கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 October, 2013

டென்ஷனாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா...?



மனோதத்துவ டாக்டரைப் பார்க்கச் சென்றார் ஒருவர். வந்தவருக்கு என்ன பிரச்சனை என்று வினவினார் டாக்டர்.

மனம் அமைதி இல்லாமலும், எப்போதும் டென்ஷனாக இருப்பதாகவும் கூறினார். அவரை நீண்ட நேரம் பரிசோதித்த டாக்டர், நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு யார் டென்ஷன் ஏற்படுத்துகிறார்களோ அவர்களைச் சந்திக்காதீர்கள்... அவரிடம் பேசுவதை தவிர்த்து விடுங்கள்.. கொஞ்ச நாள் சென்றதும் சரியாகி விடும். அடுத்த வாரம் என்னை வந்து பாருங்கள்” என்றார் டாக்டர்.

மூன்று, நான்கு வாரங்கள் சென்றது. அவர் டாக்டரைப் பார்க்கவரவில்லை. டாக்டரே தொடர்பு கொண்டு பேசினார்.

“என்ன சார் நல்லா இருக்கீங்களா..? முன்ன மாதிரி எந்த பிரச்சனையும் இல்லையே..?“ என்று கேட்டார் டாக்டர்.

“ஆமாம் டாக்டர். இப்ப நான் நல்லா இருக்கேன்“ என்றார் அவர்.

குணமாகியதும் தன்னை வந்து பார்க்கவில்லையே என்று கோபம் வந்தது டாக்டருக்கு....

“அடுத்த வாரமே என்னை வந்து பார்க்கச் சொல்லி இருந்தேனே... மறந்துட்டீங்களா..?“ என்றார் டாக்டர்.

“இல்லை டாக்டர்.. நீங்க தான் சொன்னீங்களே.. யார் டென்ஷன் தர்ராங்களோ.. அவர்களை சந்திக்க வேண்டாம்டன்னு... அதனாலதான் உங்களைப் பார்க்க வரவில்லை..!” என்றார் பொறுமையாக.

அப்ப பாருங்க இந்த டாக்டருங்க எவ்வளவு டென்ஷன் தர்றாங்கன்னு...!

6 comments:

  1. நீங்கள் சொன்னது சரிதான்

    ReplyDelete
  2. ஹா! ஹா! உண்மைதான் சில மருத்துவர்களை பார்த்தாலே டென்சன் எகிறத்தான் செய்கிறது!

    ReplyDelete
  3. இதுதான் வைத்தியம். த,ம 3

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...