கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

31 August, 2013

ஒரே வேலை.... முடியலிங்க...!


நீங்க என்ன நினைச்சி வந்தீங்க....!
எல்லோரும் சென்னையில சந்தோஷமா சந்திச்சி  பழகுங்க...!

30 August, 2013

இதைக்கூட அறியாமல் பெண்களா...? என் அனுபவம் பேசுகிறது...!



நான் அறிவேன் 
என் எழுத்தின் பிறப்பும்.. ஆயுளும்...

நான் அறிவேன் 
என் எழுத்தின் நிர்வாணமும்... கவர்ச்சியும்...
 

நான் அறிவேன் 
என் எழுத்தின் வியப்பும்... வேதனையும்...
 

நான் அறிவேன் 
என் எழுத்தின் உயர்வும்.... தாழ்வும்...
 

நான் அறிவேன்
என் எழுத்தின் அரவணைப்பும்... எதிப்பும்...
 

நான் அறிவேன் 
என் எழுத்தின் வீரியமும்... கவர்ச்சியும்...
 

நான் அறிவேன்
என் எழுத்தின்  புகழ்ச்சியும்..  இகழ்ச்சியும்...
 

நான் அறிவேன்
என் எழுத்தின்  அமைதியும்.. ஆர்ப்பரிப்பும்...


ஆனால் என் உயிரே....
இதை நீ அறிவாயா..?


நீதான் என் எழுத்தின்
உயிரும்... இயக்கமுமென்று...!


29 August, 2013

உஷார்...! இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறது...!

 
 ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.

அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

- இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.

" வாழ்வில் நீ முன்னேறு - நாளை நீ வரலாறு. " என்ற கூற்று நிச்சயம் ஒருநாள் உண்மையாகும்.  (ரசித்தது)

28 August, 2013

போலீஸிடம் மாட்டிய அஜீத்....! இப்படியும் சண்டை போட்டாரா..?

 
அஜீத் குமார் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்றபோது தமிழக-கர்நாடக எல்லையில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். 
 
அஜீத் குமார் தான் புதிதாக வாங்கிய பிஎம்டபுள்யூ பைக்கில் கடந்த வாரம் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார். ரேஸ் சூட்டில் சென்னையில் இருந்து கிளம்பிய அவர் ரோட்டோரக் கடை ஒன்றில் வண்டியை நிறுத்திவிட்டு சாப்பிட்டார். 
 
தமிழக-கர்நாடக எல்லையில் அஜீத்தை பரிசோதித்த டிராபிக் போலீஸ் ரோட்டோரக் கடையில் அஜீத்தை பார்த்துவிட்டு அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அதன் பிறகு அவர் பெங்களூர் சென்றார். 
 
தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அஜீத்தின் பைக்கை நிறுத்தி உரிய ஆவணங்களை கேட்டனர். 
 
ஹெல்மெட்டை கழற்றியதும் பைக்கில் இருந்தவர் அஜீத் என்பதை பார்த்து போலீசார் ஆச்சரியப்பட்டனர். பின்னர் அஜீத் உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
 
***********************************

ஹாலிவுட்டில் அனைத்து சண்டைக் கலைஞர்களும் ஒருமித்த குரலில் பாராட்டுவது நடிகர் டாம் க்ரூஸை. சமீபத்தில் அவரது Oblivion வெளியான போது வளைத்து வளைத்து பாராட்டினார்கள்.

அனைத்துவிதமான சண்டைக் கலையிலும் தேர்ச்சி பெற்றவர் டாம் க்ரூஸ். அவருக்கு எப்படி பைட் பண்ணுவது என்பது தெரியும். முக்கியமாக சண்டைக் காட்சியின் போது எப்படி அடிபடாமல் தற்காத்துக் கொள்வது என்பதை தெரிந்து வைத்திருக்கிறார். அவரை வைத்து சண்டைக் காட்சி அமைப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினர்.

 
டாம் க்ரூஸுடன் சண்டைக் காட்சியில் பணியாற்றியவராம் லீ விட்டேகர். இவர்தான் ஆரம்பம் படத்தின் சண்டைக் காட்சிகள் சிலவற்றை வடிவமைத்திருக்கிறார். 
 
அஜித்தின் சண்டையிடும் திறமையைப் பார்த்தவர், அஜித்தைப் பார்க்கும் போது டாம் க்ரூஸின் நினைவு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

பார்க்கலாம், ஆரம்பத்தில் அஜித் எப்படி சண்டை போட்டிருக்கிறார் என்று.

27 August, 2013

இந்த மாணவர்கள் எம்புட்டு தயாராயிருக்காங்க பாருங்க...!






குறும்பு செய்த இரு மாணவர்களிடம் ஆசிரியர்,


''உங்கள் பேரை இருநூறு முறை எழுதிக் கொண்டு வாருங்கள்.''என்றார்.

ஒருவன் சொன்னான்,

''ஐயா, இருவருக்கும் ஒரே அளவு தண்டனை தராமல் எனக்கு மட்டும் அதிகம் தருகிறீர்களே?''


"இருவருக்கும் ஒரே தண்டனை தானே கொடுத்திருக்கிறேன்" என்று ஆசிரியர் அவனிடம் கேட்டார்.


அவன் சொன்னான்,
''இல்லை ஐயா, அவன் பெயர் ரவி.

என் பெயரோ, வேங்கட சுப்ரமணிய கோபால கிருஷ்ணன்.''


*************************************



நம்ம நாராயணசாமி வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது.


அவர் நகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்து அதை அப்புறப்படுத்தக் கேட்டுக் கொண்டார்.

அதற்கு அந்த ஆள் குறும்பாக,

"சாமியாரே, இறந்த அந்த கழுதைக்கு இறுதிச் சடங்குகளை முதலில் முடித்துவிட்டு சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம்"என்றார்.


அதற்கு நாராயணசாமி சொன்னார்,


"அதற்கென்ன, பேஷாகச் செய்து விடுகிறேன். இருந்தாலும் அந்தக் கழுதையோட உறவினர்களுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா? அதுதான் உங்களிடம் சொன்னேன்".

***********************************




கை, கால்களில் கட்டுடன் அமர்ந்திருந்தார் கந்தசாமி.


"என்னடா... எப்படி அடிபட்டது?" கேட்டான் அவரது நண்பன்.


"நேற்று உணவு விடுதியில் ஒரு குழப்பம் ஏற்பட்டு விட்டது"


"ஏன்...என்ன நடந்தது?"

"என் மனைவியை அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்கு நேற்று இரவுசென்றேன். சாப்பிடும்போது அவள் உணவில் ஒரு பூச்சி கிடந்தது. உடனே அவள் சர்வரைப் பார்த்து, 'இந்தப் பூச்சியைத் தூக்கி வெளியே எறியுங்கள் என்று சொன்னாள் என்றாள்"

"சரிதானே... அதற்கும் நீ அடிபட்டதற்கும் என்ன சம்பந்தம்?"


நாராயணசாமி சொன்னார்,

"அந்த சர்வர் என்னைத்தூக்கி ஜன்னல் வழியே வெளியே எறிந்துவிட்டான்"

*************************



என்ன கொடுமை... கணேஷ்...


26 August, 2013

இப்படியிருப்பின் எப்படித்தான் முடிவெடுக்க...


சில நேரங்களில் இப்படித்தான்
அவள் சிந்திவிட்டு போகும்
சிரிப்புபொளிகளை ‌சேகரித்து
அர்த்தம் தேடிப்பாக்கிறேன்...

தில் காதல் இருக்கிறதா
இல்லையா என்ற குழப்பத்தோடே
கலைந்து விடுகிறது அவைகள்...

நாம் கா‌தலை சொல்லி
அவளின் உதட்டோரத்தில்
ஒட்டிக் கொண்டிருக்கும் புன்னகையும்
உதிர்ந்து விடுமோ என்ற தயக்கத்தோடே
என்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது விநாடிகள்...

வீடும் நாடும்
காவியமும் ஓவியமும்
காதலை மரணபயத்தோடே முடிக்கிறது...

சொல்லாமல் உணர்வற்று கிட்ப்பதை விட
சொல்லிவிடுவதாய் முடிவெடுக்கிறது
என் உயிர் அணுக்கள்...

டிதம் கொடுக்க
கிழிந்த சாலைகளுக்கிடையே கடக்கும்
அ‌வளை எதிர்நோக்கும் போது
பூனையின் குறுக்கீடலால்
வீடு திரும்பி நாளை கொடுக்கலாம்
என்று தன்னோடே வைத்துக் கொள்கிறேன்...

ப்போது தரலாம் என்று
சரிவராத முடிவை யோசிக்கையில்
பல்லியின் சப்தத்தால் அதுவும் ஸ்தம்பித்தது..

ப்படியாக 
என் காதலுக்கு தடங்கலாய் இருக்க
காலையில் இன்னொன்றாய்
பக்கத்து வீட்டுக்காரனின் 
காதல் தோல்வி மரணமும்...
 நான் எப்படித்தான் முடிவெடுக்க....


மீள் பதிவு

25 August, 2013

உலகின் முதல் ஞானப்பழம்....




திருமுருக கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். அருள்மொழி அரசு, என்றும் திருப்புகழ் ஜோதி என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது பிறந்தவர் இவர். செங்குந்த வீர சைவ மரபினர்.

ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19-வது வயதில் கல்யாணம் புரிந்தார்.

இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர். மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார்.

19-ம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது ஆன்மிக மொழி பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.

அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக்கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து திருப்புகழ் அமிர்தம் என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி கைத்தல நிறைகனி என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, ராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. குழந்தைகளுக்கு தாத்தா சொன்ன குட்டிக்கதைகள் என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

தமிழ் இசைச் சங்கம் இசைப்பேரறிஞர் என்ற விருதை 1967-ம் ஆண்டு வழங்கியது. 1993 அக்டோபர் 19-ம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள் 1993-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி விமானப் பயணத்திலேயே காலமானார்.

இன்று அவருடைய பிறந்த தினம்...
இந்த தினத்தில் அவரை நினைவு கூறுவது எனக்கு மகிழ்ச்சியே....!

24 August, 2013

மனசு சஞ்சலப்படுகிறதா...? கண்டிப்பாக நீங்க இப்படித்தான் செய்யனும்...!...!



ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார்.

சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக்கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.




அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏறி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.

அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்றுவரப் பணித்தார்

நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான்.

புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.

தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்?

நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டதுதான். 
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். 
நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம்., அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். 
அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். It will happen. It is effortless. மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! it is an effortless process!

22 August, 2013

மாநாட்டுக்கு பிரபல பதிவருக்கு அனுமதி மறுப்பா...? உங்க பெயர் இருக்கிறதா சரி பார்த்துக்கங்க..

வணக்கம் மக்களே....  

தமிழ் வலைப்பதிவர்கள் இரண்டாம் ஆண்டு மாநாடு வெற்றிகரமாக  தயாராகிவிட்டது என்று பல பதிவுகளை படிக்கும்போது தெரிகிறது... கடந்த ஆண்டை விட அதிகபதிவர்கள் இதில் கலந்துக்கொள்கிறார்கள். கடந்த ஆண்டைவிடவும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்...

பதிவர் மாநாடு மிகவும் சிறப்பாகவும்.. செம்மையாகவும் ‌நடைபெற அதன் பொறுப்பாளர்கள் தங்களுடைய பணியை செம்‌மையாக செய்து வருகிறார்கள்.... அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வளவு பதிவர்கள் கூடும் இந்த மாநாடு சிறப்பாக நடத்திக்கொடுக்‌க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

இந்த மாநாட்டு வேலைகளை கவனிக்க நான் வருவதற்கு பலமுறை முயன்றும் முடியவில்லை... (வரும் வாரம் கூட சனி ஞாயிறுக்காக வேலைகள் தயாராக இருக்கிறது.) அதற்காக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் யாருக்கும் அனுமதி கேட்க வேண்டிய அவசியல் இல்லை.. நீங்கள் வரவிரும்பம் தெரிவித்தால் மட்டுமே போதும்... யாரும் அழைக்கவில்லை என்று இருந்துவிடாதீர்கள்... அனைவரும் கலந்துக்கொண்டு விழாவை வெற்றிப்பெற செய்யுங்கள்...


மாநாட்டுக்கு வரும் பதிவர்களின் பட்டியல்

(இன்னும் பட்டியல் நீலும் என்று நினைக்கிறேன்.... தயவு செய்து இதில் பெயர் இல்லாதவர்கள் பெயர்களை தெரியப்படுத்தவும்...)

(அகர வரிசைப்படி)
அ.சிவசங்கர்
அஞ்சாசிங்கம் செல்வின்
அப்துல் பாசித் பிளாக்கர் நண்பன்
அமுதா கிருஷ்ணா அக்கம் பக்கம்.http://amuthakrish.blogspot.in/
அரசன் ( கரைசேரா அலை)
 
ஆதிமனிதன்
ஆரூர் மூனா செந்தில்
இப்படிக்கு இளங்கோ
இரவுவானம் சுரேஷ்
இரா.மாடசாமி வானவில்
 
உலகசினிமா பாஸ்கரன்
என் ராஜபாட்டை ராஜா
ஒட்டக்கூத்தன்
ஒட்டக்கூத்தன்

கடல் பயணங்கள் சுரேஷ் குமார்
கருத்து கந்தசாமி
கலாகுமரன்
கவிஞர் மதுமதி
கவிதைவீதி செளந்தர்
 
கவியாழி கண்ணதாசன்
காணாமல் போன கனவுகள் ராஜீ
கார்த்தி ஈரோடு
கிராமத்துக் காக்கை

குடந்தையூர் ஆர். வி. சரவணன்
குணா
குருவை மாதேஸ்
கே.ஆர்.பி.செந்தில்
கேபிள் சங்கர்
 
கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
கோகுலத்தில் சூரியன் வெங்கட்
கோவை ஆவி
கோவை கமல்
கோவை கோவி
கோவை சக்தி
 
கோவை சதிஸ்
கோவை நேரம் ஜீவா
கோவை ராமநாதன்
கோவை2தில்லி

சங்கர இராமசாமி http://rssairam.blogspot.com/
சங்கரலிங்கம் உணவு உலகம்
சசிகலா (தென்றலின் கவிதைகள்)
சசிகலா திருவண்ணாமலை
சசிமோகன்
 
சதீஸ் சங்கவி
சதீஸ் செல்லதுரை
சமீரா
சரவணன்(ஸ்கூல் பையன்)
சாமக்கோடங்கி பிரகாஷ்

சிகா, லெனின் http://kenakkirukkan.blogspot.com/
சிபி செந்தில்குமார்
சிராஜுதீன்
சிவகாசிகாரன் ராம் குமார்,
சிவகுமார்(மெட்ராஸ்பவன்)
 
சிவசங்கர் திருப்பூர்
சின்ன சின்ன சிதறல்கள் அகிலா,
சீனு (திடங்கொண்டுபோராடு)
சுட்டிமலர்
சுப்புரத்தினம்

செ.அருட்செல்வப் பேரரசன் www.arasan.info,
செல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)
சென்னை பித்தன்
சேலம் தேவா
சைதை அஜீஸ்
 
டி.என்.முரளிதரன்
தங்கம் பழனி
தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
தருமி - http://dharumi.blogspot.in/
தனபாலன் - திண்டுக்கல்
 
தேவகுமார்
நம்பி
நாகராசன் http://revakavithaikal.blogspot.com/
நாய் நக்ஸ் நக்கீரன்
நிகழ்காலம் எழில்

பகவான்ஜி http://jokkaali.blogspot.com
பட்டிகாட்டான் ஜெய்
பரமேஸ்வரன் ஈரோடு http://konguthendral.blogspot.com
பரமேஸ்வரன் டிரைவர்
பரிதி.முத்துராசன் http://parithimuthurasan.blogspot.in/
 
பழனி கந்தசாமி(மன அலைகள்)
பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
பிரபு கிருஷ்ணா கற்போம்
பிலாசபி பிரபாகரன்

புரட்சிமணி http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/
புலவர் இராமானுஜம்
பெருங்குளம் ராமகிருஷ்ணன்
மணல் குதிரை தினேஷ்
மதுரை சரவணன் - http://veeluthukal.blogspot.in/
மதுரை ரேவதி http://revakavithaikal.blogspot.com/

முகமது சபி சக்கரக்கட்டி
முரளிக்கண்ணன் மதுரை
முனைவர் இரா.குணசீலன்
மோகன்குமார்(வீடு திரும்பல்)
ரஞ்சனி நாராயணன்
 
ரஹீம் கஸாலி
ராகவாச்சாரி
ரீகன் ஜோன்ஸ் http://www.tamilpriyan.com/
ரூபக்ராம்
ரேகா ராகவன்
 
வழிப்போக்கன் யோகேஷ்
வா.மு.முரளி
வால்பையன்
வியபதி http://ethaavadhu.blogspot.in
விஜயன் துரைராஜ் கடற்கரை
 
வீடு சுரேஷ்
வீரகுமார்
வெங்கட் நாகராஜ்
வெண்பா சுஜாதா
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
 
ஜீவன் சுப்பு,
ஜோதிஜி திருப்பூர்
S. வைதீஸ்வரன் http://vaidheeswaran-rightclick.blogspot.in/

பட்டியல் நீளும்...!
 
தலைப்பு என்னுடைய ஸ்டைலில்
எந்தபதிவருக்கும் அனுமதி மறுக்கப்படவில்லை...
அனைவரும் வாருங்கள்...!

எச்சரிக்கை..! இந்த சூழ்நிலை உங்களுக்கும் வரும்...!



அவரோடு 
பேசினால்
இவருக்கு 
பிடிக்கவில்லை...

இவரோடு 

பேசினால்
அவருக்கு 

பிடிக்கவில்லை..

இந்த 
இருவரோடும் 
பேசுவது
அடுத்தவருக்கு பிடிக்கவில்லை...


என்னசெய்வது...?

ஒவ்‌வோரிடமும் 
பேசிவிட்டு 
பேசாதவன்‌போல் 
நடித்துக்கொண்டு 
இருப்பதால்

இப்போதெல்லாம்
என்னையே 
பிடிக்கவில்லை 
எனக்கு..!


21 August, 2013

இப்படிகூடவா வியாபாரம் செய்வாங்க...!

 
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், ''அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!'' என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, ''போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர். (தன்னம்பிக்கை கதைகளிலிருந்து...)

20 August, 2013

தமிழனுக்கு சண்டையிட மட்டும்தான் தெரியுமா?



கர்நாடகா அரசு, எங்கெங்கே, நீரைச் சேமிக்க முடியுமோ, அங்கே எல்லாம் அணைகளைக் கட்டி, அவை அனைத்திலும் நீரைச் சேமித்து, அவர்களின் அனைத்து தேவைகளையும், பூர்த்தி செய்து, அதற்கு மேல், வேறு வழியில்லாத பட்சத்தில், தமிழகத்தின் பக்கம், தண்ணீரை திறந்து விடுகிறது.


ஒரு பக்கம் கர்நாடகாவிலிருந்தும், இன்னொரு பக்கம் கேரளாவிலிருந்தும், இன்னொரு பக்கம் ஆந்திராவிலிருந்தும், தண்ணீர் வெள்ளமாக வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த நீரை, நாம் முறையாக சேமித்து, பயன்படுத்துகிறோமோ என்றால், நிச்சயமாக இல்லை.


மன்னர்களும், வெள்ளைக்காரர்களும், அதன் பின் காமராஜரும் கட்டிய அணைகளை வைத்து தான், இன்னமும் நாம் பிழைத்துக் கொண்டிருக்கிறோம். காமராஜருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள், யாரும் இந்த விஷயத்தில் சுத்தமாக அக்கறை காட்டவே இல்லை. அதனால், ஆறு, குளங்கள், ஏரிகள் எதுவும் தூர்வாரப் படாமல், அங்கங்கே புதர்கள் மண்டி, மணல் கொள்ளையடிக்கப்பட்டு, அணைகள் வறண்டு போய், வரும் நீர் அனைத்தும், கடலில் போய், வீணாய் கலந்து உப்பு நீராகிறது.



நீதிமன்ற உத்தரவுகளை எல்லாம், காலில் போட்டு மிதித்து, "தமிழகத்திற்கு தண்ணீரே திறந்து விடமாட்டோம்' என்று, அண்டை மாநிலங்கள், அடம் பிடிக்கும் போது, அவர்களோடு, சண்டைக்கு மல்லுக்கட்டி நிற்கிறோம்.

இதோ, கர்நாடகாவிலும், கேரளாவிலும் இருந்து தண்ணீர் வெள்ளமாக வந்து கொண்டிருக்கிறது, என்ன செய்து விட்டோம்... எல்லாவற்றையும், வங்காள விரிகுடாவில் கலக்க விட்டு விட்டு, கைகட்டி வாய் பொத்தி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மாடு கட்டிப் போரடித்தால், மாளாது என்று சொல்லி, யானை கட்டிப் போரடித்த நம் தமிழகத்தில், இப்போது, ஆடுகட்டி போரடிக்கவே விளைச்சல் இல்லை. இதற்கெல்லாம், காமராஜருக்குப் பின் ஆண்ட ஆட்சியாளர்களின், மெத்தனப் போக்கு மட்டும் காரணமல்ல... பொது மக்களாகிய நமக்கும், தண்ணீரின் மகத்துவமும், அதன் அவசியமும் சுத்தமாக புரியவே இல்லை.


அண்டை மாநிலங்களோடு, சண்டை போட்டு, தண்ணீருக்காக, நாம் பிச்சை எடுத்து கொண்டிருக்காமல், நம் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சிலவற்றை பின்பற்ற வேண்டும்.




அவை... நீரைச் சேமிக்க, புதிய அணைகளைக் கட்டி, மழைநீர், ஒரு சொட்டு கூட கடலில் கலக்க விடாமல், பாதுகாக்க வேண்டும். நிலத்தடி நீரை உறிஞ்சக் கூடிய, ஆரஸ்பதி போன்ற மரங்களை, நடாமல், வனத்துறையினர் தவிர்க்க வேண்டும். சிமென்ட் சாலைகள் அமைத்தால், மழைநீர் பூமிக்குள் இறங்காமல் நேராக வழிந்தோடி, சாக்கடையில் கலந்து விடும். அதனால், அரசு, சிமென்ட் சாலைகளை, ஊருக்குள் அமைப்பதை தடை செய்ய வேண்டும்.

வீடு கட்டும் அனைவரும், மொட்டை மாடியில் இருந்து விழும் மழைநீர் முழுவதையும், வீணாக வெளியே செல்லவிடாமல், கிணற்றுக்குள் விட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயர, வழி செய்ய வேண்டும். ஏரி, குளங்கள், கண்மாய்க்கு வரக் கூடிய நீரின் பாதைகளை அடைத்துக் கொண்டிருக்கும், ஆக்கிரமிப்புக்களை அகற்றி, மழைநீரை ஏரி, குளம், கண்மாய்களை நிரப்ப, அரசு வழிவகை செய்ய வேண்டும். கட்டுரை : ஆ.மோகன், அமராவதிபுதூர்

19 August, 2013

உயிரை பணயம் வைத்த கமல்... விஸ்வரூபம்-2 அப்டேட்ஸ்...!



கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய மைல்கல் என்றே சொல்லப்படுகிறது. அதிலும் முக்கியமாக கமல்ஹாசனின் கடும் உழைப்பில் உருவாகியிருந்த ஆக்‌ஷன் காட்சிகள் இன்று வரை பேசப்படுகின்றன. இத்தகைய விஸ்வரூப வெற்றியைக் கண்ட திரைபப்டத்தின் அடுத்த பாகத்தில் தான் தற்போது கமல்ஹாசன் நடித்துக்கொண்டுவருகிறார்.


முதல் பாகத்தையே பிரம்மாண்டமாக எடுத்துவிட்ட கமல்ஹாசன் அடுத்த பாகத்தை அதைவிட அதிகமாக எடுத்துவிடும் முடிவில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின் போது இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதும்போது கமல்ஹாசன் ஒரு காரிலிருந்து வெளியே குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டண்ட் இயக்குனர்கள் ’டூப்’ பயன்படுத்திக்கொள்ள எவ்வளவோ அறிவுறுத்தியும் கேட்காமல் ’என் ரசிகர்கள் என்னை நம்பி, என் திரைப்படத்தில் இருக்கும் உண்மையை நம்பி படம் பார்க்க வருகிறார்கள். டூப் போட்டு நடித்து அவர்களை ஏமாற்ற நான் விரும்பவில்லை’ என்று கூறி கமல்ஹாசனே நடித்திருக்கிறார்.

அந்த காட்சி படமாக்கப்பட்டபோது ஏற்பட்ட விபத்தில் கமல்ஹாசனின் காலில் சிறிய முறிவு ஏற்பட்டிருக்கிறது. காயம் சிறிதென்பதால் விரைவில் குணமாகி கமல்ஹாசன் நன்றாக நடக்க ஆரம்பித்துவிடுவார் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்களாம்.

சில வாரங்களுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசனின் தாடையில் சிறு வெட்டு போன்ற காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. காட்சிகள் உண்மையாக வரவேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் கடுமையாக உழைப்பதோடு மட்டுமல்லாமல், திரைப்படத்தின் ஹீரோயின்களான பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோரையும் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார்.

90% திரைப்படம் படமாக்கப்பட்டுவிட்டதோடு, டப்பிங் வேலைகளும் உடனுக்குடன் நடந்துகொண்டிருப்பதால் வருகிற தீபாவளியன்று படம் ரிலீஸாகலாம் என்று பேசப்படுகிறது.

உங்களுக்கு போட்டோ எடுக்கத் தெரியுமா..?


புகைப்படம் என்பது ஒரு "படம்' அல்ல. அது ஒரு "கலை'. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. 
வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 

19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 
1839ம் ஆண்டு ஜன., 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ம் தேதி, பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், ஆக., 19 உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 



முதல் படம்:

1826ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நவீன புகைப்படத்தை எடுத்தார். இது நாளடைவில் அழிந்தது. 
1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இதுவே. பல்வேறு அமைப்புகள் சார்பாக, சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.


அன்று கடினம்:

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது அரிதான செயலாக இருந்தது. இந்த டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் புகைப்படம் எடுப்பது எளிதாகி விட்டது. தரம், வேகம், தூரம் என அனைத்து விதங்களிலும் புகைப்படக் கலை முன்னேற்றமடைந்து விட்டது. 
குழந்தைகள் கூட புகைப்படம் எடுத்து மகிழ்கின்றன. எந்த ஒரு அறிவியல் வளர்ச்சியிலுமே நன்மையும், தீமையும் சேர்ந்தே இருக்கும். கேமராவால் இன்று பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. எனவே கேமராவை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 

18 August, 2013

இது ஒரு கண்துடைப்புக்காகத்தானா..?



மதுக்கடையிலே 
எழுதிவைத்திருந்தார்கள்
குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
என்று...

புகைப்பொருட்கள் அட்டையில் 

அச்சடிக்கப்பட்டிருந்தது
புகை நமக்கு பகை
என்று...

அரசியல் வதிகளின் 
ஆடம்பர மேடைப்பேச்சு
ஊழலை ஒழிப்போம்
என்று...

உண்மையில் இவைகள் எல்லாம்
ஒரு கண்துடைப்புக்காகத்தானா..?



17 August, 2013

உங்களுக்கு அந்த விருப்பம் இருக்கிறதா..?

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 1000 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனைவரும் தனக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 1000 ரூபாயைத் தருகிறேன். ஆனால் அதற்கு முன்” எனச் சொல்லி அந்த 1000 ரூபாயைக் கசக்கிச் சுருட்டினார். பிறகு அதைச் சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டைக் காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 1000 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும், தோல்விகளைச் சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம். நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும். ஆகையால், தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்.
*****************************

*****************************

*****************************

தொகுத்தவை... ரசித்தமைக்கு நன்றி..!

16 August, 2013

தலைவா விஜய்யின் அதிரடி முடிவு..! தனுஷின் 25-வது படம்..!


தலைவா படம் வெளிவர உதவும்படி கோரிக்கையை முன்வைத்து நடிகர் விஜய் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



உண்ணாவிரதத்தில் பங்கேற்க நடிகர் சத்யராஜ், கதாநாயகி அமலா பாஅல் ஆகியோரும் இயக்குனர் விஜய்யும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், அனுமதியும் அளிக்கும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் விஜய் மனு செய்துள்ளார்.

படம் ரிலீஸ் ஆகாவிட்டால் கடனாளி ஆகிவிடுவேன் என்று ஏற்கனவே தயாரிப்பாளர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அந்தப் படம் ரிலீஸ் ஆகாவிட்டால் கடும் நஷ்டமடைவேன் என்று தயாரிப்பாளர் கண்ணீர் கடிதம் எழுதியுள்ளதையடுத்து நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.




**********************************


சுதந்திர தினமான நேற்று தனுஷின் 25வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்கள். அதன் படி தனுஷின் படப்பெயர் நேற்று வெளியிடப்பட்டது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகும் தனுஷின் 25வது படத்திற்கு ‘வேலையில்லாப் பட்டதாரி ‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 
 
கடந்த மாதம் தந்து 30வது பிறந்தநாளைக் கொண்டாடிய தனுஷ், அன்று தனது 25வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் தனது பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் 3 படங்களில் ஒளிப்பதிவாளாராக பணியாற்றிய வேல்ராஜின் இயக்கத்தில் தனது அடுத்தப் படம் எனத் தெரிவித்திருந்தார்.

இப்படத்தில் முதன் முறையாக தனுஷுடன் ஜோடி சேர்கிறார் அமலாபால். தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

படத்திற்கு இசை ‘கொலைவெறிப் புகழ்' அனிருத். இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் 20ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

படத்தில் அமலாபாலிற்கு அழகான் சென்னைப்பெண் கதாபாத்திரமாம். மொத்தத்தில் இப்படம் நல்ல குடும்பப்பாங்கான படமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

14 August, 2013

இதை தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்கு தூக்கம் வராது..!


ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம் வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான். அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆயிருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்

அங்க இருந்த துறவி சொன்னாரு. தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு. உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான். 
அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம். ஆனா ஒருத்தரும் எழும்பி என்னன்னு பார்க்கல. உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான். மறுநாள் காலைல வண்டிய சரிபண்ணிட்டு போகும் போது. அந்த சத்தத்துக்கான காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான்

உடனே அவரு அத உன்கிட்ட சொல்ல கூடாது. நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டார். இவனும் வந்துட்டான்

அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழிய வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது. அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது. இவனும் மறுநாள் காரணம் கேட்டான். ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்.

மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான். அவர் அப்பவும் மறுத்தார். உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு. ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க. ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு நீயும் என்ன மாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் .

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாக வந்துட்டான். வந்ததும் அவரு இவன தவம் பண்ண சொன்னார். இவனும் பண்ணினான்

ஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்க தான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார்.

உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி. அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த சாவி தருவேன்னு துறவி சொன்னார். இவனும் கண்டுபிடிச்சான் அடுத்த சாவியும் தந்தார். இவன் தொறந்தான். அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி. ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான் .

.
அது என்னன்னு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகனும்.

(பாவி பயலுக எனக்கும் இப்படிதாங்க அனுப்புனாங்க)

(நன்றி... ரசித்தது...)

மாணவர்கள் அந்த விஷயத்தில் உஷாராகத்தான் இருக்கிறார்கள்...!


ஒரு புவியியல் பாட ஆசிரியர் மிக கவலையுடன்
புவி வெப்பம் அடைவதை பற்றி மாணவர்களுடன்
கருத்துக்களை பரிமாறிக்கொண்டு இருந்தார் ...!

மாணவன் ஒருவன் எழுந்து சார் ஏன் புவி வெப்பம் அடைகிறது ..? அதன் தாக்கம் என்ன சார் என வினாவினான் ..?

காரணம் :
மரங்களை வெட்டுவதே புவி வெப்பத்துக்கு பிரதான காரணம் என்றார் ....!

தாக்கம் மிகப்பயங்கரமானது ....!

பனி மலைகள் உருகும் ... கடல் நீர் மட்டம் உயரும் நிலங்கள் நீருள் மூழ்கும் மனிதர்கள் விலங்குகள் அழியும்.. புதிய நோய்கள் வரும் ..

என அடுக்கிக் கொண்டே போனார் ...!

மீண்டும் மாணவன் எழுந்து ...

அன்று அன்று ஸ்கூல் லீவுவிடுமா சார் ...???
 

எது எப்படியிருந்தாலும் இவர்களுக்கு லீவு விட்டுடனும் போல....
மாணவர்கள் அந்த விஷயத்தில் உஷாராகத்தான் இருக்கிறார்கள்...! (தலைப்பு)
 

**********************************

விரல்பிடித்து கடைவீதி வந்த மகன், கடையை வேடிக்கை பார்க்கும் சுவாரஸ்யத்தில் பிடியை நழுவ விட்டான்.

அப்பா ஒளிந்து கொண்டார்.
அப்பாவைத் தேடினான்.

சிறிது நேரம் கழித்து உதடுகள் பிதுங்க, விசும்பத் தொடங்கிய போது அப்பா வந்து அள்ளிக் கொண்டார்.

மகன் தந்தையை மறந்திருந்தபோது தந்தை ஒளிந்திருந்தார். ஆனால் மகனைக் கண் காணித்துக் கொண்டிருந்தார்.

கடவுளும் அப்படித்தான் நாம் தேடாத போது தென் படுவதில்லை.

ஆனால் நம்மைப் பார்த்துக் கொள்கிறார்...!



பாரும் பார்க்க வில்லை என்று தவறுகள் செய்யாதீர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்...


ரசித்தது....

*********************************************
ள் வர்கு ி்க றி...!

13 August, 2013

விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தும் ஒரு தமிழ்படம்...?



ஜான் ஆபிரகாம் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் மெட்ராஸ் கஃபே. இதன் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.


இந்தத் திரைப்படத்தில் விடுதலைப் புலிகளையும் ஈழத்தமிழர் பிரச்சனையையும் தவறாக சித்தரித்திருப்பதாக கூறி சில தமிழ் அமைப்புகள் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தின் முன்னோட்டம் - 1....

முன்னோட்டம் - 2


படம் வெளியான பிறகுதான் சர்ச்சைகள் குறித்த உண்மை விவரங்கள் தெரியவரும்

இதுபோன்ற சூழ்நிலை உங்களுக்கு வந்திருக்கிறதா?




நண்பரோடு பேசிக்கொண்டே நடக்கையில்
எதிர்படுகிறது ஒரு தேனீர் கடை...!

தேநீர் அருந்தும் நோக்கோடு
பார்த்துக்கொள்கிறோம்
ஒருவரை ஒருவர்...!

உண்மையில் அப்போது
என் பையில் பணமில்லை...

நண்பரிடம் சொல்லி பிரிகிறேன்
எனக்கு தேநீர் குடிக்கும் பழக்கம்
இல்லையென்று...!

எனக்கும் பழக்கும் இல்லை என்று
பிரிகிறார் நண்பர்...

ஒருவேளை அவரிடமும்
இதே நிலையோ...!

எப்போதும்...
பணம் இல்லாத வாழ்க்கை
சங்கடத்துடனே நகர்கிறது...!

12 August, 2013

அட.. இந்த பெண்களே இப்படித்தானா?




இருக்கும் கருமையை விலக்க விரும்பி
எத்தனை முயச்சிகள் இங்கு...

வெட்கப்பட்டால் சிவக்கும் கன்னத்துக்கு
வெட்கமில்லாமல் எதையோ பூசுகிறாய்...

மெய்பூச  வேண்டிய உதடுகளுக்கு ஏன்
பொய் பூசிக்கொண்டிருக்கிறாய்...

சிரிக்கும் பூக்களை சிதறவிட்டுவிட்டு
அப்படி என்ன சிநேகம் உனக்கு செயற்கைகளோடு...

ம்...
இன்னும் எத்தனை  எத்தனை முயற்சி
உலகிற்கு பொய்முகம் காட்ட...!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி..!

Related Posts Plugin for WordPress, Blogger...