கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

11 January, 2014

குடும்ப வாழ்க்கையில் நடப்பவை இவை.. புரிந்தால் சிரிக்கலாம்...!


"உங்க கணவருக்குக் குளிர் ஜுரம் .. அதனால நீங்க பக்கத்துல இருக்காதீங்க".

"ஏன் டாக்டர்" ?

"நீங்க பக்கத்துல இல்லன்னா அவருக்குக் குளிர்விட்டுப் போயிடும்"!.
 
******************************* 
 
 ரசத்துல நான் புளியே போட மறந்துட்டேன்... எப்படி அப்படியே சாப்பிடறீங்க" ?

"நீ சமையல் பண்ண ஆரம்பிச்சபோதே எனக்கு வயித்துல புளியைக் கரைக்க ஆரம்பிச்சிடிச்சு"!....

*******************************
 
 
 "என்னங்க... திருடன்பாட்டுக்கு நம்ம 

வீட்ல புகுந்து திருடிட்டிருக்கான். நீங்க ஏதோ எழுதிட்டிருக்கீங்க".. .?

"சும்மா இருடி... நாளைக்கு போலீஸ் வந்து என்னென்ன பொருள் காணாமப் போச்சுன்னு கேட்டா, கரெக்டா சொல்ல வேணாமா" ?

*******************************

 
 டாக்டர், என்னோட மனைவி தொல்லை தாங்க முடியல! ஏதாவது ட்ரீட்மென்ட் பண்ண முடியுமா?

அது தெரிஞ்சா நான் ஏன் 24 hours ஹாஸ்பிடல் வச்சுருக்கேன்?

*******************************
 
 
கடவுள் எங்க இருக்கார் ?-னு டீச்சர் ஒரு பையனைக் கேக்கறாங்க. அதுக்குப் பையன், எங்க வீட்டு பாத்ரூம்ல என்கிறான். அதிர்ச்சி யோடு எப்படி என்கிறார் டீச்சர்.

அதுக்குப் பையன், எங்க அப்பா, அம்மாவை வீடு பூரா தேடிட்டுக் கடைசியில் பாத்ரூமில் கண்டுபிடித்து, அடக்கடவுளே... நீ இங்கதான் இருக்கியா ? என்றார் 
 
******************************

 
"என் காதுல நீங்க போட்ட புதுத் தோடு எங்கேயோ விழுந்திடிச்சுன்னு சொன்னா, அதுக்குச் சந்தோஷப்படறீங்களே. .. ஏன்" ?

"நான் உன் காதுல போட்டதுல ஏதோ இந்த ஒண்ணாவது விழுந்திருக்கேனுதான்"!!!!.....

*******************************

11 comments:

  1. ஹா.. ஹா... நல்ல துணுக்குகள்...

    ReplyDelete
  2. நல்ல ஜோக்ஸ்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. புரிந்து சிரித்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மகிழ்ச்சி நண்பரே
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பட ஜோக்குகள் ரசிக்க வைத்தன!
    +1

    ReplyDelete
  6. நகைச்சுவைகள் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
  7. ஹா... ஹா... நல்ல சிரிப்பு நண்பரே!

    ReplyDelete

  8. வணக்கம்!

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
    திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

    பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
    உங்கள் இதயம் ஒளிர்ந்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழைச் சமைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  9. ரசிக்க வைக்கும் பதிவு.
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...