கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 August, 2013

அஜித் ஒன்றும் புத்தனோ காந்தியோ கிடையாது... பேட்டியளித்த பிரபல இயக்குனர்...



விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு ஒரு வழியாக டைட்டில் வெச்சாச்சு. ’ஆரம்பம்’ என கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் இந்த டைட்டிலுக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ஒரு அற்புத கனெக்‌ஷன் பற்றி கடைசியாக பார்ப்போம்.




இப்போது சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் விஷ்ணுவர்தன் பேசியதை கவனிப்போம். பேட்டியில் பேசியபோது விஷ்ணுவர்தன் “ ஹீரோ நல்லவனாக மட்டுமே இருக்கண்டும். அவன் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும். சினிமா மூலம் சமூகமாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்ப்பார்ப்பதே தவறு. எல்லா இடத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள்.


எல்லோரையும் சுற்றி தினம் தினம் ஆயிரம் குற்றம் நடக்கின்றன. ஆனால் மக்கள் அதை கவனிப்பது இல்லை. ஆனால் ஹீரோ மட்டும் அநியாயத்தை பார்த்தால் பொங்கி எழ வேண்டும் என நினைக்கிறார்கள்.


எல்லோருக்குமே ஒரு கருப்பு பக்கம் உண்டு. யாருமே புத்தரோ காந்தியோ கிடையாது.அதனால் தான் என் படத்தில் வரும் கதாபாத்திரங்களில் கெட்டவர்களுக்கு கெட்ட முடிவு வருவது போல் அமைத்திருப்பேன். அஜித்தின் கதாபாத்திரமும் அப்படித்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.





அஜித்தால் என்ன செய்ய முடியுமோ அதை படமாக்கி இருக்கிறோம். அவருக்காக எந்த பில்டப்பும் கொடுக்கவில்லை. தனது இமேஜை பற்றி அஜித் கவலைபட்டதே கிடையாது” என்று கூறியுள்ளார். இப்ப ரசிகர்களின் கனெக்‌ஷன் மேட்டருக்கு வருவோம்.


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் முந்தைய கதையாக வெளிவந்த பில்லா 2 திரைப்படத்தின் கிளைமாக்ஸில் அஜித் ”இது வெறும் ’ஆரம்பம்’ தான்” என சொல்வார்.


எனவே விட்டுப்போன பில்லா திரைப்படத்தின்(பில்லா 2-வுக்காக விஷ்ணுவர்தனும் ஒரு கதை வைத்திருந்ததாக சொல்லப்பட்டது) தொடர்ச்சியாக இந்த திரைப்படம் இருக்குமோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக்கொள்கின்றனர்.

3 comments:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...