கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

29 September, 2015

விஜய்-யின் புலி திரைப்படமும்... சில நகைச்சுவைகளும்

விஜய் படம் வருதுன்னாவே  ஊடகங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் வரும் நகைச்சுவைகளுக்கும், கலாட்டாக்களுக்கும் பஞ்சம் இருக்காது... படம் நல்லாயிருந்தா அது அப்படியே முடிஞ்சுடும்... படம் சரியில்லன்னா கிண்டல்கள் செய்வது இன்னும் அதிகமாகும்... 

தற்போது வெளிவர இருக்கும் புலி படம் எப்படியிருக்குன்னு தெரியில இந்த படத்தைப்பத்தி 1-ந் தேதி விமர்சனத்தில் பார்க்கலாம் அதற்குமுன் எனது வாட்ஸ்அப்பில் வந்த புலி படத்தை நக்கல்செய்து வந்த நகைச்சுவை படங்கள்.. அவைகளுடன் நான் நசித்த நகைச்சுவை துணுக்குகள்....


ரெடி ஸ்டார்ட்....

சிறுவன்: ஏ‌ம்பா... என் மார்க் ஷிட்டில் கையெழுத்து போடாமல் 
கைநாட்டு வைக்கிறீர்க‌ள்?

தந்தை: நீ வாங்கியுள்ள மார்க்குக்கு உன் அப்பா எழுத படிக்க 
தெரிந்தவர் என்று ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டாம்!
========================

என் கணவர் பெரிய கலா ரசிகர்னு எனக்கு
நேத்துதான் தெரிஞ்சது !

'தெரிஞ்சதும் என்ன பண்ணினே ?'

'கலாவை வேலையைவிட்டு நிறுத்திட்டேன்
========================

எதுக்குயா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு? 

எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு 
நெஞ்சுல ஈரேமே இல்லைனு சொல்றாங்களாம!!
========================

எதிரி அனுப்பிய புறா எதற்கு திசைமாறிப் போகிறது…?

நம் அரண்மனையிலிருந்து வரும் மசாலா
வாசத்தை உணர்ந்து, புறமுதுகிட்டுப்
பறந்திருக்கும், மன்னா!

========================

மனைவி: ஏங்க உங்க பிரண்டுக்கு பார்த்திருக்குற பொண்ணு நல்லாவேயில்லையே... நீங்களாவது சொல்லக் கூடாதா?

கணவன்: நான் ஏன் சொல்லணும்?

மனைவி: : நீங்க அவரு பிரண்டுதானே..

கணவன்: அவன் மட்டும் எனக்கு சொன்னானா என்ன?

========================


நானும் என் மனைவியும் காதலித்து கல்யாணம் செய்தவர்கள்

எனக்கு தெரியும் ? எப்படி... யாரு சொன்னா ?

அடிக்கடி உங்கள் மனைவி காற்றுவாங்க போனேன் வரும் வழியில் ஒரு கழுதையை வாங்கிவந்தேன் என்று பாடுவதை கேட்டது உண்டு....

========================


"விமானம், ராக்கெட்டைப் பார்த்து: நண்பா எப்படி இவ்வளவு 
வேகமாக பறக்கிறாய் என்றது."

"ராக்கெட் தமிழில்: போடாங்ங்ங்கொய்யா.... 
உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ.........."

========================


"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?"

"ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"
=====================

வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?

ஓ.......
 ஒரே ஒரு முறை தொடமுடியுமே!

====================

நண்பர் 1: என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...?
நண்பர் 2: நான் தான் சொன்னேன்ல... 
பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு! 

========================


ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !

அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !

========================

சிம்புதேவன் மீது நம்பிக்கையிருக்கிறது படம் நன்றாக 
இருக்கும் என்றே நம்புகிறேன்...
அடுத்த பதிவு  - புலி சினிமா விமர்சனம்
Related Posts Plugin for WordPress, Blogger...