கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

08 January, 2014

இதை பொய்யென்று நம்பலாமா...?


ஒரு பொய்யை ஒருவர் சொன்னால், அது பத்தாயிரம் உண்மைகளாக மாறி வெளி வரும் என்கிறார் கோக்கி என்ற ஜென் ஞானி. 
 
பொதுவாகப் பொய்க்குக் கவர்ச்சி அதிகம். நாம் காலையில் ஒரு பொய் சொன்னால் அது மாலைக்குள் பல விதங்களில் பரவி திரும்ப நம்மிடமே வந்துவிடும். அப்போது அது உண்மையா, பொய்யா என்று நம்மையே சந்தேகப்பட வைத்துவிடுகிறது.
 
நாம் அதை உண்மை என்று நம்ப அனேக சாத்தியக் கூறுகள் உள்ளன. அதே சமயம் நாம் ஒரு உண்மையைச் சொன்னால் அதை யாரும் எளிதில் நம்பமாட்டார்கள். 
 
உனக்கு அது எப்படித் தெரியும் என்று சந்தேகத்தோடு கேட்பார்கள். இதற்கு வாயை மூடிக் கொண்டிருப்பதே நலம். 'இந்த உலகம் பொய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது“. 
 
பொய் மிகவும் மேம்போக்கானது. அது உங்களிடம் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதைப்பற்றிப் பேசுவது ஒரு பொழுதுபோக்கு. ஆனால் உண்மை அப்படி அல்ல. பல அபாயங்களைச் சந்திக்க நேரிடும். பொய்மை வெகுமதியைக் கொடுக்கிறது.

தன்னோடு வளரும் தனித்தன்மை உடையவரை இந்த உலகம் எளிதில் புகழாது. அங்கீகரிக்காது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை வேண்டுமானால் பல கட்டுக் கதைகளைக் கட்டி, அற்புதங்களைக் கூட்டிப் புகழலாம். அந்த மனிதன் ஒரு அவதாரப் புருசனாகக் கருதப்படலாம்.

எல்லா நிலையிலும் பொய்மைக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது ஆனால் அது நிரந்தரம் அல்ல... மெய்க்கு ஒரு சக்தி இரு்க்கிறது... ஆனால்தான் எல்லாக்காலங்களிலும் உண்மையோடு உறவாடுபவர்களே இந்த உலகத்தில் நீங்காத இடத்தை பெருகிறார்கள்...

8 comments:

  1. வணக்கம்
    //எல்லாக்காலங்களிலும் உண்மையோடு உறவாடுபவர்களே இந்த உலகத்தில் நீங்காத இடத்தை பெருகிறார்கள்...//
    நீங்கள் சொல்வது உண்மைதான்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. முடிவில் சொன்னது உண்மையான உண்மை...

    ReplyDelete
  3. கடைசி பஞ்ச்தான் உன்மை.

    ReplyDelete
  4. உண்மையோடு உறவாடுவோம்.

    ReplyDelete
  5. அருமையான நீதிக் கருத்து! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. நல்லதோர் பதிவு வாழ்த்துக்கள்
    மிக அருமையான கண்ணோட்டம்

    ReplyDelete
  7. கடைசி பத்தி வாக்கியங்கள் உண்மை.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...