கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

02 February, 2015

இதற்கான விடை உங்களிடம்தான் இருக்கிறது...!

பாட்ஷா படத்தில் அனைவரையும் கவர்ந்த ஒரு வசனம் “நம் வாழ்க்கை நம் கையில்”.... இன்றைக்கு அதிகமான ஆட்டோக்களில் அதை நாம் பார்க்கிறோம்... படிக்கிறோம்... ஆனால் நம்வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது என்று உணர்ந்தவர்கள் மிகமிகக்குறைவுதான்...!
உழைப்பு, தன்னபிக்கை, முயற்சி, ஊக்கம்,  புத்துணர்வு, முடியும் என்கிற அத்தனை நம்பிக்கையும் நம்மிடத்தில் இருக்கிறது. ஆனால் இவைகளை அடுத்தவர் நமக்கு அறிவுறுத்தவோ அல்லது அடுத்தவர் உதவியாலோ கிடைக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம்...

அடுத்தவர் எடுத்துரைக்கும் போது நம்மிடத்தில் இருக்கும் பலம் நமக்கு தெரியும் போது நமக்கே என்  நம்முடைய பலம் தெரிய மறுக்கிறது அது ஏன்... அனுமனுக்கு வேண்டுமானால் அவருடைய பலம் அவருக்கு தெரியாமல் இருக்கலாம் அது அவருடைய சாபம்... அவரை புகழும் போது மட்டும் அவருடைய பலம் பண்மடங்காகலாம்... நாம் என்ன அனுமன்களா அடுத்தவர் சொன்ன பிறகு பலம் அதிகரிக்க...

இந்த உலகம் தானகவே முன்னேறிக்கொண்டிருப்பது இதில் அடுத்தவரை மேலேத்தூக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அதிகபடியான மக்களுக்கு இருப்பதில்லை.... சந்தர்ப்பம் கிடைத்தால் நம்மை கீழே தள்ளிவிட்டு முதுகின்மீது ஏறிசெல்கிற மக்கள்தான் அதிகம்... இதில் விதிவிலக்கானவர்கள்தான் தற்போதைய வேகமான உலகத்தில் காணாமல் போய்விட்டார்கள்..
ஆகையால் தன்கையை நம்பி உழையுங்கள்... விடாமுயிற்சியை கைவிடாதிர்கள்... தன்னால் முடியும் என்று நம்புங்கள்... இதை தன்னுடைய சந்ததிக்கு எடுத்துரையுங்கள்... அதில்தான் அவர்களில் ஒளி‌மய‌மான எதிர்காலம் அடங்கியிருக்கிறது... இரண்டு வயதில் கைதொலைப்போசியை கையால்வதினாலோ, எடக்குமடக்காக  பேசுவதினாலோ உங்கள் கு‌ழந்தை வெற்றியாளனாக வந்துவிடமுடியாது... உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான்... அதை ஆணித்தரமான நம்புவோம் நம்ப வைப்போம்....

என்னைப்பொருத்தவரை நான் இதுநாள் வரையில் அடுத்தவரை நம்பிஇருந்ததில்லை நட்புக்காக தவிர.... என் வெற்றி என் உழைப்பில்... இதுநாள்வரை அப்படித்தான்...! அடுத்தவரை நம்புவதைவிட நம்மை நம்புவதற்கு நாம் தயாராக வேண்டும்... அதற்கான பரிசுதான் வெற்றி...!
சமீபத்தில் நான்படித்த ஒரு ஜென் கதையில் சுருக்கம்...!
ஒரு இளைஞன் ஒரு சிறிய பறவையைப் பிடித்துத் தன்னுடைய உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு ஜென் துறவியிடம் வந்தான்....


"குருவே...! என் கையில் உள்ள பறவை உயிருடன் இருக்கிறதா, அல்லது இறந்து விட்டதா...? நீங்கள்தான் அனைத்தும் அறிந்தவர் ஆயிற்றே, பதில் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றாகிறார்...

பறவை உயிருடன் இருக்கிறது என்று குரு கூறினால் அதை உள்ளங்கையில் அமுக்கிக் கொன்று விடலாம். அல்லது அவர் இறந்து விட்டது என்று சொன்னால், "நீங்கள் சொல்வது தவறு! இதோ உயிருடன் இருக்கிறது" என்று காண்பிக்கலாம் என்பது அவன் திட்டம். எல்லாம் உணர்ந்த குருவுக்கா இது தெரியாது?


அவர் மிருதுவான குரலில், "விடை உன் கையில் இருக்கிறது" என்றார்!

தற்போதைக்கு... இந்த சமூகம் உள்ளங்கையை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறது... என்று கொஞ்சம் மனதை ஓடவிட்டுப்பாருங்கள்... அழகான பொன்மொழி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது... வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று அமைதியாக இருந்துவிடாதீர்கள்... அந்த வாய்ப்பை உருவாக்குங்கள்.. என்பதுதான் அது...
உண்மையில் தான்... அந்த பறவையின் உயிர்மட்டுமல்ல அனைவருடைய உயிரும்... அவரவர் உயர்வும்.... அவரவர் உள்ளங்கையில்தான் இருக்கிறது....

தன்னுடைய உழைப்பின்றி உயர்ந்தவர் இங்கு யாராவது இருக்கீறிர்களா...?

4 comments:

  1. வணக்கம்
    நல்ல கருத்தாடல் யாவரும் படிக்க வேண்டிய பதிவு பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையானகருத்துக்கள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நம் பலங்களையும்... முக்கியமாக பலவீனங்களையும்...

    ReplyDelete
  4. அருமை நண்பரே
    நம் வாழ்வு நம் கையில்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...