கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 September, 2014

மெட்ராஸ் - சினிமா விமர்சனம் / Karthi-in Madras Cinima Review

தான் எடுத்துக்கொண்ட கதையில் வலுவாக இருந்து... நேர்த்தியாக திரைக்கதை அமைத்து... கதைகலத்தோடு ஒன்றிப்போய்.... கதையில் ஹீரோக்கென்று எந்த ஒரு மாற்றமும் செய்யாமல்... ஒரு இயக்குனரின் மனதில் என்ன கதை ஓடுகிறதோ அதை அப்படியே காட்சிப்படுத்தினால் அந்த கதை சினிமாவாக இல்லாமல் எதார்த்தமாக நம் கண்முன்னே காணும் வாழ்க்கைப்போல் ஆகிவிடும்... எடுத்துக்கொண்ட கதையிலிருந்து விலகும்போதுதான் சினிமா சிரிப்புக்குள்ளாகிறது...!

வடச்சென்னை அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் இரண்டு அரசியல் கட்சி கோஷ்டிகள் அந்தப்பகுதி சந்திப்பில் இருக்கும் ஒரு சுவரைப்பிடித்து கொண்டு அரசியல் விளம்பரம் எழுதுகிறார்கள்.. இது அடுத்த கோஷ்டிக்கு கோவத்தை ஏற்படுத்த எப்படியாவது அந்த இடத்தை பிடித்து நாம் கட்சி விளம்பரம் எழுதவேண்டும் என்று இவர்கள் பிடிக்க.. எனமாறிமாறி இரண்டு தரப்பிலும் பல ஆண்டுகளாக வெட்டுக்குத்து என்று இருந்து வருகிறது... அது தற்போதைய காலக்கட்டத்திலும் அந்த பிரச்சனைத் தொடர்கிறது...

“சுவரில் இருப்பது நம் கட்சியின் விளம்பரம் அல்ல நம்மேல் மக்கள் வைத்திருக்கும் பயம்... இந்த இடத்தைவிட்டுவிட்டால் நம்மேல் இருக்கும் பயம் போய்விடும்“ என சுவற்றையே குறியாகவைத்து செயல்படும் இரண்டு கோஷ்டிகளும் மாறிமாறி வெட்டிக்கொண்டு சாகிறார்கள்... தற்போது பெருமாள் என்ற கோஷ்டியிடம் இருக்கும் அந்த இடத்தை, மாரி கோஷ்டியினர் கைப்பற்ற நினைக்கிறார்கள் அப்படி அந்த இடத்தை கைப்பற்றினார்களா...? இதில் யார் வெற்றிப்பெற்றது... படித்துவிட்டு வேலைக்குசென்றுவரும் ஒரு கால்பந்து வீரரான காளி எனும் கார்த்தி இந்த பிரச்சனையில் எப்படி மாட்டிக்கொள்கிறார் என்பதை, வெட்டு, குத்து, இரத்தத்தோடு கொஞ்சம் காதலையும் கலந்து அழகாக விளக்கியிருக்கும் படம்தான் மெட்ராஸ்...!

குடிசைமாற்று குடியிருப்பில் வசித்துவரும் படித்து வேலைக்கு போகும் விளையாட்டு வீரராக காளி என்ற காதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் கார்த்தி... சுவர் பிடிப்பதற்கான பகுதிபிரச்சனையில் நண்பர்களுடன் கைகோர்க்கும்போதும்... இதுவரை திருமணத்திற்கு பெண்ணே கிடைக்காத விரக்தியில் அந்த பகுதி பெண்ணை நண்பர்கள் கோர்த்துவிட அதன்பின் நாயகியை விரட்டிக் காதலிக்கும்போதும்... நண்பரை கொன்றவர்களை பழித்தீர்க்க கத்திஎடுத்து போராடும் போதும்... சண்டைக்காட்சிகளிலும் தான் ஒரு சாதாரண வடசென்னை பையனாகவே மாறியிருக்கிறார் கார்த்தி...

நான் மகான் இல்லை படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தின விதமாக இப்படத்திலும் அழகிய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். (சில ஊத்தல்ப் படங்களுக்கு மத்தியில் இப்படம் கார்த்திக்கு ஒரு ஆறுதல்தான்) கதாநாயகி கேத்ரின் இயல்பான நடிப்பில் தன் மனதை கவர்கிறார். காதல் டூயட்டுகள் என ஏதும் இல்லாமல் நாயகியை கதையோடு ஒன்ற வைத்திருக்கிறார்கள்...

வடசென்னை மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களின் அன்றாட பணிகள், அவர்களின் அரசியல், சண்டைசச்சரவுகள், ஆட்டம், கோவம் போன்றவற்றை, உள்ளது உள்ளபடியே காட்சிப்படுத்தியிருப்பது மிகவும் அழகு...

படத்தில் வரும் கதாபாத்திரங்களான பெருமாள், மாரி, ஜானி, அன்பு, அன்புவின் மனைவி, கலையரசி கார்த்தியின் குடும்பத்தினர், ஒரு நடனக்குழு என அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு அவ்வளவு பலம். இன்னும் குறிப்பாக ரவுடியாக இருந்து தற்போது பைத்தியம்போல் வரும் ஜானி என்ற பெரியவர் கதாபாத்திரம் கைதட்டவும் வைக்கிறது.. மனதிலும் நிற்க வைக்கிறது.. மேலும் நடனக்குழு இளைஞர்களை பயன்படுத்திய விதமும் அழகு.
இசையும் அழகாக வந்திருக்கிறது.. கான பாலாவின் “இறந்திடவா நீ பிறந்தாய்“ என்ற ஒப்பாரி பாடல் மனதை இழுக்கிறது... இன்னும் சிலப்பாடல்கள் ரசிக்கும்படியிருக்கிறது....

வெட்டுக்குத்து ‌என்றாலும் அருவருப்பாக இல்லாதபடி பார்த்துக்கொண்டிருக்கிறார் படத்தின் இயக்குனரான அட்டகத்தி பா.ரஞ்சித். இரவில் எடுக்கப்பட்ட காட்சிகள் அழகு.. இடையில் கொஞ்சம் வேகம் குறையாதுபார்த்துக்கொண்டிருந்தால் இன்னும் படம்பேசப்பட்டிருக்கும்.

5 comments:

  1. வணக்கம்
    தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமை நண்பரே
    அவசியம் பார்க்கிறேன்

    ReplyDelete
  3. எளிமையான விமர்சனம்
    நலமாக உள்ளீர்களா நண்பரே....

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம் தோழர்
    த.ம நான்கு

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...