கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 February, 2014

மிரட்டும் போஸ்டர்கள்..!



தமிழகத்தில் சமீப காலமாய் எழுதப்படாத ஒரு வராலாறு எழுச்சிப்பெற்று வருகிறது. அது எந்த நிகழ்வானாலும் உடனடியாக சுவரொட்டி தயாரித்து ஊர் முழுக்க ஒட்டிவிடவேண்டும் என்பதுதான். (முதலில் ஒரேகலரில்தான் அச்சடித்தார்கள் இப்போது வண்ண போஸ்டர்கள்தான்) அப்படியில்லையென்றால் பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைத்துவிடவேண்டும் என்ற பழக்கம்தான் அது.

ஒருகாலத்தில் சினிமாத்துறையை மட்டுமே ஆக்கிரமித்திருந்த இந்த சுவரொட்டிகள் ஒட்டும் பழக்கம்... பின்பு அரசியலை ஆக்கிரமித்து இன்று சாமானியன் வீட்டு விஷேசம் வரை பரவிக்கிடக்கிறது...

பிறந்தநாள், திருமணம், காதுகுத்தல், தொடங்கி இரங்கல் செய்திவரையும்... அரசியல் தலைவர்களின் அசைவுகளில் தொடங்கி, அரசியலில் பதவி வழங்கியற்கு நன்றி.. தலைவர் பிறந்தநாள்.. தலைவர் வருகை, மற்றும் கட்சி புகழ்... என தினம் தினம் புதுசுபுதுசாக கண்டிப்பாக போஸ்டர் அடித்து ஒட்டியாக வேண்டும் என்ற பழக்கம் அனைத்து மக்களையும் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது.

ஒரு இடத்தில் ஒரு போஸ்டர் ஒட்டினால் கூடபோதும் ஆனால் ஒரு சுவர் இருந்தால் அந்த சுவர்முழுக்க ‌எரே போஸ்டரை ஒட்டி திகைக்க வைக்கிறார்கள்... அடுத்த நாள் அதை கிழித்து எறிந்துவிட்டு அடுத்தவர் ஒட்டுகிறார்.. சில இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்க்கு முன்பதிவும்கூட செய்துவிட்டுபோகிறார்கள்.. சிலசமயம் இது கைகலப்பாக மாறி வெட்டுக்குத்துவரை சென்றிருக்கிறது.
இதுபோதாதென்று சில ரியல் எஸ்டேட் விளம்ரங்கள், ஆண்களுக்கு பிரச்சனையா என்ற போஸ்டர்கள், கல்வி நிறுவன மற்றும் கணினி நிறுவன போஸ்டர்கள், கவர்ச்சி சினிமா போஸ்டர்கள் என ஒரு சில போஸ்டர்கள் பார்ப்பவர்களை முகம்சுழிக்க வைக்கிறது. இதை சாப்பிடுவதற்கு என்றே ஆடு மாடுகள் ரோட்டில் அலைகிறது இதனால் பல விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதுபோதென்று டிஜிட்டல் பேனர்கள் பழக்கத்துக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிருக்கிறது... ஒருவர் இறந்துவிட்டால் அதை உடனடியாக 20க்கு 20 பிளக்ஸ் தயார்செய்து இறந்த அடுத்த 2 மணிநேரத்தில் வைத்துவிடுகிறார்கள்... இதுவே ஒரு அரசியல் மாநாடு.. அரசியல் கட்சி தலைவர்கள், பிறந்தநாள், வருகை, அறிவிப்பு, பிறவிழா இப்படி எதாவது ஒன்று இருந்தால் பேனர்களின் எண்ணிக்கை வழக்ககத்தைவிட எல்லை மீறி சென்று கொண்ருவிடுகிறது. இவைகள் சலைகளை மறைத்து இடத்தையும் ஊரையே குப்பை காடாக மாற்றி கொண்டிருக்கிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் வைக்கப்படும் பெரியபெரிய விளம்பர பேனர்களால் வாகன ஓட்டிகள் சாலையில் போதிய கவனம் செலுத்தமுடியவில்லை. பெரிய பெரிய சினிமா போஸ்டர்களையும், அரசியல் போஸ்டர்களையும் பார்த்து கொண்டே முன்னே செல்லும் வாகனங்களில் இடித்து விபத்துக்குள்ளாகிறார்கள். இவைகளை கண்டிக்க வேண்டியது யார்...? இதை கட்டுபடுத்தும் அதிகாரம் யார்கையில் உள்ளது...? எதுவும் தெரியவில்லை. 

இதற்கு ஏதாவது கட்டுப்பாடுகள் உண்டா...? சில வருடங்களுக்கு முன்னர் தேர்தல் கமிஷன் விளம்பர பலகைகளை வைப்பதற்கு தடை விதித்தார்கள்... டிஜிட்டல் பேனர் ஒரு மக்காபொருள் அதற்கு தடை என்று சுற்றுச்சூழல் துறையும் தடையை அறிவித்தது.. ஆனால் அதையும் மீறி விளம்பர பலகைகள் வைப்பது நிற்கவில்லை.. அது ஏற்படுத்து இடைஞ்சல்களுக்கு சிறிதும் குறைவில்லாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

20x20 என்ற அளவில் ஒரு டிஜிட்டல் பேனர்அச்சடித்து ‌வைக்க... பிரிண்டிங் 8000 முதல் 10000 வரை செலவாகும்... சில பேனர்கள் 1 லட்சம் 2 லட்சம் வரைகூட செல்கிறது.. இப்படியென்றால் தமிழ்நாடு முழுவதும் கணக்கிட்டுப்பார்த்தால் தலையோ சுற்றுகிறது.. அரசியல் வாதிகள் இப்படி செலவிடும் பணம் கண்டிப்பாக நேர்மையாக சம்மாதித்ததுதானா என்ற சந்தேகம் வரத்தானே செய்கிறது...?

ஆட்சியில் இருப்பவர்களே இந்த போஸ்டர் வழக்கத்தை கடுமையாக பின்பற்றி ஊரையே அசிங்கபடுத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இணையாக அடுத்த கட்சிகளும் களம் இறங்கிக்கொள்கிறார்கள்... நாம் ஆளும் மாநிலம் அழகாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆள்பவர்களுக்கும்.. அதைச்சார்ந்த நகர, மாநகராட்சிக்கும் இருக்க வேண்டும். ஆனால் அவர்களே இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர்களும் போஸ்டர் ஒட்டி கொண்டு விளம்பரம் தேடி கொண்டிருந்தால் யார் தான் இதை கட்டுபடுத்துவது?


போருந்துகளில், பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டினால், சில தனியார் சுவர்களில் அனுமதியின்றி விளம்பரப்படுத்தினால் தண்டனை என்று சட்டம் இயற்றியிருக்கிறார்கள் ஆனால் இதுவரை எத்தனைபேர்மேல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று தெரியவில்லை... இந்த சட்டத்தை பயன்படுத்துகிறார்களா என்றும் தெரியவில்லை.




நாம் இருக்கும் பகுதி சுத்தமாக வைக்கப்பட்டு... சாலைகளில் உள்ள தடுப்புகளில் செடிகள் நடப்பட்டு பேணப்பட்டு... அழகாக வளர்ந்து நல்ல சுற்று சுழல் ஏற்படுத்தப்பட்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இதுபோன்று போஸ்டர் பேனர் வைக்கும் செலவுக்கு தானதர்மங்கள் செய்யலாம்... இயலாதவர்களுக்கு உதவலாம் ஆனால் அந்த எண்ணம் யார்மனதிலும் வருவதில்லை

சமீபத்தில் நகரின் ஒரு பிரபலத்தை சந்தித்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மாலை 7.00 மணிவரை வகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்த  மாணவர்களுக்கு ஏதாவது மாலை டி பிஸ்கெட் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று உதவிகோரியதில் சொற்ப்ப உதவியே செய்தார். ஆனால் அதே வாரத்தில் கட்சி தலைவரின் சாதனைகள் நகர்முழுக்க பெரிய டிஜிட்டல்பேனர்கள் வைத்து அசத்தல் போஸ் கொடுக்கிறார்... எதை என்னவென்று சொல்வது... வீணான விளம்பர பணத்தை உதவிகள் செய்ய வேண்டும் எண்ணம் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை.

மேம்பாலங்கள், அவற்றின் தூண்கள், பேருந்து நிலையங்கள்.. பள்ளி, கல்லூரி, அரசுஅலுவலக சுற்றுச்சுவர்கள், இன்னும் பிற இடங்களில் அழகான ஓவியங்களோ அல்லது அங்கும் செடிகளோ வைக்கப்பட்டு ஊரை பார்பதற்கு குளிர்ச்சியாக வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் அப்படியொரு சூழலில் வாழவே முடியாதா...?

17 February, 2014

நம் பலத்தை தீர்மானிப்பது யார்?



குருவிடம் சீடனாக விரும்பிய ஒருவன் தொடர்ந்து அவரை வந்து சந்திக்கிறான். தன் பலத்தால் நூறு பேரை வீழ்த்தும் சக்தியுடைய அவனை குரு பயிற்சிக்கு சேர்த்துக்கொள்கிறார்.

மாதங்கள் கழிகின்றன. பலமாத பயிற்சிக்குபிறகு குரு எதேச்சையாக சீடனை அழைத்து “இப்போது உன் சக்தியை சோதிக்கிறேன்.. எத்தனை பேரை நீ வீழ்த்த முடியும்“ என்று கேட்கிறார்.

பயிற்சிக்கு முன்பு நூறு பேரை வீழ்த்துவேன் என்று கூறிய அவன் பயிற்சிக்குப்பிறகு ‌ஐம்பது பேரை மட்டுமே வீழ்த்த முடியும் என்கிறான்..

பிறகும் சில மாதங்கள் கழிகின்றன. மறுபடியும் குரு சீடனை அழைத்து சக்தியை சோதனை நடத்த, அதே கேள்வியைக் கேட்கிறார். இப்போது உன்னால் எத்தனை பேரை வீழ்த்த முடியும்?

சீடன் பணிந்த கண்களோடு சொன்னான்.. “குருவே, இதை நானெப்படி சொல்ல முடியும்..? என் பலத்தை எதிரிகள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்“ என்கிறான்.

புன்னகைத்த குரு, சீடனை ஆசீர்வதித்து பயிற்சி முடிந்தது. வீட்டுக்கு போகலாம் என்று வழியனுப்பி வைக்கிறார்.

இக்கதை ‌போல்தான் நமது வாழ்வும், சாதாரணமான தேவைகளை தீர்மானிக்கும் போது கூட அது சராசரி நடைமுறைக்கு ஒத்துவருகிறதா எனப்பார்க்க வேண்டும். ஏனெனில், நம்முடைய பலம் எதிரே இருப்பவர்களால்தான் தீர்மானிக்கப்படுகிறது. பலம் பட்டுமல்ல பயனும்கூட.

நாம் என்னிவிடலாம் அனைவரையும் விட நாம் மேலானவன் என்று நமக்கு மேலே கோடிபேர் என்பதை உணராதவரை இந்த மயக்கம்தான் பலரை ஆட்கொண்டுவருகிறது. உண்மையான வீரம் மற்றவர்களை துன்புறுத்துவதிலோ அல்லது பிறரை இழிவுபடுத்துவதிலோ இல்லை. உண்மையான வீரம் ஆழமான அன்பைபே பொழியும்.


என்வாழ்க்கையில் இதுவரை சந்தித்தவர்களில் நிறையபேர் ரவுடி‌ப்போலவும், மிகப்பெரிய கோவக்காரர் போலவும் காட்டிக்கொள்கிறார்கள்... நான் அவர்களை பார்ப்பது இயலாதவர்களாகத்தான்... ஆம் சிலர் தன்னுடைய இயலாமையை காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காகவே கோவம், ரவுடிபோன்று பாவனை, அழுகை, வெறுப்பு என ஏதாவது ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள்...

கோவமோ, வீரமோ, அன்போ நாம் எவ்வளவு காட்டவேண்டும் என்பதை நாம் முடிவெடுக்க வேண்டாம் நம் எதிரில் இருக்கும் அடுத்தவர் காட்டும் அளவைப்பார்த்து முடிவெடுப்போம்.. அப்போதுதான் வாழ்க்கை தன்பயணத்தை எளிமையாக நகர்த்திக்கொண்டே இருக்கும்.

03 February, 2014

இதுவும் என் படுக்கையறை அனுபவமே



பகல் முழுக்க 
உன்னைவிட்டு பிரிந்தாலும்
இரவில் மட்டும் முடிவில்லை...
 

இரவெல்லாம் தொடர்ந்து
விடிந்தப்பிறகுதான் முடிகிறது
 உனக்கும் எனக்குமான தொடர்பு...
 

நான் விட்டாலும்
முழுதாய் உன்னை வெறுத்தாலும்
நீ விடுவதாயில்லை என்னை...


எப்படியாவது முயன்று 

நிறைவேற்றிக்கொள்கிறாய்
உன் விருப்பத்தை...


உன் உதடுகளால்
முத்தமிட்டு உதிரம் ருசிக்கையில்
துடித்துப்போகிறேன் நான்...


உன்னிடம் இருந்து தப்பிக்க
நான் எவ்வளவு முயன்றாலும்
தப்ப முடியவில்லை ஒருநாளும்...


உனக்கும் எனக்குமான விரோதங்கள்
எனக்கும் உனக்குமான அடிதடிகள்
கட்டிலில்தான் அதிகம் நடக்கிறது...


காதோரம் கிசுகிசுத்து விட்டு

மறைந்த உன்னை தேடி 
அலையும் என் கரங்கள்...

மனிதம் வீசிய வலையில்
விதியெனச் சிக்கிவிடுகிறது
உலகத்தில் எல்லாம்...


உன்னிடம் மட்டும்தான் 

விதிவிலக்காய் மனிதகுலமே 
வலைக்குள் ஒளிகிறது...


(ஒரு இரவில் கொசுக்கள் கொடுத்த இம்சையை
அப்படியே உங்களுக்கு கொடுத்திருக்கிறேன் கவிதையாய்...)


Related Posts Plugin for WordPress, Blogger...