கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

18 August, 2013

இது ஒரு கண்துடைப்புக்காகத்தானா..?



மதுக்கடையிலே 
எழுதிவைத்திருந்தார்கள்
குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
என்று...

புகைப்பொருட்கள் அட்டையில் 

அச்சடிக்கப்பட்டிருந்தது
புகை நமக்கு பகை
என்று...

அரசியல் வதிகளின் 
ஆடம்பர மேடைப்பேச்சு
ஊழலை ஒழிப்போம்
என்று...

உண்மையில் இவைகள் எல்லாம்
ஒரு கண்துடைப்புக்காகத்தானா..?



13 comments:

  1. சரியாகச் சொன்னீர்கள்
    நிச்சயம் கண்துடைப்பு நாடகம்தான்

    ReplyDelete
  2. வணக்கம்
    அருமையாக சொன்னீர்கள் உண்மைதான் கண்இருந்தும் குருடர்கள் போல்,,,,வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கந்துடைப்பு இல்லாம வேறென்ன?!

    ReplyDelete
  4. உண்மைதான் நல்ல கேள்வி

    ReplyDelete
  5. பொதுநலத்தில் அக்கறை இருப்பதைப் போல் காட்டிக் கொள்ளும் சுயநலவாதிகளின் பிரச்சாரம் இது !
    திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் இதற்கு விமோசனம் இல்லை!கண்துடைப்பு என்பதால்தான் கண்ணை மூடிக் கொண்டு குடிக்கிறார்கள் ,புகை விடுகிறார்கள் போலும் !

    ReplyDelete
  6. மிகவும் சரியாகச் சொன்னீர்கள் .இவைகளெல்லாம் வெறும் கண்துடைப்பிர்க்கே தான் சகோதரா .

    ReplyDelete
  7. அன்பின் சௌந்தர் - இதிலென்ன ஐயம் - இதுதான் நிதர்சன உண்மை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. கந்துடைப்புகளே இங்கு அரசியலில் சாஸ்வதம் என்றாகிவிட்டபின் என்ன,,,,,,,மாற்றம் எங்கு எப்படி என்பது தெரியாமேலே ஓடிக்கொண்டேஇருக்கிறோம்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...