கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 February, 2015

உங்க வீட்டம்மாகிட்ட இப்படி மொக்கை வாங்கியிருக்கீங்களா





காலங்காத்தால மனைவி கணவனிடம் ஓடி வந்தாள்....!!!
கொஞ்சம் பயந்த மாதிரி இருந்தாள்....

கொஞ்சம் நியூஸ் பேப்பர் கொடுங்கள் என்று கேட்டாள்...??

கணவன் மனைவியிடம்:
நீ இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்க போற..??
உலகம் எங்கிருந்து எங்கயோ போயாச்சு..
நீ இன்னும் நியூஸ் பேப்பர் கேட்கறே ...???
இந்தா என்னோட TAB எடுத்துக்கோ .....!!!

மனைவியும் TAB எடுத்துண்டு போய் ....

அதால சமையல் அறையில் இருந்த,
கரப்பான்பூச்சிய ஒரு அடி போட்டா ........!!
கணவன் நிலைமையை நினைச்சு பாருங்க ...!!!

நீதி : அட்வைஸ் பண்ணுறேங்கிற பேர்ல மனைவிகிட்ட
உங்க புத்திசாலிதனத்தை காட்ட முயற்சிக்காதீங்க...!!!


இதுபோல் சம்பவங்கள் அனைத்துவீடுகளிலும் அடிக்கடி நிகழ்வதே... நாமோ அல்லது அவர்களோ ஏதோ ஒன்று சொல்ல அதை வேறு ஒன்றாக புரிந்துக்கொண்டு மொக்கை வாங்குவது சகஜம்தான்...

 

நமக்கு தெரியாமலே இதுபோன்ற சின்னசின்ன நகைச்சுவைகள் அனைவரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக இருக்கும்.... ஆனால் வாங்கிய மொக்கையை நாம்தான் வெளியில் சொல்வதற்கு வெட்கப்பட்டு சொல்வது இல்லை.

*******************************************

ஆசிரியர் வகுப்பிலே நன்றாக படிக்கும்மூன்று மாணவர்களை எழுப்பி ஆசிரியர் கேளவி கேட்டார்..

''தேர்வில் எவ்வளவு மார்க்கு வாங்குவாய்'' என்று..

முதலாமவன்'' நான் மாவட்டத்திலே முதல் மார்க்குவாங்குவேன்..'' என்றான

இரண்டாமவன்.''.நான் மாநிலத்திலே முதல் மார்க்கு வாங்குவேன்.''என்றான்..

ஆசிரியர் ''அவர்கள் சொல்லிவிட்டார்கள்.

அவர்களைவிட பெரிதாய் சொல்லமுடியாது'' என்றார்..

மூன்றாவன் சொன்னான்.''.இந்த வகுப்பிலேயே முதல் மார்க் வாங்குவேன்..''.என்றான்...

ஆசிரியர் வாயடைத்து போனார்..

இதுதான் புத்திசாலிதனம்...!


தன்னம்பிக்கைக்கு எல்லைகள் என்று எதுவும் இல்லை... வாழ்க்கையும் முயற்சியும் எல்லைகள் இல்லாதது. தன்னம்பிக்கை மட்டும் நிலையாக இருந்துவிட்டால் அவர்கள்‌ வெற்றியின் படிகட்டை எளிதில் அடைவது உறுதி... 

பாருங்கள் மாநில அளவை விடவும் எடுக்கவேண்டும்  என்று சொன்னால் முந்தைய மாணவர் சொன்னதை அப்படியே நாம் சொன்னதுபோல் ஆகிவிடும். அந்த மாணவரும் அந்த வகுப்பறையில்தானே இருக்கிறார். 

தற்போதைய தலைமுறை எதற்கும் துணிந்ததாக இருக்கிறது. அவர்களுக்கு எல்லை என்பதே இல்லை. நல்வழியில் நடக்கும்போது நல்லதாகவும்.... குறுக்கு வழியில் நடக்கும்போது தவறாக முடிகிறது அவ்வளவுதான்.

*******************************************


(தவறுதலாக தன் மேனேஜர்-க்கு போன் செய்துவிடுகிறார்... ஊழியர்)


ஊழியர் : ஹேய் சீக்கிரம் என் அறைக்கு சூடாக ஒரு காபி கொண்டு வா....

மேனேஜர் : நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா....

ஊழியர் : தெரியாது ஏன்???

மேனேஜர் : நான் தான் இந்த கம்பேனியின் மேனேஜர்...

ஊழியர் :....ஹேய் நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேனு உனக்கு தெரியுமா?

மேனேஜர் : தெரியாது...!!!!-!

ஊழியர் : நல்லவேளை தெரியல.......
(எஸ்கேப்...............)

நம்முடைய வீரத்தை நமக்கு கீழ்உள்ளவர்களிடம்தான் காட்டுவோம் நமக்கு மேல்உள்ளவர்களிடம் நாம் எப்போதும் கோழைகள்தான் இது எல்லா நிலையிலும் பொருந்தும். இப்படி இருக்கும் நிலையில் தனக்கு மேல்உள்ளவர்களை எதிர்த்து நிற்கிற தைரியம் உள்ளவர்களை மட்டுமே போராளி என சுட்டிக்காட்டுகிறது உலக வரலாறு....

இப்படிப்பட்ட நகைச்சுவை அனைத்து அலுவலகங்களிலும் இயல்பாக நடப்பதுதான் நாம் யாரென்று தெரியாத பட்சத்தில் பிரச்சனை இல்லை நாம் யாரென்று தெரிந்துக்கொண்டால் அம்புட்டுத்தான்....
 
***************************************

7 comments:

  1. அண்ணனுங்களுக்கு மட்டும்தான் நன்றியா.... நகைச்சுவை ரசித்தேன். நன்றி....

    ReplyDelete
  2. அதானே...! நம் மனதிலே... அட...! வகுப்பிலேயே முதலில் முதல் மார்க் வாங்க வேண்டும்...!

    ReplyDelete
  3. நல்ல விடயங்களை இயல்பாக சொல்லிப்போன விதம் அருமை நன்பரே..
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  4. சரியான பல்பு குடுத்திருக்காங்க வீட்டம்மா
    அனைத்தும் நன்று

    ReplyDelete
  5. அனைத்தும் சுவையே!

    ReplyDelete
  6. வகுப்பிலேயே முதல் மாணவன் அற்புதம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...