப்படி பார்க்கிறாய் ? கேட்டேன்.

    எப்படி இவுக கிட்டே என் படம் கிடைச்சது என்று பார்வையாளர்களில் ஒன்று தான் தான் என சாதிக்கிறார்.

    யாராவது சமாதானம் சொல்லுங்களேன்.

    இந்த சிம்பு கதை இருக்கிறதே !!
    அது சிந்துபாத் தொடர்கதை மாதிரி !!
    ரசிக்க ரசிக்க ...ரசிப்பு தொடர்கிறது.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  3. சிம்பு கதைக்கு அடுத்த முடிவும் தொடக்கமும் இருக்கலாம்...

    முகநூல் போராளிக்கு நல்ல தீர்ப்புங்க....

    படங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன...

    ReplyDelete
  4. அரசாங்க இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு எட்டு வருசமும்//

    ஆஹா அரசாங்கம் தெரிந்தேதான் ஒரு முட்டாளை அமைச்சர் ஆக்கியதா ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  5. அப்புறம் வருகின்றேன்.

    ReplyDelete
  6. கணினி அனுபவம் தொடர்பதிவுக்கு உங்களையும் அழைத்துள்ளேன்.

    உங்கள் சுவையான அனுபவத்தை படிக்க ஆவலாக இருக்கின்றோம்.

    முடிந்தபோது தாருங்கள் மகிழ்ச்சியடைவோம்.
    நன்றி.
    http://ramyeam.blogspot.com/2013/07

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...