கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 November, 2013

நவீன சரஸ்வதி சபதம் - சினிமா விமர்சனம் - Naveena Saraswathi Sabatham review


சினிமா ஆசையில் எப்படியாவது திரையில் கதாநாயகனாக நடித்துவிடவேண்டும் என்ற துடிப்போடு... கஷ்டப்பட்டு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு கிடைத்துவிடுகிறது.. இன்னும் பத்து நாட்களில் படம் தொடங்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ராஜ்குமார் (அதாங்க நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம் நடத்தில நடிச்சாரே அவரு...)

அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வின் மகனாக சத்யன்.. சதாரணமாக இருந்து கோடிஸ்வராக உயர்ந்த இவரது தந்தை (ஒரு நகைச்சுவை நடிகர்தாங்க) அடுத்து எப்படியவது தன்னுடைய மகனான சத்யனை MLA வாக ஆக்கிவிடவேண்டும் என்ற முடிவில் தற்போதுவரும் தேர்தலில் தனக்குபதிலாக சத்யனை களமிறக்குகிறார் அவர்... இன்னும் 10 நாட்களில் வேட்புமனு தாக்கல்...

மிகப்பெரிய ரவுடியான சொர்ணக்காவுக்கு வேலைக்கார கணவராக இருக்கிறார் விடிவி கணேஷ்.... வெளியில புலி ஆனா வீட்டுல எலி... இவருக்கு மகிழ்ச்சி வீட்டைவிட நண்பர்களோடுதான்... பால்புட்டியில் சரக்கடிப்பது இவரது ஸ்டைல்...


கடைசியா நம்ம ஹீரோ... ஆண்கள் கில்மாவுக்கு மருந்து தயாரிக்கும் சித்தவைத்திய சாலை நடத்திவரும் 14 தலைமுறை வம்சம்.... அதில் பாரம்பரிய தொழில் நடத்தும் தன் தந்தைக்கு அடுத்து தானும் அந்த தொழிலை செய்துவரும் ஜெய்...  ஆனாலும் டாக்டர் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார்...

சரி படத்தில இருக்கும் நான்கு நபர்களைப்பத்தி சொல்லியாச்சி.. (ஆமாங்க இது இந்த நான்கு நபர்களைப் பத்தின கதைதான்..) கதைஎன்னன்னு கேக்குறீங்களா...

படத்தின் கதை அளர்க்களமா துவங்குமிடம் சிவலோகம்... சிவன், நாரதரிடம் ஒரு வேலையை ஒப்படைக்கிறார்.. (சிவன் வேடத்தில் சுப்பு பஞ்சு.. அதாங்க. பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யாவின் அண்ணன்) திருவிளையாடல் ஆடி ரொம்ப நாளாகுது ஒரு நாலுபேர தேர்வு செய்து கொண்டு வாங்கன்னு சொல்லி அனுப்புறாரு... நாரதர் தேர்ந்தெடுத்த அந்த நாலுபேர்தான் இவங்க...

சரி எதுக்கு இவங்களை தேர்ந்தெடுத்தாருன்னு பார்க்கிறீங்களா... அது ஒண்ணுமில்லிங்க... இந்த நாலுபேரும் நண்பர்கள்... ரொம்ப நல்லவங்கதான்.. ஆனா குடிச்சாமட்டும் இவங்க பண்ற ராவடி கடவுளுக்கே அடுக்கல... அதனால இவங்களை வச்சி குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளை அவர்களுக்கு புரியவைக்க ஒரு சின்ன திருவிளையாடலை சிவன் நிகழ்த்துகிறார்... இதுதான் கதை....



டிவி நிகழ்ச்சியில் ஒன்றில் பாடி பரிசுபெரும் நிவேதா தாமஸை காதலிக்கிறார், ஜெய்... இரண்டுவருடம் காத்திருங்கள் என்று கூறும் அவரிடம் அப்படி காத்திருந்து பின்பு காதல் கனிந்து நிச்சயதார்த்தம் முடிகிறது ஒருமாதத்தில் திருமணம் என்று முடிவாகிறது...

ஒருமாதத்தில் திருமணம் என்பதால் ஒரு பேச்சுலர் பார்ட்டி வேண்டும் என்று நண்பர்கள் கேட்க... அதற்காக இந்த நான்குபேரும் சேர்ந்து குடித்து கும்மாளம் அடிக்க ஒருவாரம் சுற்றுலாவாக பாங்காங் ‌செல்கிறார்கள்.... அங்கு குடித்து கும்மாளம் அடிக்கும் இவர்களை கடவுள் சிவன் ஒரு தனித்தீவில் விட்டுவிடுகிறார்...

குடியை மறந்தால் இவர்களுக்கு தப்பிக்க ஒரு வாரத்தில் ஒருவாய்ப்பும்.. அதை சரியாக பயன்படுத்தவில்லையென்றால் அடுத்த 6 மாதத்தில் தான் இன்னொரு வாய்ப்பும் வழங்கப்படும் அதுவே இறுதியான வாய்ப்பாக இருக்கும் என்று கூறுகிறார்...

அதன்படி பாங்காங் செல்லும் இவர்கள் திடிரென ஒரு தனித்தீவில் கடவுள் சக்தியால் கொண்டுவிடப்படுகிறார்கள்...

அதன்பிறகு இவர்கள் குடியால் எப்படி கிடைக்கும் வாய்ப்புகளை கைவிடுகிறார்கள்... பிறகு அங்கிருந்து எப்படி தப்புகிறார்கள்.... இப்படி குடிப்பதற்கு கூட வெளி‌நாடு சென்று நேரத்தை வீணடிக்கும் இவர்கள் வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது... குடி வாழ்க்கையில் எதையெல்லாம் இழக்கவைக்கிறது என்று நல்லதொரு திரைக்கதையுடன் நல்லதொரு நகைச்சுவை படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் கே.சந்துரு

நகைச்சுவைக்கு படத்தில் பஞ்சமில்லை.. விடிவி கணேஷ்.. ஜெய்யுடன் இந்த நால்வரும் செய்யும் அலப்பறைகள் அசத்தல்... ப‌ழைய சரஸ்வதி படத்தைப்பார்த்து அதுபோல ஆக நினைக்கும் கணேஷ்... ஒரு தேங்காய் தலையில் விழ மூளைக்குழம்பி சரஸ்வதி சபதம் வசனங்களை பேசி திரியும் காட்சிகள் அழகு... 

குபீர் சிரிப்பை வரவைக்கும் வசனங்கள் சூப்பர்... சில வசனங்கள்... சில நகைச்சுவைகள் காட்சிகள் கொஞ்சம் முகம்சுளிப்பதாக இருந்தாலும் ரசிக்கும்படி வைக்கிறது...

இதில் ஹைலைட்டே சிவலோகம் தான்... சிவன் வேடத்தில் சுப்புபஞ்சு.. பார்வதியாக தேவதர்சினி... நாரதராக மனோபாலா... சிவலோகமே ஒரே டிஜிட்டல் மயத்தில் அமைத்திருப்பது அழகு... சிவன் ஆப்பிள் கம்யூட்டர் இந்த தீவில் நடக்கும் காட்சிகளை பார்ப்பது... முருகன் கையில் ஐ பேட்... என தற்போதைய நாகரீகமடைந்த சிவலோகம் எப்படியிருக்குமோ அப்படி உறுவாக்கி அசத்தியிருக்கிறார்கள்...

இதுஒரு காதல் கதையல்ல அதனால்தான் நிவேதா தாமஸ்-க்கு அதிகம் வேலையில்லை... ஹீரோயின் படல்களுக்கு மட்‌டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்....

இவர்கள் தனித்தீவில் மாட்டிக்கொள்ளும்போது வரும் காட்சிகள் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் சிவலோகத்தை அடிக்கடி காட்டி அந்த இழுவையை சரிசெய்கிறார் இயக்குனர்...

இசை பரவாயில்லை.. பாடல்கள் சுமார்... கானாபாலா பாடல் அழகு...

பொதுவான இந்தபடத்துக்கு நவீன திருவிளையாடல் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.. ஆனால் திருவிளையாடல் என்று தலைப்பை தனுஷ் பயன்படுத்திவிட்டதால் இதற்கு நவீன சரஸ்வதி சபதம் என்று மாறியிருக்கிறது...

10 ரூபாய்க்கு ஒரு கர்சீப் வாங்கினால் கூட 1000 ரூபாய்க்கு பார்ட்டிக்கொடுக்கிறார்கள்... குடியானது இப்போது பேஷனாகவே மாறிவருகிறது... இப்படி குடித்துகுடித்து நமக்கு கிடைக்கும் பல அறிய வாயப்புகளையும் நல்ல சந்தர்ப்பங்களையும் தவறவிட்டுவிடுகிறோம்... குடியை விட்டுவிட்டால் வாழ்க்கையானது எப்போதும் நல்ல சக்சஸ் தரும் என்கிறது இந்த நவீன சரஸ்வதி சபதம்....

படம் ஒருமுறைபார்க்கலாம்...

5 comments:

  1. ஒருமுறை என்றால் பார்த்திட வேண்டியது தான்... நன்றி...

    ReplyDelete
  2. அப்ப பார்க்கவேண்டிய படம் என்று சொல்லுங்கள்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  3. தங்களின் பதிவு படத்தினைப் பார்க்கத் தூண்டுகிறது. நன்றி

    ReplyDelete
  4. ஒரு தடவை பார்த்திடலாம் என சொல்லுங்க! :)

    ReplyDelete
  5. நாளை போகலாமென்று இருக்கிறேன், இந்த விமர்சனத்தை படித்தபின்பு எடுத்த முடிவு, நன்றி...

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...