கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

26 July, 2016

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள...!


வீதியில்
போவோர் வருவோரை

ஏக்கத்தோடு 
பார்த்துக்கொண்டிருந்தது...

தன் துயர்துடைக்க
யாராவது உதவுவார்களா என்று...

சரியாய் மூடப்படாத
குழாய் ஒன்று...!

***********************************


விடிந்துவிட்டன என்று
கரைந்துவிட்டு சென்றன 
காகங்கள்....

கனவு குதிரையை விட்டு
இறங்க மறுக்கின்றன 
என் நம்பிக்கைகள்...

படுக்கையில் 
கேட்பாரற்றுக்கிடக்கிறது
என் மெய்...!

***********************************



இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள...

என்றே 
முடிக்கவேண்டியுள்ளது...

பொய்யாக காரணம் சொல்லி
விடுப்பு எடுக்கும்
அத்தனை
விடுப்பு விண்ணப்பத்திலும்....!

***********************************
எனது முகநூலிலிருந்து....!

2 comments:

  1. ப்ப்பப...வரிகள் அருமை, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...