கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

15 February, 2016

இது யாவருக்கும் வரும் படபடப்பு தான்...!



அப்புறம் என்ன சாப்பிட்ட
இன்னைக்கும் அதே தயிர்சாதம் தானா....?

உங்க வீட்டுல பூச்சொடிகளுக்கு
தண்ணி ஊத்தியாச்சா...?

டிவி-ல நேத்து போட்ட புதுப்படம்
செம மொக்க இல்ல...?

நீ டைரியில வச்ச மயிலிறகு
குட்டிப்போட்டுச்சா...?


இப்ப இருக்கிற மாணவர்கள்
சின்ன வயசிலே கெட்டுப்போதுங்கல்ல...?


உங்க அப்பா அந்த கொடுவா மீசைக்கு
என்ன உரம்‌ போறாரு...?

ஆமா... இப்பவர தேர்தல்ல
நீ யாருக்கு ஓட்டுப்போடபோற..?


இப்பெல்லாம் ‌பேப்பர்ல வரும்
செய்திகளை பார்த்தா கோவமா வருதுல்ல...?


விஜய் தெறி படம் வந்தா
முதல் நாள் காட்சி பார்க்கலாமா...?


கவிதை தொகுப்பு ஒன்னு கொடுத்தேனே
படிச்சி முடிச்சிட்டியா...?


இப்படியாய் 
அவளிடத்தில்
 சம்மந்தமின்றி உளறினேன்...

காதலை சொல்ல நினைத்து

இதயம் படபடத்த தைரியமற்ற 
அந்த நிமிடங்களில்....!

வாசித்தமைக்கு மிக்க நன்றி...!

3 comments:

  1. அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் நண்பரே

    ReplyDelete
  2. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...