கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

27 February, 2018

குழந்தை செய்யும் வேலையா இது...!




நாயே...!
என்று திட்டிவிட்டார் முதலாளி

அடுத்த நொடியே
முடிவு செய்வு விட்டேன்...

கடைசி வரை
நன்றியோடு இருக்க வேண்டும் என்று...!

***************************************


காதலில் தோல்வி...!
களவாடப்பட்டுவிட்டன
என் அத்தனை
கனவுகளும்...!

***************************************


வீடுமுழுவதும் 
பார்த்து.. பார்த்து... அழகாய் 
வர்ணமடித்து வைத்தேன்...

ஆனால் இப்போதுதான் 
அழகாயின
அவைகள்...!
 
என் குழந்தையின்
கிறுக்கல்கள்...!


***************************************



கை காட்டியும்
நிற்காமல் போன
பேருந்தில் இருந்து....

ஏமாற்றத்தோடு
இறங்கிவந்தது
என் மனசு...!

***************************************




ஓய்வுக்காக அமர்ந்த வேளையில்
காற்றில் பறந்துவந்து
என் மீது விழுந்தது
ஒரு காகிதத்தாள்...!


எடுத்துபார்க்கையில்
அதட்டினாள் மனைவி....
தூக்கி எறியுங்கள் அது
அழுக்கு என்று...!

கொஞ்சநேரம் பார்த்தப்பின்
தூக்கி எறிந்து விட்டேன்....

தற்போது 
என்னில் ஒட்டிக்கொண்டு விட்டது
அதிலிருந்து சில வரிகள்...!

*************************************
வருகைக்கும்... வாசித்தமைக்கும்...
மிக்க நன்றி...!

0 comments:

Post a Comment

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...