கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

15 April, 2016

தேர்தல் கமிஷனும்... பைனான்ஸ் கம்பெனியும்...!





"தேர்தல் கமிஷன் வர வர ஃபைனான்ஸ் கம்பெனி மாதிரி ஆயிடுச்சு!"

"ஏன் தலைவரே புலம்பறீங்க?"

"டெபாசிட்டைத் திருப்பித் தர மாட்டேங்கிறாங்களே!"

*****************************************




அமலா: என்னை என் காதலர் ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டார்.

விமலா: என்ன சொல்லி ஏமாத்தினார்?

அமலா: சமைக்கத் தெரியும்னுதான்.


*****************************************





மனைவி: உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .

கணவன்: வேற என்னதான் போட்ட?

மனைவி: பேசாம பட்டினி போட்டேன்


*****************************************
 



“அம்மா. நான் பக்கத்து வீட்டு கீதாவைக் காதலிக்கிறேன். அவளை எனக்குக் கல்யாணம் பண்ணிவைம்மா”

“கீதாவா? டேய். அவ உன்னைவிட ஒரு வயது மூத்தவ டா”

“அப்ப சரி. ஒரு வருசம் கழிச்சி கல்யாணத்த வச்சிக்கலாம்”


*****************************************



டாக்டர்: வாயில் என்ன கட்டு ?

நோயாளி: எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க ?


*****************************************
 



ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன்...

மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்...


*****************************************
 
 

"கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியா முடிஞ்சுதா தலைவரே?"

"கூட்டணியே பேச்சுவார்த்தையோடு முடிஞ்சுபோச்சுய்யா!"

*****************************************
 
 


" மாற்றம்... மாற்றம்'னு பேச வேணாமா, ஏன்யா?"

"எனக்கு என்னமோ 'மாட்றோம்... மாட்றோம்'னே கேக்குது தலைவரே!"

*****************************************
 



கணவன் : நா ரோட்ல போகும் போது, என்னை பாத்து போலீஸ்னு நினைச்சு எல்லாரும் பயப்படறாங்க தெரியுமா?

மனைவி : தொப்பையைக் குறைங்கனு சொன்னா கேட்டாதானே நீங்க... ...

*****************************************
 


டாக்டர் : தினமும் காலையில வெறும் வயித்துல அரை மணி நேரம் நடந்தா உங்க வெயிட் குறைஞ்சிடும்.

பேஷண்ட் : யார் வயித்துல டாக்டர் நடக்கணும்? ...

*****************************************
 
 


அன்பே, என் பிறந்தநாளுக்கு என்ன பரிசு கொடுப்பீர்கள்...?

என்ன வேண்டுமோ கேள் டியர்...

எனக்கு ஒரு ரிங் வேண்டும்....

கொடுத்திட்டாப் போச்சு. லேண்ட் லைனில் இருந்தா... அல்லது மொபைலில் இருந்தா...? ....!!!! ...


*****************************************


வங்கி ஊழியர்: நீங்கதானே தமிழ்செல்வன்..?

தமிழ்ச் செல்வன்: ஆமாங்க..?

வங்கி ஊழியர்: உங்க பேர்லே கணக்கு இருக்கா..?

தமிழ்ச்செல்வன்: இல்லைங்க தமிழ்-தான் இருக்கு.... ...

*****************************************



நீதிபதி: ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டா எதுக்கு அடிச்சே ?

திருடன்: மக்கள் சில்லறைத் தட்டுப்பாட்டுல கஷ்டப்படறதைப் பார்த்து மனசு பொறுக்கல எசமான்... ...


*****************************************

 அமலா: என்னடி இது அநியாயம் .. .. உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கு உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா.... இதென்ன கூத்து ?

விமலா: சும்மாயிருடி... நான்தான் அவரை வீவு போட வைப்பேன. வேலைக்காரி விட்டுப் போன வேலையை பின்னே யார் செய்யறது ?

*****************************************
 


ராமசாமி: ஏன் சார், நேத்து உங்க காருக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு..?

குமாரசாமி: அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

ராமசாமி: ஆமா, தெரியுது...

குமாரசாமி: ஆனா, அது நேத்து எனக்கு தெரியலை..!

*****************************************

 
தீக்குச்சிகளை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட கலைநயமிக்க ஓவியங்களுடன்... நான் ரசித்த நகைச்சுவைகளும்...!

2 comments:

  1. ரசித்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. தீக்குச்சியில் இவ்வளவு கலைவன்ணமா ?அற்புதம்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...