கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

05 August, 2016

மனைவிதான் துன்பத்திற்கு காரணமா...! எப்படி...?


டாக்டர் : ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?

நோயாளி : நீங்கதானே சொன்னீங்க.. 
ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!

********************************

 

நான் என்ன சொன்னாலும், என் மருமகள் ’உங்க வாய்க்கு
சர்க்கரைதான் போடணும் அத்தை’னு சொல்றா !

இதிலே என்ன இருக்கு ?
எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு ! 


********************************

 

பல்லு எப்படி விழுந்திச்சு ?

அத வேற யாருகிட்டயாவது சொன்னா 
மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி 
சொல்லியிருக்கா டாக்டர்! 

********************************
 
 

ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு 
அர்ச்சனை பண்றீங்க?.... 

வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, 
அதான் திருப்பி நான் பண்ணுறேன்! 

********************************


 
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. 
எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...

நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் 
தேர்தல்லே நிற்கணுமாமே? 

********************************

 
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. 
இப்படி செய்யலாமா..?

ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. 
மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

 ********************************


என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...

என்னோட மனைவி ஒரு மாசம் என்கூட 
பேசமாட்டேன்னு சொல்லிட்டா.

அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...

எப்படிங்க...
இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே... 

********************************


கோபு- : எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது 
என் மனைவிக்கு இன்னும் தெரியாது..

நண்பன்-: தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?

கோபு-: இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

********************************


 
ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு 
இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்

எப்படி?

என் மனைவியை நான் “ஆசை”ப்பட்டுத்தான் 
கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

 ********************************


நேத்து உன் மனைவிக்கும், 
உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, 
 யாருக்கு பின்னாடி நீ நின்ன?" 

"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி 
போய் நின்னுக்கிட்டேன்.  

 ********************************

01 August, 2016

காவல் நிலையத்தில் இப்படித்தான் இருக்குமோ

நம்ம ஊர் போலீஸ் ஸ்டேஷன் போனா...
போலீஸ்காரர்கள் பேசுகிற மொழிக்கு அர்த்தம் இப்படித்தான் இருக்கும்...
அந்தப்பக்கம் போகாதவங்க தெரிஞ்சிக்கங்க...!

"வாங்க சார்!" 
-போலீஸ்காரர்களை நன்கு புரிந்த அரசு ஊழியர் சங்கத் தலைவர்.
 
"வாப்பா!" 
- கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருகிற தற்குறி.
 
 "வாடா...!" 
-சில்லுண்டி கேசில் அடிக்கடி சந்திக்கிற ஆசாமி.
 

"வாய்யா!" 
-அடிக்கடி புகார் கொடுக்க வருபவர்.
 

"வாங்க தலைவா!" 
-சில்லறை திருட்டுகளுக்கு ஜாமீன் எடுக்க வருபவர்.
 

 "வா தலைவா!" 
- இரவு குடிக்கு ஏதாவது தேற்றித் தருபவர்.
 

 "வாங்க..ஒன்னும் விஷேசம் ஏதுமில்லீங்க..
நீங்கதான் சொல்லணும் !"
- தினசரி நிருபர்.

"வாடா..வா...உன்னதான் எதிர் பார்த்தோம்!" 
- சில்லறை தகராறு ஆசாமி.
 

 "வாங்க தலைவரே!"
அடிக்கடி தகவல் உரிமை சட்டப்படி மனு போடும் டம்மி பீஸ்.
 

 "எஸ்.ஐ. ரவுண்ட்ஸ் போயிருக்கார். 
போயிட்டு சாயங்காலம் வாங்களேன். பேசி முடிச்சிரலாம். சாப்பிட்டு சின்ன தூக்கம் போட்டுட்டு வந்துடுங்களேன்."
-எதோ ஒரு லட்டர் பேடு கட்சி பிரமுகர்.
 

 "அடிக்கடி வந்து தொல்ல பண்ணாதீங்க. நெறைய வேலை கெடக்குது. இப்ப எதுவும் நடக்காது. அடுத்த திங்கள் கிழமை வாங்க! உங்க அவசரத்துக்கு நடக்காது! " 
-நம்மளைப் போன்ற அப்பாவி கோவிந்தன்கள்!


எப்பவும் காவல்துறை தன் கடமையை செய்யுது...
இது சும்மா நகைச்சுவைக்காகத்தான்...! (எஸ்கேப்.....)
Related Posts Plugin for WordPress, Blogger...