கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

01 November, 2013

உலகம் மற்றவரை இப்படித்தாங்க பார்க்குது... இது நியாயமா..?


மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.

“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.” என நினைத்துக் கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்

“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.

“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான்.


சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.

“இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி விட்டு சென்றார்.

"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே"

நம் எண்ணங்களாலே நம்முடைய முகவரிகள் நிர்ணயிக்கப்படுகிறது. நம் பார்வையும் அப்படித்தான். மனதை சுத்தமாகவும் நல்ல சிந்தனைகள் குடியிருக்கும் கோயிலாகவும் இருந்தால் தான் நம் இந்த சமூகத்தால் மதிக்கப்படுவோம்....

*****************************************

என் இனிய நண்பர்கள்... பாசத்திற்குறிய வாசகர்கள்...
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...


10 comments:

  1. நல்லது... நன்றி...

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நன்று!

    இனியதீபாவளி நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. உண்மை உண்மை உண்மையே...
    இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  5. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வு! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நன்று. தீபஒளித்திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரா !

    ReplyDelete
  9. அன்பின் சௌந்தர் - எண்ணம் போல வாழ்வு - நமது எண்ணங்க்ளைப் போலவே தான் நாம் அடுத்தவரையும் எண்ணுவோம். இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...