கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

06 April, 2015

இப்படியும் கேட்டு வாய்விட்டுச் சிரிக்கலாம்....!


அலுவலகத்தில் அதிகாரியிடம் ஒருவர் கேட்டார்,
''சார்,நீங்கள் ஆபீசில் சிங்கம் போல இருக்கிறீர்கள்.
ஒவ்வொருவரும் உங்களைக் கண்டாலே பயப்படுகிறார்கள்.
வீட்டிலே நீங்கள் எப்படி சார்?''
 

 ''அட,வீட்டிலேயும் நான் சிங்கம் தான் ஐயா.....
என்ன,சிங்கத்தின் மீது காளி தேவி அமர்ந்திருப்பாள்.''


*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*



அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட
பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ
வேனும்ன எதாவது கேட்டு பாரு

இந்தியன் : சொல்லு டென்னிஸ்
நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?

அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம்
நல்ல சாவே வராதுடா !


 *&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*


 ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம்...


 கணவன்: (எரிச்சலுடன்........) ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள், இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை.


மனைவி :- அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ.......?

(காலங்கள் மாறினாலும் ... மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை)



*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*


 பிரமுகர் ; எனக்கு 65 வயசு ஆகுது.. இதுவரை எதிரின்னு ஒருத்தர் கூட
கிடையாது..


 தொ.கா. நிருபர் ; அட.. ஆச்சரியமா இருக்கே.. அய்யா சொல்லுங்க.. எப்படி இதை சாதிக்க முடிஞ்சது..?


 பிரமுகர் ; பசங்கள அனுப்பி போட்டுத் தள்ளிட்டா முடிஞ்சது.


*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*


ஒருவன்: "யோவ்! என்னய்யா அர்த்த ராத்திரியில அந்த வீட்ல இருந்து வேகமா ஓடிவந்து கம்பியை நீட்டிப் பிடிச்சிக்கிட்டு நிக்கிறே?"


 திருடன்: "நான் தொழிலுக்குப் புதுசுங்க! வீட்ல பூந்து பணத்தைத்
திருடிக்கிட்டு `கம்பி' நீட்டணும்னு என் தோஸ்த்து சொன்னாங்க..

*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&* 


"கடவுளும்,மனைவியும் ஒன்று தெரியமா"

 "அது எப்படி?"

இரண்டு பேருமே நாம் சொல்வதை எல்லாம் கேட்பார்கள் ஆனால் அவர்கள் இஷ்டப்படி தான் நடப்பார்கள்..



3 comments:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...