கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 December, 2014

கே பாலச்சந்தர் - நினைவலைகள்..!


‘தமிழ் திரையுலக இயக்குனர் சிகரம்’ எனப் புகழப்படும் கே. பாலச்சந்தர் அவர்கள், ஒரு புகழ் பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் ஆவார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர், தென்னிந்திய திரைப்பட உலகில் சிறந்த இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தி, எதிர்கால கலைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார்.

பல துணிச்சலானக் கருத்துகளைத் தன்னுடைய படங்களில் மூலம் திரையில் தந்த அவரது திரைப்படங்களான ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘எதிர்நீச்சல்’, ‘தண்ணிர் தண்ணீர்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘சிந்து பைரவி’ போன்றவைத் தமிழ் திரையுலகில் அற்புத படைப்புகளாகப் போற்றப்படுகிறது. 


தமிழ் திரையுலகில் தற்போது ஜாம்புவான்களாக விளங்கும், ‘கமல்ஹாசன்’ மற்றும் ‘ரஜினிகாந்த்’ எனப் பல நடிகர்களைத் திரையுலகிற்கு தந்தவர். செறிவான கதை, நுட்பமான வசனம், பொருத்தமான பாடல்கள், அழுத்தமான நடிப்பு போன்றவை இவர் இயக்கிய திரைப்படைப்புகளின் முத்திரைகளாகும்.


திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம ஸ்ரீ”, வழங்கி கெளரவிக்கப்பட்டார். மேலும், ‘தேசிய விருது’, ‘மாநில விருது’, ‘அண்ணா விருது’, ‘கலைஞர் விருது’, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘கலைமாமணி விருது’ எனப் பல விருகதுளையும் வென்றுள்ளார்.


ஒரு மேடைநாடக கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ்த் திரைப்படத்துறையில் அரைநூற்றாண்டுகளையும் கடந்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்து, மாபெரும் இயக்குனராக விளங்கிய கே. பாலச்சந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பினை விரிவாகக் காண்போம். 
அவரைப்பற்றி...

‘இயக்குனர் சிகரம்’ கே. பாலச்சந்தர் என அழைக்கப்படும் கைலாசம் பாலச்சந்தர் அவர்கள், 1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள “நன்னிலம்” என்ற இடத்தில் தண்டபாணி என்பவருக்கும், சரஸ்வதிக்கும் மகனாக ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு கிராம அதிகாரியாக பணியாற்றி வந்தார்.


ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி


பள்ளிப்படிப்பை தன்னுடைய சொந்த ஊரிலேயே முடித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1949 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி விலங்கியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், சென்னையில் உள்ள ஏ.ஜி அலுவலகத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த அவர், பணியில் இருந்து கொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘எதிர் நீச்சல்’, ‘நாணல்’, ‘வினோத ஒப்பந்தம்’, போன்றவை அதிக வரவேற்பைப் பெற்ற நாடகங்களாகும். 




திரைப்படத்துறையில் கே. பாலச்சந்தரின் பயணம்


மேடைநாடகத் துறையில் இருந்து திரைப்படத்துறையில் கால்பதித்த கே. பாலச்சந்தர் அவர்கள், 1965 ஆம் ஆண்டு வெளியான “நீர்க்குமிழி” திரைப்படத்தை இயக்கினார். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்திருப்பார். மனித உணர்வுகளுக்கிடையிலான சிக்கல்களைக் கதைக் கருவாகக்கொண்டு இவர் இயக்கிய இத்திரைப்படம் இவருக்கு ஒரு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. 

இத்திரைப்படம், தமிழ் சினிமாவில் சில மாறுதல்களை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கிய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, ‘அபூர்வ ராகங்கள்’, ‘சிந்து பைரவி’, ‘இருகோடுகள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘தில்லு முல்லு’ போன்றவை மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தது. 

இதில், ‘இருகோடுகள்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய நான்கு படங்களும் இவருக்கு ‘தேசிய விருதை’ பெற்றுத்தந்தன. தமிழில் மட்டுமல்லாமல், ஹிந்தியில் “ஏக் துஜே கேலியே” மற்றும் தெலுங்கில் “மரோ சரித்ரா” மற்றும் “ருத்ர வீணா”, கன்னடத்தில் “அரலிதா ஹூவு” போன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், ‘கவிதாலயா’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தாயாரித்து இருக்கிறார்.



பாலச்சந்தர் இயக்கிய புகழ்பெற்ற படைப்புகள்


‘நீர்க்குமிழி’, ‘மேஜர் சந்ரகாந்த்’, ‘இருகோடுகள்’, ‘பூவா தலையா’, ‘பாமா விஜயம்’, ‘நான் அவனில்லை’, ‘புன்னை’, ‘எதிர் நீச்சல்’, ‘சிந்து பைரவி’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘தில்லு முல்லு’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘அக்னிசாட்சி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘புது புது அர்த்தங்கள்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதிமல்லி’, ‘நூற்றுக்கு நூறு’, ‘கல்கி’, ‘பார்த்தாலே பரவசம்’, ‘பொய்’.


கே. பாலச்சந்தரின் சின்னத்திரை படைப்புகள்


1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் தன்னுடைய கவனத்தை சின்னத்திரையின் மீது செலுத்திய கே. பாலச்சந்தர் அவர்களுக்கு, தூர்தர்ஷனில் வெளிவந்த இவருடைய “ரயில் சிநேகம்” இன்றளவும் பேசப்படுகிறது. மேலும், ‘கையளவு மனசு’, ‘ரகுவம்சம்’, ‘அண்ணி’ போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இவருடைய சின்னத்திரைப் படைப்புகளாகும்.


விருதுகளும், மரியாதைகளும்

1987 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.
2005-ல் சத்தியபாமா பல்கலைக்கழகத்திடமிருந்தும், 
2005-ல் அழகப்பா பல்கலைக்கழகத்திடமிருந்தும், 
2007-ல் சென்னை பல்கலைக்கழகத்திடமிருந்தும் ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கப்பட்டது.

1969-ல் ‘இருகோடுகள்’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1988-ல் ‘ருத்ரவீணா’, 1991-ல் ‘ஒரு வீடு இருவாசல்’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக ‘தேசிய விருதுகளை’ வென்றுள்ளார். மேலும், 
2011-ல் ‘தாதாசாஹெப் பால்கே’ விருதும் வழங்கப்பட்டது.
1981 – “ஏக் துஜே கேலியே” என்ற இந்தித் திரைப்படத்திற்காக ‘ஃபிலிம்பேர் விருது’.

1974-ல் ‘அவள் ஒரு தொடர் கதை’, 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’, 1978-ல் ‘மரோ சரித்திரா’ (தெலுங்கு), 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1981-ல் ‘தண்ணீர் தண்ணீர்’, 1984-ல் ‘அச்சமில்லை அச்சமில்லை’, 1985-ல் ‘சிந்து பைரவி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1991-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’ போன்ற திரைப்படங்களுக்காக தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. மேலும், 
 1995- ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

1968-ல் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘தாமரை நெஞ்சம்’, 1978-ல் ‘தப்பு தாளங்கள்’, 1980-ல் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, 1980-ல் ‘அக்னி சாட்சி’, 1989-ல் ‘புது புது அர்த்தங்கள்’, 1992-ல் ‘வானமே எல்லை’, 1992-ல் ‘ரோஜா’, 1993-ல் ‘ஜாதி மல்லி ‘போன்ற திரைப்படங்களுக்காக ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது. 



மேலும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அரசிடமிருந்து ‘கலைமாமணி விருது’, ‘அண்ணா விருது’, ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து ‘நந்தி விருது’, ‘எம்.ஜி.ஆர் விருது’, ‘கலைஞர் விருது’, ‘திரைப்பட உலக பிரம்மா’, ‘பீஷ்மா விருது’, ‘கலையுலக பாரதி’ என மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.


இயக்குனராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடைநாடக இயக்குனர், தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட ‘சகலகலா வல்லவராக’ விளங்கிய கே. பாலசந்தர் அவர்கள், தமிழ் திரையுலகில் தோன்றிய இயக்குனர்களில் மிக முக்கிய இடத்தை பிடித்தவராவார். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கித் திரைப்படத்துரையில் முத்திரைப் பதித்த கே. பாலசந்தர் அவர்கள், வருங்கால இயக்குனர்களுக்கு ஆசானாக விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. 




நினைவலைகள்...

1965 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அழைப்பை ஏற்று தெய்வத்தாய் படத்துக்கு கதை வசனம் எழுதினார். பின்னர் நீர்க்குமிழி படத்தை இயக்கி இயக்குநரானார். 

அபூர்வ ராகங்கள் படம் மூலமாக நடிகர் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதும் இயக்குநர் கே. பாலசந்தர்தான். நடிகர் கமலஹாசன் புகழ்பெறுவதற்கும் காரணமாக இருந்தவரும் பாலசந்தர்தான். 

எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சுஜாதா, ஷோபா, சரத்பாபு, மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பிரபலங்களை தமிழ்த் திரை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர். 

மேலும் ரெட்டைச் சுழி படத்தில் இயக்குநர் பாரதிராஜாவுடன் சேர்ந்து நடித்தார். அவர் கடைசியாக நடித்த படம் கமலஹாசனின் உத்தம வில்லன். விரைவில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது. 


அவரைப்பற்றிய சுவையான தகவல்கள்
* தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

ஸ்ரீதரைப் போல, பாலச்சந்தரும், தமது துவக்க மற்றும் இடைக்காலப் படங்களில் ஜெமினி கணேசனை வெகுவாகப் பயன்படுத்தியிருந்தார். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, வெள்ளி விழா, நூற்றுக்கு நூறு ஆகியவை அவற்றில் அடங்கும்.

சகோதர இயக்குனர்களைப் பாராட்டுவதில் பாலச்சந்தர் தனியிடம் வகிக்கிறார். இயக்குனர் ஸ்ரீதர் பல விடயங்களிலும் தமது முன்னோடி என அவர் உரைத்தது மட்டும் அன்றி, தமக்குப் பின்னர் வந்த பாரதிராஜா, மணிரத்னம் போன்றோரையும் அவர் பல நேரங்களில் மனம் விட்டுப் பாராட்டியுள்ளார். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவரது பாராட்டுப் பேச்சு ஒரு படைப்பாளியாக உணர்ச்சி வசப்படும் அவரது தன்மையை வெளிப்படுத்திப் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

சிவாஜி கணேசன் நடிப்பில் பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971 ஆம் ஆண்டு வெளியான இப்படம் தோல்வியுற்றது.



பாலச்சந்தர் வண்ணத்தில் இயக்கிய முதல் படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் தோல்வியடைந்தது. இதற்குப் பின்னர், மீண்டும் கருப்பு வெள்ளைக்கே திரும்பி விட்ட பாலச்சந்தர் இயக்கிய அடுத்த வண்ணப்படம் முற்றிலும் புதுமுகங்களையே கொண்டிருந்த பட்டினப் பிரவேசம் மற்றும் அதை அடுத்து கமலஹாசன் கதாநாயகனாக நடித்த மன்மத லீலை. பாலச்சந்தர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளைத் திரைப்படம் நிழல் நிஜமாகிறது.

துவக்க காலத்தில் நாடகபாணித் திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலச்சந்தர், நகைச்சுவையில் தமது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. இவை வெற்றிப்படங்களாக விளங்கிடினும், பிற்காலத்தில் பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு (ரஜினிகாந்த் நடித்த இப்படம் இந்தியில் அமோல் பாலேகர் நடித்த கோல்மால் என்னும் படத்தைத் தழுவியது), பொய்க்கால் குதிரை ஆகியவை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஒரு இயக்குனர் என்ற முறையில், பாலச்சந்தரின் பிம்பம் மாறிவிட்டதும் இதற்கான காரணமாக இருக்கலாம்.

வெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் பாலச்சந்தர் அனுபவித்தது உண்டு. நான்கு சுவர்கள் படுதோல்வி அடைந்து, விமர்சன அளவிலும் ஒதுக்கப்பட்ட அதே கால கட்டத்தில் அவரது நூற்றுக்கு நூறு வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் ஈட்டியது.

அரசியல் களத்தைத் தொட்டுப் பார்த்த பாலச்சந்தரின் படங்கள் தண்ணீர் தண்ணீர் (இது கோமல் சுவாமிநாதனின் அதே பெயரைக் கொண்ட நாடகத்திலிருந்து உருவானது; திரைப்படத்தின் வசனத்திற்கும் கோமல் பங்களித்திருந்தார்), அச்சமில்லை அச்சமில்லை போன்றவை.

பல ஆண்டுகளூக்கு தயாரிப்பு, வசனம், இயக்கம் ஆகிய பலவற்றிலும் பாலச்சந்தரின் வலக்கரமாகச் செயல்பட்டு வந்தவர் அனந்து. கமலஹாசன் முதலிய உச்ச நடிகர்க்ள இவரைத் தமது குரு என்றே குறிப்பிடுவர்.

நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றியிருப்பினும், எம்.ஜி.ஆரை பாலச்சந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்திற்கு அவர் வசனம் மட்டும் அளித்திருந்தார். தெய்வத் தாய் என்னும் அத்திரைப்படம் ஆர்.எம்.வீரப்பன் தயாரிப்பில் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படம். பி.மாதவன் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாலச்சந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தமது பாத்திரத்திற்காக சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதினை ஈட்டித் தந்த படம் இது.

சிரஞ்சீவியின் நடிப்பில் தெலுங்கில் பாலச்சந்தர் இயக்கிய ருத்ரவீணா வெற்றி பெறவில்லை எனினும், கமலஹாசன் நடிப்பில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் வெளியான அதன் தமிழாக்கம் வெற்றியும், பாராட்டுக்களும் பெற்றது.

கமலஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து நடித்த கடைசிப் படம் பாலச்சந்தரின் நினைத்தாலே இனிக்கும். ஆயினும், இது எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. பாலசந்தர் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நிகழ்த்திய முதல் படமும் இதுவேயாகும்.

பாலச்சந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.

ஜெமினி கணேசனின் சொந்தத் தயாரிப்பில் பாலச்சந்தர் இயக்கிய நான் அவனில்லை அதன் புதுமையான கையாளுமைக்காகப் பெரிதும் பாராட்டப்பெறினும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். அண்மையில், ஜீவன் நடித்து செல்வா இயக்கத்தில் இதன் மறுவாக்கம் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு தற்போது மறுவாக்கத்தில் உள்ளது.

பாலச்சந்தர் இயக்கிய   பிரபல திரைப்படங்கள்

நீர்க்குமிழி,   மேஜர் சந்திரகாந்த்

இரு கோடுகள்,   பூவா தலையா,

பாமா விஜயம், தாமரை நெஞ்சம்,

நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை,

புன்னகை,  மனதில் உறுதி வேண்டும்,

எதிர் நீச்சல், சிந்து பைரவி

அபூர்வ ராகங்கள்,   தண்ணீர் தண்ணீர்

அச்சமில்லை அச்சமில்லை

அக்னிசாட்சி,  வறுமையின் நிறம் சிகப்பு

புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை

ஜாதிமல்லி,   நூற்றுக்கு நூறு

கல்கி,   பார்த்தாலே பரவசம்,  பொய்

பாலச்சந்தர் இயக்கிய இந்தித் திரைப்படங்கள்

ஏக் துஜே கேலியே - தெலுங்கில் மரோசரித்ரா

ஜரா சி ஜிந்தகி - தமிழில் வறுமையின் நிறம் சிகப்பு

ஏக் நயீ பஹேலி தமிழில் அபூர்வ ராகங்கள்....

தமிழ்சினிமா போற்றிய ஒரு இயக்குனர் சிகரம் தற்போது சரிந்துவிட்டது... இவரது இழப்பு  தமிழ்சினிமாவில் ஈடுசெய்ய முடியாததுதான்.... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்வோம்

20 December, 2014

பிசாசு - சினிமா விமர்சனம் / mysskin pisasu movie review


மனிதன்... மிருக இனத்தின் முதன்மையானவன்... தெய்வ இனத்தின் கடைசியானவன்... தெய்வத்தின் இயல்புகள் நம்மிடம் இருந்தாலும் நமக்குள் இருக்கும் மிருகமே நம்மை ஆட்சிசெய்கிறது... ஒவ்வொறு மனிதனும் ஒரு மிருக குணாதிசயங்களை கொண்டிருக்கிறான் அந்த குணாதியசங்கள் மேலோங்கும்போது அவனால் இயல்பான நிலைக்கு வரமுடியாமல் போய்விடுகிறது... (உதாரணம் வேண்டுமா.. இன்றை செய்திதாளில் வந்த சில செய்திகளை படிங்கள்...) அப்படிப்பட்ட சில மனிதர்களின் குணங்களை வெளிகாட்டியப்படம்தான் மிஸ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  என்ற திரைப்படம்..

படம் போட்டப்பணத்தை எடுக்கவில்லை என்றாலும் அதன் காட்சியமைப்பு, ஓளி,ஒலி பதிவு, கதாபாத்திரங்களை கையாண்டவிதம், திரைக்கதை அமைப்பு போன்றவை என்றைக்கும் தமிழ்சினிமாவின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும்... (கதைப்பற்றிய விவாதம் வேண்டாம்) அந்தப்படம் பாலாவை கவரவே இந்த இருவரின் கூட்டணி பிசாசு படத்தின் மூலம் இணைந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஓ... ஆ... படத்தில் மனிதனை மிருத்துடன் சம்பந்தப்படுத்திய மிஸ்கின்.. இந்தப்படத்தில் மனிதனை ஆவிகளுடன் சம்பந்தப்படுத்தியிருக்கிறார்... மனிதர்களுக்குள் பேய் குணம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்... சில பேய்களுக்கும் மனிதகுணமும் இருக்கிறது... பேய்கள் நம்மோடும் நட்புறவுக்கொள்ளும் என்ற விஷயத்தை தன்னுடைய பாணியில் சொல்லியிருக்கிறார்.



பிசாசு படத்தில்... நெஞ்சை அதிரவைக்கும் பயங்கர காட்சிகள்... மிரளவைக்கும் முகங்கள், ராட்ஸச உருவங்கள், இப்படி ஏதும் அதிக அளவில் இடம்பெறாமல் எளிமையான கதையை எடுத்துக்கொண்டு தன்னுடைய திரைக்கதை மற்றும் கேமராவின் மூலம் உயிர்கொடுத்து கொஞ்சமாய் மி‌ரட்டியிருக்கிறார் மிஸ்கின்...


முதல் காட்சி... நாயகியின் (புதுமுகம் பிரயாகா) முகம் குளோசப்பில் காட்டப்படுகிறது... அழகிய மெல்லிய, புன்முருவல், காட்சி விரியும்போதுதான் தெரிகிறது .. ‌ஸ்கூட்டியில் வரும் இவரை ஒருகார் இடித்துவிட சாலையோரம் அடிப்பட்டு ரத்தம் வடிந்து படுத்திருக்கிறார்... அருகில் இருக்கும் சிலர் ஓடிவந்து அரை பார்க்கிறார்கள்.... அதில் ஒருவர்தான் நாயகன் (புதுமுகம் நாகா).

இறக்கும் தருவாயில் இருக்கும்  அவரை மருத்துவமனையில் சேர்க்க ஆட்டோவில் ஏற்றிக்கொண்டுச் செல்கிறார்கள்... மருத்துவமனையில் உள்ளே செல்லுகையில் நாயகனின் கையை பிடித்துக்கொள்கிறார் நாயகி... அதன்பிறகு நாயகனை பார்த்தவாரே உயிரை விட்டுவிடுகிறார்... (இந்த படத்தில் நாயகிக்கு கொடுக்கப்பட்டிருப்பது ஒரே ஒரு வசனம்தான் அது இறக்கும் தருவாயில் நாயகனை பார்த்துசொல்லும் “ப்பா..“ என்பதுதான்)



இனிதான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.. படத்தில் நாயகன் இசையமைப்பாளரிடம் பணிபுரியும் ஒரு வயலின் வாசிப்பாளராக இருக்கிறார். இந்த சம்பவத்துக்குபிறகு அவரால் அதிக கவனம் சொலுத்தமுடியாமல்  மனஅழுத்தம் கொள்கிறார்... அப்பார்மெண்டில் தனியாக இருக்கும் இவர் தன்னுடைய வீட்டில் வித்தியாசமாக சிலவிஷங்களை பார்க்கிறார்...

தன்னுடைய வீட்டில் இறந்த அந்த பெண்ணின் ஆவி இருக்கிறது என்ற உண்மை இவருக்கு தெரியவருகிறது. அதன் பிறகு பயந்துநடுங்கி அதை விரட்ட பல்வேறு வழிகளை மேற்கொள்கிறார்.... அது தனக்கு மிகுந்த இன்னல்களை தருவதாக நினைத்துக்கொள்கிறார்... இப்படியே இடைவேளைவரை பயமும் கலகலப்புமாக நகர்கிறது.


இவரைப்பார்க்க வரும் அம்மாவுக்கு இந்த விஷயத்தை சொல்ல  அவர்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பேயாவது பிசாசாவது என்று கூறி அங்கு தங்குகிறார்... தன்னுடைய அம்மாவை ஏதாவது செய்துவிடுமோ என்ற பயத்தில் நடுங்குகிறார்...

அவர் எதிர்பார்த்தபடி‌யே அம்மாவுக்கு குளியலரையில் வழுக்கிவிழுந்து அடிப்பட்டுவிடுகிறது.. அதற்கு காரணம் அந்த பெண்ணின் ஆவிதான் என தவறாக புரிந்துக்கொள்கிறார்... உன்னைகாப்பற்ற வந்ததற்கு எனக்கு இதுதண்டனையா.. முடிந்தால் கென்றவர்ளை தேடி போகவேண்டியதுதானே என குமுறுகிறார்...


அதன்பிறகு நாயகனின் அம்மா குணமடைந்து உண்மையை சொல்கிறார் அடிப்பட்ட விழுந்த என்னை காப்பாற்றியது அந்த ஆவிதான் என்று... அதன்பிறகே இவருக்கு தெரிகிறது இந்த பேய் நமக்கு உதவிச்செய்கிறது என்று...!



சம்மந்தமே இல்லாத நமக்கு இப்படி உதவியாய் இருக்கும் இந்த பெண்ணை விபத்திற்குள்ளாக்கியது யார் என்ற உண்மையை கண்டுபிடிக்க துப்பு துலக்குகிறார்... அதன்பிறகுதான் பரபரப்பான... யாரும் எதிர்பார்க்காத சில உண்மைகள் வெளிவருகிறது...

விபத்திற்குல்லாக்கிய அந்த நபர்யார்...  இவரை பின்தொடர காரணம் என்ன, அதன்பிறகு நடக்கும் விபரீதங்கள் என்ன... அந்த பெண்ணின் ஆவி இறுதியில் என்னாகிறது என்று விறுவிறுப்பான திரைக்கதைமூலம் புரியவைத்து தெளியவைத்து மிரட்டலுடன் படத்தை முடிக்கிறார்  இயக்குனர். (கண்டிப்பாக மீதிக்கதையை திரையில்தான் பார்க்க வேண்டும்)





நாயகன் நாகா நன்றாக தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.... அடந்த முடி... முகத்தை மறைக்கும் அளவுக்கு  வளர்திருக்கிறது.... வயலின் வாசிப்பாளர்.... இடைவேளைவரை  சோகத்தை, பயத்தை, மெல்லிய நகைச்சுவையுடன் வெளிப்படுத்தும் விதம் அழகு... இறுதிகாட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

நாயகியை ஒருஷாட்டில் மட்டுமே  தன்உருவத்தில் வருகிறார். அவருடைய வேலை அவ்வளவுதான்... இறுதிக்காட்சிகளில் ஆவியாக நன்றாக வேலைவாங்கியிருக்கிறார் இயக்குனர்.


நாயகியின் அப்பாவாக ராதாரவி நல்லதொரு நடிப்பு... வெகுநாளுக்குப்பிறகு இவருக்கு நல்லதொருபடம் அமைந்திருக்ககிறது...

நாயகனுடன் இரண்டு நண்பர்கள் கதைக்குபலம்.. ஒருஅப்பார்ட்மெண்ட் அதில் சில முகங்கள் என குறைந்த எண்ணிக்கையில் தான் கதாபாத்திரங்கள்...

இசை புதுமுகம்... நன்றாக கைகொடுத்திருக்கிறார்... சப்பேவில் நடக்கும் ஒரு சண்டைக்காட்சி, அங்கே ஒரு சோகப்பாடல், ஆவியை ஓட்ட வரும் பெண்படும்பாடு, ராதாரவி இரந்த தன்மகளுடன் காட்டும் உருக்கும் பாராட்டப்படவேண்டியவை....

மக்களுக்கு என்ன ‌தேவையோ அதை மசாலாவோடு தரும் இயக்குனர்கள் ஒருவகை... தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை அப்படியே கொடுப்பவர்கள் படமாக்குபவர்கள் இன்னொருவகை... இதில் மிஸ்கின் இரண்டாம் வகை...

ஒருவகையில் ஆனந்தபுரத்துவீடு படத்தை நினைவுபடுத்தினாலும் மிரட்டல் காட்சிகளில் நாம் அதை மறக்கடித்துவிடுகிறார்... மிகுந்த எதிர்பார்ப்புடன் போகாமல் ஒரு தமிழ் சினிமாவை ரசிக்க  வேண்டும் என்ற மனநிலையோடு இந்த படத்தை பார்க்கப்போனால் ரசித்துவிட்டுவரலாம்.  

பொருமையோடு பார்த்தால் இந்த பிசாசும் ரசிக்ககூடியதே.

12 December, 2014

ரஜினியின் லிங்கா விமர்சனம் / Lingaa movie review


கதையானது ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் தொடங்குகிறது. சோலையூர் கிராமமானது மழைக்காலத்தில் வெள்ளத்தாலும், வெயில்காலத்தில் வறட்சியாலும் பாதிப்படைகிறது. இதனால் அங்கு விவசாயம்‌ பொய்த்து விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்.

மைசூர் பகுதிக்கு ராஜாவான ரஜினி தன் தந்தையின் ஆசைக்கிணங்க படித்து மதுரை பகுதிக்கு ஆட்சியாளராக வருகிறார்... சோலையூர் மக்களின் துயரை நேரில் பார்க்கும் ரஜினி அந்த பகுதியில் பெரிய அணைக்கட்டவேண்டும் என ஆங்கில அதிகாரிகளிடம் மேல்முறையிடு செய்கிறார். அதனால் ஆங்கில கம்பெனிக்கு எந்த லாபமும் இல்லை என மறுத்துவிடுகிறார்கள். கோவமடைந்த ரஜினி தன் பதவியை துறந்துவிட்டு தானே தன்னுடைய சொந்த செலவில் அணை கட்டுகிறேன் என்று முடிவெடுக்கிறார். (ரஜினி சிவில் இஞ்ஜினியரீங் படித்தவராக இருக்கிறார்).


ஆங்கிலேயர் தரும் பல்வேறு இன்னல்களுக்கு இடையே  தன்னுடைய அரண்மனை, சொத்து, நகைகள் என அனைத்தையும் ஆங்கில அதிகாரிக்கு எழுதிகொடுத்துவிட்டு மக்களுக்காக அணையை கட்டிமுடிக்கிறார். கூடவே அந்த அணையை ஒட்டி ஒரு சிவன் கோயிலும் கட்டுகிறார். ஆனால் அதை திறக்கும் சமையத்தில் சிலரின் சதியால்  ரஜினி மீது பல்வேறு பழிகள் வர அவர் அந்த கிராமத்தைவிட்டு வெளியேற்றப்படுகிறார்.


ரஜியின் மீது வெறுப்படைந்த மக்கள் அவர் கட்டிய கோயிலை மூடிவிடுகிறார்கள். அணையும் இடிந்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள். ஆனால் அணை எந்தபாதிப்பில்லாமல் நீர்நிரம்பி சரியாக செயல்படுகிறது... ராஜாவான ரஜினி தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் விற்றுதான் இந்த அணையை கட்டிமுடித்திருக்கிறார் என்ற உண்மை வெளிவர ஊர்மக்கள் மனதிருந்துகிறார்கள்.

ராஜா ரஜினியை வைத்தே மீண்டும் அந்த கோயிலை திறக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்கள். தேடிஅலைந்து ரஜினியை கண்டுபிடித்து அழைக்க அவர் மறுத்துவிடுகிறார். பூட்டிய கோயில் பூட்டியபடி இருக்கிறது.

80 ஆண்டுகளுக்குப்பிறகு ராஜா லிங்கேஸ்வரனின் பேரனான தற்போதைய ரஜினியை எப்படியாவது தேடிகண்டுபிடித்து பூட்டிய இந்த கோயிலை திறக்கவேண்டும் என்று முடிவெடுத்து அவரை தேடுகிறார்கள். அவரை தேடும் பணியை அனுஷ்காவிடம் ஒப்படைக்கிறார்கள்.


அப்படி ரஜினி கிடைத்தாரா....? கோயில் திறக்கப்பட்டதா..? தற்போதை அரசியல்வாதிகள் மூலம் அந்த அணையின் பலம்  சரியில்லை என்று சொல்லி 4000 கோடியை புதிய அணைக்கட்டி சம்பாதிக்க நினைக்கும் சதியை எவ்வாறு முறியடிக்கபட்டது.... என்பதையே இறுதி காட்சிகள் விளக்குகிறது.


கதை புதிதில்லை என்றாலும்... ரஜினியை வைத்து ரசிகர்களை கொஞ்சம் சிரித்து, கொஞ்சம் அழுது, கொஞ்சம் கைதட்டி குடும்பத்துடன் ரசிக்ககூடிய படத்தை என்னால் தரமுடியும் என்று இன்னொறு முறை நிறுபித்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

தற்போது விமர்சனத்திற்கு வருகிறேன்...!

கதை தற்போதைய பேரன் ரஜினியிடம் இருந்து ஆரம்பிக்கிறது. ராஜா பரம்பரை என்பதை தவிர தற்போது வேறெதுவும் தன்னிடம் இல்லை என்பதால் திருட்டு வேலை செய்து  காலத்தை ஓட்டுகிறார் ரஜினி...! அவருடன் கூட்டாளியாக சந்தானம், கருணாகரன், பாலாஜி டீம்... முதல் அரைமணிநேர படம் இவர்களுடைய லூட்டியால் அரங்கம் அதிர்கிறது...!



இவர்தான் ராஜா லிங்கேஸ்வரனின் பேரன் என்பதை அறிந்த அனுஷ்கா இவரை எப்படியாவது தன்னுடைய சோலையூர் அழைத்து சென்று அந்த கோயிலை திறக்கவேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

ஆனால் முதலில் வரமறுக்கும் ரஜினியை... ஒரு நகைத்திருட்டில் மாட்ட வைத்து அவரை தப்பிக்கவைப்பதைபோல் சோலையூர் அழைத்துவருகிறார்... அங்கு வந்தப்பிறகு தன்னுடை்ய தாத்தாவின் உண்மையான தான தர்மத்தையும் அறிந்துக்கொள்கிறார். தாத்தாக்கட்டிய அணைக்கு தற்போதைய அரசியல்வாதியால் ஏற்படவிருக்கும் இன்னலை எப்படி சமாளிக்கிறார் என்பதையும்  பரபரப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் லிங்கா...!

வயசானாலும் அந்த ஸ்டைலும், அழகும் அப்படியே இருப்பது ரஜினி ஒருவருக்கு மட்டும்தான் என்று நினைக்கிறேன். படம் முழுக்க அப்படியெரு வேகம்... ராஜா கெட்டப்பில் வரும் ரஜினி இன்னும் அமர்களப்படுத்தியிருக்கிறார்...! சென்னைவாசியாக சந்தானத்துடன் சேர்ந்து ரசிகர்களை சிரிக்கவைக்கிறார்...

காதாநாயகிகளாக அனுஷ்காவும், சோனாக்ஷி, தற்போதைய கதையில் ரஜினியை தேடி கண்டுபிடித்து அழைத்துவரும் பொறுப்பில் அனுஷ்காவும், ராஜா ரஜினிக்கு கிராமத்து கதாபாத்திரத்தில் சோனாக்ஷியில் ஜோடிபோட்டு தன்னுடைய வேலையை கச்சிதமாக செய்துமுடித்திருக்கிறார்கள்...



கே.எஸ்.ரவிக்குமார் படம் என்றாலே கதாபாத்திரங்களுக்கு குறைவிருக்கிறது... இதிலும் அப்படியே..! ஆனாலும் குழப்பமில்லாமல் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கிறார்.


இடைவேளையில் கொஞ்சம் இழுப்பதுபோல் தெரிந்தாலும் அதை தேசப்பற்று டானிக்கை சேர்த்து இழுவை மறக்கடித்துவிடுகிறார்.. 80 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய கார்கள், ஆடைகள், ரயில் வண்டி, சாரட்வண்டிகள் என கலைஇயக்குனரை சரியாக பயன்படுத்தி சபாஷ்வாங்குகிறார்...

இசை சொல்லவே தேவையில்லை... அத்தனையும் அழகு... ஏ.ஆர் ‌ரஹ்மான் தன்னுடைய பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்...  இந்தியனாய் வா பாடல் எழுச்சியாய் இருக்கிறது...! அனைத்து பாடல்களையும் அழகிய செட்போட்டு பார்வையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறார்கள்...!


குடும்பத்துடன் சேர்ந்துபார்க்கக்கூடிய படத்தை கொடுத்து மீண்டும் ஒருமுறை வெற்றிப்பெற்றிருக்கிறது ரஜினி கே.எஸ். கூட்டணி...

27 September, 2014

மெட்ராஸ் - சினிமா விமர்சனம் / Karthi-in Madras Cinima Review

தான் எடுத்துக்கொண்ட கதையில் வலுவாக இருந்து... நேர்த்தியாக திரைக்கதை அமைத்து... கதைகலத்தோடு ஒன்றிப்போய்.... கதையில் ஹீரோக்கென்று எந்த ஒரு மாற்றமும் செய்யாமல்... ஒரு இயக்குனரின் மனதில் என்ன கதை ஓடுகிறதோ அதை அப்படியே காட்சிப்படுத்தினால் அந்த கதை சினிமாவாக இல்லாமல் எதார்த்தமாக நம் கண்முன்னே காணும் வாழ்க்கைப்போல் ஆகிவிடும்... எடுத்துக்கொண்ட கதையிலிருந்து விலகும்போதுதான் சினிமா சிரிப்புக்குள்ளாகிறது...!

வடச்சென்னை அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் இரண்டு அரசியல் கட்சி கோஷ்டிகள் அந்தப்பகுதி சந்திப்பில் இருக்கும் ஒரு சுவரைப்பிடித்து கொண்டு அரசியல் விளம்பரம் எழுதுகிறார்கள்.. இது அடுத்த கோஷ்டிக்கு கோவத்தை ஏற்படுத்த எப்படியாவது அந்த இடத்தை பிடித்து நாம் கட்சி விளம்பரம் எழுதவேண்டும் என்று இவர்கள் பிடிக்க.. எனமாறிமாறி இரண்டு தரப்பிலும் பல ஆண்டுகளாக வெட்டுக்குத்து என்று இருந்து வருகிறது... அது தற்போதைய காலக்கட்டத்திலும் அந்த பிரச்சனைத் தொடர்கிறது...

“சுவரில் இருப்பது நம் கட்சியின் விளம்பரம் அல்ல நம்மேல் மக்கள் வைத்திருக்கும் பயம்... இந்த இடத்தைவிட்டுவிட்டால் நம்மேல் இருக்கும் பயம் போய்விடும்“ என சுவற்றையே குறியாகவைத்து செயல்படும் இரண்டு கோஷ்டிகளும் மாறிமாறி வெட்டிக்கொண்டு சாகிறார்கள்... தற்போது பெருமாள் என்ற கோஷ்டியிடம் இருக்கும் அந்த இடத்தை, மாரி கோஷ்டியினர் கைப்பற்ற நினைக்கிறார்கள் அப்படி அந்த இடத்தை கைப்பற்றினார்களா...? இதில் யார் வெற்றிப்பெற்றது... படித்துவிட்டு வேலைக்குசென்றுவரும் ஒரு கால்பந்து வீரரான காளி எனும் கார்த்தி இந்த பிரச்சனையில் எப்படி மாட்டிக்கொள்கிறார் என்பதை, வெட்டு, குத்து, இரத்தத்தோடு கொஞ்சம் காதலையும் கலந்து அழகாக விளக்கியிருக்கும் படம்தான் மெட்ராஸ்...!

குடிசைமாற்று குடியிருப்பில் வசித்துவரும் படித்து வேலைக்கு போகும் விளையாட்டு வீரராக காளி என்ற காதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் கார்த்தி... சுவர் பிடிப்பதற்கான பகுதிபிரச்சனையில் நண்பர்களுடன் கைகோர்க்கும்போதும்... இதுவரை திருமணத்திற்கு பெண்ணே கிடைக்காத விரக்தியில் அந்த பகுதி பெண்ணை நண்பர்கள் கோர்த்துவிட அதன்பின் நாயகியை விரட்டிக் காதலிக்கும்போதும்... நண்பரை கொன்றவர்களை பழித்தீர்க்க கத்திஎடுத்து போராடும் போதும்... சண்டைக்காட்சிகளிலும் தான் ஒரு சாதாரண வடசென்னை பையனாகவே மாறியிருக்கிறார் கார்த்தி...

நான் மகான் இல்லை படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தின விதமாக இப்படத்திலும் அழகிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். (சில ஊத்தல்ப் படங்களுக்கு மத்தியில் இப்படம் கார்த்திக்கு ஒரு ஆறுதல்தான்) கதாநாயகி கேத்ரின் இயல்பான நடிப்பில் தன் மனதை கவர்கிறார். காதல் டூயட்டுகள் என ஏதும் இல்லாமல் நாயகியை கதையோடு ஒன்ற வைத்திருக்கிறார்கள்...

வடசென்னை மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களின் அன்றாட பணிகள், அவர்களின் அரசியல், சண்டைசச்சரவுகள், ஆட்டம், கோவம் போன்றவற்றை, உள்ளது உள்ளபடியே காட்சிப்படுத்தியிருப்பது மிகவும் அழகு...

படத்தில் வரும் கதாபாத்திரங்களான பெருமாள், மாரி, ஜானி, அன்பு, அன்புவின் மனைவி, கலையரசி கார்த்தியின் குடும்பத்தினர், ஒரு நடனக்குழு என அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு அவ்வளவு பலம். இன்னும் குறிப்பாக ரவுடியாக இருந்து தற்போது பைத்தியம்போல் வரும் ஜானி என்ற பெரியவர் கதாபாத்திரம் கைதட்டவும் வைக்கிறது.. மனதிலும் நிற்க வைக்கிறது.. மேலும் நடனக்குழு இளைஞர்களை பயன்படுத்திய விதமும் அழகு.
இசையும் அழகாக வந்திருக்கிறது.. கான பாலாவின் “இறந்திடவா நீ பிறந்தாய்“ என்ற ஒப்பாரி பாடல் மனதை இழுக்கிறது... இன்னும் சிலப்பாடல்கள் ரசிக்கும்படியிருக்கிறது....

வெட்டுக்குத்து ‌என்றாலும் அருவருப்பாக இல்லாதபடி பார்த்துக்கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குனரான அட்டகத்தி பா.ரஞ்சித். இரவில் எடுக்கப்பட்ட காட்சிகள் அழகு.. இடையில் கொஞ்சம் வேகம் குறையாதுபார்த்துக்கொண்டிருந்தால் இன்னும் படம்பேசப்பட்டிருக்கும்.

19 July, 2014

உங்களின் ஆசீர்வாதத்தையும்... வாழ்த்தையும் வேண்டி...

அன்பார்ந்த பதிவுலக  நண்பர்களுக்கும்.. வாசக பெருமக்களுக்கும் என் இனிய வணக்கங்கள்...

கடந்த 04-07-2014 அன்று என்னுடைய திருமணம் திருவள்ளூர் நகரில் நடந்தேறியது.

மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கு
ம் திருமண நிகழ்வை சொல்ல முடியாமல் போயிற்று... அதற்காக அனைவரிடமும் நான் மன்னி்ப்பு கேட்டுக்கொள்கிறேன்...

தற்போது உங்களுடைய ஆசீர்வாதங்களையும்... வாழ்த்துக்களையும்
வேண்டி நிற்கிறேன்...!






நேரில் வந்து வாழ்த்திய ஆபிஷர் மற்றும் 
வேடந்தாங்கல் கருண் குடும்பத்தினர்...


உங்கள் ஆசீர்வாதம் எங்களை பல்லாண்டுகாலம் வாழவைக்கும்...!

உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டி...

அன்பார்ந்த பதிவுலக  நண்பர்களுக்கும்.. வாசக பெருமக்களுக்கும் என் இனிய வணக்கங்கள்...

கடந்த 04-07-2014 அன்று என்னுடைய திருமணம் திருவள்ளூர் நகரில் நடந்தேறியது.

மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதால் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கு
ம் திருமண நிகழ்வை சொல்ல முடியாமல் போயிற்று... அதற்காக அனைவரிடமும் நான் மன்னி்ப்பு கேட்டுக்கொள்கிறேன்...

தற்போது உங்களுடைய ஆசீர்வாதங்களையும்... வாழ்த்துக்களையும்
வேண்டி நிற்கிறேன்...!








நேரில் வந்து வாழ்த்திய ஆபிஷர் மற்றும் 
வேடந்தாங்கல் கருண் குடும்பத்தினர்...


உங்கள் ஆசீர்வாதம் எங்களை பல்லாண்டுகாலம் வாழவைக்கும்...!

05 May, 2014

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க... ஆனா உண்மைங்க...


எல்லாவற்றையும் துறந்து விடு என்று ஒரு குரு சொல்லக் கேட்டு ஒரு சிஷ்யன் ஒரே ஒரு தவிர்க்க முடியாத கோவணத்துடன் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்தான்.

அந்தக் கோவணத்தை அடிக்கடி எலி கடித்து விட்டது.

ஊரார் என்ன இது? இவ்வாறு கந்தலாகக் கோவணம் கட்டியிருக்கிறாயே என்று கேட்க "எலி கடித்து விட்டது" என்று பதில் சொன்னான் அவன்.

ஊரார், "அந்த எலியிடமிருந்து பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பூனை வளர்க்கலாமே?" என்றார்கள்.

அவன் பூனை வளர்க்கத் தொடங்கினான். பூனைக்குப் பால் தேவையாக இருந்தது. இல்லாவிடில் அது எலியைக் கடிக்க மறுத்தது. பாலுக்காக ஊரில் பிச்சை எடுக்க ஆரம்பித்தான்.

ஊரார், "ஒரே ஒரு பசுமாடு தருகிறோம். தினம் தினம் இங்கே வராதே" என்று பசு மாட்டைத் தானமாக அளித்தார்கள்.

மாடு வந்தது. புல் தேவையாக இருந்தது. புல்லுக்காக தினம் ஊருக்குச் செல்ல ஆரம்பித்தான். இதற்காகவா இங்கு வருகிறாய், ஒரு கால் ஏக்கரா நிலம் வைத்துக்கொண்டு புல் பயிரிடேன் என்று புறம்போக்காக இருந்த நிலத்தைக் கொடுத்தார்கள்.

நிலத்துக்கு வேலி, பால் கறக்க ஒரு இடையன், அவனுக்குச் சோறு, அதற்காகக் குடும்பம். என்று குரு சிஷ்யனை வந்து பார்த்த போது அவனைச் சுற்றி ஒரு பண்ணையே செழித்திருந்தது. இதைப் பார்த்த குரு, "மனைவி, மக்கள், சுற்றம், ஆட்கள், நிலம், மாடு, மனை என்று எல்லாம் சேர்ந்து விட்டாயே எப்படி?" என வினவினார்.

"சுவாமி எல்லாம் இந்த ஒரு கோவணத்துக்காக... " என்றான் அவன்....

********************************
என்னவென்று
சொல்லி தொலைப்பது
நம் அறியாமையை ...!
********************************
 கருத்துக்சொல்ல விரும்பவில்லை...!
********************************


அந்த டாக்டர் ரொம்ப நல்லவர்போல...

எதை வச்சு சொல்றீங்க??

ஆபரேஷனுக்கு முன்னாடி நோயாளிகிட்ட உயிர் மேல ஆசை இருந்தா ஓடிப்போயிடுன்னு கடைசி வாய்ப்பு தர்றாரே....

********************************

29 April, 2014

என் அவதாரங்கள்...



என் தலைமுடியை பிடித்து
உன் பச்சைநிற ரிப்பனில்
உச்சிக் குடுமி போட்டுப்பார்த்தாய்...

உன் நெற்றி பொட்டு எடுத்து
என்நெற்றியில் ஒட்டி அழகாகயிருக்கிறது
என்று குதுகலித்தாய்...

சுடிதார் போட்டால் எப்படியிருப்பீங்க...!
நீயே கற்பனை செய்துகொண்டு
விழுந்து விழுந்து சிரித்தாய்....
 

கொஞ்சுகையில் மீசை வேண்டாம் ‌‌என்று..கிறாய்
கெஞ்சுகையில் அதையே அழகு என்று..

என் மீசை எடுத்து உருமாற்றுகியாய்...

முழுக்கைச்சட்டையை மடித்துவிட்டு...
தூக்கிவிட்டிருந்த காலரை மடித்துவிட்டு

நெடிக்குகொருமுறை எனை அலங்கரிக்கிறாய்..!

வீட்டில் இன்முகம்கூட காட்டாத நான்
ஒரு விகடகவியாகி
சிரிப்பால் உன்னை அழகுபடுத்துகிறேன்...!



இப்படியாய் உன்னை மகிழ்விக்க 
இன்னும் எத்தனை அவதாரங்கள் எடுக்கவும் 
நான் தயார்தான்...!

(உண்மையில் இப்படி ஒரு வாழ்க்கை வாய்க்கவில்லை)

18 April, 2014

தெனாலிராமன் விமர்சனம்.... பாதியில் ரத்து செய்யப்பட்ட காட்சி...!


இன்று புனித வெள்ளி என்பதைக்கூட மறந்து வடிவேலுவின் படத்தை பார்க்கப்போகிறோம் என்ற பரவசம்தான் மனதில் நிறைந்திருந்தது.. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு காணாமல்போன வடிவேலு இன்றைய பாராளுமன்ற தேர்தலின்போது கொஞ்சம் துளிர்க்க துவங்குகிறார் என்று நினைக்கும்போது மகிழ்வாகவே இருக்கிறது...

கொஞ்சநாள் காணாமல் இருந்த திரையுலகின் நகைச்சுவை சாம்ராஜ்ஜியம் இன்று புறப்பட்டு விட்டது... அதன் வருகையை உறுதிசெய்தும் திரைப்படம்தான் தெனாலிராமன்..  ஆளும் கட்சியிடம் இரகசியமாக உத்தரவு ‌வாங்கி... அந்த நம்பிக்கைப்பேரில் படத்தை துவங்கி நீண்டகாலமாக தயாரிப்பில் இருந்து... தெலுங்கு அமைப்புகளிடம் ஏதே சில சிக்கல்கள் ஏற்பட்டு இன்று வெற்றிகரமாக திரையை தொட்டுவிட்டது வடிவேலு நடிக்கும் தெனாலிராமன்...

இன்று தேர்தல் சம்மந்தமான பணிகள் ஏதும் இல்லை, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டது... ஆகையால் இன்று முதல் காட்சி பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவோடு நானும் வேடந்தாங்கல் கரணும் காலை 10.00 மணிக்கு திருவள்ளூர் துளசி திரையங்கிற்கு சொன்றோம்.

கடந்த வாரம் வெளியான மான் கராத்தே படம் திருவள்ளூர் நகரில் கிருஷ்ணா மற்றும் லட்சுமி என இரண்டு திரையரங்குகளில் வெளியானது. நாங்கள் லட்சுமி திரையரங்கிற்கு சென்றோம் முதல் நாள் முதல் காட்சிக்கு வெறும் 30 பேர்தான் அரங்கில் இருந்தனர்... ஆனால் இன்று வடிவேலுவின் படத்தை பார்ப்பதற்கு 500 க்கும் மேற்பட்ட கூட்டம் இருந்தது.....

வழக்கம்போல் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் ஒருவரிடம் காசு கொடுத்து தூரமிருந்தே டிக்கெட் வாங்கி அரங்கில் வசதியான இடமாகப்பார்த்து அமைந்தோம்...  (டிக்கெட் விலை ரூ.50) அதன் பிறகே ஆரம்பித்தது வில்லங்கம்...!

ஓரளவுக்கு திரையரங்கம் நிறைந்திருந்திருந்தது.... 10.25-க்கு வாக்காளர் விழிப்புணர்வு குறும்படமும்.. அதைத் தொடர்ந்து புகைக்கு எதிராக விழிப்புணர்வு படமும் ஓடத் தொடங்கியது இந்த காட்சிகள் ஓடும் போதே திரையில் ஒரு வித்தியாசம் தெரிந்தது... அது என்ன வென்றால் படம் பெரியதாகி... அதாவது 200 %  அளவில் Zoom-ஆகி படம் ஓடியது... சரி விளம்பரப்படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணுகையில்.....?

தெனாலிராமன் படமும் இப்படியே ஓடத்‌துவங்கியது... படத்தின் பாதிஅளவு மட்டுமே திரையில் தெரிந்தது அதனால் யார் நடிகர்கள் என்றுகூட பெயர்கள் வாசிக்க முடிவில்லை முகங்களும் மறைந்து வந்தது... ‌ அரங்கில் சத்தமும்... கூச்சலும் போட்டார்கள்... சரியாகிவிடும் என்று நினைத்ததால்.. அடி வாயாடி.. பாடல் ‌வரை அப்படியே ‌ஓடியது.... ரசிகர்கள் எழுந்து அலுவலகம் சென்று முற்றுகையிட்டனர்...  சரி செய்துக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லியே அரைமணி நேரப்படத்தை ஓட்டிவிட்டார்கள்....

அதன் பிறகும் சரியாக வில்லை என்பதால் பொருமையிழந்த ரசிகர்கள் கூச்சலிட்டதால்... சரி செய்கிறோம் என கோ படத்தில் இருந்து பாடல்களை ஓடவிட்டனர்.... அதற்குள் பலரும் பணத்தை திருப்பிகொடு்ங்கள் என வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்... 


இறுதியாக 11.30 மணிக்கு அந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டது.... ஆனால் மீதமிருந்த கொஞ்சப்பேருக்காக படம் போடமுடியாது என்றும்... அடுத்த காட்சிக்கான நேரத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் முதல் காட்சியை ரத்துசெய்துவிட்டார்கள்...!

வெகு நாட்களுக்கு பிறகு வடிவேலுவின் படத்தை பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பும்... அதேபோல் வெகுநாளுக்கு பிறகு விமர்சன பதிவு எழுதப்போகிற ஆர்வமும் தடைப்பட்டுவிட்டது... இனி அடுத்த காட்சி நேரம் பகல் 2.00 மணிக்கு பார்ப்போம்.... அதற்குள் என்ன வேலை வரப்போகிறதே... முடிந்தால் படம் பார்த்துவிட்டு மாலை விமர்சனம் எழுதுகிறேன்....

10 April, 2014

நாம் யாவரும் வாய் சொல்லில் மட்டும்தான் வீரரா..?

 
ஒரு சில விஷயங்களை மட்டுமே தெரிந்துவைத்துக்கொண்டு எனக்கு எல்லாம் தெரியும் என்று மார்த்தட்டும் தைரியம் நம் மனித குலத்துக்குமட்டுமே உள்ளது... மற்றவர்களின் கவனத்தை கவர... ஒரு இடத்தில் தன்னை முன்னிலைப்படுத்த... தன்னுடைய மதிப்பை கூட்ட இப்படி செய்யவேண்டியதாகிவிடுகிறது... சண்டையிட தைரியம் இல்லையென்றாலும் ஒரு வீரன்போல் பேசும் வீரர்கள் நாம்...

பார்க்காததை பார்த்ததாகவும்... செய்யாததை செய்ததாகவும்... தெரியாததை தெரிந்ததாகவும் பாவிக்கிற மனசு நமக்கு எப்படித்தான் வந்துவிடுகிறதோ என்று தெரியவில்லை... இந்த விஷயத்தில் எந்த ஒரு தனிநபரும் யாருக்கும் சலைத்தவர் இல்லை. ஆனால் உண்மை என்ன என்பது நமக்கு மட்டும்தான் தெரியும்.

சிலரின் பிரச்சனையை கேட்கும்போது நானாக இருந்தால் இந்நேரம் அப்படி செய்திருப்பேன், இப்படி செய்திருப்பேன் என்று விளக்கம்கொ‌டுக்கும் நாம், அதே பிரச்சனை நமக்கு வரும்போது கால்கள் உதர நின்றுக்கொண்டிருப்போம் என்பதுதான் உண்மை....

இந்த உலகம் தகவல்களின் கலஞ்சியம்... ஒவ்வொறு நெடியும் எதையாவது கற்றுக்கொடுக்கூடிய பாடசாலை.. இதில் நாம் கற்பதற்குதான் அதிக கவனம் செலுத்துவதில்லை மாறாக கற்றுக்கொடுக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்... எல்‌லோரும் கற்றுக்கெர்டுப்பவர்களாக இருந்தால் கற்பதுயார்?
 
நாம் எதையும் முழுமையாக கற்கவில்லை.... நாமக்கு எதுவும் முழுமையாக தெரியாது.... என்று நமக்கு தெரியும் ஆனால் அதை தெரிந்துக்கொள்ள முயற்சிக்காமல் அதை தெரியும் என்போதுபோல் பாவனை செய்தால் என்னாகும் என்று விளக்கும் அழகிய ஜென்கதை ஒன்று...!

ஒரு ஊரில் வில் வித்தையில் சிறந்து விளங்கிய இளம் வீரன் ஒருவன் இருந்தான். அவன் புகழ் பெற்ற வில் வித்தையில் சிறந்த ஒரு ஜென் துறவியைப் பற்றி தெரிந்ததும், தன்னை விட இந்த உலகில் யாரும் வில் வித்தையில் சிறந்தவராக இருக்க முடியாது என்று அந்த துறவியிடம் சென்று தன்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா என்று சவால் விட்டான்.

அதற்கு அந்த துறவியும் ஒப்புக் கொண்டார். அப்போது அவர்களுக்கிடையே பல போட்டிகள் நடந்தன. இருவருமே வெற்றி பெற்று முன்னேறி வந்தனர்.

அந்த போட்டியில், தூரத்தில் இருக்கும் ஒரு பொம்மையின் கண்ணை ஒரு அம்பால் அடித்து, பின் மற்றொரு அம்பால் அந்த அம்பையே இரண்டாய் பிளந்து, சாதனை செய்து காட்டினான் இளம் வீரன்.
 

அதைப் பார்த்த அந்த துறவி 'அருமை' என்று சொன்னார். பின் அவர் அந்த இளம் வீரரை அழைத்து, "என்னுடன் ஒரு இடத்திற்கு வா, அங்கு வெற்றி பெற முடிகிறதா என்று பார்ப்போம்" என்று கூறினார். அந்த வீரனும் அவருடன் ஆவலோடு சென்றான்.

துறவியோ அவனை, பெரிய மலைச்சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். பின்பு அவனிடம், இரண்டு மலைகளுக்கிடையே போடப்பட்டிருக்கும் சிறிய மரப்பாலத்தின் நடுவில் நின்று, துரத்தில் ஒரு மரத்தில் இருக்கும் கனியை அடிக்க வேண்டும் என்று சொன்னார்.

ஆனால் அந்த பாலமோ ஒருவர் மட்டும் செல்லக் கூடியதாய், பாலத்தின் கீழே பார்த்தால் பாதாளம். விழுந்தால் மரணம் என்பது போல் இருந்தது. பின் அந்த துறவி பாலத்தின் நடுவே சென்று, தன் அம்பை எடுத்து, அந்த பழத்தை சரியாக அடித்தார்.

பின்பு இளம் வீரனிடம் "இப்போது உன் முறை" என்று சொல்லி மலைப்பகுதிக்கு சென்று விட்டார். அவனுக்கோ கை, கால்களெல்லாம் உதறியது. அதனால் அவனால் அந்த பழத்தை சரியாக அடிக்க முடியவில்லை.

அதைக்கண்ட துறவி வீரனை தடவிக் கொடுத்து, "உன் வில்லின் மேல் இருந்த உறுதி, உன் மனதில் இல்லை" என்று சொல்லிச் சென்றார்.

இதிலிருந்து "மற்றவற்றின் மீது வைக்கும் நம்பிக்கையை விட உன் மீது நம்பிக்கை வைத்தால், வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்" என்பது புரிகிறது...

ஒரு விஷயத்தை முழுமையாக கற்றுக்கொண்டு, அடக்கத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செய்யும் காரியம்தான் வெற்றியையும் புகழையும் தரும்... வாய்ச்சொல்லில் எதுவும் நடந்துவிடாது.

04 April, 2014

மான் கராத்தே சினிமா விமர்சனம் / Maan karate Tamil movie review


தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைக்கும் நடிகர்களுக்கு ஏதாவது ஒரு நல்லப்படங்கள் வாய்த்து அதன்மூலம் புகழின் உச்சிக்கு போய்விடுகிறார்கள்... ஆனால் அடுத்து வரும் படங்களில் அந்த புகழை தக்கவைத்துக் கொண்டு வெற்றி நடைப்போட்டவர்கள் ஒரு சிலரே...!  ஒருசிலப்படங்கள் இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லவைக்கும் ஆனால் அடுத்து வரும் படங்கள் படுமொக்கைகளாக அமைந்து வந்தவழி தெரியாமல் போய்விடுவார்கள்...

அந்த வரிசையில் சிவகார்த்திகேயனை புகழின் உச்சிக்கு அனுப்பிய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்.. அந்த படத்தின் புகழ் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் திடீரென புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விநியோகஸ்கர் வரை படுகுஷியில் இருக்கவைத்தது... ஆனால்... தற்போது வந்துள்ள மான் கராத்தே படம்.. அவர் மீது உள்ள எதிர்பார்ப்பை நிவர்த்திசெய்ததா என்பது கேள்விகுறிதான்....!


மிகப்பெரிய கணினி நிறுவனமான சத்யம் கம்யூட்டர்ஸில் வேலை செய்யும் எதிர்நீச்சல் சதீஷ் உள்பட 5 நபர்கள் காடுகளில் சுற்றுலா செல்கிறார்கள்.. அங்கு ஒரு சித்தரை சந்திக்க நேர்கிறது. அவருடைய சக்தியை சோதித்துப்பார்க்க நினைக்கிறார்கள்... யாராவது ஒருவருக்கு மட்டும் ஒரு வரம் தருகிறோன் என்று சித்தர் கூற... இவர்கள்  ஐந்துபேரும் தன்னுடைய வரத்தை கேட்க... அதில் சதீஷின் விருப்பமான ஆயுதபூஜைக்கு மறுநாள் தினத்தந்தி ‌செய்திதாள் வரவைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை நிரைவேற்றுகிறார் சித்தர்.

துறவியும் நான்கு மாதங்களுக்குப் பிறகு வரும் அந்த செய்திதாளை தந்துவிட்டு செல்கிறார்... அதில் சில செய்திகளாக... சத்யம் சாப்ட்வேர் கம்பெனி மூடி நான்கு மாதம் ஆகிறது என்ற செய்தி வருகிறது... நம்ம கம்பெனி மூடிவிட்டார்களா..? இதுபொய் என முடிவெடுத்து அடுத்த நாள் அலுவலகம் செல்ல.. ஊழல் பிரச்சனையில் வெங்கடபதிராஜுவை கைது செய்து கம்பெனி மூடப்படுகிறது என்று அதிர்ச்சி தகவல் வருகிறது.



அதன்பின் என்ன செய்வது என்று தெரியாத இவர்கள்... மீண்டும் அந்த செய்திதாளை தேடி... அதில் வேறு என்ன செய்திகள் இருக்கிறது என்று பார்க்கிறார்கள்...


அதில் விளையாட்டுச் செய்திகளில் பீட்டர் என்பவர் குத்துச்சண்டையில் வென்று 2 கோடி ரூபாய் பரிசுபெருகிறார் என்ற செய்தி இருக்கிறது. சரி அவர் யார் என்று கண்டறிந்து இந்த போட்டியின் ஸ்பான்ஸராக நாம் வந்துவிடடு அந்த 2 கோடியை நாம் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அந்த பீட்டரை தேடுகிறார்கள்..

அதன்பிறகுதான் தெரிகிறது குத்துச்சண்டை என்றால் என்னவென்று கூட தெரியாத சிவகார்த்திகேயன் தான் பீட்டர் என்பது இவர்களுக்கு தெரிய வருகிறது... 

சுமாராக இருக்கும் சிவகார்த்தி... ஹன்சிகாவை பார்த்த உடனே காதல் தெற்றிக்கொள்ள அவரிடம் எப்படி காதலை கணிய வைப்பது என்று தெரியாமல் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்...

இதற்கிடையில் சிவகார்த்தியை தேடி பிடிக்கும் அவர்கள்... அவரை எப்படியாவது இந்த போட்டியில் கலந்துக்கொள்ள வைக்க முயச்சிக்கிறார்கள்... ஹன்சிகாவுக்கு விளையாட்டில் மிகுந்த விருப்பம் ஆகையால் நீங்கள் குத்துச்சண்டையில் கலந்துக்கொண்டு ஜெயித்தால் உங்களுக்கு ஹன்சிகா கிடைப்பார் என்று ஆசைவார்த்தைகள் கூறி... குத்துச்சண்டையிட பயிற்சியும் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்துக்கொடுத்து குத்துச்சண்டையைில் கலந்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.



ஹன்சிகாவை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாட்டாக குத்துச்சண்டையில் கலந்துக்கொள்ள முடிவெடுத்து நகைச்சுவையாக அதற்கான வேலையில் இறங்குகிறார் சிவகார்த்தி.... ஆனால் அதற்காக எந்த உத்வேகமும் கொள்ளாமல் விளையாட்டாக இருப்பது அபத்தம்..

அப்படி இப்படியென சிலபோட்டிகளில் தன்னுடைய குரும்புதனத்தால் இறுதிபோட்டிவரை முன்னேறும் சிவகார்த்தி... குத்துச்சண்டையில் மிகபிரபலமாக இருக்கும் கில்லர் பீட்டர் (வம்சிகிருண்னன்) சண்டையில் இறுதிப்போட்டியிக்கு வர அவரிடம்.... குத்துச்சண்டையின் போது குத்துச்சண்டையே தெரியாமல் மான்போல் ஓடி ஒளிந்து காமெடியோடி சண்டையிடும் மான்கராத்தே பீட்டர் (சிவகார்த்தி) எப்படி ஜெயிக்கிறார் என்று கடைசி 10 நிமிட படத்தைமட்டும் கொஞ்சம் சுவாரஸ்யமாக கொடுத்து அனுப்பிவைக்கிறார்கள்...


செய்திதாளில் இருப்பது எந்தபீட்டர் என்று குழம்பும் அந்த 5 பேரும்  சிவகார்த்திகேயனை போட்டியில் கலக்க வைத்து வெற்றியடையச் செய்தார்களா..? இறுதியில் குத்துச்சண்டைபோட்டியில் வென்றது எந்த பீட்டர்...? தன்னை குத்துச்சண்டைவீரர் என்று பொய் சொன்ன சிவகார்த்தியை ஹன்சிகா கரம்பிடித்தாரா..? என்பதை தான் கொஞ்சம் இழுவையாக இழுத்து முடித்திருக்கிறார்கள்...

சிவகார்த்திகேயனின் நடிப்பு படத்துக்கு படம் மாறுபட்டுவருவது மகிழ்ச்சி... ஆனால் இந்தப்படத்தில் அது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை..  ஹன்சிகாவை பார்த்து வழிவதும்... அவரை கவர முயற்சித்து பலஇடங்களில் மொக்கை வாங்குவதும்.... குத்துச்சண்டையே தெரியாமல் போட்டியில் கலந்துக்கொள்வதும்.. அதை ஒரு சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் கோச் உள்பட அனைவரையும் கிண்டலடிப்பதும் பார்க்க சகிக்கமுடியவில்லை...



காமெடி நடிகர்களுக்கு அவர்களுக்கு ஏற்றார்போல் கதையையும் திரைக்கதையையும் அமைக்க வேண்டும்.. ஆனால் சீரியஸாக போகவேண்டிய கதைக்கு நகைச்சுவையாக திரைக்கதை எழுதியிருப்பது படுமொக்கையாக இருக்கிறது... எதிர்நீச்சல் படத்தை ஏற்றுக்கொண்ட எனக்கு இந்தப்படத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


குத்துச்சண்டையில் காமெடி நடிகர்களுடன் போடும் சண்டை செம ஜாலி... அப்படி இப்படி என பைனலுக்கு சென்றுவிடுவதுதான் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஒருசில குத்துச்சண்டைகளுக்கு நடுவராக சூரி வந்திருக்கிறார்... (கௌரவ தோற்றம்)... கொஞ்சம் சிரிக்கவும் வைக்கிறார்...

ஹன்சிகா  படம் முழுக்க அம்புட்டு அழகாக காட்டியிருக்கிறார்கள்.. ஆனால் அப்படிப்பட்ட அழகிக்கு 10 திருக்குறள் ஒப்புவித்தால் தன்மகளை திருமணம் செய்துவைக்கிறேன் என்று அவருடைய தந்தை சொல்லி ஆட்களை தேர்வு செய்வது அறுவருப்பு... அதிலும் கலந்துக்கொண்டு திருக்குறள் சொல்லமுடியாமல் திரும்புவது அதைவிட மொக்கை.... அதுவும் சில காமெடி பீஸ்களை வைத்து...


இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். பாடல்கள் சுமார் ரகம்தான் ஆனால் காட்சிகள் அழகாக வந்திருக்கிறது... ஒரு பாடலில் அனிருத் வந்து ஆடுவது பரவாயில்லை என்று பார்க்கவேண்டியதாயிருக்கிறது... ஒருசில பாடல்கள் பரவாயில்லை...

ஏ.ஆர். முருகதாஸ் அவர்களின் கதையை... இயக்குனர் திருக்குமரன் சரியாக கையாளவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.... உதவி இயக்குனர்கள் முதலில் வரும்போது கொஞ்சம் வித்தியாசமாக திரைக்கதைஅமைத்து அனைத்து ரசிகர்களாலும் கவரகூடியராக இருந்தால்தான் அடுத்தடுத்து அவர் ஜொலிக்க முடியும்...

ஏற்கனவே பார்த்த காட்சிகள் கேட்ட நகைச்சுவை துணுக்குகள் என்று எந்தபக்கமும் ஒரு வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது. முதல்பாதியும் பிற்பாதியும் விருவிருப்பு இல்லாத காட்சிகளால் எப்போது கிளம்பலாம் என்று என்னவேண்டிய சூழல்...


திருவள்ளூரில் கிருஷ்ணா, லட்சுமி என இரண்டு திரையரங்குகளில் படம் வெளிவந்துள்ளது. நானும் வேடந்தாங்கல் கரணும் லட்சுமியில் படம்பார்த்தோம்... எங்களுடன் மேலும் 30 பேர் படம் பார்த்தனர்...
 

இந்தப்படம் சிவகார்த்திகேயனுக்கு முதல் சறுக்கல்...!
Related Posts Plugin for WordPress, Blogger...