கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

25 February, 2016

காட்சி ஒன்று...! பார்வை பல...!



எல்லா மழைக் காலத்திலும்
குடை பிடித்தே வருகிறாய்...

தழுவ முடியாமல்
மண்ணில் வீழ்ந்து மடிகிறது
மழைத்துளிகள்...!

கார் மேகம்
வாழ்த்தைகளை பொழிகிறது...

அதை 
குடைக்கம்பிகள் வழியே
வரிகளாக்கி வாசிக்கிறாய்...

மின்னலாய்
கண் சிமிட்டி ரசிக்கிறது
காலம்...!

நீ  குடையோடு 
வருவதால் என்னவோ
சில பருவங்களில் 
தள்ளிப்போகிறது 
மழைக்காலம்..!

மழையை 
விரும்புபவள் தானே நீ
பிறகு ஏன்
கருப்பு குடைப்பிடித்து
எதிர்ப்பை காட்டுகிறாய்...

இப்போது பார்...
உன்னோடு இணைந்து
போராட்டத்தில் குதித்து விட்டன
பூக்கள்...!

மழை நின்று விட்டதா என்று
குடை தாழ்த்தி ஆகாயம் பார்க்கிறாய்...

உற்சாகத்தோடு புறப்பட்டன
அதுவரை அமைதிகாத்த 
மழையின் விழுதுகள்

அவசரஅவசரமாய் 
குடைபிடித்துக்கொள்கிறாய்...
இப்படியாய் 
வஞ்சித்ததை எண்ணி 
வீதியில் வீழ்ந்து
அழுது புலம்புகின்றன 
விண்ணீர்கள்...!

உன்னை கட்டியணைத்து
தழுவ வந்த என்னை
வேகமாய் தள்ளிவிட்டு 
தலைக்குணிந்தாய்...!

சுடேற்றுகிறது என்று 
மழையை தவிர்த்துவிடுகிறாய்
என்னையுமா...?
வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

15 February, 2016

இது யாவருக்கும் வரும் படபடப்பு தான்...!



அப்புறம் என்ன சாப்பிட்ட
இன்னைக்கும் அதே தயிர்சாதம் தானா....?

உங்க வீட்டுல பூச்சொடிகளுக்கு
தண்ணி ஊத்தியாச்சா...?

டிவி-ல நேத்து போட்ட புதுப்படம்
செம மொக்க இல்ல...?

நீ டைரியில வச்ச மயிலிறகு
குட்டிப்போட்டுச்சா...?


இப்ப இருக்கிற மாணவர்கள்
சின்ன வயசிலே கெட்டுப்போதுங்கல்ல...?


உங்க அப்பா அந்த கொடுவா மீசைக்கு
என்ன உரம்‌ போறாரு...?

ஆமா... இப்பவர தேர்தல்ல
நீ யாருக்கு ஓட்டுப்போடபோற..?


இப்பெல்லாம் ‌பேப்பர்ல வரும்
செய்திகளை பார்த்தா கோவமா வருதுல்ல...?


விஜய் தெறி படம் வந்தா
முதல் நாள் காட்சி பார்க்கலாமா...?


கவிதை தொகுப்பு ஒன்னு கொடுத்தேனே
படிச்சி முடிச்சிட்டியா...?


இப்படியாய் 
அவளிடத்தில்
 சம்மந்தமின்றி உளறினேன்...

காதலை சொல்ல நினைத்து

இதயம் படபடத்த தைரியமற்ற 
அந்த நிமிடங்களில்....!

வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

01 February, 2016

கடவுள் கிட்ட உங்க வேலையை காட்டினா இப்படித்தான்...!


ஆசையை
ஒழிக்க எண்ணி
புத்தரைப் படித்தேன்..

அன்றைய இரவில்
வகைவகையாய் வந்து
வரிசைக்கட்டின
கனவுகள்...


***********************************


அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர் பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.

தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்’ சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடு நாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார்.

குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைலைக்கரன் வரவேற்றான்.’நான் அந்த மகானைப்பார்க்கவேண்டு’மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.
குடிசைக்குள் அவருக்கு உபசாரம் நடந்தது. அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை.

நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராமவாசி ‘நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க முடியும்’ என்று கேட்டார்.’நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்’ என்று சொன்னார்.

மேலும் ’நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண, அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச் சுலபமக தீர்த்துவிடலாம்’ என்று வேலைக்காரனாய் வந்த புனிதர் சொன்னார்.

***************************************



ஒரு சமயம் , கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த மனிதன். கேட்டான்

" சாமி , ஒரு கோடி வருஷமங்க்குகறது உங்களுக்கு எவ்வளவு நேரம் ? "

இறைவனும் சிரித்துக் கொண்டே " ஒரு கோடி வருஷங்கறது ஒரு நிமிஷம் " என்றார்.

அதைக் கேட்டு சந்தோஷமடைந்த அவனும் "அப்படின்னா, ஒரு கோடி ரூபாய்ங்கறது , சாமி ? "

அவரும், " ஒரு ரூபாய் போல " என்றார்.

உடனே, கடவுளை மடக்க எண்ணியவனாய், "அப்ப,எனக்கு ஒரு ரூபாய் கொடுங்களேன் " என்றான் மிகவும் அடக்கமாய் ...

இறைவனும், மென்மையாக சிரித்துக்கொண்டே" நீ ஒரு நிமிஷம் பொறு "..என்றாராம் ...

அதனால் தான்...அவர்..இறைவன்

******************************

டாக்டர் கண்ணாடியைக் கழற்றி துடைத்தபடி,

“எதுவுமே 24 மணி நேரம் கழிச்சிதான் சொல்ல முடியும்” என்றார்.

பேஷண்ட்டின் உறவினர் கால்குலேட்டரை எடுத்துக் கொண்டு,

“சொல்லுங்க, எவ்வளவுலேர்ந்து 24 மணி நேரத்தை கழிக்கணும்?” என்றார்.
******************************
பார்த்ததில் ரசித்தது...
----------------------------------------------------------
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!
Related Posts Plugin for WordPress, Blogger...