கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

17 September, 2013

கல்யாண நாளில் சினிமாவுக்கு போகக்கூடாதா....?

இந்த சமூகம் நமக்கு வாழ்க்கையின் பல்வேறு ரகசியங்களை கற்றுக்கொடுக்கிறது. இங்கிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கிறோமோ அதையே நாமும் இந்த சமூகத்திற்கு திருப்பிக்கொடுக்கிறோம். இதில் சில சின்னசின்ன விஷயங்கள்கூட நம் வாழ்க்கையை வடிவமைக்கும் சிற்பியாக மாறிவிடலாம்.

ஒருவன் “பாரீஸிலிருந்து பரங்கிமலைவரை நடந்துச் சென்று... இந்த சமுதாயத்தை உற்றுநோக்கினால் ஆக்ஸ்போட்டு பல்கலைக்கழகத்தில் படித்த அனுபவம் அவனுக்கு வாய்த்து விடும்..” என்று ஒருமுறை அறிஞர் அண்ணாதுரை அவர்கள் செல்லியிருக்கிறார்கள்.

நமக்கு தேவையான வாழ்க்கை பாடங்களை நமக்கு நம்முன்னோரே விட்டுச்சென்றிருக்கின்றனர். அதுமட்டுமின்றி நம்மை சுற்றியிருப்பவர்களை உற்றுநோக்கினால் நமக்கு பல்வேறு அனுபவங்கள் நமக்கு வாய்க்கும்... அப்படி வாய்த்த ஒரு சிறு நகைச்சுவை அனுபவம்தான் இது.

திருவள்ளூர் நகரில் அச்சப்பணியில் இருப்பவர் திரு. ராகவன்... அவர்எனக்கு குரு போல... அவர் சிறுவயதில் இருந்தே அச்சகபணியை மேற்கொண்டுவருபவர்... (இன்று வரை)  அச்சகப்பணி சார்ந்த நிறை சந்தேகங்களை எனக்கு நிவர்த்தி செய்தவர் அவர்தான்... அவர் சொல்லும் அறிவுறைகள் அனைத்தும் ஏதோ வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் கூறுவதுபோல் இருக்கும்.  அவ்வளவு வாழ்க்கை அனுபவம் அவருக்கு... சிலபேர் என்ன இவர் வகுப்பு எடுக்க ஆரம்பித்துவிட்டார் என்றுகூட சொல்வார்கள்... ஆனால் பின்னர் யோசித்தால் அதன் மகிமைபுரியும்.


அவரிடமிருந்து நிறைய தகவல்கள், வாழ்க்கை தத்துவங்கள் கேட்டிருக்கிறேன். கிட்டதட்ட 10 ஆண்டுகள் அவரோடு பழக்கம் இருந்து வருகிறது... அவர் ஒரு அதிதீவிர எம்.ஜி.ஆர். ரசிகர்... ஒருவேளை அறிவுரைகூறும் பழக்கம் அதனால் வந்ததோ என்னவோ...?


அவரோடு பழக்கம் ஏற்பட்ட காலத்தில்.. ஒருமுறை அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன்.. அப்போது அவர்களின் பேரக்குழந்தைகள் அவரிடம் வந்து தாத்தா சினிமாவுக்கு போகலாம் என்று கேட்க... இவர் இன்றைக்கு வேண்டாம்... இன்று கல்யாண நாள் என்று சொன்னார். அந்தகுழந்தைகளும் சரியென்று சொல்லிவிட்டார்கள்.

ஓ.. இவருக்குதான் இன்று கல்யாண நாள் போல... என்று நானும் அமைதியாக இருந்துவிட்டேன்... ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே சம்பவம்... அவருடைய பேரக்குழந்தைகளிடம் இன்று கல்யாண நாள் சினிமாவுக்கு வேண்டாம் என்றார். எனக்கு ஆச்சரியமும் கோவமும் வந்தது.. போன மாதம்தான் இவருக்கு கல்யாண நாள் என்றார். இப்போது... இன்றும் கல்யாணநாள் என்கிறாறே.... ஒருவேளை குழந்தைகளை ஏமாற்ற இப்படி சொல்கிறாரா என்று எனக்கு ஒரு சந்தேகம் வந்தது.

எதுக்கு சந்தேகம் என்று.. அவரிடம் கேட்டே விட்டேன் என்னங்க.. போனமாதம்தான் கல்யாண நாள் என்றீர்கள்... இன்றும் கல்யாண நாள் என்கிறீர்கள்.. அப்படி என்தனை நாள்தான் உங்களுக்கு கல்யாண நாள் என்று கேட்க அவர் புன்னகையோடு ஒரு விளக்கம் அளித்தார்.


தம்பி... கல்யாண நாள் என்று சொன்னது எங்களுக்கு அல்ல.. இன்று முகூர்த்த தினம்.. நகரில் அனைத்து திருமண மண்டபங்களிலும் திருமண விழா நடக்கிறது. இன்றைய நாளில் சினிமாவுக்கு சென்றால் திரையரங்கங்கள் கூட்டமாக இருக்கும். நிறைய பேர் குடித்துவிட்டுவேறு சினிமாவுக்கு வருவார்கள். குடும்பமாக செல்வர்களுக்கு சீட்டும் சரியாக கிடைக்காது. படத்தையும் சரியாக பார்க்க முடியாது... அதனால் தான் என்றெல்லாம் முகூர்த்தநாளாக இருக்கிறதோ அன்றைதினம் குடும்பத்தோடு சினிமாவுக்கு போவதில்லை.

மற்ற நாட்களில் சென்றால் கூட்டமும் குறைவாக இருக்கும். சீட்டும் நமக்கு வசதியாக கிடைக்கும் பிரச்சனைகளும் இருக்காது என்று விளக்கமளித்தார்.

பாருங்கள் ஏதோ ஒரு முகூர்த்த நாளில் சினிமாவுக்கு சென்று அவர்பட்ட இன்னல்கள்தான் அவர் வாழ்க்கையில் அப்படியொரு நாட்களில் குடும்பத்துடன் சினிமாவுக்கு செல்லக்கூடாது என்று உணர்த்தியிருக்கிறது.

நாமும் இதை பின்பற்றுவோம். எந்தநாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களோ அன்றைய தினத்தில் திரையரங்குகளுக்கு குடும்பத்தோடு செல்வதை தவீர்க்கவும்... தனியாக வேண்டுமானால் செல்லலாம் அதில் பிரச்சனையிருக்காது.. குழந்தைகள், பெண்கள், பெரியோர்கள் என குடும்பத்தோடு போகும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது.

சிங்கம்-1 படத்தில் ஒரு காட்சி வரும் பாருங்கள்... அப்படி நடந்தால் என்னசெய்வது... நாம என்ன சூர்யாவா.. உடனே வண்டியை எடுத்துக்கொண்டு சண்டைக்கு புறப்பட...!

7 comments:

  1. நல்ல ஆலோசனைதான்..
    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. Replies
    1. அனுபவம்தான் வாழ்க்கை அர்த்தமாக்குகிறது

      Delete
  3. பட்டீர் பட்டீர் என்று பட்டினத்தார் சொன்னதுபோல்
    இதுவும் ஒன்று போல....

    அருமை ,அனுபவம்
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...