கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

25 September, 2018

விஜய் - சர்கார் பாடல் வரியும்.. இப்படி ஒரு விளக்கமும்...


இரண்டு நாட்களாக டிரெண்டிங்கில் இருப்பது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து ஏ. ஆர் முருகதாஸ் இயக்கிவரும் சர்கார் படத்தின் சிங்கள் டிராக் பாடல் தான்...

பாடல் என்ன மொழி என்று புரியாத அளவுக்கு இருப்பதாக சமூக வலைதளங்களில் கிண்டலடிக்க துவங்கிவிட்டார்கள்... மீம்ஸ்ம் டப்ஸ்மேசும் அலரிக்கொண்டு இருக்கிறது...

அந்த பாடலுக்கு எழுதப்பட்ட விளக்கம் தற்போது டிவிட்டரில் டிரெண்டிங்காக இருக்கிறது....

சர்கார் படத்தின் பாடல் வரிகள்
------------—------------------+++

சிம்டான்காரன் – பாடல் பொழிப்புரை

பாடகர்கள் :
பம்பா பாக்கியா,
விபின் அனேஜா மற்றும்
அபர்ணா நாராயணன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
படம்: சர்கார்

ஆண் : பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து...

#வோர்ல்டு மொத்தமும்
அரள வுடனும் பிஸ்து
பல்டி அடிக்கறதைப் பார்த்து

மத்தவங்க பயத்துல டர் ஆகிடணும்
உலகம் மொத்தத்தையும் மிரள உடனும் பிஸ்தா மாதிரி
பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து

#பிச்சுப் பிச்சுப் போட்டு எல்லாரையும் பயத்துல பெரளவிடனும்

ஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா
ஓ…. தொட்டனா தூக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா

ஏய் ஒழுங்கா ஓரிடத்தில நில்லு அப்பத்தான் தொட்டு தூக்க முடியும்.
உடஞ்ச குக்கர் மாதிரி மக்கர் பண்ணினா உன்னை தூக்க மாட்டேன்
போய் தரைல உட்காருன்னு சொல்லிடுவேன்.

ஆண் : ஏய்ய் நிக்கலு பிக்கலுமா
ஓ…. தொட்டனா தூக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா

#முன்னாடி சொன்னதே தான்.

ஆண் : சிம்டான்காரன்
எங்கனா நீ சீரன்
நிண்டேன் பாரேன் முஷ்டு
அப்டிகா போறேன்

ஓ..ஓ..ஓ..ஓ (4)


#கண்ணை சிமிட்டி சீறினேனா நின்னுக்கிட்டே பாரேன்
என் முஷ்டி மட்டும் அந்தப் பக்கமா போய் ஆளை அடிச்சிட்டு வரும்.

ஆண் : சிம்டான்காரன்
சில்பினுக்கா போறேன்
பக்கில போடேன்
விருந்து வைக்கபோறேன்

ஓ..ஓ..ஓ..ஓ (4)

#கண்ணை சிமிட்டி முடிக்கறதுக்குள்ள சிலுப்பிக்கிட்டு வந்துடுவேன்.
அப்புறம் பெல்டுக்குப் பக்கிளை போடவும்.
இல்லேனா நான் வைக்கிற இசை நடன விருந்தில் எங்கியோ காணாம போயிடுவீங்க!!

ஆண் : அந்தரு பண்ணிகினா தா…..
இந்தா நா… தா ….
ஓ..ஓ..ஓ..ஓ (4)

#அடியில போய் ஒளிஞ்சிக்கிட்டா நான் இதோ ஓடிவந்து கண்டுபிடிச்சிடுவேன்

பெண் வேறு தேசம் போலிருக்கு.

தமிழ் மொழியில் பாடுகிறார்.
அதற்கு விசேஷ மொழிப்பெயர்ப்புத் தேவையில்லை.

பெண் : மன்னவா நீ வா வா வா
முத்தங்களை நீ தா தா தா
பொழிந்தது நிலவோ
மலர்ந்தது கனவோ…ஓ…ஓ….

பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா..(4)


ஆண் : குபீலு பிஸ்து பல்து
குபீர்னு பிஸ்தாவா பல்டியடிப்பேன் ஜாக்கிரதை!


குழு : விக்கலு விக்கலு
ஹே தொட்டனா தொட்டனா
விக்கலு விக்கலு

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ….
விக்கல் வந்தா கூட தொடர்ந்து பாடுவோம் ஆடுவோம்.

ஆண் : கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குபீலு
ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா
டம்மாலு
ஹம்ப்டி டம்படி சேட் ஆன் அ வால்.
ஹம்ப்டி டம்படி ஹேட் அ கிரேட் பால்.

ஆண் : நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல
அல்லா ஜோரும் பேட்டைல
சிரிசினுகுறோம் சேட்டையிலகுபீலு

#நாம பிடிச்சிருக்கிற கோட்டையில எல்லாரும் சிரிச்சிக்கிட்டு இருக்கோம் ஜாலியா.

ஆண் : பிசுறு கெளப்பு
பிசுறு கெளப்பு
கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குத்த போடு
சுணுங்காம குத்தாட்டம் போடு!
சுணுங்காம குத்தாட்டம் போடு!

நீங்க நினைக்கிறா மாதிரி ஒன்னும் புரியாத பாடல் இலை இது. கொஞ்சம் மெனக்கெட்ட புரிஞ்சிடும்!!

14 September, 2018

மூடநம்பிக்கையின் வில்லன்.. எம்.ஆர்.ராதா



போர்வாள் நாடகத்தில் ஒரு காட்சி. பெரியாரின் படம் வைக்கப்பட்டு இருக்கும். அதன் ஒருபுறம் ராதா. மறுபுறம் அவரது நண்பர். அவர் கேட்பார்.


'பெரியார் படத்தை வீட்ல மாட்டி வெச்சிருக்கியே, அப்படி அவர் என்னதான் செஞ்சுட்டாரு?'

'என்ன செஞ்சாரா? உன் நெத்தியையும், என் நெத்தியையும் பாரு.'

'ஏன்? அதுல ஒண்ணுமில்லையா!'

'அதை யார்ரா செஞ்சாங்க? ஐயா தான் செஞ்சார். இல்லேன்னா உன் நெத்தியில நீளமா ஒரு மார்க். என் நெத்தியில குறுக்க ஒரு மார்க் இருந்திருக்கும். மார்க் டிபரன்ஸ் வந்தாலே பிரச்சனை தாண்டா...'


'நீ சொல்றதும் சரிதான்.'

'இன்னொரு விஷயம். ஹோட்டல்ல போய் உக்காந்துகிட்டு நம்ம காஸைக் குடுத்துட்டு சாமி ஒரு காபி குடுங்கன்னு கேட்டுக் கிட்டிருந்தோமே, இப்ப என்ன பண்ணுறோம்? ஓய் அய்யர், ஒரு காபி குடுங்கன்னு கேக்குறோம். இந்த சவுண்டு யார்ரா குடுத்தது? பெரியார் ஐயா தானே...'

மக்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட இந்த நாடகம், அரசால் தடை செய்யப்பட்டது. 'சர்வாதிகாரி' என்று பெயர் மாற்றி அதே நாடகத்தைத் தொடர்ந்து பல ஊர்களில் நடத்தி வெற்றிக்கொண்டார் ராதா.


*****************************



பொதுவாக ராதா தன் நாடகங்களில் வரும் வேலைக்கார கதாபாத்திரங்களின் பெயர்களை ராமன் அல்லது முருகன் என்றே வைத்துக் கொண்டார். லட்சுமி காந்தனில் வேலைக்காரன் ராமனோடு ஒரு காட்சி.அவன் தன் நெற்றியில் பெரிய நாமம் ஒன்றைப் போட்டிருக்கிறான்.

'டேய் என்னடா இது?'

'பேங்கு.'

'இங்க யாருடா வருவாங்க?'


'பணம் போடுறவங்க.'


'ஏண்டா பணம் போடுறவங்க உள்ளாரா வரும்போதே வாசல்ல நீ இப்படி இருந்தா, எவண்டா நம்பி பணத்தைப் போடுவான். எதுக்காகடா இதை போட்டுக்கிட்டுஇருக்க?''


'பாதம், எம்பெருமான் பாதம்.'


'ஓ...எம்பெருமான் பாதத்தை நீங்க நெத்தியில போட்டுக் கிட்டுருக்கீங்களா. ஆமா அந்த எம்பெருமான் நெத்தியில போட்டிருக்கே அது யார் பாதம்டா? தெரிஞ்சுக்க. தெரிஞ்சிக்கிட்டு வந்து அப்புறம் போடு.' 

********************************



தூக்குமேடையில் ஒரு காட்சி. ராதா ஒரு பெண்ணைத் தன்னுடன் வைத்திருப்பார். வேலைக்காரன் வருவான்.

'யாருண்ணே இது?'

'அண்ணிடா.'

'அண்ணி காலைப் பாருங்க'

'என்ன?'

'யானைக்கால் மாதிரி இருக்கு.'

'போடா, பிள்ளையாருக்கே யானைத்தலை இருக்கு. இதுவரைக்கும் ஒருபயலும் கேட்கலை. கால் யானைக்காலா இருக்குறதைச் சொல்ல வந்துட்டான்.'

*****************************



ராதா ஒரு புதிய நாடகத்தைத் தயாரித்தார் அதன் பெயர் விமலா அல்லது விதவையின் கண்ணீர்.விதவைகள் பிரச்சனையைக் கூறி மறுமணத்தை வலியுறுத்துவதாக அமைந்த கதை. சும்மா இருப்பார்களா பெரிசுகள்? அவனா, அவன் தாலியறுத்தவளுக்குக் கூட மேடையிலேயே தாலி கட்டி வைப்பான் என்று எதிர்ப்பு காட்ட ஆரம்பித்தார்கள். எப்படி நீ நாடகத்தை நடத்துறேன்னு நாங்களும் பார்க்கறோம் என்று மிரட்டினார்கள்.


நாடகத்துக்கான தேதி குறிப்பிடப்பட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.


'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' நமது சாஸ்திரத்துக்கு சம்பிரதாயத்துக்கும் எதிரான நாடகம். அதை நடத்தினால் சமூக அமைதி குலையும். அதனைத் தடை செய்ய வேண்டும்' என்று நாகப்பட்டினம் கோர்ட்டில் பெட்டிஷன் போட்டார்கள். ஜட்ஜ் கணேசய்யர், அந்தப் பெட்டிசனைப் பார்வையிட்டார். அவருக்கும் சாஸ்திர, சம்பிரதாயங்களில் நம்பிக்கை உண்டு. ஆனால் நேர்மையானவர்.


'நாடகத்தைப் பார்த்துவிட்டு நான் ஒரு முடிவுக்கு வருகிறேன்' என்று சொன்ன கணேசய்யர், அன்று மாலையே அரங்கில் வந்து உட்கார்ந்தார். விதவையின் கண்ணீர் ஆரம்பமானது. எந்தவிதப் பிரச்னையும் இன்றி முடிந்தது.


கணேசய்யர் மேடையேறினார். ராதாவின் கையைப் பிடித்து பலமாகக் குலுக்கினார்.


'இந்த மாதிரி நாடகங்கள் இங்கு நடந்தால் மட்டும் போதாது. இந்தியா முழுவதும் நடைபெறவேண்டும். இப்படி நாடகத்தைத் துணிந்து தயாரித்து, மேடையேற்றிய நண்பர் ராதாவை மனமார வாழ்த்துகிறேன். அவருடைய இந்த நாடகம் எல்லா வகையிலும் வெற்றி பெற என் ஆசிகள்.'


ஒவ்வொரு ஊரிலும் இந்த நாடகம் வெற்றிபெற ஆரம்பித்தது. திராவிடர் கழகத்தினரின் பரிபூரண ஆதரவு ராதாவுக்குக் கிடைத்தது. பெரியாருக்கும் ராதாவின் மேல் தனி மதிப்பு தோன்றியது அந்தச் சமயத்தில் பாரதிதாசன் ஓர் அறிக்கை வெளியிட்டார். 'ராதா எங்கள் கழக நடிகர். அவருடைய நாடகம் எங்கள் கழக நாடகம்.'

- எம். ஆர். ராதா - கலகக்காரனின் கதையிலிருந்து...

12 September, 2018

எல்லோர் மனைவியும் இப்படித்தான் இருப்பாங்களோ...!


ஒருவன் தான் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வெளியே வந்தான்.

அவன் நண்பன் நேராக இவனிடம் வந்து,

"ஒரு கட்டிங் போட்டுட்டு போலாமா" என்றான்.

"சரி", என்று அவனுடன் நடந்தான்.

வழியில் அவனுடைய செருப்பு 'சரக்' என அறுந்தது.

அவன் கண்களில் நீர் அருவியாய் பெருக்கெடுத்தது.

"டேய், ஒரு செருப்பு பிஞ்சு போனதுக்கா இப்படி கண்ணீர் விடற?" என்று சிரித்தான் நண்பன்.

"அதுக்கு இல்ல, என் மனைவி ஒரு தீர்க்கதரிசி. அது எனக்கு இப்போ தான் தெரிஞ்சுது" என்றான்.

"ஓஹோ.. அது எப்படி தெரிஞ்சுது?" என்றான் நண்பன்.

"காலைல வரும்போதே என் பொண்டாட்டி சொன்னா, 'வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வராம சரக்கடிக்க போனேனா செருப்பு பிஞ்சுடும்'-னு. இப்போ பாரு அதே மாதிரி நடந்துருச்சு."

கண்ணா ஒரு செருப்பு பிஞ்சதுக்கே இப்படி பீல் பண்றீயே இன்றும் மிச்சம் இருக்கிற இன்னோரு செருப்பும் பிய்யப்கோகுதே அப்ப என்ன செய்யப்போற...!!!

*******************************


மனைவி: "என்னங்க! உங்க பொறந்த நாளைக்கு நான் ஒரு ட்ரெஸ் எடுத்திருக்கேங்க."

கணவன்: "வாவ்! சூப்பர். எங்கே எடுத்துட்டு வந்து காமி"

மனைவி: "கொஞ்சம் பொறுங்க! போட்டுட்டு வந்தே காமிக்கிறேன்."

கணவன்: ???!!!!

இது என்னங்க அநியாயம்... அவங்க பிறந்த நாளுக்கும் அவங்களே டிரஸ் எடுக்குக்குறாங்க... நமம்மோட பிறந்தநாளுன்னாலும் அவங்களே டிரஸ் எடுத்துக்கிறாங்க... இதுமட்டும் இல்லாமல் பண்டிகை, கல்யாண நாள், இப்படி எது வந்தாலும் அவங்களே டிரஸ் எடுத்துப்பாங்க... ஆனா ஆண்டு கடைசியிலே சொல்லுவாங்க பாருங்க... எனக்கு என்ன செஞ்சிங்க... ஒரு நகை இருக்கா... ஒரு டிரஸ் இருக்கா... இது எல்லா வீட்டிலும் நடக்கிற சகஜமான நிகழ்வாயிடிச்சி தானே...

*******************************


"ஆட்டோ வருமாப்பா?"

"வரும் சார். எங்க போகணும்?"

"அதோ! ரெண்டு நாய் சண்டை போட்டுகிட்டிருக்கில்ல. அதைத் தாண்டி விடணும்!"

இது மாதிரி என்வாழ்விலும் நடந்திருக்கு ஆனா நான் நாய்க்கெல்லாம் பயந்ததில்லை...

ஒரு மழைகாலத்தில நான் வேலை செய்யும்  தெருவில நிறைய தண்ணி அந்த வரியே ஒரு ஆட்டோ வந்தது.... நிறுத்தி ஏறினேன்.... ஆட்டோகார் எங்கன்னு கேட்டார்.... இந்த தண்ணிய தாண்டி விடுங்கன்னேன்... நிலைமையை புரிந்த அவர் தாண்டி விட்டுவிட்டு காசு கொடுத்தா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்....

*******************************


நண்பர் பதிவிலிருந்து.

கணவன் சோகமாக வீடு திரும்பினான்.

மனைவி: "ஏன், என்ன ஆச்சு?"

கணவன்: "மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர"

மனைவி: "தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்"

தொலைக்காட்சி: "இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது"

மனைவி: "இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா?"

*******************************


"ஓய்வு பெற்ற நீதியரசர் இப்ப ஆத்ம திருப்திக்காக ஜோசியம் ஜாதகம் பார்க்கிறாரு!"

"சரி, அதுக்கு என்ன இப்ப?"

"முகூர்த்த நாள் குறிச்சி கொடுங்கன்னு அவருக்கிட்ட போனோம்"

"என்னாச்சு?"

"அடுத்த முகூர்த்த நாளான்னிக்கு வாங்க. உங்க வீட்டுக்கு கல்யாணத்துக்கு நாள் குறிச்சித் தரேன்னு வாய்தா சொல்லி அனுப்பிட்டாரு!"

தம்பி கொஞ்ச நாளைக்கு சந்தோசமா இருந்துக்கோ...

*******************************


கணவன் - மனைவிக்கு இடையே நடந்த சண்டையின் போது:-

#கணவன்: "உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே!"

#மனைவி: "பொய் சொல்லாதே! என்னைப் பொண்ணுப் பாக்க வரும்போது 6 பேரோட வந்தே!

நிச்சயம் பண்ணும் போது 100 பேரோட வந்தே!!!

தாலி கட்டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே!!!"

#கணவன்: ??????

#மனைவி: "ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன் வீட்டுக்குத் தனியாவே வந்திருக்கேன் பாத்தியா! இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு..."


கணவன்: 😳!!!!!!!!!???????

#மனைவிடா....
*******************************

அடி சண்டாலி....

10 September, 2018

இது காதல் பேட்ட




என்னை காணாத 
நேரங்களில்
அழுதுவடிந்து....

திடிரென
என் வருகையை
அறிந்துக்கொண்டதும்....

ஓடிச்சென்று.. 
முகம் கழுவி..
என்னை ஆவலுடன் 
வரவேற்பாளே
என் அழகு தேவதை...

அந்த 
அழகைப்போல்
தெளிவாய் இருந்தது....

மழை ஓய்ந்த பின்
எங்கள் ஊர்சலை....

*********************************


நீளம் மறைந்த 
வானமொன்றை
ரசிக்க முடியாததைபோல்...

விண்மீன் அல்லாத 
இரவொன்றை
கடக்க முடியாததைபோல்...

மணம் இல்லாத 
மலர்களை
சூட முடியததைபோல்...

காதல் இல்லாத
வாழ்க்கையை
வாழ்ந்திட முடியாது...

*********************************



குளிர் காலமொன்றை
உன்னோடு கழிக்க
நினைத்து...

வாடைக்காற்று
உன்னை 
வாட்டும் முன்னே...

வயற்காட்டு தென்றலை
வழி அனுப்பி வைத்துவிட்டு
வருகிறேன்...

வேண்டாத 
ஊடல் கொண்டு
கண்களாலே எரிக்கிறாய்...

காயப்பட்டு 
திருப்புகிறது
என் வசந்த காலங்கள்...!

***********************************

வாசித்தமைக்கு நன்றி...!!

09 September, 2018

ரஜினியின் பேட்ட, முகம் சுளிக்க வைத்த பிற தலைப்புகள்...


புதுசா ஒரு ரஜினி படம்.. இன்னைக்கு பேப்பர்ல வந்திருக்கு.. என் சக நண்பர்கள் சொல்ல... ஆட அப்படியா... டேய்.. நான் பார்க்கலடா...... படம் பேரு என்ன வச்சியிருக்காங்க.. என்று நான் கேட்க அது என்னவோ வாயிலேயே நுழையல.. ஏதோ சாமியார்மாதிரி உட்கார்ந்துகிட்டு இருக்கார் என்று மழுப்ப...

போடா... ரஜினி போய் சாமியார் மாதிரியா... அவர்படமெல்லாம் செம ஸ்டைல் படமாத்தான் வரும்...  அவருபடம்போய் வாயில நுழையலையா..  நீ விஜயகாந்த் ரசிகன்ல அப்படித்தான் பேசுவ.. என்று அவனை திட்டிவிட்டு... பள்ளியில் இருந்து கூட ஒருவனை கூட்டிக்கிட்டு அந்த முனுசாமி சைக்கிள் ஸ்டாண்டுக்கு ஓடினேன்... அங்கேதான் செய்திதாள் இருக்கும்... பள்ளியில் இருந்து அதுதான் மிக அருகாமை... எனக்கு சித்தப்பா முறை...

டேய்... ஏன்டா ஸ்கூல்ல இருந்து திரும்பிவர்றீங்க என்று முனுசாமி சித்தப்பா அதட்ட.. இல்லப்பா.. பேப்பர் பார்க்க வந்தோம் இப்போ பார்த்துட்டு போயிடுவோம்... தேடி பிடித்து படத்தை படித்துபார்த்தால் அதில் ஸ்ரீராகவேந்திரா.. ரஜினியின் 100-வது படம் என இருந்தது... படம் வெளிவந்த வருடம் 1985.. நான் அப்போது 4-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன்.. அட என்னடா இது சாமி படத்தில நடிக்கிறாரு... சாமி மாதிரி நடிக்க ரஜினிக்கு நல்லா இருக்காதே என்று புலம்பலோடு பள்ளிக்கு வந்தேன்.. அன்று முழுவதும் படத்தைப்பற்றிதான் பேச்சு...



அந்த காலக்கட்டத்தில் ஊர்பஞ்சாயத்து டிவியில் வெள்ளிக்கிழமையில் ஒளியும் ஒலியமும்... ஞாயிற்றுக்கிழமையில் ஒரு படமுமே நம்முடைய பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்வு... மேலும் எங்க ஊரில் இருக்கும் ஸ்ரீ கணேஷ் டென்ட் கொட்டாதான் எங்கள் சினிமா தாகத்தை போக்கும்... அப்போது புதுப்படமெல்லாம் அங்கு வருவது அரிது.. ரீல் எல்லாம் அருந்தநிலையில் படம் கொட்டாவுக்கே வந்துசேரும்... இதிலும் கண்டிப்பா ஒருபடம் பாத்துடுவேன்... என் குடும்பத்தில் இருந்து யார் படத்துக்கு போனாலும் நாட் ஒட்டிக்கொள்வேன்...

ரஜினி படங்கள் வரும் போது இந்த பெரியபஷங்க செய்யும்  பந்தாக்களை பார்த்துக்கொண்டு இருப்பதுதான் என்னை போன்ற சிறார்களின் வேலை... கலர் காதிதம் கட்டுவது, மூங்கில்களை கொண்டு ஸ்டார் போன்று வடிவமைப்பு செய்து அதில் ரஜினி படங்களை ஒட்டி தொங்க விடவுவது என பந்தாக்கள் நீளுமு...  அதை தவிர்த்து  புதுப்படங்கள் என்றால் அதற்கு யாராவது மண்டைய போடவேண்டும்.. அப்போதுதான் 16-ஆம் சடங்கு அன்று இரவு கண்விழிப்பதற்காக வீடியோ போடுவாங்க... அப்போ கண்டிப்பா  4 புதுப்படம் கண்பார்ம்.... 



காலம் மாறுது... ஒவ்வொறு படத்திற்கும் எதிர்பார்ப்பு வரும் அதுபோலவே படங்களின் பங்களிப்பும் இருக்கும்.. அப்போது எங்களுக்கு விஜயகாந்தை ரசிக்கும் பசங்க கூடத்தான்போட்டி கமல்படத்தை அப்பவே நாங்க போர் என்று ஒதுக்கியதுன்டு...

காலம் ஓடுகிறது... மீண்டும் அதே ஒரு சம்பவம்... ஊரில் இருந்து திருவள்ளுருக்கு டவுன்பஸ் தடம் எண் டி57-ல் வரும் போது நண்பர்கள் பேசிக்கொண்டதில்... இன்னிக்கு ரஜினி படம் பேப்பர்ல வந்திருக்கு என்று சொல்ல எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது... நான் அப்போது அச்சகத்தில் வேலை செய்துக்கொண்டிருக்கிறேன்... (வாசன் பிரிண்டர்ஸ்...ஆசூரித் தெரு திருவள்ளுர்..)

சரிடா... படம் பேர் என்ன... அதற்கு அவன் என்ன படம்பேரு வக்கிறாங்களோ என்று சலித்துக்கொண்டே ஏதோ படையப்பா-வாம்.. என்றான்... என்ன படையப்பா.. அப்படின்னா.. இல்ல நீ பொய்சொல்ற... என்று விவாதங்களை முடித்துக்கொண்டு நேராக பேருந்து நிலையம் வந்து பேப்பர் வாங்கி படத்தலைப்பை பார்த்ததும் எனக்கு சப்பென்று ஆகிவிட்டது...

ரஜினி, சிவாஜி நடிக்கிறாங்க... இந்த டைரக்டர் ஏன் இப்படி பெயர் வச்சிருக்கார்... என்று அவரை சபித்து விட்டு கடந்துப்போகிறோம்... ஏன் படத்தலைப்பு முக்கியம் என்று அப்போது விரும்பினோம் என்றால் அதை வைத்தே மற்ற நடிகர்கள் ரசிகர்களை கிண்டல் அடிப்போம்... இப்போது அவர்கள் முறை.. என்னடா படையப்பா சொறியப்பா என்று ஆரம்பித்து விட்டார்கள்... இது 1999-ஆம் வருடம்...  ஆனால் படம் வந்தபோது நல்லதொரு வெற்றியை பெற்றது...

ரஜினி படத்தின் தலைப்பு என்பது கதாபாத்திரன் பெயரில்தான் அதிக இடத்தை பிடித்திருக்கிறது ஜானி, பில்லா, ஆரம்பித்து  கபாலி, காலா வரை நீள்கிறது.. அப்படி இல்லை வென்றால் கதாபாத்திரத்தின் தன்னைமையை பொறுத்தும், கதாநாயகனின் குணாதிசயத்தின் அடிப்படையிலும் தலைப்புகள் மாறும் உதாரணத்திற்கு மன்னன், பாயும் புலி, தளபதி, குசேலன் இப்படியாய்... ஒருதிரைப்படத்தின் பெயர் டக்கென மனதில் நின்று விடவேண்டும் அதுவே படத்திற்கான முதல் வெற்றி... அந்த வகையில் ரஜினியின் பலபடங்கள் மக்கள் மனதில் நின்றிருக்கிறது...

தற்போதைய காலத்தில் 6.00 மணிக்கு படத்தின் பெயர் டீசர் வெளியாகிறது என்றதும்... 5.30 மணிக்கே செய்தி தளங்களையும்.. சோசியல் மீடியாக்களையும் வேடிக்கைப்பார்த்து அறிந்துக்கொள்கிறோம்... அதுபோல்தான் வந்துடிச்சா.. வந்துடிச்சா... என வெறிக்கவெறிக்க மொபைலை நோண்டி ஒருவழியாய் பார்த்தால் #பேட்ட.. அப்படின்னு படத்தலைப்பை பார்த்து இது என்ன பேட்ட கோட்டன்னுகிட்டு அப்படின்னு சப்பென்று ஆகிவிட்டது...



சமீபத்தில் வந்த கபாலியும்.. சரி காலாவும் சரி... படத்தலைப்பார்த்தவுடன் இது என்ன தலைப்பு என்று கிண்டலடித்துவிடுகிறோம்... பிறகு ஊர் முழுக்க இதே பெயரை திரும்ப திரும்ப பார்த்து கேட்டு மிகவும் கம்பீரமான பெயராக மாறிவிடுகிறது... கபாலி என்ற அடிமட்டவில்லன் பெயர் தற்போது உயர்மட்ட மாஸ் பெயராக மாறிவிட்டது... அதே போல்தான் கரிகாலன் பெயரும்...

படத்தின் பெயர் ஏன்டா இப்படி வைக்கிறீங்க என்று சோஷியல் மீடியால் சத்தம்போட்டு கேட்கிறோம்... பிறகு படம்வந்தப்பிறகு அதன் கதையை அறிந்து படத்தலைப்பு சரிதான் என்ற முடிவுக்கு வருகிறோம்.. (உதாரணத்துக்கு என் ஆளோட செருப்ப காணோம்... ஏன்டா தலையில எண்ணை வைக்கல..)

சரி தலைவர் படம் தலைப்பு #பேட்ட... அப்படி என்றால் படத்தில் பகுதியையோ அல்லது கதையை சார்ந்ததாகவோத்தான் இருக்கும் அப்படி இந்தப்படமும் வந்தப்பிறகு இந்த தலைப்புக்கான நியதி புரிந்துவிடும்...

மேலும் இதில் சன்பிக்சர்ஸ்... கார்த்திக்சுப்புராஜ்... ரஜினி என வெற்றி பெற்றவர்களின் கூட்டணி என்பதால் வெற்றியின் இலக்கை கண்டிப்பாக அடைந்துவிடும்.. யாரும் இறுதில் பணத்தை திருப்பிகொடுங்கள் என்று கேட்க மாட்டார்கள் என்று நம்புவோம்...

பேட்ட டீசர்...

08 September, 2018

பாகற்காயும்... பகுத்தறிவும்...



ஞானியிடம் சிலர் சென்று, நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, 

''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?'' என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.

நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் , இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,

எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!

புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது..... !

*தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே...!*என்றார்கள் .ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*

"பார்த்தீர்களா....?

பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,

அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அதைப் போலவே , நாம் நமது தவறான செயல்களையும், தீய பழக்கங்களையும், துர்குணங்களை மாற்றிக் கொள்ளாமல், எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும், எந்த கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்.... எந்த பயனும் வந்து விடப் போவதில்லை....??

மாற்றங்கள்....!!

மனங்களிலும், குணங்களிலும், வந்தால் தான் வாழ்க்கை இனிமையாகும்....!!
என்றார் அந்த ஞானி....!!!!!!


*************************



சுந்தர்  வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும்.

கண்ணன்  சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்?


சுந்தர்: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன்.

கண்ணன் : இதோ இருக்கு சார், நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர்.

சுந்தர் : இப்படி வைங்க. நான் என்ன செய்றேன்னு கவனிங்க. இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன். இது தான் சகிப்புத் தன்மை. எங்கே, என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்!

கண்ணன் : அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ, நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன்.

சுந்தர் : சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது.

கணணன்  : எப்படிச் சொல்றீங்க?

சுந்தர்: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை. நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க. இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது.

கண்ணன் : நான் மறுக்கலே. இருந்தாலும் ஒண்ணுசொல்றேன். தப்பா நினைக்காதீங்க. இந்த டம்ளரில இருக்கிறது சாக்கடைத் தண்ணீர் இல்லை.என் மனைவி போட்ட காபி.

சுந்தர் : பலே ஆள் சார் நீங்க!பார்க்கிறதுக்கு வித்தியாசமே தெரியலே!

கண்ணன் : குடிச்சுப் பாருங்க .அப்பவும் வித்தியாசம் தெரியாது.!

******************************



அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும் செப்டம்பர் 8-ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..

உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.



யுனெஸ்கோவின் "அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப்பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். 

அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்கா (59.7%), அரபு நாடுகள் (62.7%). தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%), மாலி (19%). அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.

****************************** 

28 August, 2018

இப்படி செய்யலாமா பெண்களே...


 
வசர அவசரமாக ஓடி
ஒதுங்கி நின்றேன்
அடை மழையை
பார்த்தவுடன்...!


நின்று..
நிதானமாக...
நனைந்து...
நீர் சொட்டச் சொட்ட
பொறுமையாக
வந்தடைந்தது...

என்
பால்ய மனசு...!

*************************


ப்தமின்றி 
உடைப்படும்
ஒரு நீர்குமிழிபோல்....

என் 
கனவுகளில்
கல் எறிந்துவிட்டுப் 
போகிறாய்....

அர்த்தமற்றதாகி விட்டது
என் அத்தனை 
இரவுகளும்...!

******************************


ந்திக்கும் தருவாயில்
அவளிடம்
இப்படியாய்
பேசவேண்டும் என...

மேறுகேற்றி 
வைந்திருந்த
அத்தனை
வார்த்தைகளும்....

மனசெனும்
பெருவெயியில்
சிக்கி சிதைந்து
போகிறது...

பேசாமல்
திரும்பிய
சந்திப்புகளின் முடிவில்...!

***************************
பேசும் படம்....

வாசித்தமைக்கு மிக்க நன்றி..! 


21 August, 2018

ராத்திரில தூங்குனா சிக்ஸ்பேக் வருமா..?





ஏம்மா!! காலையிலே வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்தப்போ பத்தாதுன்னு சொன்னே ?? இப்போ பியூட்டி பார்லருக்கு போய்ட்டு வந்திருக்க.??


ஏன்யா ?? லூஸாய்யா நீ ?? 
இதை வச்சு மேக்கப் பண்ணிக்கன்னு நீ தானே சொன்னே ??

********************************



சிரித்தபின் சிந்திக்க வைக்கிற கேள்வி...


பெருசு கேட்டாரே, ஒரு கேள்வி!


விஞ்ஞானிகள் ரொம்ப நாளா ஆய்வு பண்ணிகிட்டு இருந்த ஒரு ஆய்வு கூடத்தில் வயசான வாட்ச்மேன் ஒருவர் இருந்துருக்காரு. அவுங்க இவரை கண்டுக்க கூட மாட்டாங்க. ஒரு நாள் விஞ்ஞானிகள் ரொம்ப ஜாலியா ஆடி பாடிக்கிட்டு இருக்கவும் "என்ன விசயம்"ன்னு கேட்டிருக்கார்.


அவங்களும் "எங்க ஆய்வு முடிய போகுது அதான்"னு சொல்ல இவரு "அப்படி என்ன ஆய்வு பண்ணுனீங்க"ன்னு கேட்டிருக்கார். "எந்த பொருளையும் கரைக்கிற திரவத்தை கண்டுபுடிக்கிற ஆய்வு" ன்னு சொல்லவும். உடனே இவரு ஒரே கேள்விதான் கேட்டாராம். அந்த விஞ்ஞானிகள் அந்த ஆய்வையே கைவிட்டுடாங்களாம்.


அது என்னான்னா?"


அத கண்டுபுடிச்சி எதுல சார் ஊத்தி வைப்பிங்க"ன்னு கேட்டாராம்.


********************************



நண்பர் 1 : பகல்ல தூங்குனா தொப்பை வருமாம்..


நண்பர் 2 : அப்போ ராத்திரியில தூங்குனா சிக்ஸ் பேக் வருமா?


நண்பர் 1 : .....


********************************


நோயாளி : வேகமா ஓடினா மூச்சு பிடிச்சிக்குதே டாக்டர்.


டாக்டர் : அப்ப மெதுவா ஓடுங்க...


நோயாளி : மெதுவா ஓடினா போலீஸ் பிடிக்குதே...


டாக்டர் : ..........

********************************



நபர் 1 : பொண்ணு அழுதுக்கிட்டே இருக்கே.. ஏன் மாப்பிள்ளையைப் பிடிக்கலையா?


நபர் 2 : அதெல்லாம் இல்ல... சீரியல் பார்க்கும் நேரத்துல பொண்ணு பார்க்க வந்துருக்கீங்கல்ல... அதான்..


நபர் 1 : ........

********************************


யாருகிட்ட...

சமிபத்தில் ரசித்த நகைச்சுவை துணுக்குகள்....

20 August, 2018

என்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க..!



என்னடா நினைச்சிகிட்டு இருக்கீங்க...
உங்க மனசுல...

என்ன பார்த்த
உங்களுக்கு எப்படி தெரியுது...!

உங்க பகுதிகெல்லாம்
வரலன்னா...
ஏன் வர்லேன்னு தவியா தவிக்கிறது...

சரி போனாபோகுதுன்னு வந்தா
வா.. வான்னு பல்லகாட்றது
கவிதையா எழுதி கொல்றது...

அப்படியும் கொஞ்ச நாள்
தொடர்ந்து வந்தா
ஏன்டா வந்தேன்னு சபிக்கிறது...

இதுல என்னவச்சி
ஆளாளுக்கு சண்டவேற....
இப்ப போடுங்கடா சண்ட பார்க்கலாம்...

நான் வந்து கொஞ்சம் ஓவராத்தான்
பண்ணியிருக்கேன்...
அதற்கு காரணம் யாரு..!
நீங்க பண்ண அட்டகாசம்தான்ட...

என்னுடைய நண்பர்களை
நீங்க பழிவாங்குறீங்க...
அத பார்த்துகிட்டு நான் சும்மா
இருப்பேன்னு நினைச்சிங்களா..?

ஒரு பகுதிக்கு வந்தா
என்னை அங்கேயே
தங்க வைக்கனும்....

அதசெய்யாம
அப்படியே போக விட்றீங்க
அப்புறம் வந்து... ஐய்யோ
போய்ட்டானேன்னு கவலை படுறீங்க...

இப்படி இருந்தா எப்படிடா
நன்னாரி பயலுகளா...

சரி சரி இனிமேலாவது
பார்த்து நடந்துக்கங்க...

உங்க பகுதிக்கு
நான் வந்த தங்குறதுக்கு
சரியான ஏற்பாடு பண்ணிவைங்க....

நான் வந்து தங்குற
இடத்திலெல்லாம் நீங்க
உட்கார்ந்துகிட்டு
என்ன இம்ச பண்ணாதிங்க...

நான் வாழுற இடத்தை
ஏங்கிட்ட கொடுத்துடுங்க

என் இடம் தேடி நான் வரும்போது
ஒரு பய நிக்ககூடாது...
அப்படி நின்னா
நான் நானா இருக்கமாட்டேன்...

உங்களுக்கு புரிய
வைக்கிறதுக்குதான் நான்
இப்படி கோவமா
நடந்துக்க வேண்டி இருக்குது....

என்ன புரிஞ்தா...!

இந்த முறை என் கோவத்தை
கொஞ்சம் அதிகதமாகத்தான்
காட்டிட்டேன்
என்னை மன்னிச்சிடுங்க...

என்னை எப்படி நாசம் பன்றீங்கன்னு...
நீங்களே பாருங்க... ( கீழ்படம்)

அரசாங்கம் பண்ற தப்புக்கு
அப்பாவி பொதுமக்களுக்கு
நீங்கதான் மாட்டிக்கீறீங்க...

இப்படிக்கு...
தண்ணீர்

குறிப்பு

நண்பர்கள் - மரங்கள்
தங்குமிடம் - ஏரி, குளம், அணை.

கவிதைவீதி சௌந்தர்
20-08-2018



இது கவிதை பதிவல்ல...
ஒரு விழிப்புணர்வு பதிவு

18 August, 2018

எங்கையாவது கவரிங் ஸ்கூட்டர் கிடைக்குமா...


 சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை

எனக்கு என் மனைவி கூட வாழ பிடிக்கலைங்க எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுங்க...

சரி 5000 செலவாகுங்க பரவாயில்லையா..

இவ்வளவா...! எனக்கு கல்யான செலவே 500 தாங்க ஆச்சி...!

எப்பவுமே சுதந்திரம் சும்மா கிடைக்காது தம்பி...


********************************



மாமியார் : இந்தாங்க மாப்பிள்ளை நீங்க கேட்ட மோதிரம்!

மருமகன் : இதை வாங்கி தந்ததுக்கு நீங்க ஸ்கூட்டரே வாங்கி தந்திருக்கலாம்!

மாமியார் : வாங்கியிருக்கலாம்தான்! ஆனா கவரிங் ஸ்கூட்டர் எங்கே கிடைக்குது?

********************************



ராமு : சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன் !

சோமு : அடடா... அப்புறம் ?

ராமு : மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு !

சோமு : அடப்பாவி...!!!!!!

********************************


கடைக்காரர் : டாக்ஸி டிரைவரா இருந்தவனை 
ஜவுளிக்கடையில் வைத்தது தப்பா போச்சு ?

மற்றவர் : ஏன்?

கடைக்காரர் : துணி எடுக்க வருபவர்களிடம் 
மீட்டருக்கு மேல் எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறான்..

********************************


ஒருவர் : எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி 
இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

டாக்டர் : ஏன்?

ஒருவர் : என் மனைவியை திட்ட 
வேற வழி தெரியலை டாக்டர்...

டாக்டர் : !!!!!!!!!!!!

********************************

பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும் என்பது இதுதானோ..!!!
பார்த்து சூதானா இரும்மா...!

17 August, 2018

சீமானை வச்சி செய்யும் சோசியல் மீடியா... இப்ப வாஜ்பாயோடு...



சமீபத்தில் ஒரு பொதுமேடையில் சீமான் அவர்கள் பேசும்போது சோழர்கள் 60 ஆயிரம் யானைப்படையை வைத்திருந்தார்கள்... அவர்கள் கடல் கடந்து போருக்கு போகும்போது அந்த 60 ஆயிரம் யானைகளையும் ஒரே கப்பலில் கொண்டுப்போவார்கள் என்றும்.... யானைகள் மட்டுமன்றி அதனுடன் பாகன்கள் போர் கருவிகள் யானைக்கான உணவுகள் மற்ற படை வீரர்கள் என அத்தனையும் கப்பலில் செல்லும்... கப்பல்கள் அப்படியிருந்தது என்றும்  இந்த யானைப்படையை பார்த்தே எதிரிபடை சரண்அடைந்துவிடும் என்று பேசியிருந்தார்...

என்ன கப்பலில் 60 ஆயிரம் யானைகளை ஏற்றினார்களா என்று முகநூலில் பாகுபாடின்றி வறுத்தெடுத்துகொண்டு இருக்கிறார்கள்....

அதுபோக இதற்கு முன்னர் மறைந்த கலைஞர் பற்றி இரங்கல் தெரிவிக்கும் போது நான் கலைஞர் சட்டைப்பையில் உள்ள பேனாவை எடுத்து எழுதும் அளவுக்கு நெருக்கம் இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்...

இதற்கும் பல்வேரு தரப்பில் இருந்து விமர்சனம் எழுந்தது மட்டுமின்றி என்ன கலைஞர் பேனா எடுத்து எழுதும் அளவுக்கு நெருக்கமா என்று மீம்ஸ்க்கள் முகவுநூல் டிவிட்டர் பதிவுகள் வறுத்தெடுத்தன.. 

சீமான் சொல்வது அத்தனையும் கட்டுகதைகளே என்று ஆளாளுக்கு நகைச்சுவை பதிவிட்டு கலாய்க்க தொடங்கிவிட்டார்கள்...

சீமான் அவர்கள் பிரபாகரன் சந்திப்பைப்பற்றி அவர் இருக்கும் போது ஏதும் வாய்திறக்காது அவரது மரணத்துக்கு பிறகு... நானும் அவரும் அப்படி இப்படி என்று அளந்து விட்டுக்கொண்டிருக்கிறார்... போர் பயிற்சி... குண்டு விழுந்தது... ஆமைக்கறி சாப்பிட்டோம் என்று வந்ததை சொல்வதை கண்டு சோசியல் மீடியாவில் அவர்குறித்து நகைச்சுவை பதிவுகள் அறங்கேறி வருகிறது....

அவர் எப்பவும் இப்படிதான்.. தலைவர்கள் இருக்கும் போது அவர்கள் பற்றி குறிப்பிடாமல் அவர் இறந்த பிறகு வந்து எனக்கு இப்படி பழக்கம் அப்படி பழக்கம் என்று அளந்துவிடுவார் என்று கற்பனையோடு எழுத ஆரம்பித்துவிட்டார்கள்..



தற்போது வாஜ்பாய் இறப்பை ஒடடி சீமான் எப்படி பேட்டிக் கொடுப்பார் என்று முகநூலில் பன்னிகுட்டி ராமசாமி எழுதிய பதிவு இது.. (Maram r)

(சீமான் சொல்வது போல்) திடீர்னு ஒருநாள் நடுராத்திரி ஒரு போன் கால்.. அதுவும் இந்தில வருது.. என்ன பேசுறதுன்னே புரியல.. அப்புறம் ஒருத்தர் பிஎம் உங்க கிட்ட பேசனுமாம் பேசுங்கனு சொல்றார்.. எனக்கு இந்த ஏஎம், பிஎம் தான் தெரியும் இது எந்த பிஎம்னு கேக்கிறேன்.. அதுக்குள்ள மே வாஜ்பாயி போல்ரஹாஹூனு கணீர்னு நம்ம வாஜ்பாயி குரல் கேக்குது.. 

நான் அப்படியே திகைச்சுப் போயிட்டேன்.. சீட்டுல இருந்து எந்திரிச்சி என்ன சார் வேணும்னு கேட்டேன்.. அதுக்கு அவரு பாகிஸ்தான் எந்த நேரத்துலயும் போர் தொடுக்குற மாதிரி இருக்கு.. அத எப்படி தடுக்குறதுனு தெரியல ரொம்ப கவலையா இருக்குன்னாரு.

 நான் உடனே இதுக்கு ஏன் சார் கவலைப்படுறீங்க. அணுகுண்டு இருக்கானு கேட்டேன்... இருக்குன்னு சொன்னார்.. அத தூக்கி போட்ருங்கன்னு சொல்லிட்டேன்.. அவரு பதறிப்போய் அது ரொம்ப ஆபத்து, அணு ஆயுத போர் வந்துடும்னாரு..


நான் அதுக்கு அட அந்த குண்ட நம்ம ஊரு மேல போடுங்க சார்னு சொன்னேன்.. அத கேட்டு அவரு மிரண்டுட்டாரு.. என்னங்க சொல்றீங்கனு கேட்டார்.. ஆமா நம்மூர்லயே ஆள் இல்லாத இடமா பாத்து போடுங்க.. அது வெடிக்கிறத நாலு பக்கமும் இருந்து போட்டோ புடிச்சி பத்திரிக்கைல போடுங்க அத பாத்துட்டு பாக்கிஸ்தான்காரன் பயந்து ஓடிருவான் பாருங்கன்னு சொன்னேன்.. 

அத கேட்டு அப்படியே அசந்துபோய்ட்டார்.. சீமான் ஜீ.. பகூத் அச்சா ஐடியா ஜீ னு திரும்ப திரும்ப சொல்லி சந்தோசப்பட்டார்.. அடுத்த நாள் காலைல பேப்பர்ல நியூஸ் போடுறான்.. இந்தியா அணுகுண்டு சோதனை செய்ததுன்னு... பாருங்க.. இதுக்கெல்லாம் யார் காரணம்.. சிந்திக்கனும்...

சிரிச்சி வயிறு வலிக்குது...

16 August, 2018

நினைவலைகள் - கார்கில் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்




பாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 93.

மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் டிசம்பர் 25, 1924 ல் பிறந்தவர் வாஜ்பாய். அவர் ஒரு நல்ல கவிஞரும் கூட. தாயார் பெயர் கிருஷ்ணா தேவி, தந்தையின் பெயர் ஷியாம் லால் 

வாஜ்பாய். அடிப்படையில் வாஜ்பாய் ஆர்எஸ்எஸ் தொண்டர். 1977 ல் அன்றைய மொரார்ஜி தேசாய் பிரதமரமாக இருந்த ஆட்சியில் ஜனசங்கம் கட்சியின் பிரதிநிதியாக, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் வாஜ்பாய். பின்னர் பாரதீய ஜனதா கட்சி 1980 முறைப்படி தொடங்கப்பட்ட போது அதன் நிறுவன ஸ்தாபகராக இருந்தவர் வாஜ்பாய்.


40 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் வாஜ்பாய். பத்து முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர் வாஜ்பாய். 

1996 ல் 13 நாட்களும், 1998 பிப்ரவரி – 1999 ஏப்ரல் வரையில் 14 மாதங்களும் பிரதமராக இருந்தவர். வாஜ்பாயின் இந்த ஆட்சியை, ஒரு வாக்கில் கலைத்த பெருமை மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வை சேரும். ஆனால் 1999 செப்டம்பரில் நடந்த மக்களவை தேர்தலில் வென்று 2004 மே மாதம் வரையில், அதாவது கிட்டத்தட்ட முழு ஆட்சிக் காலத்தையும் அனுபவித்தவர். 



காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பிரதமர், ஐந்தாண்டுகள் தொடர்ந்து இந்தியாவை ஆண்ட பெருமைக்கு சொந்தக்காரர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டும்தான்.

இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற அவர், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். 

‘லோகமான்ய திலகர் விருது’, ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’, ‘பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ எனப் பல விருதுகளை வென்றுள்ள முன்னாள் பிரதம மந்திரியான அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவரது பங்களிப்பையும், அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.



குவாலியரில் இருக்கும் கோர்கியில் உள்ள சரஸ்வதி ஷிஷு மந்திரில் தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த பின்னர், குவாலியர் விக்டோரியா கல்லூரியில் (இப்போதைய லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார்.

ஆரம்பத்தில் இருந்து படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த அவர், தனது கல்லூரியில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் அதிகமதிப்பெண்கள் வித்தியாசத்தில் தேர்ச்சிப் பெற்று, இளங்கலைப் பட்டம் வென்றார். பிறகு, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் சேர்ந்த அவர், அரசியலில் முதுகலைப் (எம். ஏ) பட்டத்தையும் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்று பெற்றார்.


ஆரம்பகாலப் பணிகள்


தனது முதுகலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இந்துமத அமைப்பான ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்’ன் ஒரு முழுநேர தொழிலாளியாக மாறினார். சட்டம் பயில வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட அவர், அதைத் தீவிரமாகப் பயின்றார்.

இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் தலைவர்களும், புரட்சியாளர்களும் போராடிக் கொண்டிருந்ததால், அவர் சட்டப் படிப்பைப் பாதியிலே கைவிட்டு, ஒரு பத்திரிக்கையாளராக உருவெடுத்தார்.

பத்திரிக்கையாளராக மாறிய அவர், ‘ராஷ்ட்ர தர்மா’, ‘பஞ்ச்ஜன்யா’, ‘ஸ்வதேஷ்’ மற்றும் ‘வீர் அர்ஜுன்’ போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.




அரசியல் பிரவேசம்

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்’-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார்.

சிறையிலே முகர்ஜி அவர்கள் மரணமடைந்ததால், அவர் 1957ல் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பேச்சாற்றல் அப்போதைய பிரதமராக இருந்த நேருவையும், பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் கவர்ந்ததால், அவர் பலரின் நன்மதிப்பைப் பெற்றார்.

ஜன சங்கின் தலைவரான தீனதயாள் உபாத்யாய் அவர்கள் திடீரென மரணமடைந்ததால், ஜன சங்கின் தலைமைப் பொறுப்பு, வாஜ்பாயின் கைகளில் வந்தது. 1977ல், அவர் ஜன சங்கை, புதிதாய் உருவான அமைப்பான ஜனதா பார்டியுடன் இணைத்தார்.

அக்கட்சி, பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்றதால், அவர் வெளியுறவுத் துறை அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். மொரார்ஜி தேசாயின் ராஜினாமாவிற்குப் பின்னர், ஜனதா கட்சிக் கலைக்கப்பட்டதால், பாரதிய ஜன சங் மற்றும் ஆர். எஸ். எஸ். அமைப்பை இணைத்து,

அவரது நீண்ட கால நண்பர்களான எல். கே. அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் ஆகியோருடன் இணைந்து ‘பாரதிய ஜனதா கட்சியை’ 1980ல் உருவாக்கினார். 1995ல் சட்டமன்றத் தேர்தலில், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பி.ஜே.பி வெற்றிப் பெற்றதால், அரசியலில் அக்கட்சி முக்கியத்துவம் பெற்றது. மேலும், 1996ல் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அக்கட்சி வெற்றிக் கோடியை நாட்டியது.



பிரதமராக வாஜ்பாய்

1996-ல் நடந்த பொதுத் தேர்தலில், பி.ஜே.பி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால், அப்போதைய பிரதமரான ஷங்கர் தயால் ஷர்மா அவர்கள், அவரைப் பிரதமராகப் பொறுப்பேற்க சொன்னார்.

இந்தியாவின் 11வது பிரதரமராகப் பதவியேற்ற அவர், மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்காததால், பதவியேற்ற 13 நாட்கள் கழித்து, பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.


ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அக்கட்சிக் கலைக்கப்பட்டதால், மறுபடியும் தேர்தல் நடந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்கும் விதமாக, அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

13 மாதங்கள் கழித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆதரவைப் பின் வாங்கியதால், அடுத்தத் தேர்தல் நடக்கும் வரை அவர் பிரதமர் பதவியில் இருந்தார்.

இதற்கிடையில், காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே சுமூகமான முடிவை அமலாக்க புதிய சமாதான முன்னெடுப்புகளை வரைந்தார்.

1999 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த ‘கார்கில்’ போரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ என்ற செயல்பாட்டை செயல்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். கார்கில் போரில் வெற்றிப் பெற்றது,

அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது. இந்த வெற்றியை நினைவில் நிறுத்தும்படியாக, ஜூலை மாதம் 26 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில், ‘கார்கில் விஜய் திவஸ்’ என நயமிக்கப்பட்ட அவருக்கு, பா.ஜ. க தலைவர் நிதின் கத்காரி அவர்கள், மும்பையில் ஒரு மெழுகு சிலையைத் திறந்து வைத்தார்.


கார்கில் போரில் மிகத் திறமையாக செயல்பட்டதால், 1999 ஆம் ஆண்டில், நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க 303 இடங்களில் அதிக வாக்குகள் வெற்றிபெற்று,

அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை ஏற்கச் செய்தது. மூன்றாவது முறை அவர், பிரதமராகப் பதவியேற்ற பின்னர், காத்மண்டு மற்றும் டெல்லிக்கிடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல், 2001ல் பாராளுமன்றம் மீது தாக்குதல், 2௦௦2-ல் குஜராத் வன்முறை, போன்ற பல பிரச்சனைகள் 2004ல் நடந்த பொதுத் தேர்தலில், பா. ஜ. க கட்சியைப் பெரும் தோல்வியை சந்திக்க செய்தது.


மூன்று முறை பிரதமர் பதவியில் இருந்த அவர், 2௦௦4ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசியலிலிருந்து தான் ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்தார்.




எழுத்தாளராக வாஜ்பாய்

அவர், தனது கல்லூரியில் இருந்தே ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆர்வமுடையவராக இருந்ததோடு மட்டுமல்லாமல், அதில் அதிகமதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றதால், அவருக்கு இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது எனலாம். 


இதனால், அவர் ஒரு எழுத்தாளராக உருவெடுத்தார். தனது சுயசரிதையை எழுதியதோடு மட்டுமல்லாமல், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்’, ‘மேரி இக்யாவனா கவிதம்’, ‘ஸ்ரேஷ்ட கபிதா’, எனப் பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார்.


மகத்தான சாதனைகள்



சாலை கட்டமைப்பு

நரசிம்மராவ் ஏற்படுத்திய பொருளாதார சீர்திருத்தத்தால், நாட்டில் கார்களின் எண்ணிக்கை அதிகமானது. ஆனால், அவை செல்வதற்கான சாலைகளை பற்றி அவர் சிந்திக்கவில்லை. இதனை உணர்ந்த வாஜ்பாய், வேகமான மற்றும் நெருக்கடியில்லாத போக்குவரத்துக்கு 'தங்க நாற்கரச்சாலை' திட்டத்தை தொடங்கினார். 

இதன் மூலம், நாட்டின் முக்கிய நகரங்களான டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னையை இணைத்தார். அதே போல, 'பிரதம மந்திர கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தை' தொடங்கி, சாலைகள் இல்லாத கிராமங்களிலும், சாலை வசதியை உருவாக்கினார். இந்த இரண்டு திட்டங்களும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவின.


கார்கில் வெற்றி

பாகிஸ்தான் உடனான கார்கில் போரில் கிடைத்த வெற்றிக்கு வாஜ்பாயின் துணிச்சலான முடிவும், நடவடிக்கையும் காரணமாக அமைந்தன. பாகிஸ்தானின் சதியை முறியடிக்க 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது 

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த போர்,அணு ஆயுத யுத்தத்துக்கு வழி வகுத்துவிடுமோ என உலக நாடுகள் அச்சமடைந்தன. தோல்வி உறுதியென தெரிந்த பின், ஆதரவு தேடி அமெரிக்காவுக்கு ஓடினார் பாக்., அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப். 

அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் பாகிஸ்தானின் போக்கை விமர்சிக்க, வேறு வழியில்லாமல் பின்வாங்க உடன்பட்டது பாகிஸ்தான். ஜூலை 26ல் கார்கில் மலையில் வெற்றிக்கொடி நாட்டியது இந்தியா.



லாகூருக்கு பஸ்

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானுடன், பேச்சுவார்த்தை மூலம் நல்லுறவு ஏற்பட பல்வேறு முயற்சிகளை எடுத்தவர் வாஜ்பாய். இவரது பதவிக்காலத்தில், பாகிஸ்தானின் லாகூருக்கு 1999 பிப்., 19ல் 'பஸ்' போக்குவரத்து தொடங்கப்பட்டது. 

கல்வி வளர்ச்சி

கடந்த 2001ல், சர்வ சிக் ஷா அபியான் என்ற சமூகநலத் திட்டம் தொடங்கப் பட்டது. இதன் மூலம், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது. 

இதன் காரணமாக 4 ஆண்டுகளில், நாட்டில் இடையிலேயே பள்ளியில் இருந்து விலகும் மாணவர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதம் தடுக்கப்பட்டது. இவரது திட்டத்தை பின்பற்றி தான், தற்போதைய ஆர்.டி.இ., எனப்படும் அனைவருக்கு இலவசக் கட்டாயக் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


தொலை தொடர்பு

தொலை தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தினார். அருண் ஜோரியுடன் இணைந்து பல திட்டங்கள் தீட்டப்பட்டது. டிராயின் பல்வேறு பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டன. பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தொடங்கப்பட்டது. 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், புதிய முறை தொடங்கப்பட்டது. 

பொதுத்துறை நிறுவனங்களில் நிதிப்பற்றாக்குறையை குறைத்தார். இதனால் பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றன. 

எரிபொருள் விலையில் ஒழுங்குபடுத்துதல், அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப், தொழிலாளர் ஒழுங்குமுறை உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

டில்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்கினார். முதல்கட்ட ரயில் சேவையையும் இவரே தொடங்கி வைத்தார். 

அறிவியல் திட்டங்களுக்கு அதி நிதி ஒதுக்கினார். 2008ம் ஆண்டுக்குள், இந்தியா சார்பில் நிலவுக்கு 'சந்திராயன்-1' விண்கலம் செலுத்தப்படும் என 2003 சுதந்திர தின உரையிலேயே வாஜ்பாய் தெரிவித்தார்.



தனியார் மயம்

வியாபாரம் மற்றும் தொழிற்சாலைகளில் அரசின் முதலீடுகளை குறைக்கும் நடவடிக்கையை எடுத்தார். பாரத் அலுமினியம் கம்பெனி, இந்துஸ்தான் ஜின்க், இந்தியன் பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் மற்றும் வி.எஸ்.என்.எல்., போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை குறைத்தார். மேலும் மாநில அரசின் நிறுவனங்களையும், தனியார் மயப்படுத்தினார். 


வெளியுறவு

அணு ஆயுத சோதனைக்குப்பின், அமெரிக்காவுடன் நிலவி வந்த பனிப்போரும், வாஜ்பாயின் அணுகுமுறையால், 2000ம் ஆண்டு, அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் வருகைக்குப்பின் தளர்த்தப்பட்டது. அதே போல, சீனாஉடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு, இஸ்ரேலுடன் ராணுவ ஒத்துழைப்பு போன்ற வெளியுறவு கொள்கையிலும் சிறப்பாக செயல்பட்டார். 


அணு ஆயுத நாடு

கடந்த 1998 மே 11ல் ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், இந்தியா வெற்றிகரமாக அணு ஆயுத சோதனை நடத்தியது. இதன்மூலம் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதில் முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான மறைந்த அப்துல் கலாம் முக்கிய பங்கு வகித்தார். 

சோதனை முடிவடைந்த பின்தான், அமெரிக்காவுக்கே இவ்விஷயம் தெரிந்தது. அணு ஆயுத சோதனை, நாடு முழுவதும் மக்களால் பாராட்டப்பட்டது. அதே நேரத்தில் சி.டி.பி.டி. விஷயத்தில் உறுதியாக நின்றதோடு, இந்தியா மீது, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையையும் துணிவுடன் எதிர்கொண்டார்.

விருதுகள் 

1992 – இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

1993 – கான்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்து ‘இலக்கியத்தில் டாக்டர் பட்டம்’ பெற்றார். 

1994 – ‘லோகமான்ய திலகர் விருது’ 

1994 – ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது’ வழங்கப்பட்டது. 

1994 – ‘பாரத் ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது’ பெற்றார் 

மக்களுக்கு பிடிக்காத கட்சியில் இருந்த வந்து 
மக்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்த பிரதமர்
Related Posts Plugin for WordPress, Blogger...