கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

11 December, 2013

பெண்களை கவர இந்த மூன்று விஷயம் போதும்..!


முல்லா நஸ்ருதீன் பெண்கள் மீது விருப்பம் கொண்டவர் என்று நான் கெள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அவருக்கு பெண்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டமே கிடையாது. எவரும் அவரை விரும்ப மாட்டார்கள்.

ஒரு பெண்னை அவர் முதன்முறையாக சந்திக்க சென்றார். அதற்கு முன் அவர் தனது நண்பனிடம் கேட்டார்; “உன்னுடைய ரகசியம் என்ன? நீ பெண்களுடன் நன்றாக பழகுகிறாயே? நீ எளிதில் அவர்களை மயக்கிவிடுகிறாய். ஆனால் நான் தோல்வி காண்கிறேன். எனவே எனக்கு எதாவது வழிவகை சொல்லிக்கொடு. நான் முதன்முறையாக ஒரு பெண்னைப் பார்க்க போகிறேன், எனக்குச் சில ரகசியங்களை சொல்லிக்கொடு.” என கேட்டார்...

நண்பன் கூறினான்; “மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். எப்போது, உணவைப்பற்றி, குடும்பத்தைப்பற்றி, தத்துவத்தைப்பற்றிப் பேசு”.

“ஏன் உண்வைப்பற்றி பேச வேண்டும்” என்று கேட்டார் முல்லா. நண்பன் கூறினான்; “உண்வைப் பற்றி பேசுவதை பெண் விரும்புவதால் நான் அதைப் பற்றிப் பேசுகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் உணவில் விருப்பம் உண்டு. அவள் குழந்தைக்கு உண்வாகிறாள், மனித சமுதாயம் முழுமைக்கும் அவள் உணவாக இருக்கிறாள். எனவே அடிப்படையில் அவள் உணவில் விருப்பம் கொண்டிருக்கிறாள்”.

“சரி குடும்பத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும்?” என்று முல்லா கேட்டார்.“ அவளுடைய குடும்பத்தைப் பற்றி நீ பேசினால் உன்னுடைய உள்நோக்கங்களை நேர்மையானவையாக காட்டும்“ என்று நண்பன் பதில் கூறினான்.

“தத்துவத்தைப் பற்றி ஏன் பேச வேண்டும்? “என்று முல்லா அடுத்த கேள்வியை கேட்டான். அதற்கு அந்த நண்பன் பதில் தருகையில், “தத்துவத்தைப்பற்றி பேசினால் அந்த பெண் தன்னைப் புத்திசாலியாக கருதிக் கொள்கிறாள்“ என்றான்

உடனே முல்லா விரைந்து சென்றான். அந்த பெண்னைக் கண்டதும் “ஹலோ, உனக்கு“ நூடுல்ஸ்” (ஒரு வகை உணவு என்றும் முட்டாள் என்றும் பொருள் உண்டு) பிடிக்குமா? என்று கேட்டான். அதை கேட்டு அவள் அதிர்ச்சி அடைந்தாள், “இல்லை“ என்று பதில் கூறினாள் . முல்லா இரண்டாவது கேள்வியைக் கேட்டான், “உணக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்களா?“ “இல்லை” என்றாள்.

முல்லா ஒரு நிமிடம் திகைத்தான். “தத்துவத்தைப்பற்றி எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தான். ஒரு வினாடி கழித்து கேட்டான், “உனக்கு ஒரு சகோதரன் இருந்தால் அவனுக்கு “நூடுல்ஸ்” பிடிக்குமா?“

ஓஷோ: “தத்துவம் என்பது அநேகமாக முட்டாள்தனமானதுதான்”

இன்று ஓஷோ அவர்களின் பிறந்த தினம்
************************************

தேதியே போடாமல் வந்த
அவளின் காதல் கடிதங்களை
தினமும் படிக்கிறேன்...!

எத்தனை நாள் படித்தாலும்
அவை புதிது போலவே
என்னை சிலிர்க்க வைக்கிறது..!

இன்னும் எத்தனை யுகங்கள்
இளமையோடு வாழுமோ
இந்த காதல்...!

+++++++++++++++++++++++++++++++

“தேடிச் சோறு நிதம் தின்று; அதில்
திண்ணைக் கதைகள்பல பேசி;மனம்
வாடித் துன்பம் மிக உழன்று; பிறர்
வாடப் பல செயல்கள் செய்து;நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி; கொடும்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்
வேடிக்கை மனிதரைப் போலே; நான்
வீழ்வேனென்று நினைத் தாயோ? ”

-பாரதி பிறந்த நாள் இன்று...

+++++++++++++++++++++++++++++++ 
 

10 comments:

  1. வணக்கம்
    அருமையான உரையாடல் மூலம் கருத்தை விளக்கியுள்ளீர்கள் ..இந்த காலத்தில் சாத்தியம் ஆகுமா?... என்பதுதான் எனது வினா?வாழ்த்துக்கள் ஐயா.
    எனது புதிய வலைப்பூவின் மூலம் கருத்து இடுகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    அருமையான உரையாடல் மூலம் கருத்தை விளக்கியுள்ளீர்கள் ..இந்த காலத்தில் சாத்தியம் ஆகுமா?... என்பதுதான் எனது வினா?வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. இரண்டுமே அருமை...! நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ”அவங்களு”க்கிருக்கும் அறிவும், பொறுமையும் நம்மாளுங்களுக்கில்லையே!

    ReplyDelete
  5. கதையும் முண்டாசுக் கவிஞனின் கவிதைக்கு
    முன்னுரையாக எழுதிய கவிதையும் அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பாரதியின் கவிதை வரிகள் தவறாக உள்ளது சகோ... சரி பார்த்துக்கொள்ளுங்கள்... " தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி "

    ReplyDelete
  7. முல்லா கதை மொள்ளமாரி கதை போல உள்ளது. முல்லா இவ்வளவு கேவலமானவர் என்று தோன்றவில்லை.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. சிந்திக்க வைக்கும் செய்திகளுக்கு நன்றி

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...