கவிதை வீதியின் நட்சத்திரங்கள்...

12 March, 2018

இப்படியும் ஒரு இம்சை





தோற்கும்போதெல்லாம்
தோழனாய் தோளில்
தட்டிக்கொடுத்துக்கொண்டும்...!


நிமிரும் போதெல்லாம்
எதிரியாய் தடைக்கல்லோடு
தள்ளிவிட்டுக்கொண்டும்...!


தேடும் போதெல்லாம்
கண்ணுக்கெட்டாத தூரத்தி
ஒளிந்துக்கொண்டும்...!


விரட்டும்போதெல்லாம்
போகால் நிழல்போல்
ஒட்டிக்கொண்டும்..!


வாழ்க்கை பயணத்தின்
பள்ளமேடுகளை சமன்படுத்தி 
உடன் நடந்துவரும் முரண்...!

காதல்...! 

****************************************



ன்னை 
காக்கவைத்துவிட்டு
சந்திக்க முடியாமல் தவறும்
தருணங்களில்...


நீ வருவதாய் சொல்லி
முடியாமல் போன 
நிமிடங்களில்... 


இருவரிடத்திலும் 
வாடிப்போய் விடுகிறது
காதல்...!

****************************************



மீன் முள்ளாய்
தொண்டையில் 
சிக்கினாலும்...


தூசி துகளாய்
கண்களில் 
உறுத்தினாலும்....


நெருஞ்சி பழமாய்
பாதங்களை 
பதம்பார்த்தாலும்....


முன்னறிவிப்பின்றி
மூளையில் 
முகாமிட்டாலும்....


இதயச்சிறைகளில்
இறங்கிக்கொண்டு 
இம்சித்தாலும்....


என்றென்றும் 
காதல் ‌
அழகிய இம்சைதான்..!

****************************************

வருகைக்கும்.... வாசித்தமைக்கும்...
நன்றி..!


2 comments:

நீங்கதாங்க ரொம்ப நல்லவங்க...
கருத்தெல்லாம் சொல்றீங்க... நன்றிங்கண்ணா...!

Related Posts Plugin for WordPress, Blogger...