கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

10 January, 2014

வீரம் சினிமா விமர்சனம் / Ajith Veeram Tamil movie review


அஜீத்துக்கு ரொம்ப நாளைக்கு பிறகு கிராமத்தை மையாக்கி ஒரு படம். அஜீத் கிராம பின்னணியில் நடிக்கும் படம் என்றும்... பாசபிணைப்பு படம் என்று சொன்னார்களே ஏதாவது ஜீ.. ஆழ்வார்... ஆஞ்சநேயா.. மாதிரி ஏதாவது பல்பு கொடுத்துவிடுவார்களோ என்று பயந்துக்கொண்டுதான் தியாட்டர்பக்கம் போனோம்... (நானும் வேடந்தாங்கல் கருணும்)

ஆனால் கொடுத்த எதிர்பார்ப்பை கொஞ்சமும் குறையாமல் நகைச்சுவை, அதிரடி, காதல், சென்டிமென்ட், என அத்தனை அம்சங்களுடன் வெகுநாட்களுக்கு பிறகு ஒரு அழகான திரைப்படத்தை தந்திருக்கிறார்... அஜீத்-துடன் இணைந்த சிவா...

அஜீத் கிராம பின்னணி கொண்ட கதையில் அத்தனை அழகாக பொருந்தியிருக்கிறார்.... படம் முழுக்க அத்தனை கம்பீரம்...  மங்காத்தா, ஆரம்பம், படங்களை தொடர்ந்து வீரத்தோடு எழிச்சிப்பொற்றிருக்கிறார் அஜீத்....

வீரம் கதை...

விநாயகம் & பிரதர்ஸ்... என்ற பெயரில் அஜீத்தின் தம்பிகளாக மைனா ஹீரோ விதார்த், டைரக்டர் சிவா தம்பி பாலா, முனீஷ், சுஹைல் ஆகியோர் இணைந்து நியாயத்துக்காக குரல்கொடுக்கும் வீரம் நிறைந்தவர்களாக வாழ்கிறார்கள்... அங்கு நடக்கும் அநியாயத்தை எதற்கும் அஞ்சாமல் தட்டிக்கேட்டு தவிடுபொடியாக்குகிறார்கள்... தம்பிகளுக்காக அண்ணனும் அண்ணன்களுக்காக தம்பியும் என அப்படி ஒரு பிணைப்பு...

விநாயகம் கேரட்டரில் அஜீத்... அவரின் பேச்சைத்தட்டாத நான்கு தம்பிகள்... ஒட்டன்சத்திரம் கிராமத்தில் அமர்களாமாக வாழும் குடும்பம் அஜீத்துடையது.. 

நான்கு நம்பிகளுடன் யாரும் திருமணம் செய்துக்கொள்ள கூடாது... அப்படி திருமணம் செய்துக்கொண்டால் நம்பளை பிரித்துவிடுவார்கள் என்று வாழ்கிறார்கள்...

இதற்கிடையில் நான்கு தம்பிகளும் தனித்தனியே காதல் செய்ய தனக்கு திருமணம் ஆகவேண்டும் என்றால் அண்ணனுக்கும் யாரையாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று சந்தானத்துடன் சேர்ந்து முடிவெடுக்கிறார்கள்...

அஜீத் பள்ளி பருவத்தில் விரும்பிய கோப்பெருந்தேவி என்ற பெண்ணை நினைவில் கொண்டு... அதே பெயருடைய ஒரு பெண்ணை தேட.. அந்த சமயத்தில் கோயில் சிலைகளை பராமரிக்கும் ஆய்வாளராக வரும் கோப்பெருந்தேவி என்ற பெயருடைய தமன்னாவை  கண்டுபிடித்து அவரையும் அஜீதையும் காதலிக்க வைக்கிறார்கள்....


இடைவேளை வரை அஜீத்துக்கு திருமண ஆசையை வரைவைக்க இவர்கள் செய்யும் அமர்க்களங்கள்... உள்ளூர் வில்லனுடன் அதிரடி சண்டைக்காட்சிகள்... என பயங்கர விருவிருப்புடன் நகர்கிறது படம்.

அஜீத் எதற்கும் அடிதடி செய்பவர்.. அதன் பின்ன¦ணி தெரியாத தமன்னா அஜீத்தை மிகவும் அமைதியானவர் என்று நம்பி திருமணம் பேசுவதற்காக தன்னுடைய ஊருக்கு அழைத்துப்போகிறார்... இரயிலில் போகும்போது வரும் ரவுடிகளை துவம்சம் செய்யும் அஜீத்தை கண்டு மிரண்டுப்போகிறார் தமன்னா...

சின்ன பிளவுக்குபிறகு மீண்டும் தமன்னாவின் ஊருக்குப்போகிறார் அஜீத்... அங்கு தமன்னாவின் அப்பா நாசர் அஜீத்தை தன்னுடைய ஊரில் நடக்கும் திருவிழாவை பார்த்துவிட்டு செல்லும்படி கேட்டுக்கொள்ள தம்பிகளுடன் அங்கு தங்குகிறார் அஜீத்...

அங்கும் ரவுடிகள் தாக்க வருகிறார்கள்.. தன்னைதான் தாக்க வருகிறார்கள் என்று அஜீத் துவம்சம் செய்கிறார்... உங்களை யார் அனுப்பியது என்று கேட்க... நாங்கள் உங்களை கொல்ல வரவில்லை.. நாசர் குடும்பத்தை அழிக்கத்தான் வந்திருக்கிறோம் என்று சொல்ல சூடிபிடிக்கிறது கதை...


நாசர் குடும்பத்தை ஏன் அழிக்கவருகிறார்கள்.. அவர்களுக்கே தெரியாமல் அஜீத் அவர்களை எப்படி காப்பாற்றுகிறார்... அதன் பிண்ணனி என்ன... அஜீத்துக்கும் தமன்னாவுக்கும் திருமணம் நடந்ததா என்று விருவிருப்புடன் சொல்லப்பட்டிருக்கும் அழகிய வண்ணமயமான படம்தான் வீரம்....

அஜீத்....

பெப்பர் அன்டு சால்ட் கெட்டப்பில் படம் முழுக்க வெள்ளை வேட்டி சட்டையுடன் அமர்களப்படுத்துகிறார் அஜீத்... ஒவ்வொரு காட்சிக்கும் விசில் சத்தம் காதைபிளக்கிறது... டான்ஸ் செம... சண்டைக்காட்சிகள் அனைத்து பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள்... நான்கு தம்பிகள் கூட இருந்தும் அஜீத்துக்கு மட்டும் அதிக சண்டைகாட்சிகள் அதிகம்... 

இரயிலில் ஒரு சண்டையும்... கிளைமேக்ஸில் ஒரு மழைச்சண்டையும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது...

படம் முழுக்க வேட்டி சட்டை என்பதால் இரண்டு பாடல்களில் மட்டும் கோட்டுசூட்டுடன் பயன்படுத்தியிருக்கிறார்கள்...


தேவி ஸ்ரீ பிரசாத் இசையை பிண்ணி பெடலெடுத்திருக்கிறார்.... பாடல்கள் சூப்பர்.... ஓப்பனிங் பாடல்... நல்லவன்னு நம்பிடாதீங்க... செமராக்... ஒரு மெலடி அழகு....  பின்னணி இசை அமர்களம்... அதிக இடங்களை கெண்டமேளத்தை பயன்படுத்தியிருக்கிறார்...

தமன்னா யாதார்த்தமான குடும்ப பாங்கான கேரட்டர் என்பதால் கச்சிதமாக பொருந்திப்போகிறார்...

தம்பிகளாக வரும் நால்வருடன்.. சந்தானம் செய்யும் லூட்டிகள் இடைவேளைவரை அமர்களப்படுத்துகிறது... இடைவேளைக்கு பிறகு இவர்களுடன் தம்பி ராமையாவும் கலந்துக்கொள்ள சிரிப்பொலியில் அதிர்கிறது திரையரங்கம்...


பாடல்கள் அத்தனையும் சூப்பர்... கலர்புல்லாகவும் ரசிக்கும்படியும்... ரசிகர்களை அப்படியே ஆடவைத்துவிடுகிறது...

படவில்லன்களாக முதல்பாதியில் கஜினி பட வில்லன்... பிற்பாதியில் ரன் படவில்லன்..
(பெயர் தெரிலிங்கசாமி...) இருவரும் நன்றாகவே வில்லத்தனம் செய்திருக்கிறார்கள்...

காட்சி அமைப்பு அத்தனையும் சூப்பர்... ஒட்டன்சத்திரம் போன்றே செட் என்று சொன்னார்கள் ஆனார் செட்போல் தெரியாமல் அப்படி பொருந்தியிருக்கிறது...

படத்தில் இருக்கும் காட்சிகளை அத்தனை அழகாவும்... காட்சிக்கு காட்சி விருப்புடனும்... எங்கும் தோய்வில்லாமல் நகர்த்தி ஒரு வெற்றிப்படம் என்தை உறுதிபடுத்தியிருக்கிறார் இயக்குனர் சிவா... இந்தப்படம் இவருக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை...

12 comments:

  1. தல பொங்கல்...

    இன்று மதியத்துக்கு இங்க டிக்கெட் புக் பண்ணியாச்சு...

    ReplyDelete
  2. Thanks for your positive review friend. ..

    ReplyDelete
  3. Veeram விமர்சனம் அருமை Boss. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. படம் ஓக்கேவா! ரொம்ப நாளைக்கு பிறகு அஜித்துக்கு டபுள் தமாகா! க்ரேட்! நன்றி!

    ReplyDelete
  5. பார்க்கவேண்டிய படம் என
    முடிவெடுத்துவிட்டேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இவ்வளவும் நல்லாயிருக்கு என்றால் பார்த்திட வேண்டியது தான்...!

    ReplyDelete
  7. படத்தோட முக்கியமான ட்விஸ்ட்ட சொல்லிட்டீங்களே.... ஏன் பாஸ்...!?

    ReplyDelete
  8. படம் பார்த்துவிடுகிறேன் நண்பரே

    ReplyDelete
  9. விமர்சனம் super and veeram (Y)

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...