கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

24 January, 2016

இப்படியாய் சில அனுபவங்கள்...!


வான் எழுதும் 
தண்ணீர் கவிதை மழை...

அவைகளை தன் இலைகளில் சுமந்து
நிதானமாய் வாசித்து வழியனுப்பி
மண்ணையும் மகிழ்விக்கும் 
மரங்கள்...!

நாமும் மரம்போலாவோம்
வாழ்வை மகிழ்வோடு எதிர்கொண்டு...

மகிழ்ச்சியை மற்றவரோடும்
பகிர்வோம்...!



ஆரவாரமாய் மழைப்பெய்து அடங்கியது
முகில் ஒழிந்து வானம் தெரிந்தது...

எல்லாம் ஓய்ந்தப்பின்
மறுநாள் சத்தமின்றி
எட்டிப்பார்த்தது காளான்...

பிரச்சனைகளை அப்போதே
நேருக்கு நோராய் சந்தியுங்கள்....
முடிந்தபிறகு எதற்கு 
தீர்வுகள்..!



சேற்றில் வேர்பதித்து
நீர்கிழித்து வெளியில் வந்தது 
தாமரை...

தடம் பதித்த தடாகத்தை
ஒட்டியும் ஒட்டாமல் இருந்தன 
இலைகள்..!

வளர்த்தவர்களிடத்தில்
ஏன் வேறுபாடுகள்...

ஒன்றியே வாழ்வோம்..!



வேற்றினத்து முட்‌டைகளை
அடைக்காத்து பொறிக்கும் 
அற்புதங்கள்..

கிடைத்ததை பகிர்ந்துண்ணும்
பெருங்குணம் கொண்டவை 
காக்கைகள்..!


இயன்ற‌வரை உதவிடுவோம்
இயலாதவர்களுக்கு...

வாழ்க்கை என்பது 
ஒருமுறைதானே..!

வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

3 comments:

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் பகிர்வு கண்டு மகிழ்ந்தேன்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...